பிச்சி
19-04-2007, 11:39 AM
மழையின் முகப்பை எடுத்து
முகர்ந்து கொண்டேன்
நீயும் உன் வியர்வை நாற்றமும்
நுனிமூக்கில் நிற்கிறது.
துளிகளில் துவைக்கிறாய்
உதடுகளை
உலுக்கிய உள்ளத்தை
மழையின் கோபத்தில்
மறைத்து வைக்கிறாய்.
xxxxxxxxxxxxxxxxxxx
சின்னத் தூறலுக்குள்
தீபமாய் ஒளிருகிறாய் நீ
சாரல் மழையின்
மண்வாசனையை நுகரும்
பூமித்தாயின் பிள்ளையாட நீ
செவிகள் கேட்கும்
மழையோசையின்
இன்பத் திருவிழா நீ!
இன்னமும் விளங்காத
மின்னலின் கருவறைக்குள்
உதைத்துக் கொண்டிருக்கும்
இடியும் நீ!
உன்னை மழையோடு
ஒப்பிட நினைக்கிறேன்
தோற்றுப் போய்
நின்றுவிடுகிறது அது.
முகர்ந்து கொண்டேன்
நீயும் உன் வியர்வை நாற்றமும்
நுனிமூக்கில் நிற்கிறது.
துளிகளில் துவைக்கிறாய்
உதடுகளை
உலுக்கிய உள்ளத்தை
மழையின் கோபத்தில்
மறைத்து வைக்கிறாய்.
xxxxxxxxxxxxxxxxxxx
சின்னத் தூறலுக்குள்
தீபமாய் ஒளிருகிறாய் நீ
சாரல் மழையின்
மண்வாசனையை நுகரும்
பூமித்தாயின் பிள்ளையாட நீ
செவிகள் கேட்கும்
மழையோசையின்
இன்பத் திருவிழா நீ!
இன்னமும் விளங்காத
மின்னலின் கருவறைக்குள்
உதைத்துக் கொண்டிருக்கும்
இடியும் நீ!
உன்னை மழையோடு
ஒப்பிட நினைக்கிறேன்
தோற்றுப் போய்
நின்றுவிடுகிறது அது.