leomohan
02-05-2007, 12:15 PM
பாலாற்றில் அணைகட்டும் விவகாரத்தில் குறட்டைவிட்டு தூங்குவதாக கூறுவதா?
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு குறட்டை விட்டுத் தூங்குவதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதற்கு சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் புள்ளூரில் பா.ம.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடந்த 9 மாதங்களாக, தமிழக அரசு, பாலாறு அணை விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் இப்பிரச்னையில் அதிக ஆர்வமும், அக்கறையும் காட்டவில்லை என்றும், இப்பிரச்னையில் தமிழக அரசு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் டாக்டர். ராமதாஸின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
-ஜெயா செய்திகள்
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு குறட்டை விட்டுத் தூங்குவதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதற்கு சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் புள்ளூரில் பா.ம.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடந்த 9 மாதங்களாக, தமிழக அரசு, பாலாறு அணை விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் துரைமுருகன் இப்பிரச்னையில் அதிக ஆர்வமும், அக்கறையும் காட்டவில்லை என்றும், இப்பிரச்னையில் தமிழக அரசு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் டாக்டர். ராமதாஸின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
-ஜெயா செய்திகள்