PDA

View Full Version : கல்லுரி நாள் நண்பர்கள்



சுட்டிபையன்
03-05-2007, 07:02 AM
நனைந்தேன்
அது எங்கள் நட்பு
இன்றும் குடையிருந்தும்
மழை இல்லாமலே
நனைகிண்றேன் உங்கள்
பிரிவெனும் கண்ணீரால்
இதுவும் நட்பினால்தான்,
கூடித்திருகையிலே நட்பின்
ஆழம் எதுவரை என்று
தெரியவில்லை எனக்கு
இன்று என்னால் நட்பின்
ஆழத்தை அளக்க
முடியவில்லை உங்கள்
அருகாமை இல்லாமையால்
கல்லூரியில் போட்டி போட்டு
படித்தது மறக்குமா இல்லை
மைதானத்தில் துடுப்பு மட்டையால்
சண்டை போட்டு அடுத்த
நிமிடம் அன்பினால்
கட்டி பிரண்டது
என்னை விட்டு போகுமா..........?
எங்களுக்குள் ஓவ்வோர்
செல்லப் பெயர்கள்
வைத்து நக்கல் பண்னுவதும்
வகுப்பில் பின் சீட்டில் இருந்து
கடதாசியில் ராக்கட் செய்து
வாத்திக்கு அடித்து முட்டி போட்டு
தண்டனை பெற்றது மறக்குமா.........?
என் நண்பர்களே உங்கள் வரவுக்காய்
நாட்களை தினமும் எண்ணிக்கொண்டு
காத்திருக்கின்றேன்
சந்திப்பேன் என்ற எண்ணத்தில்...............!

எப்பயோ எழுதின ஞாபகம், மிச்சிட கல்லூரி கடைசி நாள் பார்த்த உடனேதான் நினைவு வந்தது ஓடிப்போய் தூசு தட்டி எடுத்திட்டு வந்திட்டேன்:lachen001: நன்றி மிச்சி:icon_rollout:

poo
03-05-2007, 09:59 AM
உங்கள் நினைவுகள், எல்லோருக்குள்ளும் இருக்கும் நிஜங்கள். வரிகளில் உணர்வுகளை முழுவதுமாய் சொல்லமுடியாமல் தவிக்கும் உங்களை ரசிக்கிறேன்.. என்னையும் நீங்கள் ரசித்துக் கொள்ளுங்கள்...

நினைவூட்டிய ஷீ-க்கும் இங்கே நன்றிகள்....

ஓவியா
04-05-2007, 01:02 AM
ஒருவரின் உள்ளுணர்வு, மற்றவர்களினால் அறிய இயலாத ஒரு காரியம். ஆனால் நட்பு என்ற வார்தையை அனைவரும் அறிவோம்.

நீங்கள் உங்கள் நன்பருடன் பழகிய அந்த அழகிய நாட்கள் எப்பொழுதும் இனிமையாகவே இனிக்கும்.

காத்திருக்கின்றேன்
சந்திப்பேன் என்ற எண்ணத்தில்...............! வாழ்த்துக்கள்.

கவிதை நல்லா இருக்கு சஞ்சய்.

நன்று.

ஷீ-நிசி
04-05-2007, 03:09 AM
வாழ்த்துக்கள் சுட்டி.... 100க்கு 90 பேருக்கு அவர்களின் கல்லூரி கடைசி நாள் மறக்க முடியாதது.. காரணம். அந்த பசுமையான நாட்கள் கோடிகளை கொட்டி கொடுத்தாலும் திரும்ப வராது..

இதை எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. மனதில் அவ்வபோது மனதில் அசை போட்டு அந்த அனுபவங்களை ரசிக்க மட்டுமே முடியும்....

வாழ்த்துக்கள் நண்பரே!

பென்ஸ்
04-05-2007, 03:22 AM
நல்ல கவிதை சுட்டி...
கவிதை புரிகிறது...
ஆனால் அதிக உரைநடை போல் இருக்கிறது... இன்னும் இன்னும் எழுதுங்கள்...

mravikumaar
04-05-2007, 04:49 AM
கவிதையைப் படித்ததும்

கல்லூரி நாட்கள் நினைவில் வந்தது

வாழ்த்துக்கள் சுட்டி

அன்புடன்
ரவி