PDA

View Full Version : இந்தப் பகுதியின் நோக்கம்/வரைமுறைகள்



இராசகுமாரன்
30-04-2007, 06:59 AM
நண்பர்களே..!

'கவிஞன்' என்ற சொல்லைத் தாங்க பல தமிழ் மன்ற உறுப்பினர்கள் கூச்சப் படக் கூடும். தயங்காதே நண்பர்களே!! உங்களது கவிதைகள் மசாலா பத்திரிக்கைகளில் வரும் கவிதைகளுக்கு சிறிது சளைத்ததல்ல. அவற்றின் தரம் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் மன்றத் தோழர்கள், கவிதை உலகில் சிறகடித்து பறக்கும் காலம் வந்து விட்டது. அதனால், கவிதைக்கு தனிப் பகுதி ஒதுக்கியதுடன், அதன் படைப்பாளிகளுக்கும் அவர்களுடைய படைப்புகளை தொகுத்து வழங்க, ஒரு தனியிடம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இந்த பகுதியின் நோக்கம்;

1) நமது மன்றத்து கவிஞர்களுக்கு, அவர்களுடைய கவிதைத் தொகுப்புகளை ஒரே திரியில் சுட்டிகளாக கோர்த்து வைக்க வசதியளித்தல்.

2) அதன் மூலம் புதியவர்கள், கவிதைகளை தேட அதிக நேரம் செலவிடவேண்டாம்.

3) இங்குள்ள கவிஞர்களைப் பற்றி புதியவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தல்.

3) கடைசியாக, அவர்கள் என்ன மாதிரியான படைப்புகளை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதாகும்.

வரைமுறைகள்:

1) தமிழ் மன்றத்தில் ஒரு கவிதை/பாடல் படைத்திருந்தாலும், இங்கே உங்கள் பெயரில் ஒரு தனி திரி துவங்க தகுதியுடையவராகிறீர்கள். ஒரு கவிஞருக்கு ஒரு திரி மட்டும் போதும். அதற்கு மேல் துவங்க வேண்டாம்.

2) உங்கள் கவிதைத் தொகுப்பு சுட்டிகளை கொடுக்குமுன், உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பம், ஆர்வம் பற்றியும் சிறிது கூறுங்களேன்.

3) நீங்கள் படைத்த கவிதைகளை சுட்டிகளுடன் கொடுக்கவும். (சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று தெரியாதவர்கள், நிர்வாக உதவியாளர்களின் உதவியை நாடலாம்)

4) நீங்கள் படைத்த கவிதைகள் மட்டுமல்லாது, நீங்கள் இங்கே ரசித்த, மற்றும் உங்கள் சிந்தனையை தூண்டிய படைப்புகளையும் பட்டியலிட்டு கொடுக்கலாம்.

5) கடைசியாக, நீங்கள் படித்த சிறந்த புத்தகங்கள், மற்றும் ஆசிரியர்களையும் நமது மன்றத்து உறுப்பினர்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டுச் செல்லுங்கள். அது கவிதை தொகுப்பாகவும் இருக்கலாம், வேறு வகை புத்தகங்களாகவும் இருக்கலாம்.

6) உங்கள் புதிய படைப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சுட்டிகளை சேர்க்கவும் அல்லது மேம்படுத்தவும்.

வெகு நாட்களாக மன்றம் வராமல் இருக்கும் பழைய உறுப்பினர்களில் தொகுப்பை, நிர்வாக உதவியாளர்கள் கோர்த்து வழங்குவார்கள்.

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..

இராசகுமாரன்

மனோஜ்
30-04-2007, 07:15 AM
எங்கள் ஒத்துழைப்பு என்றும் உங்களுக்கு உன்டு
கவிதைக்கு தனிஇடம் தந்த உங்களுக்கு மிக்க நன்றிகள்

ஓவியன்
30-04-2007, 07:53 AM
அருமையான முயற்சி அண்ணா!

எங்கள் பூரண ஒத்துழைப்பு இதற்கு கிடைக்கும்.

leomohan
30-04-2007, 09:13 AM
கவிஞர்களை உற்சாகம் ஊட்டும் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

ஷீ-நிசி
30-04-2007, 09:54 AM
இது மிகச்சிறப்பானா முயற்சியாய் அமைந்திடும் என்பதில் சந்தேகமில்லை...

அக்னி
30-04-2007, 11:26 AM
கவிஞர்களின் தமிழ் வேட்கை தீர்க்க, புதிதாய் வாசல் திறந்து தந்த இராசகுமாரன் அவர்களுக்கு நன்றிகள்...

உலகத் தமிழரை ஒரு குடைக்குள், ஒன்றிணைக்கும் தமிழ்மன்றம், மேலும் ஒரு கிளை பரப்பத் தொடங்கிவிட்டது. கவிஞர்களே இந்த அணியாரத்தில், நீங்களும் ஒரு முத்தாய் இணைந்திடுங்கள்... ஒளி சிந்தப் புறப்படுங்கள்... மனதில் ஊற்றெடுக்கும் உணர்வுகளை வெளிச்சிந்துங்கள்...

நான் இப்பொழுதுதான், இரண்டு குறும் படைப்புக்கள் (கவிதைகள்...???) பதித்துள்ளேன். மன்றம் எனது படைப்புகளுக்கு அங்கீகாரம் தந்தால், நானும் இங்கு இணைந்து கொள்கின்றேன்.

இங்கு, ஏலவே பதிந்திருப்பவையை, உரிய திரிகளில் படைப்பாளர்கள் சேர்க்க வேண்டுமா (எனின் எவ்வாறு...)? அல்லது மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் அதனைச் செய்வார்களா?

பென்ஸ்
30-04-2007, 12:19 PM
நன்றி.. ராசகுமாரன்...
இன்று மன்றம் வந்த எனக்கு ஆனந்த அதிர்சி....
அருமையான தொகுப்பு இது...

இராசகுமாரன்
30-04-2007, 01:07 PM
இங்கு, ஏலவே பதிந்திருப்பவையை, உரிய திரிகளில் படைப்பாளர்கள் சேர்க்க வேண்டுமா (எனின் எவ்வாறு...)? அல்லது மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் அதனைச் செய்வார்களா?

இந்த பகுதியில் ஒரு புதிய திரி துவக்குங்கள், தலைப்பை agnii-யின் அறிமுகம், அல்லது அக்னியின் தொகுப்பு என்று இருக்கலாம்.

அதனுள் உங்களைப் பற்றி கூறுங்கள், உங்களுக்கு பிடித்தவைகளை கூறுங்கள், அதனுடன் உங்கள் படைப்புகள் என்ன என்று கூறுங்கள், அதன் சுட்டிகளை கொடுங்கள்.

அரசன்
30-04-2007, 04:24 PM
வரைமுறைகள்:

1) தமிழ் மன்றத்தில் ஒரு கவிதை/பாடல் படைத்திருந்தாலும், இங்கே உங்கள் பெயரில் ஒரு தனி திரி துவங்க தகுதியுடையவராகிறீர்கள். ஒரு கவிஞருக்கு ஒரு திரி மட்டும் போதும். அதற்கு மேல் துவங்க வேண்டாம்.

2) உங்கள் கவிதைத் தொகுப்பு சுட்டிகளை கொடுக்குமுன், உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பம், ஆர்வம் பற்றியும் சிறிது கூறுங்களேன்.

3) நீங்கள் படைத்த கவிதைகளை சுட்டிகளுடன் கொடுக்கவும். (சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று தெரியாதவர்கள், நிர்வாக உதவியாளர்களின் உதவியை நாடலாம்)

4) நீங்கள் படைத்த கவிதைகள் மட்டுமல்லாது, நீங்கள் இங்கே ரசித்த, மற்றும் உங்கள் சிந்தனையை தூண்டிய படைப்புகளையும் பட்டியலிட்டு கொடுக்கலாம்.

5) கடைசியாக, நீங்கள் படித்த சிறந்த புத்தகங்கள், மற்றும் ஆசிரியர்களையும் நமது மன்றத்து உறுப்பினர்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டுச் செல்லுங்கள். அது கவிதை தொகுப்பாகவும் இருக்கலாம், வேறு வகை புத்தகங்களாகவும் இருக்கலாம்.

6) உங்கள் புதிய படைப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சுட்டிகளை சேர்க்கவும் அல்லது மேம்படுத்தவும்.

வெகு நாட்களாக மன்றம் வராமல் இருக்கும் பழைய உறுப்பினர்களில் தொகுப்பை, நிர்வாக உதவியாளர்கள் கோர்த்து வழங்குவார்கள்.

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..

இராசகுமாரன்


சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.

இராசகுமாரன்
01-05-2007, 02:19 PM
சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்.
எடிட்டர் டூல் பாரில் தெரியும் http://www.tamilmantram.com/vb/images_pb/editor/createlink.gif இந்த படத்தை சொடுக்கி, சுட்டி கொடுக்கலாம்.

அல்லது தட்டச்சு செய்து கொடுக்க வேண்டுமென்றால் கீழ்கண்டவாறு கொடுக்கலாம்.


[U R L="மன்றத்தில் அதன் இணைய முகவரி, http://www.tamilmantram.com/vb/xxxxxxxx"] படைப்பின் பெயர் [/U R L]


* U R L என்ற எழுத்துக்களுக்கு நடுவே இடைவெளி விடவேண்டாம்.

franklinraja
03-05-2007, 06:22 AM
மிகச் சிறப்பான, கவி ஆர்வலர்களுக்குத் தீனி போடும் பகுதி,,,!

வாழ்த்துக்கள் ! :)

பென்ஸ்
04-05-2007, 04:11 AM
நண்பர்கள் தங்களை பற்றி அறிமுகம் கொடுக்க இவ்வளவு நேரம் எடுப்பது தயக்கமா இல்லை பணிபளுவா???

ஓவி.. மக்கா உன் அறிமுகம் எங்கே???

ஓவியின் "நம் மன்ற கவிகள்" லிஸ்டுல இருக்கிர எல்லோரும் தங்கள் அறிமுகத்தை கொடுக்க அன்புடன் கேட்டு கொள்கிறென்...

அமரன்
04-05-2007, 06:33 PM
ஒரு மாதகாலம் மன்றத்துக்கு வராமல் இருந்தேன். திரும்பி வரும்போது மன்றம் புதுப்பொலிவுடன் காட்சிதருகின்றது. எல்லாம் எமது மன்றத்தின் இயக்குனர் இராசகுமாரனையே சாரும்.

ஆதவா
04-05-2007, 06:36 PM
ஆறுதல் பரிசு, படைப்பாளி பரிசு, விமர்சகர் பரிசு போன்றவைகள் இன்னும் தரப்படவில்லையே??

poo
05-05-2007, 08:25 AM
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அள்ளிச் செல்ல ஆசையா ஆதவன்?!..

lolluvathiyar
11-05-2007, 01:45 PM
கவி ஞாயனம்
இல்லாத நான் கூட
இங்கு கவிஞனாக
அறிமுக படுத்த வகை
செய்த தலைவா நண்றி

அறிஞர்
11-05-2007, 01:50 PM
மன்றத்தில் கவி பாடும்
கூட்டத்தையும்....
கவிகளின் தொகுப்பையும்..
காண நல்ல பகுதி....

சுட்டிபையன்
27-05-2007, 04:38 AM
ஏங்கா யாராச்சும் இருக்கிறீங்களா இங்கே..............?
இங்கே பதிய அடிப்படை தகுதி என்ன? சுட்டிக்கு அனுமதி கிடைக்குமா.........? யாராவது பதில் சொல்லுங்கப்பா புண்ணியமா போகும்

ஓவியா
31-05-2007, 03:53 PM
ஏங்கா யாராச்சும் இருக்கிறீங்களா இங்கே..............?
இங்கே பதிய அடிப்படை தகுதி என்ன? சுட்டிக்கு அனுமதி கிடைக்குமா.........? யாராவது பதில் சொல்லுங்கப்பா புண்ணியமா போகும்

(ஆதவா, பெஞ்சமீன் இருவரும் சற்று பீசியாக இருப்பதால், அடியேன் பதில் போடுகிறேன்.)


வணக்கம் சஞ்சய்.

தங்களின் 'எனது குட்டிக்கவிதைகள்' என்ற தலைப்பில் தாங்களும் பல நல்ல கவிதைகளை படைத்திருப்பதால், நீங்களும் மன்ற கவிஞர் பட்டியலில் இணைகின்றீர்கள், ஆதலால் உங்கள் கவிஞர் அறிமுகத்திரியை தொடங்கி தாராளமாக உங்கள் கவிதைகளின் சுட்டிகளை இணையுங்கள்.

என் வாழ்த்துக்கள்.

உங்களது குட்டிக்கவிதைகளின் சுட்டி http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8816

பென்ஸ்
31-05-2007, 04:00 PM
(ஆதவா, பெஞ்சமீன் இருவரும் சற்று பீசியாக இருப்பதால், அடியேன் பதில் போடுகிறேன்.)

ஓவியா...
மன்றத்து நண்பர்களை வழி நடத்த முன்வரும் உங்கள் மனதை பாராட்டுகிறென்...
ஆனால், மேற்பார்வையாளர்கள்தான் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ என்ற சந்தேகன் எனக்கு...
மக்களை வழிநடத்த நல்ல தலைவனாயிருந்தால் போதும், பதவி ஒரு பொருட்டல்ல..

ஓவியா
31-05-2007, 04:11 PM
ஓவியா...
மன்றத்து நண்பர்களை வழி நடத்த முன்வரும் உங்கள் மனதை பாராட்டுகிறென்...
ஆனால், மேற்பார்வையாளர்கள்தான் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ என்ற சந்தேகன் எனக்கு...
மக்களை வழிநடத்த நல்ல தலைவனாயிருந்தால் போதும், பதவி ஒரு பொருட்டல்ல..

நன்றி பெஞ்சு.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் பதவியில் அல்லாதவர் இதுபோல் விசயத்தில் தலையிடுதல் சரியல்ல எனபது போல் படித்தேன், அதன் காரணமாகவே இப்படி எழுதினேன்.

மீண்டும் நன்றி.

பென்ஸ்
31-05-2007, 04:14 PM
நன்றி பெஞ்சு.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் பதவியில் அல்லாதவர் இதுபோல் விசயத்தில் தலையிடுதல் சரியல்ல எனபது போல் படித்தேன், அதன் காரணமாகவே இப்படி எழுதினேன்.

மீண்டும் நன்றி.
இடம், பொருள், ஏவல்...

எந்த இடத்தில், எவ்வாறு , என்ன சொல்லவேண்டும் என்பது....

இந்த இடத்தில் நீ கூறியது அருமையான அறிவுரையல்லவா...
அதை யார் கூறினால் என்ன....

இருந்தாலும் உன் கருத்தை மதிக்கிறேன் மக்கா....

ஓவியா
31-05-2007, 04:20 PM
இடம், பொருள், ஏவல்...

எந்த இடத்தில், எவ்வாறு , என்ன சொல்லவேண்டும் என்பது....

இந்த இடத்தில் நீ கூறியது அருமையான அறிவுரையல்லவா...
அதை யார் கூறினால் என்ன....

இருந்தாலும் உன் கருத்தை மதிக்கிறேன் மக்கா....


நன்றி தலிவா...

நீங்க ஒரு சிறந்த மேற்ப்பார்வையாளர், பல பின்னுட்டங்களில் அருமையான கருத்துக்களை பதிக்கின்றீர்கள்.

உங்கள் நற்சேவையை பாராட்டுகிறேன். நன்றி பென்சு கண்ணா.

கஜினி
20-10-2007, 12:45 PM
கஜினியாகிய நானும் என்பெயரை கவிஞர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாமா? அதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா என்று மூத்த கவிஞர்கள் சொல்லப் பிரியப்படுகிறேன். யாராவது ஒரு மூத்த கவிஞர் பச்சைச் கொடி காட்டினால் என் அறிமுக்ததையும் தரப் பிரியப்படுகிறேன். நன்றி

அமரன்
20-10-2007, 12:46 PM
ஜமாயுங்கள் தோழரே...!


அன்புடன்
கத்துக்குட்டிக்கவி

கஜினி
20-10-2007, 12:48 PM
மிக்க நன்றி அமரரே. இன்னும் சற்று நேரத்தில் தருகிறேன்.

அக்னி
20-10-2007, 12:49 PM
கஜினியாகிய நானும் என்பெயரை கவிஞர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாமா?
அதுக்கு ஏன் விண்ணப்படிவம் எல்லாம் நிரப்பி...
வாங்கோ கஜினி... வந்து கலக்குங்கோ...
முற்கூட்டிய வாழ்த்துக்கள்...

ஓவியன்
20-10-2007, 12:57 PM
விக்கிரமாதித்தன் தலைநகர் உஜ்னி
தமிரின் சூப்பர் ஸ்டார் ரஜனி
பிருத்வியை கலக்கியது முகமட் கஜனி
தமிழ் மன்றில் கவிதையில்
கலக்க போவது நம்ம கஜனி...!!

வந்து கலக்குங்க தலைவா.....! :)

ஓவியன்
03-11-2007, 07:11 PM
மன்றத்தின் பல கவிஞர்கள் இன்னும் இந்த பகுதியில் தங்கள் அறிமுகத்தைத் தராது இருக்கிறார்கள் போலிருக்கிறதே...!!

நண்பர்களே தயங்காமல் இங்கே அறிமுகமாகி உங்கள் கவிப்பயணத்தை முழு வீச்சுடன் ஆரம்பியுங்கள்...!!:)

சுடரவன்
28-04-2008, 09:10 PM
அருமையான முயற்சி
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
எஸ். சுடரவன்

அனுராகவன்
29-04-2008, 08:58 AM
இந்த திரியே துவங்கிய அன்பருக்கு என் நன்றி..
நானும் கவிஞர் என்ற பெயர் பட்டியலில் இணையலாமா.
அதற்கு நான் தகுதியானவளா?

ஆர்.ஈஸ்வரன்
29-07-2008, 11:24 AM
அருமையான முயற்சி

அமரன்
07-02-2011, 07:49 PM
மன்றக்கவிகளே!

இந்தப் பகுதியிலும் உங்கள் பா(ர்)வைகளைப் பதியுங்களேன்.

Dr.M.SIVABHARATHY
09-02-2011, 11:02 AM
பஞ்சாயத்து புளியமரம்
பாசி தளும்பும் ஊரணி
தொலை தூர கண்மாய்
செம்மறி ஆடுகள் மேல் நோக்கிபார்க்கும்
கருவேல விதைகள்
கடந்து செல்லும் கோழிகள்
காலில் மிதிபடும் கூளம்
வஞ்சனை இல்லாத உள்ளங்கள்
எட்டாவது தளத்தில்
எதிரில் அறைகிறது
என் கிராமம்.
மா.சிவபாரதி

Dr.M.SIVABHARATHY
09-02-2011, 11:08 AM
மன்றக்கவிகளே!

இந்தப் பகுதியிலும் உங்கள் பா(ர்)வைகளைப் பதியுங்களேன்.

எப்படி கவிதை அனுப்புவது என்று தெரியாமல் இருக்கிறேன்
உதவி செய்யவும் நண்பா!...

அமரன்
09-02-2011, 11:18 AM
உங்கள் பிரைவெட் மெசேஜைப் பாருங்க தோழரே

sureshteen
11-12-2011, 04:02 AM
அருமையான முயற்சி .....