PDA

View Full Version : பொய்க்கா(ல்) குதிர - பகுதி 1



ஆதவா
23-04-2007, 12:11 PM
சுள்ளுனு காத்து அடிக்குது ஊருக்குள்ள,

மே மாசம் வேறயா, வெயிலு கொளுத்துது. கண்ணு திறந்து சனத்தைப் பார்த்த போதும்ல, ஒரே வலியாத்தான் இருக்கும். செருப்பு இல்லாம அங்கிட்டு இங்கிட்டு நெகர முடியாதே மண்ணா இருந்தாலுஞ் சரி தார் போட்டு இருந்தாலுஞ் சரி. வெளுத்துப் புடும்.

கருங்குதிர காயைப் பொறுக்கறதுக்கு கிளம்பினான் காலாங்காத்தால. பல்லு வெளக்கல, வாயைக் கொப்புளிக்கல, இஸி கூட பேழல, என்ன செய்யறது. கிழவி காத்தால இருந்தே கத்துச்சு,

டேய் கிறுக்குபைய மவனே! கவுண்டர் ஊட்டுல ஊருக்காரய்ங்க மேஞ்சுபுடுவாங்கய்யா! வெல்லனே போய் காயைப் பொறிடா!, இல்லனா காண்டி அள்ளிட்டு போய்டுவாங்க,

இரு த்தா, இப்பொதான் சிம்பரன் கூட கூத்து கட்டியிருக்கேன். இப்ப போய் எழுப்பீட்டு

அடி த்தா, செருப்பால, அவனவன் ஊருல உசிரில்லாம திர்றான், உனக்கு மார்ல மசுறு வேணுங்குதா, எந்திர்றா,

சொன்ன கிழவி, சீவக்கட்டைய தூக்கிட்டு வந்துட்டா, கருங்குதிர இதுக்குமேலயும் கனவு கண்டான்னா, நாளப்பண்ண புது வெளக்குமாரு வாங்கோனும்.

பொறுங்க ஆசாமிகளா, இவேன் பேரு கருங்குதிர இல்ல. வேலைச்சாமி. எப்படி இந்த பேரு வந்துச்சுனு கேக்கிறீங்களா? இருங்க சொல்லுறேன்.

வேலைச்சாமியோட பாட்டன் காலத்துல இவனோட பாட்டனுங்க பொய்கால குதிர ஆடிப் பொழச்சவனுங்க, அந்த காலத்துல தேவய்யா கூத்துன்னா, கூழுக் கம்பக் கூட கீழ ஊத்திட்டு வருவாய்ங்க, அத்தன பேமசு, தேவய்யா ஒரு நாளு செத்துப் போனாரு, மனுசன் பொறந்தா செத்துதான போகனும். அவன் மகன் வந்தான், கருமூஞ்சி னு பேரு.. தேவய்யா அந்த காலத்துலயே கலப்பு கலியாணம் புடிச்சாரு. அதனால அவன் சாதிக்காரங்க ஒதுக்கிப்புட்டாங்க, தேவய்யா சம்சாரத்தில இப்படித்தான் பேரு வெப்பாங்களாம்ல, கருமூஞ்சி, வெள்ளைப் பன்னி, பணியாரம், இப்படித்தான் பேரு இருக்கும். சரி, கருமூஞ்சி ஓரளவுக்கு குதிரக் கூத்து ஆடினாலும் அவனுக்கு இதுலெல்லாம் இஷ்டமில்ல. இவிங்க ஊரு நத்தம் பக்கதுல கொத்தம்பட்டி கிராமம். கயிறு திரிக்கிறதுதான் இங்க தொழிலே. கட்டுக் கயிறு ன்னு சொல்லுவாங்க. மக்க ஒரு பக்கத்துல தென்னைமட்டைத் திரியை வெச்சுக்குட்டு நீளமா இழுப்பாங்க, எடையிடையே திரிய வச்சு தேச்சுக்கிட்டே திரிக்கணும்.. அந்த தொழில்லதான் கருமூஞ்சிக்கு நாட்டஞ் ஜாஸ்தி. இவன் காலத்துலயே எம்சிஆரு படமெல்லாம் திருவிழாவுல ஓட்டுவாய்ங்க,. சனங்க அதப் பாக்க வெள்ளமாட்டம் ஓடுங்க. பொய்கால் பொய்ச்சுப் போச்சு அப்பவே! கருமூஞ்சி மவன்ந்தான் கருங்குதிரயோட அப்பன். இவனுக்கு கோடிசாமினு பேரு.. ஊரு கோடியில இருக்கற சாமிய வேண்டி மகன் பொறந்ததால கருமூஞ்சி, கோடிசாமினு பேர வெச்சான்..

கோடிசாமி நல்லா கருகருன்னு காக்கா மாதிரி இருப்பான். இழவு சாதி பிரச்சனை மட்டும் இல்லாங்காட்டி பயபுள்ள விசயகாந்த் மாதிரி கும்ம்னு ஆயிருப்பான்... சாதி சாதின்னு இவன அடக்கியே போட்டாய்ங்க,. பாவம் கோடிசாமி, சிறுத்து கருத்து போய்ட்டான்.. அப்படி இப்படியுமா காசச் சேத்து பொண்டாட்டி மூக்கி ய கட்டிகிட்டான். இதுகளுக்குப் பொறந்து தொலைச்சுது வேலைச்சாமி. கோடிசாமிக்கும் கொடுத்து வெக்கல.. வெள்ளனே போய்ச் சேந்துட்டான்.

அம்புட்டுத்தான். வேலைச்சாமி பரம்பரை கத. ஆளும் ஒசரமா கருப்பா இருப்பான் பாருங்க, அதனால ஊருக்காரங்க கருங்குதிரன்னே கூப்பிட்டாங்க.. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, அந்த காலத்தில இருந்தே அய்யாரு முதக்கொண்டு குதிரக் கூத்துத் தான் ஆடுவாங்க, வேலைச்சாமி காலத்தில அங்கிட்டிங்கிட்டு ஏதோ நடக்கும். அதுக்கே பக்கத்து கிராமத்துல போட்டி வேற..

இப்படித்தான் பாருங்க, மகமாயி கும்பாபிசேகம் ஒருநா நடத்திச்சி. கிழவி இவன மேக்காப்பு போட்டு பொய்க்கால் குதிரயை ரெடி பண்ணி அனுப்பி வெச்சுது. இவனும் ராசாவாட்டம் போனான்.. குதிரைய தூக்கிட்டுத்தான் போகோணும். கூட ஆடறதுக்கு, இளத்தி, வெங்காயி, முனிம்மா அதுகூட சம்புலி, கடப்பாரை எல்லாம் போவாணுங்க,, எல்லாருமே கயிறு திரிக்கிறவனுங்கதான்.. கூத்து நடக்கறப்ப ஊருக்குள்ள சனங்க யாருமே வேலக்கி போகமாட்டாங்க.. ஆத்தா கோயிலுக்குள்ள இவனுங்கள தூர நிக்கவச்சே பாக்க உடுவானுங்க. ஏதோ பாத்தமா கும்புட்டமான்னு கிளம்பிப் போயிருவானுங்க..

ஆட்டம் போடற அன்னிக்கி, கம்பு, சிலம்பு, ஒயிலாட்டம், நாட்டுப்புற கெழவி பாட்டு அதுகூட குத்துப்பாட்டு கூட பாடுவாங்க.. ஊடால பொய்க்கால் குதிரையை இவங்க ஆட்டோனும். ஊடால பாட்டு பாடுவாங்க பாருங்க, அடா அடா.... நம்ம தமிழ்நாட்டுல நல்லது செத்துப்போவுது, உள்ளது வெளங்காம போவுது... ஒரு பாட்டோட நாலுவரி எடுத்து உடறேன் பாருங்க ஆசாமிகளா..

மச்ச முள்ள புள்ளக் காரி நீ
உச்சங் காட்ட ஆட வாடி
குருவி ரெண்டும் ஆடக் கண்டு
ஊருக்குள்ள அலம்பல் தாண்டீ..

வயிர நிரப்ப ஆச மச்சான்
எனக்கு
மானம் ரோசம் கூட வெச்சான்.
மானம் ரோசம் இல்லாட்டினா நானும்
ஓங்கூட வே பாசம் வெப்பேன்..

ஓங் கூட வே பாசம் வெப்பேன்...

பருவம் வந்த சின்னப் புள்ள நீயும்
உருவம் கொஞ்ச சின்ன புள்ள.
ஊரு சனங்க உன்னைப் பாக்க
ஆறு வருசம் ஆகுமடி..
மூனு நாளா கஞ்சி இல்ல
மூஞ்சப் பாத்து சொல்லு புள்ள
தேரு இழுக்க தெம்பில்லாம
கூத்து கட்டப் போறேன் புள்ள
கூத்து கட்டும் ஆளை நீயும்
பாத்துக் கட்டுடி கூண்டுக் கிளியே!

இப்படி இடையிடையில வரிக வரும்.. எழுதுன ஆசாமி எப்பவோ செத்துப்போய்ட்டான், இன்னமும் பாட்ட மாத்தல.. இப்படி ஆடிட்டிருந்தவன் சும்மா இல்லாம, குதிரையை வெச்சு மேல்சாதி புள்ளைய இடுச்சுப் புட்டான். அதுக்கு வந்தது பாருங்க கோவம். ஓடிப் போய் அப்பன்கிட்ட சொல்லிப்பிடிச்சு. அவன் சும்மா உடுவானா? ஆள இழுத்து வந்த நாலு சாத்து சாத்தி குதிரையை ஒடச்சிப் போட்டுட்டானுங்க...

பாவம் கருங்குதிர, அத வெச்சுத்தா ஆட்டம் போட்டுட்டு திரிவான்.. அதையும் ஒடச்சி போட்டுட்டானுங்களே!

கவுண்டர் ஊட்டுல காயைப் பொறிக்கரதுக்கு போனான்.. கவுண்டரைப் பார்த்தான். அவர் காலுமேல காலு போட்டு இங்கிலீசு பேப்பரு படிச்சுட்டு இருந்தாரு. போய் நடுங்கிட்டு நின்னான்...

" அய்யே. காயி பொறிக்கிறதுக்கு வந்தேஞ் சாமி.."

கவுண்டர் வேலைக்காரியப் பாத்து,
" ஏலா! தா, இவன் காயி பொறிக்கனுமா, தோட்டத்துக்கு கூட்டி போ, கிலோ போட்டு வித்துரு. டேய் குதிர காசுகீசு ஒழுங்கா குடுத்துரனும்டா, இல்லா நாளப்பண்ண பொறிக்கப்படாது.

" சரி சாமி"

கவுண்டச்சி ஊட்டு வேலைக்காரி தோட்டத்துக்கு கூட்டிட்டு போனா,. நல்லா விதவிதமா காய்கறி வானத்துல நட்சத்திரத்த அப்பி போட்ட மாதிரி இருந்திச்சி. பொறிச்சுட்டு கவுண்டர்கிட்ட போனான்..

" சாமி, வர பங்குனியில நம்ம ஊரு திருவிழா வருதுங். எனக்கு அன்னிக்கி குதிர வாங்கித் தரன்னு சொன்னீக. செஞ்சுபுடலாங்க்லா?"

" இருலா, பங்குனிக்கு உன்னு மாசக்கணக்கு கெடக்கு. இப்போ செஞ்சா அடுத்த கிராமத்துல போய் ஆடிப்புட்டு ஒடச்சுட்டு வருவ. எவன் வாங்கிக் கொடுப்பான்?"

" ஏதோ அன்னிக்கு வர வருமானத்த வெச்சு கலியாணம் பண்ணிப் புடலாம்னு இருக்கேனுங்க சாமி."

" தோ பார்றா, கலியாணமா?" வெளங்கிப்புடுமடா/// சரி சரி மண்டைய சொறியாத. அடுத்தவார வாக்குல வா. காசு தாரேன்.. ரெண்டு வட்டிடா..... பாத்து வாங்கு..

" சரிங்க சாமி"

தொடரும்...

அன்புரசிகன்
23-04-2007, 12:33 PM
முழுசா என்னால இப்போ வாசிக்க முடியல. இரவைக்கு வைச்சுக்கிறேன்.

ஓவியா
28-04-2007, 09:31 PM
செல்ல தம்பி, இதானே உனது முதல் தொடர்கதை??

நல்ல தொடக்கம். உரையாடல், பின் கதை கூறல் என்று அனைத்தும் சிறப்பாகவே இருக்கு. அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :icon_08: :icon_08: :icon_08:

அந்த பாடலில் எத்தனை அர்த்தம். அடடா
(இப்பதான் தெரியுது இந்தியா எப்படி ஜனதொகையில் 1ராம் இடம் பிடித்தது என்று..........எல்லாம் ஹி ஹி அந்த அன்பு மழைதான்.)

தொடரவும்.

ஆதவா
02-05-2007, 07:10 AM
நன்றிங்க ஓவியா ...

மற்றவர்களும் கருத்து சொன்னால் எனக்கும் கொஞ்சம் கதை நன்றாக போகிறதா என்ற திருப்தி இருக்கும்..

பாரதி
02-05-2007, 07:44 AM
இயல்பான நடை...!

வித்தியாசமான முயற்சி.

கதையில் பாட்டையும் இணைப்பது பழமையை நினைவு கூறுதாக இருக்கிறது.

தொடருங்கள்.

மனோஜ்
02-05-2007, 08:38 AM
அருமை ஆதவா கிராமத்து நடையில் கிராமத்தின் வாசனை அழகாகவிசுயிறது தொடருங்கள் நண்பா

ஆதவா
03-05-2007, 05:06 PM
நன்றி நண்பர்களே!!! விரைவில் அடுத்த பாகம்.

அறிஞர்
09-05-2007, 10:06 PM
ஆஹா ஆதவா... சிறந்த கதாசிரியராக மாறி வருகிறீர்கள்..

முன்பு பாரதி அண்ணா இப்படி பழைய சம்பவங்களை நினைவு கூறுவார். அவரின் வாயால் இன்று உமக்கு பாராட்டு...

இன்னும் சாதிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கு.

ஆதவா
10-05-2007, 12:43 AM
ஆஹா அறிஞரே!! :) ஏதோ உங்கள் விருப்பம்..... ஹி ஹி. நன்றி அறிஞரே!!