PDA

View Full Version : ஹலோ! ஹலோ!! ஆவ்...!



ஆதவா
02-05-2007, 07:56 AM
சாலையோரத்தில்
குருதிச் சிதறலுக்கு நடுவே
சிதறாமல் அலறுகிறது
ஒரு அலைபேசி...!

ஓவியன்
02-05-2007, 08:00 AM
சாலையோரத்தில்
குருதிச் சிதறலுக்கு நடுவே
சிதறாமல் அலறுகிறது
ஒரு அலைபேசி...

அருமையான ஒரு முரண் கவி!

வாழ்த்துக்கள் ஆதவா!

மனோஜ்
02-05-2007, 08:12 AM
மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுவெ
அருமை ஆதவா

ஷீ-நிசி
02-05-2007, 08:57 AM
ஹைக்கூ போலே..... ரசிக்க வைத்தது...

pradeepkt
02-05-2007, 09:46 AM
ஹைக்கூ இலக்கணத்தில் சரியாகப் பொருந்தும் சிறந்த படைப்பு.
என் மனமார்ந்த பாராட்டுகள் ஆதவா.

பரஞ்சோதி
02-05-2007, 10:03 AM
நல்ல ஹைக்கூ தம்பி.

இதன் பின்னால் இருக்கும் விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்புரசிகன்
02-05-2007, 10:14 AM
சாலையோரத்தில்
குருதிச் சிதறலுக்கு நடுவே
சிதறாமல் அலறுகிறது
ஒரு அலைபேசி...

அலைபேசிமட்டுமா... இதயம் கூடவே...
நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஆதவரே.

அரசன்
02-05-2007, 10:14 AM
நறுக்குத் தெரித்தாற்போல் நாலே வரிகளில்.

வாழ்த்துக்கள் ஆதவா.

சுட்டிபையன்
02-05-2007, 10:14 AM
அழகான ஹைக்கூ, ஓவி, கிஷோ, மயூ, அன்பு எல்லோரும் கேட்டுக்கோங்கோ

ஆதவா
02-05-2007, 11:12 AM
அட மீண்டுமொரு ஹைகூ எழுதியிருக்கிறேனா... இப்படீன்னு தெரிஞ்சுருந்தா ஹைகூ போட்டியில ஏதாவது கிறுக்கியிருக்கலாம்.... ம்ம்...

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

பென்ஸ்
02-05-2007, 01:06 PM
ஆதவா...
இது ஹைக்கூவின் இலக்கனத்தில் இல்லையேடா.....
ஒரு முறை ஹைக்கு பற்றிய திரியை படி... உன்னால் எழுத முடியும்...

ஆதவா
02-05-2007, 01:08 PM
அடடா!! அந்த திரியை இருமுறை படித்தும் ஒன்றும் விளங்கவில்லை அண்ணா...

ஆனாலும் இதை ஹைக்கூ என்று நான் சொல்லல்லீங்கோ/.

குறுங்கவி என்று வைத்துக்கொள்ளுங்கோ... ஹி ஹி ஹி

ஓவியன்
28-04-2008, 11:29 AM
சாலையோரத்தில்
குருதிச் சிதறலுக்கு நடுவே
சிதறாமல் அலறுகிறது
ஒரு அலைபேசி...!

இன்று ஒரு கொடூர விபத்தை நேரில் பார்த்தவர் விபரிக்க, என் நினைவுக்கு வந்ததெல்லாம் இந்த முரண் கவிதான்....

SathyaThirunavukkarasu
28-04-2008, 12:10 PM
ஒரு உண்மை
இங்கே ஹக்கூவாகிறது

அனுராகவன்
28-04-2008, 02:12 PM
நன்றி நண்பரே!!
ம்ம் நல்ல அருமையான முரண் கவி..
தொடர்ந்து இதுபோன்று எழுதுக..