рокро░роЮрпНроЪрпЛродро┐
08-04-2007, 06:27 AM
நானும் ஒரு கதைச்சொல்லி - எனக்கு தாயுமானவன் என் தம்பி (3ம் பாகம்)
கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அலுவலக வேலைகள் அதிகரித்து விட்டதால் இத்தொடரை உடனே தொடர முடியாமல் போய் விட்டது, என் தோல் உரிந்ததா என்பதை அறிய காத்திருந்த அனைவரும் மன்னிக்கவும்.
Уடேய் படவா ராஸ்கல், வாடா இங்கேУ
நான் அம்மாவின் அதிரடியான குரலை கேட்டு பயந்து நடுங்கி, வழக்கம் போல் எங்க ஆச்சியை துணைக்கு அழைக்கலாமுன்னு திரும்பி பார்க்க, ஆச்சியோ மூஞ்சியை வேறு பக்கம் திருப்பிக்கிட்டாங்க.
ஏன் தெரியுமா? கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஆச்சி வெத்திலை இடிச்சி கொடுக்க சொன்னாங்க, அதுக்கு நான் Уவேற வேலை இல்லைன்னுФ கடுப்பா சொன்னதுக்காக ஆச்சி கொடுத்த அதிரடி பதிலடி தான் அது.
நான் நடுநடுங்கியப்படி (ஏற்கனவே அந்த தடியன்கிட்ட நல்ல அடி வாங்கியிருந்தேன்) வர, என்னை பார்த்து அந்த தடிப்பையன் Уஅம்மா! என்னை அடிச்சது சுரேஷ் இல்லை, ரமேஷ் தான் அடிச்சான்Ф என்றான்.
எங்க அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியலை, Уடேய் படவா? வெளியே வாФ என்று தம்பியை அழைக்க, அதுவரை கதவுக்கு பின்னால் ஒளிந்திருந்த என் தம்பி வெளியே வர, அடுத்த நிமிடம் அந்த அத்தை என் அம்மாவின் கையில் இருந்த கம்பை வாங்கி வெளு வெளு என்று வெளுத்துடாங்க.
யாரை, அவங்க பையனை Уஏண்டா, தடிமாடு, நரம்பன் மாதிரி இருக்கான், இவன்கிட்டயா அடி வாங்கி வந்தே, அதை வேற என்கிட்ட சொல்லுறியா, வெட்கமாக இல்லைФ என்று சொல்லி அடிச்சிகிட்டே அழைச்சிட்டு போயிட்டாங்க, அன்று முதல் என் தம்பின்னா தெருவில் என் வயது பசங்களுக்கும் பயம் தான், அவன் இருக்கும் போது மட்டும் யாரும் என்னை அடிக்க மாட்டாங்க :) .
சில சமயம் யாராவது அடிக்க கை ஓங்கினால் உடனே Уடேய், என் தம்பிக்கிட்ட சொல்லிடுவேன்னாФ போதும், அடிக்க ஓங்கிய கை என்னை அணைச்சிடும். இது போன்ற காட்சிகளை டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் பார்க்கலாம், இப்போ அதை பார்த்தாலும் என் சின்ன வயசு வீரம் தான் நினைவுக்கு வரும்.
ஆனா பாருங்க, என்னுடைய வீரம் என் தம்பிக்கு நல்லா தெரிந்தும் என்னைக் கண்டால் பயப்படுவான், அது என்னா என்று தெரியலை, ஒருவேளை பாவம், நாமாவது அண்ணன்கிட்ட பயப்படுகிற மாதிரி நடிப்போம் என்ற நல்ல எண்ணமா என்று தெரியலை.
என் தம்பி குணத்தில் கர்ணனை மிஞ்சிடுவார், கையில் என்ன இருந்தாலும் யார் கேட்டாலும் கொடுத்திடுவான் (தயவு செய்து யாரும் அவனது தற்போதைய முகவரி கேட்க வேண்டாம், தெரிஞ்சவங்களும் அங்கே போக வேண்டாம் J ), எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க Уஇவனுக்கு இவங்க அப்பா புத்தி தான் இருக்குது, இப்போ ஒரு லட்சம் ரூபாய் கையில் கொடுத்து, பஜார் வரை போயிட்டு வா என்றால், திரும்பி வரும் போது 10,000 ரூபாயாவது கடன் வைச்சிட்டு வருவான்Ф என்று கேலியாக சொல்வாங்க.
நான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை சமையல் அறையை உருட்டுவது தான், தினமும் யார் வீட்டிலிருந்தாவது பண்டம், பலகாரங்கள் வரும். இருக்கிறதை முடிஞ்ச வரை சாப்பிட்டு விடுவேன், அம்மா சொல்வாங்க Уடேய், தம்பிக்கும் கொஞ்சம் வையடாФ நானும் பாவமுன்னு கொஞ்சம் வைச்சிடுவேன்.
அப்புறம் தம்பி வந்த பின்னர் அம்மா அவன்கிட்ட சமையல் அறையில் இருக்கும் பண்டத்தை சாப்பிடு என்று சொல்லுவாங்க, நான் பாடம் படிக்கிறதை விட்டு விட்டு அவன் சாப்பிடுவதை பரக்க பரக்க பார்ப்பேன். தம்பி உடனே கேட்பான் Уஅண்ணா! அம்மா உனக்கு கொடுக்கலையா?Ф
நான் ஆமாம், இல்லை என்று வாயால் சொல்லாம, அவனை குழப்ப, தலையை ஒரு பக்கமாக சாய்த்து மேலும் கீழும் மெதுவாக ஆட்டுவேன். உடனே தம்பி Уசரி அண்ணா! இந்தா உனக்கு பாதி, எனக்கு பாதிФ அவ்வளவு தான் அம்மாவோ, ஆச்சியோ பார்க்கும் முன்பு அந்த பாதியையும் லபக்கிடுவேன். சரியான திருட்டுப்பூனை என்று எனக்கு அம்மா பெயர் வைத்திருந்தாங்க.
சின்ன வயசிலே தம்பிக்கு அடிக்கடி உடம்புக்கு சரியில்லாம வந்திடும், உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுவோம். அவன் அசராமல் இருப்பான், டாக்டர் வந்தவுடன் கையை நீட்டுவான், ஊசிப் போட, நான் அதை பார்க்க பயந்து கண்ணை மூடிவேன், அவன் சிரிச்சிக்கிட்டே வருவான்.
ஒரு சமயம் தொடர்ந்து 6 மாதங்கள் தினமும் ஊசி போடணும் என்ற நிலை எல்லாம் இருந்தது. அம்மா அடிக்கடி சொல்லுவாங்க Уதம்பிக்காக ஆஸ்பத்திரிக்கு செலவு செய்த பணத்தை வைத்து ஒரு வீடே கட்டலாம்Ф
அடிக்கடி உடம்புக்கு சரியில்லாமல் போவதால் அவனால் விளையாடி ஈடுப்பட முடியவில்லை, அப்படியே விளையாடினால் இரவில் 10 ரூபாய் மருத்துவமனைக்கு மொய் எழுதணும்.
அப்போ ஊரில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் என் தம்பியை எதிரணிக்கு அனுப்பிடுவேன், 90% என் அணி தான் வெல்லும், அப்போ பரிசோடு வீட்டுக்கு வருவேன், தம்பியை பார்க்க பாவமாக இருக்கும். இருந்தாலும் நான் அப்படி செய்யக் காரணம் என் அணி தோற்றாலும், வென்றாலும் ஒரு பரிசு கட்டாயம் எங்க வீட்டுக்கு வந்திடும் என்ற எண்ணம் தான், இருந்தாலும் இது என் தம்பிக்கு மன வருத்தம் கொடுத்திருக்கும்.
எனக்கு சுள்னுன்னு எதுக்கெடுத்தாலும் கோபம் வரும், அப்போ என் தம்பி தான் அடி வாங்குவான், சில நேரம் என் அடி தாங்க முடியாம, மவனே! உன்னை வெட்டுறேன்டா என்று அரிவாளை தூக்கிட்டு வர, நான் ஓடி பூஜை அறையின் கதவை பூட்டி உள்ளே இருந்திடுவேன், அவன் வாசலில் அரிவாளோடு உட்கார்ந்திடுவான். எங்க அம்மா தோட்டத்தில் தண்ணிர் பாய்ச்சு சில மணி நேரம் கழித்து வந்து தான் என்னை காப்பாற்றுவாங்க. அதுவரை உள்ளே புழுங்கி, ஒரு வழியாகி விடுவேன்.
நானும் தம்பியும் சண்டை போட்டால் அம்மா அன்று இரவில் சொல்லும் கதைகள் எல்லாம் அண்ணன் தம்பி ஒற்றுமையை போற்றும் கதைகளாக இருக்கும்.
பொதுவாக சொல்லும் கதைகளில் எல்லாம் அண்ணன் தான் வில்லனாக இருப்பார் (எ.கா. அலிபாபா), எப்படி என்றால் அண்ணன் குடும்பம் வசதியாக இருக்கும், தம்பி குடும்பம் கஷ்டப்படும். இதை சொல்லும் போது எல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கும், ஏன் எல்லாக் கதைகளிலும் அண்ணன் வில்லனாக இருக்கிறார், தம்பி மட்டும் நல்லவனாக இருக்கார்ன்னு நினைப்பேன். எப்போவாவது தம்பி வில்லனாக கதைகள் படித்தால் உடனே அம்மாவுக்கு நான் அந்த கதையை சொல்லி மனதை தேத்திக்குவேன்.
என் தம்பியோ எதையும் மனதில் வைத்திருக்காமல் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பான், சென்னையில் அவன் வேலை செய்த போது, எனக்கு வேலை இல்லாமல் இருந்த காலத்தில் அவன் எனக்கு அம்மா மாதிரி தினமும் சுடச் சுட சாப்பாடு சமைத்து போடுவான், நான் சாப்பிடுவதை உட்கார்ந்து ரசிப்பான். இன்னும் சாப்பிடு அண்ணா என்று பாசமாக சொல்வான். அதை இன்று நினைத்தால் கூட ஆனந்தக் கண்ணீர் வரும்.
இப்போ கூட அவனது சாப்பாட்டை எனக்கு பகிர்ந்து கொடுத்து என் வயிற்று பசியை போக்குகிறான். என் மீது காட்டும் அன்பை விட பல மடங்கு என் மகள் மீது காட்டுகிறான், சக்தி உண்மையில் மிக மிக கொடுத்து வைத்தவள்.
என் தம்பியின் பெருமைகளை மீண்டும் வேறு இடங்களில் சொல்கிறேன்.
இப்போ வேறு ஒரு சம்பவம்,
எங்க அம்மாவை பார்த்து என்னுடைய நண்பர்கள் எல்லோரும் Уசுரேஷ்! உங்க அம்மா டீச்சரா?Ф என்று தான் சொல்வாங்க. அந்த மாதிரியான தோரணை உண்டு, நன்றாக பேசுவாங்க, அடிக்கடி அறிவுரை சொல்வாங்க. எங்க தெருவில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் மாலை நேரத்தில் எங்க வீட்டு வராண்டாவில் தான் இருந்து படிப்பாங்க, தெரு விளக்கு வெளிச்சமும் அதிகமாக இருக்கும். எங்க ஆச்சியின் கூட்டாளிகள், பெரியவங்க எல்லாம் சொந்தக்கதை, சோகக்கதை பேசுவாங்க. நாங்க படிப்போம், இல்லை படிக்கிற சாக்கில் அவங்க கதைகளை கேட்போம். எங்க அம்மா எல்லோரும் படிக்கிற வரை தேவையற்ற கதைகள் பேசுவதை தடை செய்திடுவாங்க, அது எங்க ஆச்சிக்கு கடுப்பாக இருக்கும்.
எங்க அம்மா சின்ன வயசில யார் எதை கொடுத்தாலும் வாங்ககூடாது, கீழே பணமே கிடந்தாலும் எடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருந்தாங்க, அதனால யார் என்ன கொடுத்தாலும் வாங்க மாட்டேன்.
அப்படி தான் ஒருமுறை இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாட பள்ளி மாணவர்கள் எல்லோரும் கூடியிருந்தோம். கிராமத்து காங்கிரஸ் தலைவரான எங்க சித்தப்பா கொடி ஏற்றி, எல்லோருக்கும் லட்டு கொடுத்தாங்க. நானும் வரிசையில் நின்றேன், எனக்கு லட்டு கொடுக்க, நான் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன். உடனே டீச்சர்கள் எல்லோரும் வந்து என்னிடம் வாங்கிகப்பா என்று சொன்னாங்க, நான் தெலுங்கில் மாட்டேன், அம்மா வாங்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கான்னு என்று சொல்ல, நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் விழிக்க, கடைசியில் ஒரு டீச்சர் எங்க வீட்டிற்கே என்னை அழைத்து வந்து, விபரத்தை சொல்லி, லட்டு வாங்க வச்சாங்க.
கொஞ்ச நாளிலேயே அவ்வளவு நல்லப்பிள்ளையாக இருந்த நான், விதி கட்டம் கட்டி சதி செய்ய, எங்க அம்மாவிடம் செம அடி வாங்கிய சம்பவம் நடந்தது. ஆஹா! இதுக்கும் நிறைய பேர் காத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
தொடரும் .....
கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அலுவலக வேலைகள் அதிகரித்து விட்டதால் இத்தொடரை உடனே தொடர முடியாமல் போய் விட்டது, என் தோல் உரிந்ததா என்பதை அறிய காத்திருந்த அனைவரும் மன்னிக்கவும்.
Уடேய் படவா ராஸ்கல், வாடா இங்கேУ
நான் அம்மாவின் அதிரடியான குரலை கேட்டு பயந்து நடுங்கி, வழக்கம் போல் எங்க ஆச்சியை துணைக்கு அழைக்கலாமுன்னு திரும்பி பார்க்க, ஆச்சியோ மூஞ்சியை வேறு பக்கம் திருப்பிக்கிட்டாங்க.
ஏன் தெரியுமா? கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஆச்சி வெத்திலை இடிச்சி கொடுக்க சொன்னாங்க, அதுக்கு நான் Уவேற வேலை இல்லைன்னுФ கடுப்பா சொன்னதுக்காக ஆச்சி கொடுத்த அதிரடி பதிலடி தான் அது.
நான் நடுநடுங்கியப்படி (ஏற்கனவே அந்த தடியன்கிட்ட நல்ல அடி வாங்கியிருந்தேன்) வர, என்னை பார்த்து அந்த தடிப்பையன் Уஅம்மா! என்னை அடிச்சது சுரேஷ் இல்லை, ரமேஷ் தான் அடிச்சான்Ф என்றான்.
எங்க அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியலை, Уடேய் படவா? வெளியே வாФ என்று தம்பியை அழைக்க, அதுவரை கதவுக்கு பின்னால் ஒளிந்திருந்த என் தம்பி வெளியே வர, அடுத்த நிமிடம் அந்த அத்தை என் அம்மாவின் கையில் இருந்த கம்பை வாங்கி வெளு வெளு என்று வெளுத்துடாங்க.
யாரை, அவங்க பையனை Уஏண்டா, தடிமாடு, நரம்பன் மாதிரி இருக்கான், இவன்கிட்டயா அடி வாங்கி வந்தே, அதை வேற என்கிட்ட சொல்லுறியா, வெட்கமாக இல்லைФ என்று சொல்லி அடிச்சிகிட்டே அழைச்சிட்டு போயிட்டாங்க, அன்று முதல் என் தம்பின்னா தெருவில் என் வயது பசங்களுக்கும் பயம் தான், அவன் இருக்கும் போது மட்டும் யாரும் என்னை அடிக்க மாட்டாங்க :) .
சில சமயம் யாராவது அடிக்க கை ஓங்கினால் உடனே Уடேய், என் தம்பிக்கிட்ட சொல்லிடுவேன்னாФ போதும், அடிக்க ஓங்கிய கை என்னை அணைச்சிடும். இது போன்ற காட்சிகளை டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் பார்க்கலாம், இப்போ அதை பார்த்தாலும் என் சின்ன வயசு வீரம் தான் நினைவுக்கு வரும்.
ஆனா பாருங்க, என்னுடைய வீரம் என் தம்பிக்கு நல்லா தெரிந்தும் என்னைக் கண்டால் பயப்படுவான், அது என்னா என்று தெரியலை, ஒருவேளை பாவம், நாமாவது அண்ணன்கிட்ட பயப்படுகிற மாதிரி நடிப்போம் என்ற நல்ல எண்ணமா என்று தெரியலை.
என் தம்பி குணத்தில் கர்ணனை மிஞ்சிடுவார், கையில் என்ன இருந்தாலும் யார் கேட்டாலும் கொடுத்திடுவான் (தயவு செய்து யாரும் அவனது தற்போதைய முகவரி கேட்க வேண்டாம், தெரிஞ்சவங்களும் அங்கே போக வேண்டாம் J ), எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க Уஇவனுக்கு இவங்க அப்பா புத்தி தான் இருக்குது, இப்போ ஒரு லட்சம் ரூபாய் கையில் கொடுத்து, பஜார் வரை போயிட்டு வா என்றால், திரும்பி வரும் போது 10,000 ரூபாயாவது கடன் வைச்சிட்டு வருவான்Ф என்று கேலியாக சொல்வாங்க.
நான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை சமையல் அறையை உருட்டுவது தான், தினமும் யார் வீட்டிலிருந்தாவது பண்டம், பலகாரங்கள் வரும். இருக்கிறதை முடிஞ்ச வரை சாப்பிட்டு விடுவேன், அம்மா சொல்வாங்க Уடேய், தம்பிக்கும் கொஞ்சம் வையடாФ நானும் பாவமுன்னு கொஞ்சம் வைச்சிடுவேன்.
அப்புறம் தம்பி வந்த பின்னர் அம்மா அவன்கிட்ட சமையல் அறையில் இருக்கும் பண்டத்தை சாப்பிடு என்று சொல்லுவாங்க, நான் பாடம் படிக்கிறதை விட்டு விட்டு அவன் சாப்பிடுவதை பரக்க பரக்க பார்ப்பேன். தம்பி உடனே கேட்பான் Уஅண்ணா! அம்மா உனக்கு கொடுக்கலையா?Ф
நான் ஆமாம், இல்லை என்று வாயால் சொல்லாம, அவனை குழப்ப, தலையை ஒரு பக்கமாக சாய்த்து மேலும் கீழும் மெதுவாக ஆட்டுவேன். உடனே தம்பி Уசரி அண்ணா! இந்தா உனக்கு பாதி, எனக்கு பாதிФ அவ்வளவு தான் அம்மாவோ, ஆச்சியோ பார்க்கும் முன்பு அந்த பாதியையும் லபக்கிடுவேன். சரியான திருட்டுப்பூனை என்று எனக்கு அம்மா பெயர் வைத்திருந்தாங்க.
சின்ன வயசிலே தம்பிக்கு அடிக்கடி உடம்புக்கு சரியில்லாம வந்திடும், உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுவோம். அவன் அசராமல் இருப்பான், டாக்டர் வந்தவுடன் கையை நீட்டுவான், ஊசிப் போட, நான் அதை பார்க்க பயந்து கண்ணை மூடிவேன், அவன் சிரிச்சிக்கிட்டே வருவான்.
ஒரு சமயம் தொடர்ந்து 6 மாதங்கள் தினமும் ஊசி போடணும் என்ற நிலை எல்லாம் இருந்தது. அம்மா அடிக்கடி சொல்லுவாங்க Уதம்பிக்காக ஆஸ்பத்திரிக்கு செலவு செய்த பணத்தை வைத்து ஒரு வீடே கட்டலாம்Ф
அடிக்கடி உடம்புக்கு சரியில்லாமல் போவதால் அவனால் விளையாடி ஈடுப்பட முடியவில்லை, அப்படியே விளையாடினால் இரவில் 10 ரூபாய் மருத்துவமனைக்கு மொய் எழுதணும்.
அப்போ ஊரில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் என் தம்பியை எதிரணிக்கு அனுப்பிடுவேன், 90% என் அணி தான் வெல்லும், அப்போ பரிசோடு வீட்டுக்கு வருவேன், தம்பியை பார்க்க பாவமாக இருக்கும். இருந்தாலும் நான் அப்படி செய்யக் காரணம் என் அணி தோற்றாலும், வென்றாலும் ஒரு பரிசு கட்டாயம் எங்க வீட்டுக்கு வந்திடும் என்ற எண்ணம் தான், இருந்தாலும் இது என் தம்பிக்கு மன வருத்தம் கொடுத்திருக்கும்.
எனக்கு சுள்னுன்னு எதுக்கெடுத்தாலும் கோபம் வரும், அப்போ என் தம்பி தான் அடி வாங்குவான், சில நேரம் என் அடி தாங்க முடியாம, மவனே! உன்னை வெட்டுறேன்டா என்று அரிவாளை தூக்கிட்டு வர, நான் ஓடி பூஜை அறையின் கதவை பூட்டி உள்ளே இருந்திடுவேன், அவன் வாசலில் அரிவாளோடு உட்கார்ந்திடுவான். எங்க அம்மா தோட்டத்தில் தண்ணிர் பாய்ச்சு சில மணி நேரம் கழித்து வந்து தான் என்னை காப்பாற்றுவாங்க. அதுவரை உள்ளே புழுங்கி, ஒரு வழியாகி விடுவேன்.
நானும் தம்பியும் சண்டை போட்டால் அம்மா அன்று இரவில் சொல்லும் கதைகள் எல்லாம் அண்ணன் தம்பி ஒற்றுமையை போற்றும் கதைகளாக இருக்கும்.
பொதுவாக சொல்லும் கதைகளில் எல்லாம் அண்ணன் தான் வில்லனாக இருப்பார் (எ.கா. அலிபாபா), எப்படி என்றால் அண்ணன் குடும்பம் வசதியாக இருக்கும், தம்பி குடும்பம் கஷ்டப்படும். இதை சொல்லும் போது எல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கும், ஏன் எல்லாக் கதைகளிலும் அண்ணன் வில்லனாக இருக்கிறார், தம்பி மட்டும் நல்லவனாக இருக்கார்ன்னு நினைப்பேன். எப்போவாவது தம்பி வில்லனாக கதைகள் படித்தால் உடனே அம்மாவுக்கு நான் அந்த கதையை சொல்லி மனதை தேத்திக்குவேன்.
என் தம்பியோ எதையும் மனதில் வைத்திருக்காமல் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பான், சென்னையில் அவன் வேலை செய்த போது, எனக்கு வேலை இல்லாமல் இருந்த காலத்தில் அவன் எனக்கு அம்மா மாதிரி தினமும் சுடச் சுட சாப்பாடு சமைத்து போடுவான், நான் சாப்பிடுவதை உட்கார்ந்து ரசிப்பான். இன்னும் சாப்பிடு அண்ணா என்று பாசமாக சொல்வான். அதை இன்று நினைத்தால் கூட ஆனந்தக் கண்ணீர் வரும்.
இப்போ கூட அவனது சாப்பாட்டை எனக்கு பகிர்ந்து கொடுத்து என் வயிற்று பசியை போக்குகிறான். என் மீது காட்டும் அன்பை விட பல மடங்கு என் மகள் மீது காட்டுகிறான், சக்தி உண்மையில் மிக மிக கொடுத்து வைத்தவள்.
என் தம்பியின் பெருமைகளை மீண்டும் வேறு இடங்களில் சொல்கிறேன்.
இப்போ வேறு ஒரு சம்பவம்,
எங்க அம்மாவை பார்த்து என்னுடைய நண்பர்கள் எல்லோரும் Уசுரேஷ்! உங்க அம்மா டீச்சரா?Ф என்று தான் சொல்வாங்க. அந்த மாதிரியான தோரணை உண்டு, நன்றாக பேசுவாங்க, அடிக்கடி அறிவுரை சொல்வாங்க. எங்க தெருவில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் மாலை நேரத்தில் எங்க வீட்டு வராண்டாவில் தான் இருந்து படிப்பாங்க, தெரு விளக்கு வெளிச்சமும் அதிகமாக இருக்கும். எங்க ஆச்சியின் கூட்டாளிகள், பெரியவங்க எல்லாம் சொந்தக்கதை, சோகக்கதை பேசுவாங்க. நாங்க படிப்போம், இல்லை படிக்கிற சாக்கில் அவங்க கதைகளை கேட்போம். எங்க அம்மா எல்லோரும் படிக்கிற வரை தேவையற்ற கதைகள் பேசுவதை தடை செய்திடுவாங்க, அது எங்க ஆச்சிக்கு கடுப்பாக இருக்கும்.
எங்க அம்மா சின்ன வயசில யார் எதை கொடுத்தாலும் வாங்ககூடாது, கீழே பணமே கிடந்தாலும் எடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருந்தாங்க, அதனால யார் என்ன கொடுத்தாலும் வாங்க மாட்டேன்.
அப்படி தான் ஒருமுறை இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாட பள்ளி மாணவர்கள் எல்லோரும் கூடியிருந்தோம். கிராமத்து காங்கிரஸ் தலைவரான எங்க சித்தப்பா கொடி ஏற்றி, எல்லோருக்கும் லட்டு கொடுத்தாங்க. நானும் வரிசையில் நின்றேன், எனக்கு லட்டு கொடுக்க, நான் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன். உடனே டீச்சர்கள் எல்லோரும் வந்து என்னிடம் வாங்கிகப்பா என்று சொன்னாங்க, நான் தெலுங்கில் மாட்டேன், அம்மா வாங்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கான்னு என்று சொல்ல, நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் விழிக்க, கடைசியில் ஒரு டீச்சர் எங்க வீட்டிற்கே என்னை அழைத்து வந்து, விபரத்தை சொல்லி, லட்டு வாங்க வச்சாங்க.
கொஞ்ச நாளிலேயே அவ்வளவு நல்லப்பிள்ளையாக இருந்த நான், விதி கட்டம் கட்டி சதி செய்ய, எங்க அம்மாவிடம் செம அடி வாங்கிய சம்பவம் நடந்தது. ஆஹா! இதுக்கும் நிறைய பேர் காத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
தொடரும் .....