மீனாகுமார்
01-04-2007, 04:16 PM
ஆங்கோர் உயிர்போனால் அந்நாடே கதறுகிறது.
காரணங்கள் துல்லியமாக ஆராய்ந்த றியப்படுகிறது.
அதைப் பற்றியே பேச்சுக்கள் சிலகாலங்களுக்கு
நாடே அவர்கட்கு அஞ்சலி செலுத்துகிறது.
எவ்வாறு தடுத்திருக்க முடியுமென்ற ஆராய்ச்சி
மீண்டும் நிகழாது தடுத்திட ஆழத்திட்டம்
வெறும் வாய்ச்சொல் லில்லாது செயலுமங்கே
திட்டங்கள் உடனே நிறைவேற்றப் படுகின்றன.
ஆண்டுதோறும் அச்சம்பவம் நினைவு கூர்ந்து
தடுப்புத் திட்டமும் ஒத்திகை பார்க்கிறது
ஓருயிரின் மதிப்பும் விளைவும் இவ்வளவாயின்
பல்லுயிரின் மதிப்பென்ன பார்த்துக் கொள்ளடா.
ஒவ்வொரு மனிதருக்கு மித்தனை மரியாதை
யாவரும் யாவரையும் மதிப்புடன் இட்டிடுவர்
இந்திய சாலைகளில் மட்டுமே தினமும்
எத்தனை எத்தனை உயிர்கள் பிரிகிறதடா
அச் சாலையிலே மனிதனுக் கோர்
எள்ள ளவேணும் மரியாதையு ண்டோ
மருந்துக்கும் மருத்துவத்திற்கும் பணம் இல்லா
மாளும் உயிர்கள் திரும்பி வந்திடுமோ
வெறும் ஐயாயிரம் ரூபாய்க்கு சிலஉயிர்
கடன் தொல்லையிடம் விடுபட பல்லுயிர்.
காதல் தோல்விக்கு தேர்வில் தோல்விக்கு
கூண்டு கூண்டாக தீவிர வாதத்திற்க்கு
திட்டமிட்ட பாதுகாப்பில்லா ஜன நெரிசல்கள்
விழாவில் கோவிலில் நசுங்கிச்சாகும் அர்ப்பர்கள்
யாரோ தலைவர் கைதானால் தன்குடும்பத்தின்
ஐயாயிரம் ரூபாய்க்கு தன்னுயிரை விடும்தியாகி
ஆலையிற் தொழிற் சாலையில் திட்டமிட்ட
பாதுகாப்பு செய்யும் அப்பத்தாயிரம் தான்சேமித்திட
எவரோ பலரின் உயிர்களைக் கொய்திடும்
அலட்சிய மான எமதர்ம ராஜாக்கள்.
பாலமோ கட்டிடமோ கூரையோ ஆயினும்
இடிந்து வீழ்ந்து எவரோ மாண்டபின்
பராமரிப்பதாகக் கூறிடும் பொய்ச்சத்தியங்கள்
அனுதாப தொகையாக ஆயிரமும் இலட்சமும்
உயிரே போய்விட்டபின் பணமெதற்க்கடா ?
அலட்சியம் - இன்றைய நவீன இந்தியாவில்
தலை விரித் தாடிடும் மூதேவி.
ஒவ்வொரு நாளும் நம் சகோதரர்களின்
உயிரினை எத்தனைதான் காவு கொள்ளும்.
சரி இவர்கள் இறந்தால் நமக்கென்ன.
தொலைக்காட்சி நாடகம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்தியா வல்லரசாகுமாவென ஆராய வேண்டியுள்ளது.
விபத்தென்று பலகோப்புகளை மூட வேண்டியுள்ளது.
இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. இருப்பவர்களுக்கு
என் மரியாதையும் வேண்டுகோளும்.
காரணங்கள் துல்லியமாக ஆராய்ந்த றியப்படுகிறது.
அதைப் பற்றியே பேச்சுக்கள் சிலகாலங்களுக்கு
நாடே அவர்கட்கு அஞ்சலி செலுத்துகிறது.
எவ்வாறு தடுத்திருக்க முடியுமென்ற ஆராய்ச்சி
மீண்டும் நிகழாது தடுத்திட ஆழத்திட்டம்
வெறும் வாய்ச்சொல் லில்லாது செயலுமங்கே
திட்டங்கள் உடனே நிறைவேற்றப் படுகின்றன.
ஆண்டுதோறும் அச்சம்பவம் நினைவு கூர்ந்து
தடுப்புத் திட்டமும் ஒத்திகை பார்க்கிறது
ஓருயிரின் மதிப்பும் விளைவும் இவ்வளவாயின்
பல்லுயிரின் மதிப்பென்ன பார்த்துக் கொள்ளடா.
ஒவ்வொரு மனிதருக்கு மித்தனை மரியாதை
யாவரும் யாவரையும் மதிப்புடன் இட்டிடுவர்
இந்திய சாலைகளில் மட்டுமே தினமும்
எத்தனை எத்தனை உயிர்கள் பிரிகிறதடா
அச் சாலையிலே மனிதனுக் கோர்
எள்ள ளவேணும் மரியாதையு ண்டோ
மருந்துக்கும் மருத்துவத்திற்கும் பணம் இல்லா
மாளும் உயிர்கள் திரும்பி வந்திடுமோ
வெறும் ஐயாயிரம் ரூபாய்க்கு சிலஉயிர்
கடன் தொல்லையிடம் விடுபட பல்லுயிர்.
காதல் தோல்விக்கு தேர்வில் தோல்விக்கு
கூண்டு கூண்டாக தீவிர வாதத்திற்க்கு
திட்டமிட்ட பாதுகாப்பில்லா ஜன நெரிசல்கள்
விழாவில் கோவிலில் நசுங்கிச்சாகும் அர்ப்பர்கள்
யாரோ தலைவர் கைதானால் தன்குடும்பத்தின்
ஐயாயிரம் ரூபாய்க்கு தன்னுயிரை விடும்தியாகி
ஆலையிற் தொழிற் சாலையில் திட்டமிட்ட
பாதுகாப்பு செய்யும் அப்பத்தாயிரம் தான்சேமித்திட
எவரோ பலரின் உயிர்களைக் கொய்திடும்
அலட்சிய மான எமதர்ம ராஜாக்கள்.
பாலமோ கட்டிடமோ கூரையோ ஆயினும்
இடிந்து வீழ்ந்து எவரோ மாண்டபின்
பராமரிப்பதாகக் கூறிடும் பொய்ச்சத்தியங்கள்
அனுதாப தொகையாக ஆயிரமும் இலட்சமும்
உயிரே போய்விட்டபின் பணமெதற்க்கடா ?
அலட்சியம் - இன்றைய நவீன இந்தியாவில்
தலை விரித் தாடிடும் மூதேவி.
ஒவ்வொரு நாளும் நம் சகோதரர்களின்
உயிரினை எத்தனைதான் காவு கொள்ளும்.
சரி இவர்கள் இறந்தால் நமக்கென்ன.
தொலைக்காட்சி நாடகம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்தியா வல்லரசாகுமாவென ஆராய வேண்டியுள்ளது.
விபத்தென்று பலகோப்புகளை மூட வேண்டியுள்ளது.
இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. இருப்பவர்களுக்கு
என் மரியாதையும் வேண்டுகோளும்.