ராஜா
07-04-2007, 01:46 PM
குடந்தை பஸ் நிலையம்.
மார்க்கட் இழந்த நடிகையைப் போல சீந்துவார் இன்றி, நின்று கொண்டிருந்தது.அந்த டப்பா பஸ். ஓட்டுநர் ராசு வண்டிக்கு அடியில் அமர்ந்தவாறு கவலையுடன் பாகங்களைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தான். ஹூம்.. அடுத்த எஃப்.சி. வரை வேற ஒரு ஸ்பேர் பார்ட்டும் மாத்தாம இந்த டப்பாவை ஓட்டியாகணும்...!
சுப்பய்யர் பஸ் சர்வீஸ் ஒரு காலத்தில் ஓஹோ என்று ஓடியது. 12 வண்டிகள். ஆனால் சுப்பய்யருக்கு ஏகப்பட்ட பொண் குழந்தைகள். எல்லாத்தையும் கட்டிக் கொடுக்க கொட்டிக் கொடுத்தும் வட்டிக் கொடுத்தும் அழிச்சது போக இந்த டப்பா மட்டும் மீதி. இன்னொரு பொண்னு இருக்கு. அதுக்காக இந்த ரூட்டை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்காரு சுப்பய்யரு.
ராசுவோட அப்பாவும் இந்தக் கம்பெனியில டிரைவரா இருந்தாரு. அப்பா சாகும்போது சொல்லிட்டுப் போனாரு.. " டேய் தம்பி.. கடைசி பொண்ணைக் கட்டிக் கொடுக்கற வரைக்கும் அய்யாவை விட்டுப் போயிடாதே..! பாவம்.. பொழைக்கத் தெரியாத மனுஷன்.." அதனாலேயே இன்னும் இந்த டப்பாவை ஓட்டிக்கிட்டு இருக்கான்..ராசு.
சம்பளம்ன்னு ஒண்ணும் பெருசா வராது.. ராசு தன் அத்தைப் பொண்ணைதான் கட்டிக்கிட்டான்.. ம்ம் எங்கேயோ எப்படியோ இருக்க வேண்டியவள்.. ராசுவோட பத்தாக்குறை சம்பளத்துல கஷ்ட ஜீவனம்தான்.. புகை படிந்த ஓவியம்போல கண்ணில் ஒரு சோகத்துடன் இருப்பாள்.. ராசுவுக்கு ஒரே பையன்.. ரகு..! அப்பா பேரையே வச்சான்.. அதுவும் கொஞ்சம் சீக்காளிப் பிள்ளைதான்.. வர்ற வருமானத்துல நல்ல வைத்தியம் பார்க்க வழியில்லே.. என்ன பண்ண..?
ரகுவுக்கு 5 வயசு. நோஞ்சானா இருக்கும்.. நெஞ்சுக்கூடு முட்டி பாவமா இருக்கும்.. சமயத்தில் ராசுவோட மனநிலை தெரியாம பிடிவாதம் பிடிக்கும்.. ராசு ரெண்டு வைப்பான் முதுகில.. ஒடுங்கிய நெஞ்சுக்கூடு தெறிப்பது போல் குழந்தை விசிக்கும்.. ராசுவுக்கு கோபம் போய் பரிதாபம் வரும்.. "சரிடா தம்பி.. [அப்பா பேருங்கறதாலே ரகுன்னு கூப்பிட மாட்டான்] அழாதே.. அப்பாவை அடிச்சுடு..!" என்பான். குழந்தை அதிர்ந்து குச்சிக் கையால் இலேசாக தட்டும்.. குழந்தையின் பலவீனம் அறிந்து, 'இதைப் போய் அடித்தோமே' என அப்பன் கண்ணில் நீர் பெருகும்.. அடித்தது அப்பாவுக்கு வலித்ததோ என, குழந்தை மீண்டும் அதிரும்..மெல்ல எழுந்து அப்பன் கண் துடைக்கும்.. ராசு நெஞ்சோடு அணைத்து மருக, குழந்தை கீரிப் பிள்ளையாய் ஒட்டிக் கொள்ளும். கலையரசி எட்டி நின்று இந்தக் கூத்தை பார்ப்பாள்.
ஏதோ நினைவில் இருந்தவனை கண்டக்டர் கிழம் உசுப்பியது.. வெற்றிலை குதப்பிய வாயால் மழலை பேசிற்று.. ழாசு.. சீட்டுல உக்காழு... "கிழுபா" வந்துழுவான்.. பாசஞ்சழ் அந்த வண்டிக்கு போயிழுவாங்க.. ம்ம்ம்" ..!" அதுவும் சரிதான்.. டப்பா வண்டியில எவனுக்கு போக பிடிக்கும்..? "கிருபா" பஸ் டீவி.. மெத்தை சீட்டு, பளீர் கலர்ன்னு அட்டகாசமா இருக்கும்.. சுப்பய்யர் டப்பாவோ அரதப் பழசு.. அரைகுறை வேலையின் வெளிப்பாடா அங்கங்க பல்லை இளிக்கும்.. ஏதோ ராசுவோட திறமையால லைன்ல நிக்காம ஓடும்.. அவனும் போயிட்டா சுப்பய்யர் நிலைமை இன்னும் மோசம் ஆயிடும்.
சொன்ன மாதிரியே தேர் போல கிருபா வந்து நின்னுச்சு.. கட்டையில வண்டியைப் போட்டுட்டு டீவியை இன்னும் சத்தமா வச்சு, மியூசிக் ஆரனை ரெண்டு தடவை அடிக்க, டப்பா பஸ் கூட்டம் பாதி எறங்கி கிருபாவுக்கு போயிடுச்சு..! கிருபா வண்டி டிரைவர் நக்கலா சிரிச்சுகிட்டே எறங்கி ராசுகிட்ட வந்தான்.. அவனும் ஒருகாலத்தில ராசுவிடம் தயாரானவந்தான்.. லெஃப்ட்லேயே அணைஞ்சு ஓட்டுவான்.. ராசு அப்படி ஓட்டாதேன்னு கொல்லோ கொல்லுன்னு கொன்னு உருப்படியாக்கி விட்ட பய அவன்..
"அண்ணே நான் சொன்னதை யோசிச்சு பார்த்தியா..?"ராசுவிடம் கிருபா டிரைவர் கேட்டான்..
"என்னடா..?"
"என்னா என்னடா..? சரியாப் போச்சு போ.. நேத்து சொன்னேன்ல்ல.. எங்க முதலாளி இன்னொரு ரூட் வாங்கியிருக்காரு.. உன்னை வேலைக்கு கூப்பிட்டாருன்னு.. மறந்துட்டியா..?"
கிருபா டிரைவர் சொன்னது மறக்கவில்லை.. அதுவும் அவன் சொன்ன சம்பள விஷயம் ராசுவைக் குடைந்து கொண்டுதான் இருந்தது.. " 3500 ரூபாய் சம்பளம்.. கலெக்ஷன் படி.. 100 , 150 தேறும்.. வண்டியெல்லாம் ரதம் மாதிரி.. பவர் ஸ்டேரிங்கு..பிளசர் கார் மாதிரி ஓட்டலாம்.. உன் வண்டி போல நெஞ்சு வலிக்க ஒடிக்க வேணாம்.. வேணும்ன்னா இன்னொரு 500 ரூவா கூட வாங்கித் தாரேன்.. உன் டிரைவிங்குக்கு டீசல் மிச்சம் ஆகும்ன்னு சொன்னா முதலாளி தருவார்.. வாய்ப்ப உட்டுறாதே.."
என்னண்ணே.. யோசிக்கிற..? பதில் சொல்லு..
நான் அண்ணிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிட்டு நாளைக்கு நல்ல முடிவா சொல்றேண்டா..!
ம்ம் .. அண்ணி என்ன வேணாம்ன்னா சொல்லப் போவுது.. இந்த டப்பா எப்போ கவுருமோன்னு அண்ணி எவ்வளவு கவலைப் படுது தெரியுமா..?
கண்டக்டர் டைம் ஆயிடுச்சுன்னு சொல்ல, டப்பாவைக் கிளப்பினான் ராசு.. கொஞ்ச தூரம் போயிருக்கும்.. எதிர்த்தாப்பல கேடிபி பஸ் வந்தான்.. அவனும் ராசுகிட்ட தயாரானவன் தான்.. ஹெட் லைட்டைப் போட்டு கையை காட்டி ராசுவை நிறுத்தினான்..
என்னடா விஷயம்..? ஏன் நிறுத்துன..?
"அண்ணே.. சீக்கிரம் போ.. ரகுவுக்கு ரொம்ப முடியல போல.. அண்ணி அழுதுகிட்டு வாசல்ல நின்னுச்சு.. எனக்கு டைம் இல்ல.. உன்கிட்ட சொல்றேன்னு சொல்லிட்டு வெரட்டிகிட்டு வரேன்.. போ சீக்கிரம்..!
ராசுவுக்கு தலை சுற்றியது.. வண்டி ராசுவின் அவசரத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் திணறியது..
[தொடரும்.. அடுத்த பகுதியில் முடியும்..]
மார்க்கட் இழந்த நடிகையைப் போல சீந்துவார் இன்றி, நின்று கொண்டிருந்தது.அந்த டப்பா பஸ். ஓட்டுநர் ராசு வண்டிக்கு அடியில் அமர்ந்தவாறு கவலையுடன் பாகங்களைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தான். ஹூம்.. அடுத்த எஃப்.சி. வரை வேற ஒரு ஸ்பேர் பார்ட்டும் மாத்தாம இந்த டப்பாவை ஓட்டியாகணும்...!
சுப்பய்யர் பஸ் சர்வீஸ் ஒரு காலத்தில் ஓஹோ என்று ஓடியது. 12 வண்டிகள். ஆனால் சுப்பய்யருக்கு ஏகப்பட்ட பொண் குழந்தைகள். எல்லாத்தையும் கட்டிக் கொடுக்க கொட்டிக் கொடுத்தும் வட்டிக் கொடுத்தும் அழிச்சது போக இந்த டப்பா மட்டும் மீதி. இன்னொரு பொண்னு இருக்கு. அதுக்காக இந்த ரூட்டை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்காரு சுப்பய்யரு.
ராசுவோட அப்பாவும் இந்தக் கம்பெனியில டிரைவரா இருந்தாரு. அப்பா சாகும்போது சொல்லிட்டுப் போனாரு.. " டேய் தம்பி.. கடைசி பொண்ணைக் கட்டிக் கொடுக்கற வரைக்கும் அய்யாவை விட்டுப் போயிடாதே..! பாவம்.. பொழைக்கத் தெரியாத மனுஷன்.." அதனாலேயே இன்னும் இந்த டப்பாவை ஓட்டிக்கிட்டு இருக்கான்..ராசு.
சம்பளம்ன்னு ஒண்ணும் பெருசா வராது.. ராசு தன் அத்தைப் பொண்ணைதான் கட்டிக்கிட்டான்.. ம்ம் எங்கேயோ எப்படியோ இருக்க வேண்டியவள்.. ராசுவோட பத்தாக்குறை சம்பளத்துல கஷ்ட ஜீவனம்தான்.. புகை படிந்த ஓவியம்போல கண்ணில் ஒரு சோகத்துடன் இருப்பாள்.. ராசுவுக்கு ஒரே பையன்.. ரகு..! அப்பா பேரையே வச்சான்.. அதுவும் கொஞ்சம் சீக்காளிப் பிள்ளைதான்.. வர்ற வருமானத்துல நல்ல வைத்தியம் பார்க்க வழியில்லே.. என்ன பண்ண..?
ரகுவுக்கு 5 வயசு. நோஞ்சானா இருக்கும்.. நெஞ்சுக்கூடு முட்டி பாவமா இருக்கும்.. சமயத்தில் ராசுவோட மனநிலை தெரியாம பிடிவாதம் பிடிக்கும்.. ராசு ரெண்டு வைப்பான் முதுகில.. ஒடுங்கிய நெஞ்சுக்கூடு தெறிப்பது போல் குழந்தை விசிக்கும்.. ராசுவுக்கு கோபம் போய் பரிதாபம் வரும்.. "சரிடா தம்பி.. [அப்பா பேருங்கறதாலே ரகுன்னு கூப்பிட மாட்டான்] அழாதே.. அப்பாவை அடிச்சுடு..!" என்பான். குழந்தை அதிர்ந்து குச்சிக் கையால் இலேசாக தட்டும்.. குழந்தையின் பலவீனம் அறிந்து, 'இதைப் போய் அடித்தோமே' என அப்பன் கண்ணில் நீர் பெருகும்.. அடித்தது அப்பாவுக்கு வலித்ததோ என, குழந்தை மீண்டும் அதிரும்..மெல்ல எழுந்து அப்பன் கண் துடைக்கும்.. ராசு நெஞ்சோடு அணைத்து மருக, குழந்தை கீரிப் பிள்ளையாய் ஒட்டிக் கொள்ளும். கலையரசி எட்டி நின்று இந்தக் கூத்தை பார்ப்பாள்.
ஏதோ நினைவில் இருந்தவனை கண்டக்டர் கிழம் உசுப்பியது.. வெற்றிலை குதப்பிய வாயால் மழலை பேசிற்று.. ழாசு.. சீட்டுல உக்காழு... "கிழுபா" வந்துழுவான்.. பாசஞ்சழ் அந்த வண்டிக்கு போயிழுவாங்க.. ம்ம்ம்" ..!" அதுவும் சரிதான்.. டப்பா வண்டியில எவனுக்கு போக பிடிக்கும்..? "கிருபா" பஸ் டீவி.. மெத்தை சீட்டு, பளீர் கலர்ன்னு அட்டகாசமா இருக்கும்.. சுப்பய்யர் டப்பாவோ அரதப் பழசு.. அரைகுறை வேலையின் வெளிப்பாடா அங்கங்க பல்லை இளிக்கும்.. ஏதோ ராசுவோட திறமையால லைன்ல நிக்காம ஓடும்.. அவனும் போயிட்டா சுப்பய்யர் நிலைமை இன்னும் மோசம் ஆயிடும்.
சொன்ன மாதிரியே தேர் போல கிருபா வந்து நின்னுச்சு.. கட்டையில வண்டியைப் போட்டுட்டு டீவியை இன்னும் சத்தமா வச்சு, மியூசிக் ஆரனை ரெண்டு தடவை அடிக்க, டப்பா பஸ் கூட்டம் பாதி எறங்கி கிருபாவுக்கு போயிடுச்சு..! கிருபா வண்டி டிரைவர் நக்கலா சிரிச்சுகிட்டே எறங்கி ராசுகிட்ட வந்தான்.. அவனும் ஒருகாலத்தில ராசுவிடம் தயாரானவந்தான்.. லெஃப்ட்லேயே அணைஞ்சு ஓட்டுவான்.. ராசு அப்படி ஓட்டாதேன்னு கொல்லோ கொல்லுன்னு கொன்னு உருப்படியாக்கி விட்ட பய அவன்..
"அண்ணே நான் சொன்னதை யோசிச்சு பார்த்தியா..?"ராசுவிடம் கிருபா டிரைவர் கேட்டான்..
"என்னடா..?"
"என்னா என்னடா..? சரியாப் போச்சு போ.. நேத்து சொன்னேன்ல்ல.. எங்க முதலாளி இன்னொரு ரூட் வாங்கியிருக்காரு.. உன்னை வேலைக்கு கூப்பிட்டாருன்னு.. மறந்துட்டியா..?"
கிருபா டிரைவர் சொன்னது மறக்கவில்லை.. அதுவும் அவன் சொன்ன சம்பள விஷயம் ராசுவைக் குடைந்து கொண்டுதான் இருந்தது.. " 3500 ரூபாய் சம்பளம்.. கலெக்ஷன் படி.. 100 , 150 தேறும்.. வண்டியெல்லாம் ரதம் மாதிரி.. பவர் ஸ்டேரிங்கு..பிளசர் கார் மாதிரி ஓட்டலாம்.. உன் வண்டி போல நெஞ்சு வலிக்க ஒடிக்க வேணாம்.. வேணும்ன்னா இன்னொரு 500 ரூவா கூட வாங்கித் தாரேன்.. உன் டிரைவிங்குக்கு டீசல் மிச்சம் ஆகும்ன்னு சொன்னா முதலாளி தருவார்.. வாய்ப்ப உட்டுறாதே.."
என்னண்ணே.. யோசிக்கிற..? பதில் சொல்லு..
நான் அண்ணிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிட்டு நாளைக்கு நல்ல முடிவா சொல்றேண்டா..!
ம்ம் .. அண்ணி என்ன வேணாம்ன்னா சொல்லப் போவுது.. இந்த டப்பா எப்போ கவுருமோன்னு அண்ணி எவ்வளவு கவலைப் படுது தெரியுமா..?
கண்டக்டர் டைம் ஆயிடுச்சுன்னு சொல்ல, டப்பாவைக் கிளப்பினான் ராசு.. கொஞ்ச தூரம் போயிருக்கும்.. எதிர்த்தாப்பல கேடிபி பஸ் வந்தான்.. அவனும் ராசுகிட்ட தயாரானவன் தான்.. ஹெட் லைட்டைப் போட்டு கையை காட்டி ராசுவை நிறுத்தினான்..
என்னடா விஷயம்..? ஏன் நிறுத்துன..?
"அண்ணே.. சீக்கிரம் போ.. ரகுவுக்கு ரொம்ப முடியல போல.. அண்ணி அழுதுகிட்டு வாசல்ல நின்னுச்சு.. எனக்கு டைம் இல்ல.. உன்கிட்ட சொல்றேன்னு சொல்லிட்டு வெரட்டிகிட்டு வரேன்.. போ சீக்கிரம்..!
ராசுவுக்கு தலை சுற்றியது.. வண்டி ராசுவின் அவசரத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல் திணறியது..
[தொடரும்.. அடுத்த பகுதியில் முடியும்..]