leomohan
14-04-2007, 08:25 PM
சிலையாக நின்றேன்
ஓதுவர் தட்டில் விழுந்த காசை வேட்டியில் மடித்ததை பார்த்தும்
-சிலையாக நின்றேன்
கொள்ளை அடித்த பணத்தை உண்டியலில் போட்டு என்னை பங்காளியாக்கியதை கண்டும்
-சிலையாக நின்றேன்
1500 ரூபாய் கொடுத்து அர்ச்சனை சீட்டுவாங்கி வந்து பண பலத்தை என்னிடம் காட்டியதை கண்டும்
-சிலையாக நின்றேன்
48 மணி நேரம் கால் கடுக்க என்னை காண நின்றிருந்த என் நிஜ பக்தனை கண்டும்
-சிலையாக நின்றேன்
கூட்டத்தோடு கூட்டமாக என்னை காண வந்த பெண்களை உரசியவர்களை கண்டும்
-சிலையாக நின்றேன்
என் படத்தை விற்று காசு செய்து என் பெயர் சொல்லி பணம் பார்த்தவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் பல பெயர்களில் உலகில் வலம் வர என்னை வைத்து என்னில் யார் பெரியவன் என்று சண்டையிடுவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என்னுள் அவனா அவனுள் நானா என்று என்னையே பகடையாக்கிய மனிதரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என்னை போற்றி என் பக்தர் எழுதிய கதைகளை என் முன் கொச்சைபடுத்தி பேசும் நாக்குள்ளவரை கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் இப்படித்தான் நான் இப்படிச் செய்வபவன் தான் என்று எனக்கே வரைமுறை எழுதியவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் சிலையாக நிற்கலாமா உருவமுள்ளவனா அற்றவனா என்று அவரவர் விதி விதிப்பதைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என் சிலைகளில் சிலவை சக்தி வாய்ந்ததென்றும் சிலவை விளக்கேற்ற கூட அருகதை இல்லாதவை என்றும் ஒதுக்கிய மனிதனை கண்டும்
-சிலையாகவே நான் நின்றேன்
-மோகன் கிருட்டிணமூர்த்தி
ஓதுவர் தட்டில் விழுந்த காசை வேட்டியில் மடித்ததை பார்த்தும்
-சிலையாக நின்றேன்
கொள்ளை அடித்த பணத்தை உண்டியலில் போட்டு என்னை பங்காளியாக்கியதை கண்டும்
-சிலையாக நின்றேன்
1500 ரூபாய் கொடுத்து அர்ச்சனை சீட்டுவாங்கி வந்து பண பலத்தை என்னிடம் காட்டியதை கண்டும்
-சிலையாக நின்றேன்
48 மணி நேரம் கால் கடுக்க என்னை காண நின்றிருந்த என் நிஜ பக்தனை கண்டும்
-சிலையாக நின்றேன்
கூட்டத்தோடு கூட்டமாக என்னை காண வந்த பெண்களை உரசியவர்களை கண்டும்
-சிலையாக நின்றேன்
என் படத்தை விற்று காசு செய்து என் பெயர் சொல்லி பணம் பார்த்தவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் பல பெயர்களில் உலகில் வலம் வர என்னை வைத்து என்னில் யார் பெரியவன் என்று சண்டையிடுவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என்னுள் அவனா அவனுள் நானா என்று என்னையே பகடையாக்கிய மனிதரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என்னை போற்றி என் பக்தர் எழுதிய கதைகளை என் முன் கொச்சைபடுத்தி பேசும் நாக்குள்ளவரை கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் இப்படித்தான் நான் இப்படிச் செய்வபவன் தான் என்று எனக்கே வரைமுறை எழுதியவரைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
நான் சிலையாக நிற்கலாமா உருவமுள்ளவனா அற்றவனா என்று அவரவர் விதி விதிப்பதைக் கண்டும்
-சிலையாக நின்றேன்
என் சிலைகளில் சிலவை சக்தி வாய்ந்ததென்றும் சிலவை விளக்கேற்ற கூட அருகதை இல்லாதவை என்றும் ஒதுக்கிய மனிதனை கண்டும்
-சிலையாகவே நான் நின்றேன்
-மோகன் கிருட்டிணமூர்த்தி