சுட்டிபையன்
21-04-2007, 02:54 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கப்டனாக ஷோயிப் மாலிக் (25 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் வரை ஷொயிப் மாலிக் கப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசீம் அஷ்ரப் தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது;
உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின் கப்டன் பதவியிலிருந்து இன்சமாம் விலகியதையடுத்து அந்த இடத்துக்கு முதலில் அணியின் மூத்த வீரர் முகமது யூசுப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அவர் கப்டன் பொறுப்பை ஏற்க மறுத்ததையடுத்து சகல துறை வீரர் ஷோயிப் மாலிக்கை கப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு இறுதி வரை நடைபெறும் போட்டிகளில் ஷோயிப் மாலிக்கின் திறமை பரிசோதிக்கப்படும். அதன் பின் அவர் கப்டனாக தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். அணியில் உள்ள மூத்த வீரர்கள் மாலிக்குக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
137 ஒருநாள் போட்டிகளிலும், 18 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஷோயிப் மாலிக், அனைத்து வீரர்களினதும் நன்மதிப்பைப் பெற்றவர்.
தினக்குரல்
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் வரை ஷொயிப் மாலிக் கப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நசீம் அஷ்ரப் தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது;
உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின் கப்டன் பதவியிலிருந்து இன்சமாம் விலகியதையடுத்து அந்த இடத்துக்கு முதலில் அணியின் மூத்த வீரர் முகமது யூசுப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அவர் கப்டன் பொறுப்பை ஏற்க மறுத்ததையடுத்து சகல துறை வீரர் ஷோயிப் மாலிக்கை கப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு இறுதி வரை நடைபெறும் போட்டிகளில் ஷோயிப் மாலிக்கின் திறமை பரிசோதிக்கப்படும். அதன் பின் அவர் கப்டனாக தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். அணியில் உள்ள மூத்த வீரர்கள் மாலிக்குக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
137 ஒருநாள் போட்டிகளிலும், 18 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஷோயிப் மாலிக், அனைத்து வீரர்களினதும் நன்மதிப்பைப் பெற்றவர்.
தினக்குரல்