பரஞ்சோதி
27-03-2007, 10:01 AM
கிரிக்கெட் என்று பேச்சு எடுத்தாலே மக்கள் எல்லோரும் கையில் கிடைப்பதை தூக்கி வீசி தாக்குறாங்கன்னு தெரிஞ்சும் நான் விளையாடிய கிரிக்கெட் பற்றி சொல்கிறேன். யாரும் பின்னோட்டத்தில் தாக்கிடாதீங்கப்பூ.
பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன், சென்ற ஆண்டு தான் எங்க கம்பெனி முதன் முறையாக கிரிக்கெட் போட்டிகள் நடத்த சம்மதம் தெரிவித்தது, குவைத்தில் புகழ் பெற்ற (தினேஷ் கார்த்திக் பயிற்சி பெற்ற) அஹமதி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடந்தன, மொத்தம் 32 அணிகள் மோதிய ஆட்டத்தில் நாங்க இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம், முதல் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி விட்டு கேப்டனாக இருந்த டிக்சன், மட்டையாளர்கள் பாரதி, லாட் போன்றோர் ஊருக்கு சென்று விட்டதால், நான் தலைமை ஏற்று, தொடர் வெற்றிகள் கண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றோம், முக்கிய வீரர்கள் நன்றாக ஆடாத நிலை, தொடர் கிரிக்கெட் காரணமாக காயங்கள், பதட்டம் என்ற நிலையில் குறைவான ரன்கள் பெற்றோம், எல்லோரும் பாதி ஓவர்களிலேயே ஆட்டம் முடியும் என்று எல்லோரும் சொல்ல, பலமான எதிரணியை கடைசி ஓவர், கடைசி பந்து வரை போராட வைத்தோம், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் எதிரணி வெற்றி, விக்கெட் விழுந்தால் நாங்க வெற்றி என்ற நிலையில் மிகச் சிறந்த தடுப்பாளரின் கையில் பிடிபடாமல் பந்து போக, நாங்க தோல்வி கண்டு, இரண்டாவது இடத்தைப் பெற்றோம். வென்ற அணியை விட எங்களுக்கு அதிக பாராட்டு கிடைத்தது சிறப்பான ஒன்று.
இந்த ஆண்டு, இரண்டாவது முறையாக போட்டிகள் நடத்த கம்பெனி அறிவிப்பு கொடுக்க, ஒரே பரபரப்பு, கிரிக்கெட் மட்டையை தொடாதவர்கள் கூட தினமும் ஆட்டங்களில் கலந்து கொண்டு விளையாடத் தொடங்கி விட்டார்கள். இந்த ஆண்டு 60க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்து கொள்ள விண்ணப்பங்களை அனுப்பினார்கள். இறுதியாக பல அணிகளை இணைத்து 32 அணிகள் தயார் செய்தார்கள்.
எங்க அணி 90% சென்ற ஆண்டு விளையாட வீரர்கள் தான். இம்முறையும் கேட்பனாக டிக்சனும், துணை கேப்டனாக நானும், மேனேஜராக காஷ்மீரை சேர்ந்த அப்துல் ஹமீத் மிர் என்பவரும் இருக்கிறோம்.
நாக் அவுட் என்ற முறையில் தொடங்கும் போட்டிகளில் முதல் போட்டியிலேயே சென்ற ஆண்டு சாம்பியன் அணி 12 ஓவரில் 206 ரன்கள் அடித்தார்கள். மற்ற அணிகளும் 170, 160 ரன்கள் என்று குவித்தார்கள். மொத்தம் 15 போட்டிகள் முடிந்த நிலையில் சென்ற ஞாயிற்றுகிழமை கடைசி போட்டியாக எங்க போட்டி நடந்தது. எல்லோருக்கும் நாங்க என்ன செய்யப் போகிறோம் என்ற ஆர்வம்.
எங்களுடன் மோதிய அணி சுபையா பவர் ஸ்டேஷன் அணி, சென்ற ஆண்டு அதே அணி எங்களுடன் காலிறுதிப் போட்டியில் தோற்றுப் போனார்கள், ஆகையில் இம்முறை சிறப்பான அணியை தேர்வு செய்திருந்தார்கள்.
எங்க அணியில் டிக்சன், நான், அஸ்லாம், அருண், ரவி, மாலிக், ஸ்ரீஜித், பிரதீப், சாவூத், சாவுல், வெங்கட், ஜமீல், பிரசாத், பாரதி இடம் பெற்றிருந்தோம், போட்டிக்கு முன்பு பயிற்சிப்போட்டியில் ரஸ்தூம் என்பவர் காயம் காரணமாக வெளியேறி விட்டார்.
எங்க கம்பெனி, இம்முறை சொந்த மைதானம் தயார் செய்து, மிகச் சிறப்பாக மின்னொளியுடன் ஏற்பாடு செய்திருந்தாங்க. மைதானத்திற்கு செல்ல குறைந்தது 1 மணி நேரம் ஆகும், அவ்வளவு தூரம்.
வண்டியில் பயணிக்கும் போதே டிக்சன் சொன்னார் இது நாம் அனைவரும் ஒன்றாக விளையாடும் கடைசி கோப்பை, அடுத்த ஆண்டு, நான் இன்னும் பலர் குவைத்தில் இருக்க மாட்டோம், எங்க காண்ட்ராக்ட் முடிந்து விட்டது, ஆகையால் மிகச்சிறப்பாக, நம்முடைய முழுத்திறனும் காட்டி விளையாட வேண்டும், மேலும் நம்முடைய அணி சிறப்பான அமைப்பாக இருக்க வேண்டும், மைதானத்தில் நானும், சுரேஷ் மட்டுமே பேசுவோம், முடிவு எடுப்போம், வேறு யாரும் விவாதத்தில் ஈடுபடக்கூடாது, ஒவ்வொரு பந்து வீசும் முன்பு உற்சாகப்படுத்த வேண்டும் என்று எல்லாம் பேசி விட்டோம்.
போட்டிகளில் மொத்தம் 12 ஓவர்கள், ஒரு பந்து வீச்சாளருக்கு அதிகபட்சமாக 3 ஓவர்கள். வைட், நோ பால் போட்டால் 2 ரன்கள் மற்றும் ஒரு பந்து வீச வேண்டும், LBW கிடையாது, காலில் பட்டு போனால் ரன் இல்லை என்பது விதிமுறைகள். மொத்தம் 4 குருப், ஒவ்வொன்றிலும் 8 அணிகள். வென்ற 4 அணிகளை ரன் ரேட் விகிதத்தில் வரிசைப்படுத்தி, அடுத்த குருப்பில் இருக்கும் அணிகளுடன் மோத வேண்டும். ரன் ரேட்டில் அதிகம் பெற்றால் அடுத்த அணியில் இருக்கும் குறைந்த ரன் ரேட் அணியுடன் மோதலாம். ஆக நாங்க அதிக ரன்ரேட்டில் வெல்ல வேண்டும், அதுக்கு பேட்டிங்க் செய்தால் நல்லது என்று நினைத்தோம்.
போட்டியில் எங்க தலை டிக்சன் தலை கேட்டு, வென்று, நாங்க முதலில் மட்டையடிக்க போனோம். அதிரடி ரவியும், டிக்சனும் இறங்கினார்கள். முதல் 2 ஓவரில் 31 ரன்கள், 6 ஓவரில் 71 ரன்கள், 10 ஓவரில் 141 ரன்கள், கடைசி இரண்டு ஓவரில் நானும் பிரதீப் சேர்ந்து 49 ரன்கள் குவித்தோம், 12 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள். அதில் 13 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள்.
மட்டையாளர் -சந்தித்த பந்து -எடுத்த ரன் - சிக்ஸர் - பவுண்டரி
ரவி --- 9 --- 21 --- 2 --- 2
டிக்சன் --- 14 --- 12 --- 0 --- 2
அருண் --- 15 --- 35 --- 2 --- 4
ஜமில் --- 10 --- 16 --- 1 --- 1
மாலிக் --- 5 --- 18 --- 3 --- 0
சுரேஷ் --- 11 --- 31 --- 3 --- 2
பிரதீப் --- 8 --- 27 --- 2 --- 3
நாங்க மட்டையடிக்கும் போது எதிரணி கேப்டன் நாகரீகம் இல்லாமல் கத்திக் கொண்டிருந்தார், லேலோ, லேலோ (தூக்கு, அவுட் ஆக்கு) என்று இந்தியில் கத்த, எங்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் சரியான எரிச்சல், நடுவரிடம் முறையிட்டும் பந்தை சந்திக்கும் போது கத்துவார், கடைசியில் எங்க ஆளுங்க சிக்ஸரும் பவுண்டரியுமாக அடிக்க, கூட்டத்தினரும், எங்க நண்பர்களும் மாரோ, மாரோ (அடி, அடித்து நொறுக்கு) என்று திருப்பி கத்த, ஒரே ஜாலி. அதே ஆள் மட்டையடிக்க வந்த போது மொத்த கூட்டமும் அவரை லேலோ லேலோ என்று சொல்ல பாவம் அவர், ஒருவழியாகி விட்டார்.
நாங்க அதிரடியாக எடுத்த ரன்களை கண்டு எதிரணி மட்டுமல்லாது பார்வையாளர்களும் மிரண்டு போயிருந்தார்கள். இப்போ எதிரணி மட்டையை பிடிக்க வந்தார்கள், நான் ஓடி ஓடி ரன் எடுத்து, விளையாடிய களைப்பினால் வெளியே இருக்க, எனக்கு பதிலாக பிரசாத் பீல்டிங் செய்ய சென்றார். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அஸ்லாம் வீச, தொடக்க வீரரை அதை கணிக்கவே முடியவில்லை, மட்டையில் பந்து படவே இல்லை, இறுதியில் ஒரு ரன் + ஒரு நோ பால் (2 ரன்) மட்டுமே எடுக்க முடிந்தது, வழக்கமாக நான் வீசும் பகுதியில் டிக்சன் வீச வந்தார்.
முதல் 4 ஓவர்களில் அவர்கள் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்கள். அடுத்து உள்ளே நான் வந்து 5வது ஓவர் வீச வந்தேன், இதுவரை ரன்கள் இல்லை, இனிமேலும் அடிக்கலைன்னா, வெளியே இருக்கிறவங்க கல்லால் அடிப்பாங்கன்னு நினைச்சு, மட்டையாளர் என் பந்தை அடிக்க நினைக்க, அது அவரது கெட்ட நேரம் போல் மட்டையில் படவே இல்லை, 5வது பந்தில் அவர் விக்கெட் காலி என்று நினைத்தேன், சரியான யார்க்கர், ஆனால் ஸ்டெம்ப் உள்ளே வேகமாக போன பந்தால் பெயில்ஸ் கீழே விழவில்லை, எனக்கு படு ஆச்சரியம், நடுவரே சிரித்து விட்டார். விடுவேனா நான், அடுத்த பந்தை அதே போல் வீச இம்முறை பெயில்ஸ் பறந்தது. மைதானத்தில் ஒரே ஆட்டம், கொண்டாட்டம்.
அடுத்த முனையில் அருண் பந்து வீச வந்தார், பதட்டத்தில் 3 வைட் (3 x 2 = 6) ரன்கள் இலவசமாக போய் விட்டது, அத்துடன் ஆட்டத்திலேயே அடிக்கப்பட்ட ஒரே ஒரு பவுண்டரியும் வந்தது, பொறுத்தது போதும் என்ற நிலையில் அடுத்த ஒவர் முதல் பந்தில் மேலும் ஒருவரை போல்ட் செய்தேன், மறு முனையில் ஜமில் அட்டகாசமாக வீசி 3 விக்கெட்களை கழட்டினார்.
பந்து வீச்சாளர் - ஓவர் - மெய்டன் - கொடுத்த ரன் - விக்கெட்
அஸ்லாம் --- 2.5 --- 1 --- 7 --- 2
டிக்சன் --- 2 --- 0 --- 10 --- 0
சுரேஷ் --- 3 --- 2 --- 3 --- 2
அருண் --- 2 --- 0 --- 17 --- 1
ஜமில் --- 2 --- 0 --- 5 --- 3
இறுதியில் எதிரணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 42 ரன்கள் மட்டுமே எடுத்தது, மட்டையில் பட்டு வந்த ரன்கள் 24 மட்டுமே, மீதி 18 ரன்கள் உதிரிகள். நாங்க 148 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம், மொத்த ஆட்டங்களிலேயே நாங்க தான் அதிக வித்தியாசம், அதிக ரன் ரேட் என்ற சாதனையில் வென்றோம். எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஆட்டத்தில் நாங்க மிகச்சிறப்பாக நடந்து கொண்டோம், ஒரு பிரச்சனையும் இல்லை, ரொம்பவும் கட்டுக்கோப்பான அணி என்ற பெயரும் கிடைத்தது.
தோற்ற அணியினரை தேற்றினேன், அவர்களில் ஒரு சிலர் என் நண்பர்கள், இனிவரும் போட்டிகளில் எங்களை ஆதரிக்க கேட்டுக் கொண்டேன்.
ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன், சென்னையிலிருந்து வாங்கி வந்த மட்டையில் சக்தியின் பெயரை எழுதி வைத்திருந்தேன், போட்டிக்கு முன்னராக சக்தியிடம் பேசினேன். டிக்சன் அடிக்கடி கிண்டல் செய்வார், சுரேஷ், சக்தி வந்த பின்னர் உங்க ஆட்டத்தில் ரொம்ப மாற்றம் தெரியுது, வயசு குறைவது போல் தோனுது என்பார், இன்று போட்டிக்கு முன்னர் சக்தியிடம் பேசியாச்சா என்று கேட்டார். போட்டிக்கு பின்னர் இனிமேல் எல்லா போட்டிக்கு முன்னரும் சக்தியிடம் பேசி விடுங்க என்று கேட்டுக் கொண்டார்.
32 அணிகளில் 16 அணிகள் வென்றிருக்கின்றன. அதில் முக்கிய அணிகள் இருக்கின்றன, இன்று முதல் இரண்டாம் சுற்று போட்டிகள் நடக்குது, இதில் 8 அணிகள் வென்று காலிறுதிக்கு தகுதிப் பெறும். இனி வரும் ஆட்டங்கள் இன்னும் சூடு பிடிக்கும். சென்ற ஆண்டு வென்ற அணியும், மூன்றாம் இடம் பிடித்த அணியும் மோதுகிறது, மற்ற போட்டியில் சிறந்த அணியுடன் நான்காம் இடம் பிடித்த அணி மோதுகிறது. இப்படியாக சுவாரஸ்யமான போட்டிகள் பல நடக்க இருக்கின்றன.
நேற்று சரியான மழை, கிரிக்கெட்டுக்கும் மழைக்கும் அப்படி என்ன சம்பந்தமோன்னு புரியலை. இன்று போட்டிகள் நடக்குமான்னு மாலையில் தான் தெரியும், மேலும் நான் நடுவராகவும் பங்கேற்க இருக்கேன், அது ஒரு வகையில் எதிரணிகளைப் பற்றி கணிக்க உதவும்.
இந்த ஆண்டும் வெற்றி பெற்று கோப்பையுடன் உங்களுக்கு காட்சி அளிக்க ஆசைப்படுகிறேன். எங்க அணியின் புகைப்படம் மாலையில் வெளியிடுகிறேன்.
பல ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன், சென்ற ஆண்டு தான் எங்க கம்பெனி முதன் முறையாக கிரிக்கெட் போட்டிகள் நடத்த சம்மதம் தெரிவித்தது, குவைத்தில் புகழ் பெற்ற (தினேஷ் கார்த்திக் பயிற்சி பெற்ற) அஹமதி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடந்தன, மொத்தம் 32 அணிகள் மோதிய ஆட்டத்தில் நாங்க இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம், முதல் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி விட்டு கேப்டனாக இருந்த டிக்சன், மட்டையாளர்கள் பாரதி, லாட் போன்றோர் ஊருக்கு சென்று விட்டதால், நான் தலைமை ஏற்று, தொடர் வெற்றிகள் கண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றோம், முக்கிய வீரர்கள் நன்றாக ஆடாத நிலை, தொடர் கிரிக்கெட் காரணமாக காயங்கள், பதட்டம் என்ற நிலையில் குறைவான ரன்கள் பெற்றோம், எல்லோரும் பாதி ஓவர்களிலேயே ஆட்டம் முடியும் என்று எல்லோரும் சொல்ல, பலமான எதிரணியை கடைசி ஓவர், கடைசி பந்து வரை போராட வைத்தோம், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் எதிரணி வெற்றி, விக்கெட் விழுந்தால் நாங்க வெற்றி என்ற நிலையில் மிகச் சிறந்த தடுப்பாளரின் கையில் பிடிபடாமல் பந்து போக, நாங்க தோல்வி கண்டு, இரண்டாவது இடத்தைப் பெற்றோம். வென்ற அணியை விட எங்களுக்கு அதிக பாராட்டு கிடைத்தது சிறப்பான ஒன்று.
இந்த ஆண்டு, இரண்டாவது முறையாக போட்டிகள் நடத்த கம்பெனி அறிவிப்பு கொடுக்க, ஒரே பரபரப்பு, கிரிக்கெட் மட்டையை தொடாதவர்கள் கூட தினமும் ஆட்டங்களில் கலந்து கொண்டு விளையாடத் தொடங்கி விட்டார்கள். இந்த ஆண்டு 60க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்து கொள்ள விண்ணப்பங்களை அனுப்பினார்கள். இறுதியாக பல அணிகளை இணைத்து 32 அணிகள் தயார் செய்தார்கள்.
எங்க அணி 90% சென்ற ஆண்டு விளையாட வீரர்கள் தான். இம்முறையும் கேட்பனாக டிக்சனும், துணை கேப்டனாக நானும், மேனேஜராக காஷ்மீரை சேர்ந்த அப்துல் ஹமீத் மிர் என்பவரும் இருக்கிறோம்.
நாக் அவுட் என்ற முறையில் தொடங்கும் போட்டிகளில் முதல் போட்டியிலேயே சென்ற ஆண்டு சாம்பியன் அணி 12 ஓவரில் 206 ரன்கள் அடித்தார்கள். மற்ற அணிகளும் 170, 160 ரன்கள் என்று குவித்தார்கள். மொத்தம் 15 போட்டிகள் முடிந்த நிலையில் சென்ற ஞாயிற்றுகிழமை கடைசி போட்டியாக எங்க போட்டி நடந்தது. எல்லோருக்கும் நாங்க என்ன செய்யப் போகிறோம் என்ற ஆர்வம்.
எங்களுடன் மோதிய அணி சுபையா பவர் ஸ்டேஷன் அணி, சென்ற ஆண்டு அதே அணி எங்களுடன் காலிறுதிப் போட்டியில் தோற்றுப் போனார்கள், ஆகையில் இம்முறை சிறப்பான அணியை தேர்வு செய்திருந்தார்கள்.
எங்க அணியில் டிக்சன், நான், அஸ்லாம், அருண், ரவி, மாலிக், ஸ்ரீஜித், பிரதீப், சாவூத், சாவுல், வெங்கட், ஜமீல், பிரசாத், பாரதி இடம் பெற்றிருந்தோம், போட்டிக்கு முன்பு பயிற்சிப்போட்டியில் ரஸ்தூம் என்பவர் காயம் காரணமாக வெளியேறி விட்டார்.
எங்க கம்பெனி, இம்முறை சொந்த மைதானம் தயார் செய்து, மிகச் சிறப்பாக மின்னொளியுடன் ஏற்பாடு செய்திருந்தாங்க. மைதானத்திற்கு செல்ல குறைந்தது 1 மணி நேரம் ஆகும், அவ்வளவு தூரம்.
வண்டியில் பயணிக்கும் போதே டிக்சன் சொன்னார் இது நாம் அனைவரும் ஒன்றாக விளையாடும் கடைசி கோப்பை, அடுத்த ஆண்டு, நான் இன்னும் பலர் குவைத்தில் இருக்க மாட்டோம், எங்க காண்ட்ராக்ட் முடிந்து விட்டது, ஆகையால் மிகச்சிறப்பாக, நம்முடைய முழுத்திறனும் காட்டி விளையாட வேண்டும், மேலும் நம்முடைய அணி சிறப்பான அமைப்பாக இருக்க வேண்டும், மைதானத்தில் நானும், சுரேஷ் மட்டுமே பேசுவோம், முடிவு எடுப்போம், வேறு யாரும் விவாதத்தில் ஈடுபடக்கூடாது, ஒவ்வொரு பந்து வீசும் முன்பு உற்சாகப்படுத்த வேண்டும் என்று எல்லாம் பேசி விட்டோம்.
போட்டிகளில் மொத்தம் 12 ஓவர்கள், ஒரு பந்து வீச்சாளருக்கு அதிகபட்சமாக 3 ஓவர்கள். வைட், நோ பால் போட்டால் 2 ரன்கள் மற்றும் ஒரு பந்து வீச வேண்டும், LBW கிடையாது, காலில் பட்டு போனால் ரன் இல்லை என்பது விதிமுறைகள். மொத்தம் 4 குருப், ஒவ்வொன்றிலும் 8 அணிகள். வென்ற 4 அணிகளை ரன் ரேட் விகிதத்தில் வரிசைப்படுத்தி, அடுத்த குருப்பில் இருக்கும் அணிகளுடன் மோத வேண்டும். ரன் ரேட்டில் அதிகம் பெற்றால் அடுத்த அணியில் இருக்கும் குறைந்த ரன் ரேட் அணியுடன் மோதலாம். ஆக நாங்க அதிக ரன்ரேட்டில் வெல்ல வேண்டும், அதுக்கு பேட்டிங்க் செய்தால் நல்லது என்று நினைத்தோம்.
போட்டியில் எங்க தலை டிக்சன் தலை கேட்டு, வென்று, நாங்க முதலில் மட்டையடிக்க போனோம். அதிரடி ரவியும், டிக்சனும் இறங்கினார்கள். முதல் 2 ஓவரில் 31 ரன்கள், 6 ஓவரில் 71 ரன்கள், 10 ஓவரில் 141 ரன்கள், கடைசி இரண்டு ஓவரில் நானும் பிரதீப் சேர்ந்து 49 ரன்கள் குவித்தோம், 12 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள். அதில் 13 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள்.
மட்டையாளர் -சந்தித்த பந்து -எடுத்த ரன் - சிக்ஸர் - பவுண்டரி
ரவி --- 9 --- 21 --- 2 --- 2
டிக்சன் --- 14 --- 12 --- 0 --- 2
அருண் --- 15 --- 35 --- 2 --- 4
ஜமில் --- 10 --- 16 --- 1 --- 1
மாலிக் --- 5 --- 18 --- 3 --- 0
சுரேஷ் --- 11 --- 31 --- 3 --- 2
பிரதீப் --- 8 --- 27 --- 2 --- 3
நாங்க மட்டையடிக்கும் போது எதிரணி கேப்டன் நாகரீகம் இல்லாமல் கத்திக் கொண்டிருந்தார், லேலோ, லேலோ (தூக்கு, அவுட் ஆக்கு) என்று இந்தியில் கத்த, எங்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் சரியான எரிச்சல், நடுவரிடம் முறையிட்டும் பந்தை சந்திக்கும் போது கத்துவார், கடைசியில் எங்க ஆளுங்க சிக்ஸரும் பவுண்டரியுமாக அடிக்க, கூட்டத்தினரும், எங்க நண்பர்களும் மாரோ, மாரோ (அடி, அடித்து நொறுக்கு) என்று திருப்பி கத்த, ஒரே ஜாலி. அதே ஆள் மட்டையடிக்க வந்த போது மொத்த கூட்டமும் அவரை லேலோ லேலோ என்று சொல்ல பாவம் அவர், ஒருவழியாகி விட்டார்.
நாங்க அதிரடியாக எடுத்த ரன்களை கண்டு எதிரணி மட்டுமல்லாது பார்வையாளர்களும் மிரண்டு போயிருந்தார்கள். இப்போ எதிரணி மட்டையை பிடிக்க வந்தார்கள், நான் ஓடி ஓடி ரன் எடுத்து, விளையாடிய களைப்பினால் வெளியே இருக்க, எனக்கு பதிலாக பிரசாத் பீல்டிங் செய்ய சென்றார். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அஸ்லாம் வீச, தொடக்க வீரரை அதை கணிக்கவே முடியவில்லை, மட்டையில் பந்து படவே இல்லை, இறுதியில் ஒரு ரன் + ஒரு நோ பால் (2 ரன்) மட்டுமே எடுக்க முடிந்தது, வழக்கமாக நான் வீசும் பகுதியில் டிக்சன் வீச வந்தார்.
முதல் 4 ஓவர்களில் அவர்கள் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்கள். அடுத்து உள்ளே நான் வந்து 5வது ஓவர் வீச வந்தேன், இதுவரை ரன்கள் இல்லை, இனிமேலும் அடிக்கலைன்னா, வெளியே இருக்கிறவங்க கல்லால் அடிப்பாங்கன்னு நினைச்சு, மட்டையாளர் என் பந்தை அடிக்க நினைக்க, அது அவரது கெட்ட நேரம் போல் மட்டையில் படவே இல்லை, 5வது பந்தில் அவர் விக்கெட் காலி என்று நினைத்தேன், சரியான யார்க்கர், ஆனால் ஸ்டெம்ப் உள்ளே வேகமாக போன பந்தால் பெயில்ஸ் கீழே விழவில்லை, எனக்கு படு ஆச்சரியம், நடுவரே சிரித்து விட்டார். விடுவேனா நான், அடுத்த பந்தை அதே போல் வீச இம்முறை பெயில்ஸ் பறந்தது. மைதானத்தில் ஒரே ஆட்டம், கொண்டாட்டம்.
அடுத்த முனையில் அருண் பந்து வீச வந்தார், பதட்டத்தில் 3 வைட் (3 x 2 = 6) ரன்கள் இலவசமாக போய் விட்டது, அத்துடன் ஆட்டத்திலேயே அடிக்கப்பட்ட ஒரே ஒரு பவுண்டரியும் வந்தது, பொறுத்தது போதும் என்ற நிலையில் அடுத்த ஒவர் முதல் பந்தில் மேலும் ஒருவரை போல்ட் செய்தேன், மறு முனையில் ஜமில் அட்டகாசமாக வீசி 3 விக்கெட்களை கழட்டினார்.
பந்து வீச்சாளர் - ஓவர் - மெய்டன் - கொடுத்த ரன் - விக்கெட்
அஸ்லாம் --- 2.5 --- 1 --- 7 --- 2
டிக்சன் --- 2 --- 0 --- 10 --- 0
சுரேஷ் --- 3 --- 2 --- 3 --- 2
அருண் --- 2 --- 0 --- 17 --- 1
ஜமில் --- 2 --- 0 --- 5 --- 3
இறுதியில் எதிரணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 42 ரன்கள் மட்டுமே எடுத்தது, மட்டையில் பட்டு வந்த ரன்கள் 24 மட்டுமே, மீதி 18 ரன்கள் உதிரிகள். நாங்க 148 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம், மொத்த ஆட்டங்களிலேயே நாங்க தான் அதிக வித்தியாசம், அதிக ரன் ரேட் என்ற சாதனையில் வென்றோம். எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஆட்டத்தில் நாங்க மிகச்சிறப்பாக நடந்து கொண்டோம், ஒரு பிரச்சனையும் இல்லை, ரொம்பவும் கட்டுக்கோப்பான அணி என்ற பெயரும் கிடைத்தது.
தோற்ற அணியினரை தேற்றினேன், அவர்களில் ஒரு சிலர் என் நண்பர்கள், இனிவரும் போட்டிகளில் எங்களை ஆதரிக்க கேட்டுக் கொண்டேன்.
ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன், சென்னையிலிருந்து வாங்கி வந்த மட்டையில் சக்தியின் பெயரை எழுதி வைத்திருந்தேன், போட்டிக்கு முன்னராக சக்தியிடம் பேசினேன். டிக்சன் அடிக்கடி கிண்டல் செய்வார், சுரேஷ், சக்தி வந்த பின்னர் உங்க ஆட்டத்தில் ரொம்ப மாற்றம் தெரியுது, வயசு குறைவது போல் தோனுது என்பார், இன்று போட்டிக்கு முன்னர் சக்தியிடம் பேசியாச்சா என்று கேட்டார். போட்டிக்கு பின்னர் இனிமேல் எல்லா போட்டிக்கு முன்னரும் சக்தியிடம் பேசி விடுங்க என்று கேட்டுக் கொண்டார்.
32 அணிகளில் 16 அணிகள் வென்றிருக்கின்றன. அதில் முக்கிய அணிகள் இருக்கின்றன, இன்று முதல் இரண்டாம் சுற்று போட்டிகள் நடக்குது, இதில் 8 அணிகள் வென்று காலிறுதிக்கு தகுதிப் பெறும். இனி வரும் ஆட்டங்கள் இன்னும் சூடு பிடிக்கும். சென்ற ஆண்டு வென்ற அணியும், மூன்றாம் இடம் பிடித்த அணியும் மோதுகிறது, மற்ற போட்டியில் சிறந்த அணியுடன் நான்காம் இடம் பிடித்த அணி மோதுகிறது. இப்படியாக சுவாரஸ்யமான போட்டிகள் பல நடக்க இருக்கின்றன.
நேற்று சரியான மழை, கிரிக்கெட்டுக்கும் மழைக்கும் அப்படி என்ன சம்பந்தமோன்னு புரியலை. இன்று போட்டிகள் நடக்குமான்னு மாலையில் தான் தெரியும், மேலும் நான் நடுவராகவும் பங்கேற்க இருக்கேன், அது ஒரு வகையில் எதிரணிகளைப் பற்றி கணிக்க உதவும்.
இந்த ஆண்டும் வெற்றி பெற்று கோப்பையுடன் உங்களுக்கு காட்சி அளிக்க ஆசைப்படுகிறேன். எங்க அணியின் புகைப்படம் மாலையில் வெளியிடுகிறேன்.