lenram80
11-04-2007, 10:15 PM
(சாட் செய்யும் போது)
எப்போதும் தப்பு தப்பாகவே டைப் செய்யும் என்னவள்,
"ம்ம்ம்...நன் நல்லா இருக்கிறென். நிங்க நலா இருக்கிங்காள?"
"வாவ். என்ன இன்னைக்கு ஃபுல் ஃபார்ம்லே இருக்கியா?
ஒரு வார்த்தைக் கூட ஒழுங்கா டைப் பண்ணலெ!
ஆனால்,
உனது எழுத்துப் பிழை கூட
பொங்கலில் வரும் முந்திரி போல எவ்வளவு சுவை!"
சும்மாயிருங்க!
பிழை என்பது தவிர்க்கமுடியாதது!
அதற்காக
'பொங்கலில் முந்திரி!
என் தேச மந்திரி!
அருகே வா என் சுந்தரி'
என்றெல்லாம் என்னைப் புகழாதிங்க!
கள்ளி!
வஞ்சப் புகழ்ச்சிக்கும்
உயர்வு நவிர்ச்சிக்கும்
உனக்கு வித்தியாசமே தெரியாதா என்ன?
ஏதோ ஒன்னுரெண்டு பிழை என்றால் சரி!
நீ எழுதுவது எல்லாமே பிழையாச்சே!
இது பொங்கலில் முந்திரி அல்ல!
குத்திக் கொதறப்பட்ட குத்து பரோட்டா!
கொஞ்சம் பொறு!
நான் எப்போதடி சொன்னேன்,
மந்திரி! சுந்தரி! - என்றெல்லாம்?
ஒனக்கே இது கொஞ்சம்
ஓவரா தெரியலயா?
போடா! வெண்ணெ!!
வீட்டுக்கு வாடா, வச்சுகிறேன் உன்னே!
அய்யயோ! என்னை வச்சுகிறியா?
அசிங்கமா பேசாதடி!
ஆசையெ தூண்டாதடி!
வேறு தேசத்தில் இருந்தாலும்
என்னை நேசத்தில் நனைப்பவனே!
பசி தாங்குடா என்னவனே!
என் தேக தேச மன்னவனே!
எழுதிவிட்டு,
கணிணி வழி கலகலவென்று சிரித்தாள்!
ஒயர் வழி கொஞ்சம் உயிர் பறித்தாள்!
==========================
என்னங்க!
ரேடியோவிலெ நமக்கு புடிச்ச பாட்டு வந்துச்சு!
நானும் கூட சேந்து பாடினேன்!
திடீர்ன்னு ரேடியோ நின்னு போச்சு!
அடிப்பாவி,
உன்னோட பாட வெக்கப்பட்டுத்தான் அது நின்னுபோயிருக்கும்!
சுருதியே சேராம சுமாராத் தான் பாடுவே!
அதுக்கே இந்த நிலமையின்னா,
நல்லா பாடுனா,
ரேடியோ ஸ்டேசனே ரெண்டா வெடிச்சுருக்கும்!!
உண்மையே சொல்லுங்க!
நான் நல்லா பாடுறேன் தானே?
ஏற்கனவே டிவி, டேப் ரிகார்டர், வாக் மேன்
எதுவுவே வேலை செய்யலே!
கூட சேந்து பாடி, எல்லாத்தையும் சோந்து போக வச்சுட்டே!
இன்னுமா உனக்கு சந்தேகம்?
ஏதோ பிளக் பாயிண்ட் சரியில்லே,
அதுனாலே தான் எல்லாம் புகஞ்சு போச்சுன்னு சொன்னிங்க?
சின்னதம்பி பிரபு மாதிரியே இன்னும் எத்தனை நாளுடி நடிப்பே?
திருப்பி ரேடியோவையும் அதே பாய்ண்ட்லெ மாட்டி புகச்சுபுட்டே!
(ஏதோ முனங்குகிறாள்)
அய்யயோ! எனக்கு காதுலேயே விழுவலயே!
என் காதையும் பொகச்சுபுட்டியே!
என் உடல் கடிக்கும் மொசக்குட்டியே!
என் உயிர் வாங்கும் வெஷப்புட்டியே!
போடா! தடியா!
சிலசமயம் கோபப்படும் சிவகாசி வெடியா!
எப்போதும் என்னை அரவணைக்கும் ஆம்பளெ அம்மா மடியா!
என் கூட சண்டை போடுரியே, இது சரியா?
என் மீது படரும் பொம்பளெ கொடியே!
சண்டை போட்டா தாண்டி, சமாதானக் கொடியே!
இப்ப சில்மிஷம் பண்ண வாடி என் சிங்கார மிடியே!!!
==================================
எப்போதும் தப்பு தப்பாகவே டைப் செய்யும் என்னவள்,
"ம்ம்ம்...நன் நல்லா இருக்கிறென். நிங்க நலா இருக்கிங்காள?"
"வாவ். என்ன இன்னைக்கு ஃபுல் ஃபார்ம்லே இருக்கியா?
ஒரு வார்த்தைக் கூட ஒழுங்கா டைப் பண்ணலெ!
ஆனால்,
உனது எழுத்துப் பிழை கூட
பொங்கலில் வரும் முந்திரி போல எவ்வளவு சுவை!"
சும்மாயிருங்க!
பிழை என்பது தவிர்க்கமுடியாதது!
அதற்காக
'பொங்கலில் முந்திரி!
என் தேச மந்திரி!
அருகே வா என் சுந்தரி'
என்றெல்லாம் என்னைப் புகழாதிங்க!
கள்ளி!
வஞ்சப் புகழ்ச்சிக்கும்
உயர்வு நவிர்ச்சிக்கும்
உனக்கு வித்தியாசமே தெரியாதா என்ன?
ஏதோ ஒன்னுரெண்டு பிழை என்றால் சரி!
நீ எழுதுவது எல்லாமே பிழையாச்சே!
இது பொங்கலில் முந்திரி அல்ல!
குத்திக் கொதறப்பட்ட குத்து பரோட்டா!
கொஞ்சம் பொறு!
நான் எப்போதடி சொன்னேன்,
மந்திரி! சுந்தரி! - என்றெல்லாம்?
ஒனக்கே இது கொஞ்சம்
ஓவரா தெரியலயா?
போடா! வெண்ணெ!!
வீட்டுக்கு வாடா, வச்சுகிறேன் உன்னே!
அய்யயோ! என்னை வச்சுகிறியா?
அசிங்கமா பேசாதடி!
ஆசையெ தூண்டாதடி!
வேறு தேசத்தில் இருந்தாலும்
என்னை நேசத்தில் நனைப்பவனே!
பசி தாங்குடா என்னவனே!
என் தேக தேச மன்னவனே!
எழுதிவிட்டு,
கணிணி வழி கலகலவென்று சிரித்தாள்!
ஒயர் வழி கொஞ்சம் உயிர் பறித்தாள்!
==========================
என்னங்க!
ரேடியோவிலெ நமக்கு புடிச்ச பாட்டு வந்துச்சு!
நானும் கூட சேந்து பாடினேன்!
திடீர்ன்னு ரேடியோ நின்னு போச்சு!
அடிப்பாவி,
உன்னோட பாட வெக்கப்பட்டுத்தான் அது நின்னுபோயிருக்கும்!
சுருதியே சேராம சுமாராத் தான் பாடுவே!
அதுக்கே இந்த நிலமையின்னா,
நல்லா பாடுனா,
ரேடியோ ஸ்டேசனே ரெண்டா வெடிச்சுருக்கும்!!
உண்மையே சொல்லுங்க!
நான் நல்லா பாடுறேன் தானே?
ஏற்கனவே டிவி, டேப் ரிகார்டர், வாக் மேன்
எதுவுவே வேலை செய்யலே!
கூட சேந்து பாடி, எல்லாத்தையும் சோந்து போக வச்சுட்டே!
இன்னுமா உனக்கு சந்தேகம்?
ஏதோ பிளக் பாயிண்ட் சரியில்லே,
அதுனாலே தான் எல்லாம் புகஞ்சு போச்சுன்னு சொன்னிங்க?
சின்னதம்பி பிரபு மாதிரியே இன்னும் எத்தனை நாளுடி நடிப்பே?
திருப்பி ரேடியோவையும் அதே பாய்ண்ட்லெ மாட்டி புகச்சுபுட்டே!
(ஏதோ முனங்குகிறாள்)
அய்யயோ! எனக்கு காதுலேயே விழுவலயே!
என் காதையும் பொகச்சுபுட்டியே!
என் உடல் கடிக்கும் மொசக்குட்டியே!
என் உயிர் வாங்கும் வெஷப்புட்டியே!
போடா! தடியா!
சிலசமயம் கோபப்படும் சிவகாசி வெடியா!
எப்போதும் என்னை அரவணைக்கும் ஆம்பளெ அம்மா மடியா!
என் கூட சண்டை போடுரியே, இது சரியா?
என் மீது படரும் பொம்பளெ கொடியே!
சண்டை போட்டா தாண்டி, சமாதானக் கொடியே!
இப்ப சில்மிஷம் பண்ண வாடி என் சிங்கார மிடியே!!!
==================================