பிச்சி
03-05-2007, 06:39 AM
ஊழிச்சுவர் எழுந்து
பிரளயகாலத்திலும்
கண்ணீர் தரைதொடாது,
சூரியன் பொசுங்கிய துகள்கள்
காலில் விழுந்தாலும்
கண்கள் கசங்காது.
இன்று அப்படியா?
அலரிய பூக்களாய்
ஆண்டுவந்த நம்மை
முழுவதுமாய் மழிக்கிறதே
காலக்கொடூரன்.
மூன்றாண்டுகள்
தோட்டத்தின் மத்தியில் வாழ்ந்தோம்
மலர்களோடு கொஞ்சினோம்.
வண்டுகளின் முசுமுசுப்பை
சிரிப்பொலியால் முறித்தோம்.
ஆனால்
கையெழுத்துப் புத்தகங்களைக்
காணுகையில்
தொய்வடைந்து நிற்கிறது
நம் மனது.
நீக்கமற வியாபித்திருந்த
ரீங்காரத்தைக் கிழித்து
நம் பாடல்களைப் புகுத்தினோம்
பிராணன் எவனோ என
புன்னை மரநிழலில்
கண்களால் கடைந்தெடுப்போம்
பேதயர் யாரும் கண்டால்
பாதக்குறடுகளை நீட்டிச்செல்வோம்
இன்று கல்லூரிக் கதவுகள்
சொல்கிறது.
பாங்கியர்களே
அழுதல் வேண்டாம்..
என்றாவது ஒருநாள்
கணவர்கள் ஒத்தூதினால்
சந்திக்கலாம் தோழிகளே
மனப் பிரளயங்களை
ஊற்றி கொழுத்துங்கள்
கருகிய பூக்களை
புத்தகங்களுக்கிடையே
வைத்து மகிழுங்கள்.
மறவால் அனுப்புங்கள் தோழிகளே
உமது மண அஞ்சலையும்
எனது தொலைந்த மனத்துஞ்சலையும்.
பிரளயகாலத்திலும்
கண்ணீர் தரைதொடாது,
சூரியன் பொசுங்கிய துகள்கள்
காலில் விழுந்தாலும்
கண்கள் கசங்காது.
இன்று அப்படியா?
அலரிய பூக்களாய்
ஆண்டுவந்த நம்மை
முழுவதுமாய் மழிக்கிறதே
காலக்கொடூரன்.
மூன்றாண்டுகள்
தோட்டத்தின் மத்தியில் வாழ்ந்தோம்
மலர்களோடு கொஞ்சினோம்.
வண்டுகளின் முசுமுசுப்பை
சிரிப்பொலியால் முறித்தோம்.
ஆனால்
கையெழுத்துப் புத்தகங்களைக்
காணுகையில்
தொய்வடைந்து நிற்கிறது
நம் மனது.
நீக்கமற வியாபித்திருந்த
ரீங்காரத்தைக் கிழித்து
நம் பாடல்களைப் புகுத்தினோம்
பிராணன் எவனோ என
புன்னை மரநிழலில்
கண்களால் கடைந்தெடுப்போம்
பேதயர் யாரும் கண்டால்
பாதக்குறடுகளை நீட்டிச்செல்வோம்
இன்று கல்லூரிக் கதவுகள்
சொல்கிறது.
பாங்கியர்களே
அழுதல் வேண்டாம்..
என்றாவது ஒருநாள்
கணவர்கள் ஒத்தூதினால்
சந்திக்கலாம் தோழிகளே
மனப் பிரளயங்களை
ஊற்றி கொழுத்துங்கள்
கருகிய பூக்களை
புத்தகங்களுக்கிடையே
வைத்து மகிழுங்கள்.
மறவால் அனுப்புங்கள் தோழிகளே
உமது மண அஞ்சலையும்
எனது தொலைந்த மனத்துஞ்சலையும்.