ஜோய்ஸ்
03-05-2007, 08:14 AM
தாவரங்கள், பழங்கள், காய்கறிகள், இலைகள், தண்டுகள், விதைகள், வேர்கள், பூக்கள் என அனைத்துமே உணவாகப் பயன்படுவதைப் போல மகரந்ததூளையும் உணவாகப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூவின் மையத்தில் காணப்படும் மகரந்தம் ஆண்பால் தன்மையைப் பெற்று இருக்கின்றது. இதில் புரதம், வைட்டமின்கள் போன்ற சத்துக்களும், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற உலோகச் சத்துக்கள் உள்ளன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கையில் உள்ள அனைத்துப் பொருள் களையும் பயன்படுத்தும் போது வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆராய்ச்சி களின்படி மகரந்தத்தையும் உணவாகப் பயன்படுத்த முடியும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க மற்றும் இந்தியப் பழங்குடியினரில் பலர் பழங்காலத்தில் இருந்தே மகரந்தத்தை உணவாகச் சாப்பிடும் முறையை அறிந்துள்ளனர்.
பூவின் மையத்தில் காணப்படும் மகரந்தம் ஆண்பால் தன்மையைப் பெற்று இருக்கின்றது. இதில் புரதம், வைட்டமின்கள் போன்ற சத்துக்களும், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம் போன்ற உலோகச் சத்துக்கள் உள்ளன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கையில் உள்ள அனைத்துப் பொருள் களையும் பயன்படுத்தும் போது வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆராய்ச்சி களின்படி மகரந்தத்தையும் உணவாகப் பயன்படுத்த முடியும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க மற்றும் இந்தியப் பழங்குடியினரில் பலர் பழங்காலத்தில் இருந்தே மகரந்தத்தை உணவாகச் சாப்பிடும் முறையை அறிந்துள்ளனர்.