Nanban
08-05-2003, 04:37 PM
தனி மரத்தின் மீது
பல பேரின் கண்கள்....
நனையும் ஆட்டிற்காக
அழும் ஓநாய்கள் -
மரத்தின் கிளைகளில்
வசிக்கும் பறவைகளை
நோட்டமிடும்.
ஆசையாய்
கல்லெறியும் குழந்தைகளைக்
கண்டிக்கும் பெருசுகள் -
கடைக்கண்ணால் நோக்கும்
கனிந்த பழம்
தன்னாலே வீழாதோ என்று?
கருக்கல் நேரத்தில்
காதலர்களும் வருவர் -
பிரிந்து போகையிலே
கீறிவிட்டுப் போன -
எதிராளியின் பெயரைத்
தடவிப் பார்த்து
கண்ணீருடன் அழுவர் -
என் மௌனமே சாட்சி.
சமயத்தில் தொட்டிலும்
தொங்கும் என் கிளைகளில் -
வேலைக்குப் போகும் தாயின்
பாசங்களை நான்
தர வேண்டியிருக்கும்....
எல்லோருக்கும் எல்லாமாய்
நானிருந்தும் -
நான் மட்டும் எங்கும்
நகர முடியாதவளாயிருப்பேன் -
விதவையாய் நின்றிருப்பேன்.
பல பேரின் கண்கள்....
நனையும் ஆட்டிற்காக
அழும் ஓநாய்கள் -
மரத்தின் கிளைகளில்
வசிக்கும் பறவைகளை
நோட்டமிடும்.
ஆசையாய்
கல்லெறியும் குழந்தைகளைக்
கண்டிக்கும் பெருசுகள் -
கடைக்கண்ணால் நோக்கும்
கனிந்த பழம்
தன்னாலே வீழாதோ என்று?
கருக்கல் நேரத்தில்
காதலர்களும் வருவர் -
பிரிந்து போகையிலே
கீறிவிட்டுப் போன -
எதிராளியின் பெயரைத்
தடவிப் பார்த்து
கண்ணீருடன் அழுவர் -
என் மௌனமே சாட்சி.
சமயத்தில் தொட்டிலும்
தொங்கும் என் கிளைகளில் -
வேலைக்குப் போகும் தாயின்
பாசங்களை நான்
தர வேண்டியிருக்கும்....
எல்லோருக்கும் எல்லாமாய்
நானிருந்தும் -
நான் மட்டும் எங்கும்
நகர முடியாதவளாயிருப்பேன் -
விதவையாய் நின்றிருப்பேன்.