டாக்டர் அண்ணாதுரை
27-03-2007, 06:42 AM
இருளிலே நான்....
வெளிச்சத்தை தேடியபோது,
எனக்காக நீ....
மின் விளக்காய் வரவில்லை;
சூரியனாகவே உதித்தாய்!
வெண்ணீர் பாய்ந்த நெஞ்சில்...
சதை கிழிந்த வலியில்
நான் மருந்தை தேடியபோது,
எனக்காக நீ....
மூலிகையாக வரவில்லை;
மயில் இறகாய் படர்ந்தாய்!
வெந்த புண் ஆராமல்....
வேதனை குளத்தில்
முடக்கைகளால் நீச்சல் அடித்தபோது,
எனக்காக நீ....
கரத்தை மட்டும் நீட்டவில்லை;
கரங்களையே தந்துவிட்டாய்!
தூக்கங்களை துக்கங்கள்.....
தூக்கிலிட்டுக்கொண்டிருந்தபொது,
உறக்க தேவதையை
உருக உருக அழைத்தபோது,
எனக்காக நீ....
தலையனையாக வரவில்லை;
தாலாட்டாகவே வந்தாய்!
செவி மேடையில் சோக அவலங்கள்....
அவதாரம் எடுத்து,
ஒப்பாரி கச்சேரி நடத்தியபோது
எனக்காக நீ....
இன்னிசையாக இசைக்கவில்லை;
சங்கீதமாகவே ஒலித்தாய்!
தாங்க இயலாமல் இதயக்கரைகள்....
இடிந்து சரிந்தபோது
எனக்காக நீ....
வார்தைகளால் அணைகட்டவில்லை;
இதயத்தையே தந்துவிட்டாய்!
வெளிச்சத்தை தேடியபோது,
எனக்காக நீ....
மின் விளக்காய் வரவில்லை;
சூரியனாகவே உதித்தாய்!
வெண்ணீர் பாய்ந்த நெஞ்சில்...
சதை கிழிந்த வலியில்
நான் மருந்தை தேடியபோது,
எனக்காக நீ....
மூலிகையாக வரவில்லை;
மயில் இறகாய் படர்ந்தாய்!
வெந்த புண் ஆராமல்....
வேதனை குளத்தில்
முடக்கைகளால் நீச்சல் அடித்தபோது,
எனக்காக நீ....
கரத்தை மட்டும் நீட்டவில்லை;
கரங்களையே தந்துவிட்டாய்!
தூக்கங்களை துக்கங்கள்.....
தூக்கிலிட்டுக்கொண்டிருந்தபொது,
உறக்க தேவதையை
உருக உருக அழைத்தபோது,
எனக்காக நீ....
தலையனையாக வரவில்லை;
தாலாட்டாகவே வந்தாய்!
செவி மேடையில் சோக அவலங்கள்....
அவதாரம் எடுத்து,
ஒப்பாரி கச்சேரி நடத்தியபோது
எனக்காக நீ....
இன்னிசையாக இசைக்கவில்லை;
சங்கீதமாகவே ஒலித்தாய்!
தாங்க இயலாமல் இதயக்கரைகள்....
இடிந்து சரிந்தபோது
எனக்காக நீ....
வார்தைகளால் அணைகட்டவில்லை;
இதயத்தையே தந்துவிட்டாய்!