lenram80
29-03-2007, 03:14 AM
யாருடி இவன்?
திடீரென்று வந்தான்!
குளிரக் குளிர மழை கொடுத்தான்!
குலுங்கக் குலுங்க மலர் கொடுத்தான்!
சிலிர்க்க சிலிர்க்க சிரிப்பு கொடுத்தான்!
இப்போது, விடிய விடிய வெளிச்சம் கொடுக்கிறான்!
சில விதைகளால் மட்டும் எப்படி ஆலமரமாய் வளரமுடிகிறது?
சில காற்றுகளால் மட்டும் எப்படி புயலாய் மாறமுடிகிறது?
சில மேகங்களால் மட்டும் எப்படி கொட்டெனக் கொட்டமுடிகிறது?
சில மனிதர்களால் மட்டும் எப்படி நம் உயிரின் அடிவரை தொடமுடிகிறது?
இவர்களால் மட்டும் தான், எடுத்த எடுப்பிலேயே
நம் உடம்பை ஊடுறுவி உயிரைத் தொடமுடிகிறது!
அதன் முதுகை தட்டிக் கொடுத்து, முடி வருடமுடிகிறது!
ஆறுதல் தேடி அலையும் தருணங்களில்
ஆண்டவனாகவும் வரமுடிகிறது!
அப்படிப் பட்டவர்களில் இவனும் ஒன்றா?
என் சோகம் தாங்க இவன் வருவது நன்றா?
இவன்,
துக்கங்களை உறிஞ்சிக் கொண்டு, சுகப்பழம் தருகின்ற கன்றா?
குளிர்காற்று பட்டால் தானே மேகம் கூட மழை பொழியும்?
எப்படி இவனால் என் மூச்சுக் காற்றுக்கே மழை பொழியமுடிகிறது?
காதலிக்கும் நேரத்தில் கனிய கனிய பேசிவிட்டு
கல்யாணம் என்றவுடன் காணாமல் போய்விட்ட
கயவன் - ஒரு ஆண் என்பதால்
நொடி நொடியாய் ரசித்து
அணு அணுவாய் புசித்து
செல் செல்லாய் செதுக்கிய காதல் கோட்டையை
கவலைப் படாமல் இடித்த காதலன்
கயவன் - ஒரு ஆண் என்பதால்
ஆணினத்தையே அழிக்க நினைத்தபோது
சில்லென்று வந்து
சிறு மழை தூவி
சிறு நகை புரிகிறானே!
இவன் யார்?
இவன் என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் ஆறா?
இல்லை,
மீண்டும் அழுகையில் மூழ்கவிடும் ஆழ்கடலா?
இவனிடம் பேசுவது ஆறுதல் என்பது மறுக்கப்படாத உண்மை!
இது அடுத்த காதலாக மாறுதல் என்பது மறைக்கப்பட வேண்டிய உண்மை!
மூன்று வருடங்களுக்கு முன்பு நான் புத்தம் புது மலர்!
அவனுக்காக மணம் கொடுத்தேன்!
மணம் குறைந்தது என்று நினைத்தானோ?
இல்லை,
மற்றொரு மணத்தில் மனதை நனைய விட்டானோ?
தெரியவில்லை!
கயவன் அவன் கால் வாரிவிட்ட வேளையில்
இவன் மீண்டும் வந்து எனக்கு தண்ணீர் விடுகிறானே!
என்னோடு சேர்ந்து கண்ணீர் விடுகிறானே!
இவன் காலம் மாறி பொழியும் பருவ மழையா?
இல்லை,
என் காலம் மாற்ற வந்த பருவ மழையா?
தெரியவில்லை!
அடுத்த உறவுக்கு நான் இன்னும் ஆயுத்தமாகவில்லை!
அதற்குள் என்னை இப்படி ஆறுதல் ஆயுதத்தால் அடிக்கிறானே?
இவன் என்னை சந்தோஷப்படுத்த வந்த மாயனா?
இல்லை,
சங்கடப்படுத்த வந்த பேயனா?
விடை தேடி அலைகின்றேன்!
விடியல் தேடி அழுகின்றேன்!
திடீரென்று வந்தான்!
குளிரக் குளிர மழை கொடுத்தான்!
குலுங்கக் குலுங்க மலர் கொடுத்தான்!
சிலிர்க்க சிலிர்க்க சிரிப்பு கொடுத்தான்!
இப்போது, விடிய விடிய வெளிச்சம் கொடுக்கிறான்!
சில விதைகளால் மட்டும் எப்படி ஆலமரமாய் வளரமுடிகிறது?
சில காற்றுகளால் மட்டும் எப்படி புயலாய் மாறமுடிகிறது?
சில மேகங்களால் மட்டும் எப்படி கொட்டெனக் கொட்டமுடிகிறது?
சில மனிதர்களால் மட்டும் எப்படி நம் உயிரின் அடிவரை தொடமுடிகிறது?
இவர்களால் மட்டும் தான், எடுத்த எடுப்பிலேயே
நம் உடம்பை ஊடுறுவி உயிரைத் தொடமுடிகிறது!
அதன் முதுகை தட்டிக் கொடுத்து, முடி வருடமுடிகிறது!
ஆறுதல் தேடி அலையும் தருணங்களில்
ஆண்டவனாகவும் வரமுடிகிறது!
அப்படிப் பட்டவர்களில் இவனும் ஒன்றா?
என் சோகம் தாங்க இவன் வருவது நன்றா?
இவன்,
துக்கங்களை உறிஞ்சிக் கொண்டு, சுகப்பழம் தருகின்ற கன்றா?
குளிர்காற்று பட்டால் தானே மேகம் கூட மழை பொழியும்?
எப்படி இவனால் என் மூச்சுக் காற்றுக்கே மழை பொழியமுடிகிறது?
காதலிக்கும் நேரத்தில் கனிய கனிய பேசிவிட்டு
கல்யாணம் என்றவுடன் காணாமல் போய்விட்ட
கயவன் - ஒரு ஆண் என்பதால்
நொடி நொடியாய் ரசித்து
அணு அணுவாய் புசித்து
செல் செல்லாய் செதுக்கிய காதல் கோட்டையை
கவலைப் படாமல் இடித்த காதலன்
கயவன் - ஒரு ஆண் என்பதால்
ஆணினத்தையே அழிக்க நினைத்தபோது
சில்லென்று வந்து
சிறு மழை தூவி
சிறு நகை புரிகிறானே!
இவன் யார்?
இவன் என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் ஆறா?
இல்லை,
மீண்டும் அழுகையில் மூழ்கவிடும் ஆழ்கடலா?
இவனிடம் பேசுவது ஆறுதல் என்பது மறுக்கப்படாத உண்மை!
இது அடுத்த காதலாக மாறுதல் என்பது மறைக்கப்பட வேண்டிய உண்மை!
மூன்று வருடங்களுக்கு முன்பு நான் புத்தம் புது மலர்!
அவனுக்காக மணம் கொடுத்தேன்!
மணம் குறைந்தது என்று நினைத்தானோ?
இல்லை,
மற்றொரு மணத்தில் மனதை நனைய விட்டானோ?
தெரியவில்லை!
கயவன் அவன் கால் வாரிவிட்ட வேளையில்
இவன் மீண்டும் வந்து எனக்கு தண்ணீர் விடுகிறானே!
என்னோடு சேர்ந்து கண்ணீர் விடுகிறானே!
இவன் காலம் மாறி பொழியும் பருவ மழையா?
இல்லை,
என் காலம் மாற்ற வந்த பருவ மழையா?
தெரியவில்லை!
அடுத்த உறவுக்கு நான் இன்னும் ஆயுத்தமாகவில்லை!
அதற்குள் என்னை இப்படி ஆறுதல் ஆயுதத்தால் அடிக்கிறானே?
இவன் என்னை சந்தோஷப்படுத்த வந்த மாயனா?
இல்லை,
சங்கடப்படுத்த வந்த பேயனா?
விடை தேடி அலைகின்றேன்!
விடியல் தேடி அழுகின்றேன்!