Nanban
08-05-2003, 03:31 PM
மழை.....
நான் மழையில்
நனைந்த
முதல் நாள் ஞாபகமில்லை.
ஒவ்வொரு
மழை நாளிலும்
நனையத் தான் ஆசை.
அன்று ஒரு நாள்
அம்மா திட்டினாள்
மழையில் நனைந்ததற்கு
'எதையாவது இழுத்து
வைச்சித் தொலை -
சேவகம் செய்ய நானொருத்தி
இருக்கேன்ற திமிரா?'
கஞ்சி வைத்துக் கொண்டே
கடுப்புடன் திட்டினாள்.
மற்றுமொரு மழையில்
மனைவி திட்டினாள் -
'மாஞ்சி மாஞ்சி
வேலை செய்ய
வேலைக்காரி நானொருத்தி
இருக்கேன்ற மதப்பு'
கஷாயம் காய்ச்சிக் கொண்டே
என்னையும் காய்ச்சினாள்.
'வயாசான வயசில்
மழையென்ன வேண்டிக் கிடக்குது
அதுவும் பிள்ளைகளோட'
விக்ஸ் தடவிக் கொண்டே
அதட்டுகிறாள் மகள் -
அவளும் ஒரு அம்மா இன்று.
எவருக்கும் தெரியாது -
நனைந்து கிடக்க
ஓடும் என் மனதை.
மனம் போன போக்கில்
மழையில் நனைந்து
நைந்த காகிதமாய்
மனம் துவளும்
வேலையிலே மட்டும்தான்
மண் வாசனை மட்டுமல்ல,
முந்தானையைக் கொண்டு
என்னையும் தன்னையும்
காக்க முயற்சித்துத் தோற்ற
அவளின் நனைந்தக் கூந்தலின்
மணத்தையும்
நான் உணர்கிறேன் -
அவளுக்கும் எனக்கும் மட்டும்தான்
மழை மருத்துவத்தை அழைக்காது
பொழிந்தது.
நண்பன்........
நான் மழையில்
நனைந்த
முதல் நாள் ஞாபகமில்லை.
ஒவ்வொரு
மழை நாளிலும்
நனையத் தான் ஆசை.
அன்று ஒரு நாள்
அம்மா திட்டினாள்
மழையில் நனைந்ததற்கு
'எதையாவது இழுத்து
வைச்சித் தொலை -
சேவகம் செய்ய நானொருத்தி
இருக்கேன்ற திமிரா?'
கஞ்சி வைத்துக் கொண்டே
கடுப்புடன் திட்டினாள்.
மற்றுமொரு மழையில்
மனைவி திட்டினாள் -
'மாஞ்சி மாஞ்சி
வேலை செய்ய
வேலைக்காரி நானொருத்தி
இருக்கேன்ற மதப்பு'
கஷாயம் காய்ச்சிக் கொண்டே
என்னையும் காய்ச்சினாள்.
'வயாசான வயசில்
மழையென்ன வேண்டிக் கிடக்குது
அதுவும் பிள்ளைகளோட'
விக்ஸ் தடவிக் கொண்டே
அதட்டுகிறாள் மகள் -
அவளும் ஒரு அம்மா இன்று.
எவருக்கும் தெரியாது -
நனைந்து கிடக்க
ஓடும் என் மனதை.
மனம் போன போக்கில்
மழையில் நனைந்து
நைந்த காகிதமாய்
மனம் துவளும்
வேலையிலே மட்டும்தான்
மண் வாசனை மட்டுமல்ல,
முந்தானையைக் கொண்டு
என்னையும் தன்னையும்
காக்க முயற்சித்துத் தோற்ற
அவளின் நனைந்தக் கூந்தலின்
மணத்தையும்
நான் உணர்கிறேன் -
அவளுக்கும் எனக்கும் மட்டும்தான்
மழை மருத்துவத்தை அழைக்காது
பொழிந்தது.
நண்பன்........