பிச்சி
04-05-2007, 03:54 AM
வானம் உடுத்திய ஆடை
காற்றின் பெருமூச்சில்
கலைந்தோடியது.
என் கண்களைக் கண்டுத்தான்
சூரிய உதயம் தள்ளிப்போகிறது.
அனிச்சப்பூ அணிந்த
என் கூந்தல் இழைகள்
காற்றுடன் பேசியது
காதல் பாசைகளினால்
ராகம் மீட்டியது.
சுருங்கிவிரிந்த
விழிகளுக்குள்
நிலவினைப் பொதிக்கிறேன்
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கி முத்தெடுத்து
அதைக் கழுத்தில் அணிந்து
கணவனின் வருகைக்கு
கால்கடுக்க நிற்கிறேன்
உதிர்ந்த இலைகளும்
தேன்குடித்த வண்டுகளும்
என்னைப் பார்ப்பதற்கே
முற்றத்தில் நிற்கும்
அஷ்டலட்சுமியும்
முத்தமிட்டு சென்றனர்
சில நொடிப்பொழுதுகளில்...
தோகை விரித்தாடிய
கனவுகளில்
அம்மா என்ற புதுராகம்
அலையாக தொனித்தது
ஒவ்வொரு ஸ்திரிக்கும்
ஒருவித ராகம்..
உதரத்தில் கைவைத்து
கண்களை மூடினேன்
உயர்வு நவிற்சியில்
ஒரு கவிதை நித்திரைகொண்டது
மேடான வயிறு
என் பெண்மையை
உண்மை என்று சொல்லியது,
தொட்ட கைகளை
கண்களால் கவனிக்கிறேன்
ஆமாம் ஆமாம்..
இதற்குத்தானே காத்திருந்தேன் :love-smiley-008:
காற்றின் பெருமூச்சில்
கலைந்தோடியது.
என் கண்களைக் கண்டுத்தான்
சூரிய உதயம் தள்ளிப்போகிறது.
அனிச்சப்பூ அணிந்த
என் கூந்தல் இழைகள்
காற்றுடன் பேசியது
காதல் பாசைகளினால்
ராகம் மீட்டியது.
சுருங்கிவிரிந்த
விழிகளுக்குள்
நிலவினைப் பொதிக்கிறேன்
மகிழ்ச்சிக் கடலில்
மூழ்கி முத்தெடுத்து
அதைக் கழுத்தில் அணிந்து
கணவனின் வருகைக்கு
கால்கடுக்க நிற்கிறேன்
உதிர்ந்த இலைகளும்
தேன்குடித்த வண்டுகளும்
என்னைப் பார்ப்பதற்கே
முற்றத்தில் நிற்கும்
அஷ்டலட்சுமியும்
முத்தமிட்டு சென்றனர்
சில நொடிப்பொழுதுகளில்...
தோகை விரித்தாடிய
கனவுகளில்
அம்மா என்ற புதுராகம்
அலையாக தொனித்தது
ஒவ்வொரு ஸ்திரிக்கும்
ஒருவித ராகம்..
உதரத்தில் கைவைத்து
கண்களை மூடினேன்
உயர்வு நவிற்சியில்
ஒரு கவிதை நித்திரைகொண்டது
மேடான வயிறு
என் பெண்மையை
உண்மை என்று சொல்லியது,
தொட்ட கைகளை
கண்களால் கவனிக்கிறேன்
ஆமாம் ஆமாம்..
இதற்குத்தானே காத்திருந்தேன் :love-smiley-008: