PDA

View Full Version : என் முதற் காதலி



சுட்டிபையன்
18-04-2007, 06:24 AM
இந்த அமாவாசை
உன் பௌர்ணமிக்காக
ஏங்குகிறது - உன்
இரத்தத்தினால் நெய்யப்பட்ட
என் இதயம்
உன் பெயர் சொல்லித்தான்
துடிக்கின்றது - நான்
சுவாசிப்பதே நீ
விட்டுச் சென்ற
மூச்சுக் காற்றினால் தான்...
என் கண்கள்
உன்னைக் காண்பதற்காக தான்
இரவில் விழி மூடுகின்றது...
உன் விரல்கள்
பிடித்து நடக்காததால் - என்
கை விரல்கள் நடக்கும் போது
விரிய மறுக்கின்றன...
நீ இல்லாது - நான்
தனித்துப் போவேனென்று
தெரிந்திருந்தால்
உன் கருவிலேயே
உன்னுடன் கலந்திருப்பேன்..!!
நீ எனக்கு
காட்ட வேண்டிய
நம் உறவுகள்
எல்லாம்
உன்னை எனக்குக்
காட்டுகின்றார்கள் - என்
தவிப்புக்கள்
உனக்குத் தெரியவில்லையா....?
என்
முதன் முதற் காதலியே..........
உன் பெயரை
முதற் தடவை
உச்சரிக்கின்றேன்...
என் கனவிலாவது
என்னிடம் ஓர் தடவை
வா.............


அம்மா...........!

slgirl
18-04-2007, 06:37 AM
நினைத்தேன் இது அம்மாவுக்காக இருக்க கூடாதா என்று அருமை சுட்டிபையன் முடிவிலே அதை நிஜமாக்கியமைக்கு மிக்க நன்றி

தொட்டில் முதல்
சுடுகாடுவரை
இதயத்தின் நயகரா
அம்மா.....

ஆதவா
18-04-2007, 07:03 AM
ஈன்றெடுத்த தாயே முதற்காதலி என்ற கருவாலே உம்மை பூக்கள் சுமக்கும். தாய் என்ற முதல்பெண்ணே எத் தனயனுக்கும் முதற் காதலி, நம் கண்களைச் சுமந்து செல்லும் அவள் வலிகளை காகிதங்களிலாவத்து சொன்ன முயன்றமைக்கு எனது பாராட்டுக்கள்.....

கவிதை பிரமாதம்.. கருவோ அதைவிட..

ஷீ-நிசி
18-04-2007, 07:32 AM
பிரமாதம்! மனதில் அம்மாவை இழந்த வடு வார்த்தைகளாய் விழுந்திருக்கிறது இங்கே கவிதையில்... மிகவும் ரசித்தேன்.. நண்பரே!

சுட்டிபையன்
18-04-2007, 07:42 AM
நினைத்தேன் இது அம்மாவுக்காக இருக்க கூடாதா என்று அருமை சுட்டிபையன் முடிவிலே அதை நிஜமாக்கியமைக்கு மிக்க நன்றி

தொட்டில் முதல்
சுடுகாடுவரை
இதயத்தின் நயகரா
அம்மா.....


நன்றி இலங்ககை பெண்

அம்மாவிற்கு நிகர் அம்மாதான்

poo
18-04-2007, 08:06 AM
அருமை... அருமை சுட்டிப்பையன்..

என்ன சொல்வதென சிலநேரங்களில் திக்கற்றுத் தவிப்போமே.. அத்தருணத்தை உணர்கிறேன்...

மனோஜ்
18-04-2007, 08:13 AM
அம்மாவை உயர்த்தியது உம்பாங்கு
உயர்த்துகிறது உமது கவிதை சிறப்பினை அருமை

இளசு
18-04-2007, 07:41 PM
இட்டு நிரப்ப முடியாத
வெற்றிடம்
வெடித்துக் கூவும் வலி...
அம்மா!

நெகிழவைக்கிறது. பாராட்டுகள்!

சுட்டிபையன்
19-04-2007, 04:27 AM
ஈன்றெடுத்த தாயே முதற்காதலி என்ற கருவாலே உம்மை பூக்கள் சுமக்கும். தாய் என்ற முதல்பெண்ணே எத் தனயனுக்கும் முதற் காதலி, நம் கண்களைச் சுமந்து செல்லும் அவள் வலிகளை காகிதங்களிலாவத்து சொன்ன முயன்றமைக்கு எனது பாராட்டுக்கள்.....

கவிதை பிரமாதம்.. கருவோ அதைவிட..

கவியே ஆதவா உங்கள் கவி வடிவான வாழ்த்துக்கள்
எதுவுமே எம்முடன் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை
எம்மிடம் இல்லாத போதுதன் அதன் அருமை புரியும்

சுட்டிபையன்
19-04-2007, 04:34 AM
பிரமாதம்! மனதில் அம்மாவை இழந்த வடு வார்த்தைகளாய் விழுந்திருக்கிறது இங்கே கவிதையில்... மிகவும் ரசித்தேன்.. நண்பரே!


நன்றி நிசி உங்களைப்போல் உறவுகளின் வாழ்த்துக்கள்தான் எனது ஆனந்தம்