View Full Version : நாடோடி வாழ்க்கை - குறுங்கவிதை.
அரசன்
18-04-2007, 04:39 AM
நாகரீகம் வளர்ந்தும்
நாடோடி வாழ்க்கை
வாழ்கிறான் மனிதன்..
வாழ்வை உணராத வரையில்!
:062802photo_prv:
slgirl
18-04-2007, 05:51 AM
நச் என்று நாலு வரில ஆழமான குறுங்கவி அருமை முத்து
pradeepkt
18-04-2007, 06:11 AM
நாடோடி வாழ்க்கை தவறல்ல மூர்த்தி, அதுவும் ஒரு வாழ்க்கை முறைதான்.
வாழ்வை உணராதவன் வேறு எதையுமே உணர முடியாது. விலங்குகள் கூட தத்தமது வாழ்வை ஒரு கட்டத்தில் உணர்கின்றன.
வாழ்த்துகள்.
நாடோடி வாழ்க்கை - நாகரிக வாழ்க்கை...
குரங்கு - மனிதன் என்ற பரிணாம வளர்ச்சியைப்போல்
இதையும் நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியுமா??
யோசிக்கிறேன் நண்பரே!
ஒரு வகையில் உண்மைதான்.... நாகரீகத்தில் தொலைந்துபோய் நாடோடி ஆகிறான் மனிதன்... சில நேரங்களில் சில மனிதர்கள்...
கவிதை அருமை...
அரசன்
18-04-2007, 07:04 AM
நச் என்று நாலு வரில ஆழமான குறுங்கவி அருமை முத்து
முத்து (காது)இல்லை மூர்த்தி. இலங்கைப்பெண்ணே.
அரசன்
18-04-2007, 07:07 AM
நன்றி பிரதீப்,இளசு,ஆதவா, இலங்கைப்பெண் அவர்களுக்கு
நான்கு வரிகளில் முத்திரை... நிறையவே யோசிக்கவைக்கும் கவிதை. பாராட்டுக்கள் நண்பரே!
நாகரீகம் வளர்ந்தாலும் வயிறு பசிக்குதே...
- நாடோடி வாழ்க்கையை சூழ்நிலைக்கேற்ற வாழ்க்கையென சொல்லிப் பார்த்தாலென்ன!?
M.Jagadeesan
21-01-2013, 12:01 PM
நாகரீகம் வளர்ந்தும்
நாடோடி வாழ்க்கை
வாழ்கிறான் மனிதன்..
வாழ்வை உணராத வரையில்!
:062802photo_prv:
இன்றைய சூழலில் நாடோடி வாழ்க்கை தவிர்க்க முடியாதது.
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு ". என்பது முதுமொழி !