poo
27-03-2007, 06:55 AM
கையில்
நீண்ட கழியோடு
களமிறங்கினேன்..
கண்களை மட்டும்
கட்டிக் கொள்ளவில்லை
மறந்தும்கூட...
பார்வையில்
ஒருவருமில்லை..
உரியடியொன்றுதானென்
நோக்கம்...
விளங்க மறுத்த விழிகள்
அச்சத்தோடு விலகி நின்றன..
ஒவ்வொரு முறையும்
எம்பி எம்பி
முயற்சிக்கிறேன்..
எங்கிருந்தாவது
ஒரு சொம்புத் தண்ணீர்
என் மேல் விழும்..
முகம் வழியும்
சாயங்களை
துடைக்க மறந்து...
சொற்பத் துளிகளில்
தாகம் தீர்த்து
எம்பிக் கொண்டிருக்கிறேன்
மீண்டும்.. மீண்டும்..
என்றாவது ஒருநாள்
உரியடியில்
வெற்றியடைந்ததாய் கூத்தாடுவேன்...
ஆனால்
அன்றென்னை
எவருக்கும் அடையாளம்
தெரியாது...
முகம் வழிந்த
சாயங்களை துடைக்க
மறந்ததால் என்
முகத்தின்
நிறமே மாறிவிட்டிருக்கும்...
நீண்ட கழியோடு
களமிறங்கினேன்..
கண்களை மட்டும்
கட்டிக் கொள்ளவில்லை
மறந்தும்கூட...
பார்வையில்
ஒருவருமில்லை..
உரியடியொன்றுதானென்
நோக்கம்...
விளங்க மறுத்த விழிகள்
அச்சத்தோடு விலகி நின்றன..
ஒவ்வொரு முறையும்
எம்பி எம்பி
முயற்சிக்கிறேன்..
எங்கிருந்தாவது
ஒரு சொம்புத் தண்ணீர்
என் மேல் விழும்..
முகம் வழியும்
சாயங்களை
துடைக்க மறந்து...
சொற்பத் துளிகளில்
தாகம் தீர்த்து
எம்பிக் கொண்டிருக்கிறேன்
மீண்டும்.. மீண்டும்..
என்றாவது ஒருநாள்
உரியடியில்
வெற்றியடைந்ததாய் கூத்தாடுவேன்...
ஆனால்
அன்றென்னை
எவருக்கும் அடையாளம்
தெரியாது...
முகம் வழிந்த
சாயங்களை துடைக்க
மறந்ததால் என்
முகத்தின்
நிறமே மாறிவிட்டிருக்கும்...