View Full Version : கவிதைக் கவி 2 - புதுக்கவிதை!
விதிகளை வென்றதாகச்
சொல்லப்பட்டது.
இலக்கணங்கள்
செத்துக்கொண்டிருக்கின்றன....
மனோஜ்
03-05-2007, 03:02 PM
உண்மை 100 க்கு 100 உண்மை
தாமரை
03-05-2007, 03:08 PM
விதிகள்..
வெல்லப்பட்டனவா
இல்லை
கொல்லப்பட்டனவா.....???
வென்றதாகச் சொல்லப்பட்டது.
ஆனால் உண்மையில் கொல்லப்பட்டது.
கருத்துக்கு நன்றிங்க தலைவா...
நன்றிங்க மனோஜ்... நூறு சதம் உண்மைதான்...
ஓவியா
04-05-2007, 02:04 AM
அதவாவின் கவிதை
அண்ணாவின் எதிர்க்கவிதை
இரண்டுமே தூள்
நன்றி சகோஸ்.
நன்றிங்க தானைத்தங்கமே உடன் பிறவா சொந்தமே
பென்ஸ்
04-05-2007, 03:50 AM
இதை நான் உன் கையேழுத்தில் பார்த்து இருக்கிறென் ஆதவா....
அதை என் அறிமுகத்தில் சுட்டியும் இருக்கிறென்... என் மனதில் பதிந்து போன வரிகள்....
உணவு ருசிக்க தெரியாதவனுக்கு பாஸ்ட்-புட்டும் சரிதான்
கவிதையை ரசிக்க தெரியாதவனுக்கு புதுகவிதையும் சரிதான்...
இதை நான் உன் கையேழுத்தில் பார்த்து இருக்கிறென் ஆதவா....
அதை என் அறிமுகத்தில் சுட்டியும் இருக்கிறென்... என் மனதில் பதிந்து போன வரிகள்....
உணவு ருசிக்க தெரியாதவனுக்கு பாஸ்ட்-புட்டும் சரிதான்
கவிதையை ரசிக்க தெரியாதவனுக்கு புதுகவிதையும் சரிதான்
கவனித்தேன் அண்ணரே!! இப்படியாவது இலக்கணம் வளர்ப்போமே என்றுதான்....
நன்றி..
mravikumaar
05-05-2007, 02:23 PM
இலக்கணத்திற்க்காக வருந்தும் கவிதை
அருமை ஆதவா
அன்புடன்,
ரவி
படித்து உய்த்துணர்வது போய் - வானொலியில்
கேட்டு கற்பனை செய்தது மாறி - தொல்லைக்காட்சியில்
காட்டினால்தான் பார்ப்பேன்
என சிரையில் திரவ உணவு ஏற்றச்சொல்லும்
நோயாளியாய் நுகர்வோன் .......
பந்தி வைத்து ஆற அமரப் பரிமாற அவகாசமின்றி
நின்று கொறிக்க துரித உணவு அளிக்க
காகிதத் தட்டுகளே உசிதம்-
காய்கின்றன எச்சில்படா குமரிவாழை இலைகள்!
(குமரி வாழை - இன்னும் குலை தள்ளா வாழை
நன்றி - இளங்கோவடிகள்)
தொடரட்டும் காலக் கட்டாயங்களை பிரதிபலிக்கும்
ஆதவ ஒளி படும் கண்ணாடிக் கவிதைகள்!
அண்ணா.. இந்த விமர்சனம் கண்டதும் எனக்குள் புத்துணர்வு.. என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. அப்படி ஒரு அழகு. மூன்று வரிக்கவிதையை இப்படி அழகாய் விமர்சனம் செய்யமுடியுமா என்று யோசிக்கவைக்கீறது.. நன்றி அண்ணா...