View Full Version : ஹலோ! ஹலோ!! ஆவ்...!
சாலையோரத்தில்
குருதிச் சிதறலுக்கு நடுவே
சிதறாமல் அலறுகிறது
ஒரு அலைபேசி...!
ஓவியன்
02-05-2007, 08:00 AM
சாலையோரத்தில்
குருதிச் சிதறலுக்கு நடுவே
சிதறாமல் அலறுகிறது
ஒரு அலைபேசி...
அருமையான ஒரு முரண் கவி!
வாழ்த்துக்கள் ஆதவா!
மனோஜ்
02-05-2007, 08:12 AM
மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுவெ
அருமை ஆதவா
ஷீ-நிசி
02-05-2007, 08:57 AM
ஹைக்கூ போலே..... ரசிக்க வைத்தது...
pradeepkt
02-05-2007, 09:46 AM
ஹைக்கூ இலக்கணத்தில் சரியாகப் பொருந்தும் சிறந்த படைப்பு.
என் மனமார்ந்த பாராட்டுகள் ஆதவா.
பரஞ்சோதி
02-05-2007, 10:03 AM
நல்ல ஹைக்கூ தம்பி.
இதன் பின்னால் இருக்கும் விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அன்புரசிகன்
02-05-2007, 10:14 AM
சாலையோரத்தில்
குருதிச் சிதறலுக்கு நடுவே
சிதறாமல் அலறுகிறது
ஒரு அலைபேசி...
அலைபேசிமட்டுமா... இதயம் கூடவே...
நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஆதவரே.
அரசன்
02-05-2007, 10:14 AM
நறுக்குத் தெரித்தாற்போல் நாலே வரிகளில்.
வாழ்த்துக்கள் ஆதவா.
சுட்டிபையன்
02-05-2007, 10:14 AM
அழகான ஹைக்கூ, ஓவி, கிஷோ, மயூ, அன்பு எல்லோரும் கேட்டுக்கோங்கோ
அட மீண்டுமொரு ஹைகூ எழுதியிருக்கிறேனா... இப்படீன்னு தெரிஞ்சுருந்தா ஹைகூ போட்டியில ஏதாவது கிறுக்கியிருக்கலாம்.... ம்ம்...
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
பென்ஸ்
02-05-2007, 01:06 PM
ஆதவா...
இது ஹைக்கூவின் இலக்கனத்தில் இல்லையேடா.....
ஒரு முறை ஹைக்கு பற்றிய திரியை படி... உன்னால் எழுத முடியும்...
அடடா!! அந்த திரியை இருமுறை படித்தும் ஒன்றும் விளங்கவில்லை அண்ணா...
ஆனாலும் இதை ஹைக்கூ என்று நான் சொல்லல்லீங்கோ/.
குறுங்கவி என்று வைத்துக்கொள்ளுங்கோ... ஹி ஹி ஹி
ஓவியன்
28-04-2008, 11:29 AM
சாலையோரத்தில்
குருதிச் சிதறலுக்கு நடுவே
சிதறாமல் அலறுகிறது
ஒரு அலைபேசி...!
இன்று ஒரு கொடூர விபத்தை நேரில் பார்த்தவர் விபரிக்க, என் நினைவுக்கு வந்ததெல்லாம் இந்த முரண் கவிதான்....
SathyaThirunavukkarasu
28-04-2008, 12:10 PM
ஒரு உண்மை
இங்கே ஹக்கூவாகிறது
அனுராகவன்
28-04-2008, 02:12 PM
நன்றி நண்பரே!!
ம்ம் நல்ல அருமையான முரண் கவி..
தொடர்ந்து இதுபோன்று எழுதுக..