பிச்சி
03-05-2007, 07:28 AM
புற்களூடான மத்தியில்
எறும்புகளோடு
புன்னாகவராளியில் பாடிய
மழைச் சத்தம்
இங்கு துள்ளும் கவிதைகள்
உலர்ந்துபோகாத
உதிரங்களால்
வாகைப்பூக்கள்
உதிர்த்த விதைகளின்
தொகுப்பு இங்கிருக்கும்
மன்றத்துக் கவிப்பூங்கா
கழனியில் முட்டிமுளைக்கும்
சின்னஞ்சிறு களைகளும்
நெற்களாய் மாறி
உழவனின் துயர்துடைக்கும்
உட்கருத்தடங்கிய உண்மைகள்
உலவுகின்ற கவிதைகள்
கர்ப்பஸ்திரியின்
வயிற்றுக்குள்ளும்
இறுமாப்பாய் உள்நுழைந்து
இசைந்து அசைந்து
கருவிலே கானம் பாடும்
தாய்மை குணமடங்கிய
இலக்கணப் பாடல்கள்
இரெளத்தரம் தெறிக்கும்
முறுவல்களும்
அனுமானத்தில் உலவும்
கிறுக்கல்கள்
புதுப் பெயர்ச்சியடையும்
எழுத்துக்கள்
எங்கள் பதிப்புகள்
பூவாசனைபோல
நீக்கமற விரவிய
மன்றக் கவிதைகளைப்
படித்தாலே போதும்
மனம் பொலிவடையும்
கோடையிலும் தணிப்புண்டாகும்
எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க.
எறும்புகளோடு
புன்னாகவராளியில் பாடிய
மழைச் சத்தம்
இங்கு துள்ளும் கவிதைகள்
உலர்ந்துபோகாத
உதிரங்களால்
வாகைப்பூக்கள்
உதிர்த்த விதைகளின்
தொகுப்பு இங்கிருக்கும்
மன்றத்துக் கவிப்பூங்கா
கழனியில் முட்டிமுளைக்கும்
சின்னஞ்சிறு களைகளும்
நெற்களாய் மாறி
உழவனின் துயர்துடைக்கும்
உட்கருத்தடங்கிய உண்மைகள்
உலவுகின்ற கவிதைகள்
கர்ப்பஸ்திரியின்
வயிற்றுக்குள்ளும்
இறுமாப்பாய் உள்நுழைந்து
இசைந்து அசைந்து
கருவிலே கானம் பாடும்
தாய்மை குணமடங்கிய
இலக்கணப் பாடல்கள்
இரெளத்தரம் தெறிக்கும்
முறுவல்களும்
அனுமானத்தில் உலவும்
கிறுக்கல்கள்
புதுப் பெயர்ச்சியடையும்
எழுத்துக்கள்
எங்கள் பதிப்புகள்
பூவாசனைபோல
நீக்கமற விரவிய
மன்றக் கவிதைகளைப்
படித்தாலே போதும்
மனம் பொலிவடையும்
கோடையிலும் தணிப்புண்டாகும்
எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க.