View Full Version : ஆவலில் எழுத்திட
மனோஜ்
26-03-2007, 08:26 PM
அ அன்பு அதை ஏங்கிட
ஆ ஆவல் அதை எழுப்பிட
இ இன்பம் இதைப் பெற்றிட
ஈ ஈகை இதைச் செய்திட
உ உறவு இதில் மகிழ்ந்திட
ஊ ஊற்றவள் அவளில் கலந்திட
எ எதிரிகள் இல்லாமல் இருந்திட
ஏ ஏணிகள் வெற்றியாய் இருந்திட
ஐ ஐயங்கள் அதைக் கலைந்திட
ஒ ஒருமனமாய் வாழ்ந்திட
ஓ ஓயாமல் உழைத்திட
ஒள ஒளஷதமாய் வாழ்வுசிறந்திட
மனதில் ஆசை நடக்குமா
எனது ஓசை இறைவனிடம் வேண்டி..
மனோஜ்
உங்களின் தனிப்பாணியில் கவிதை பாணம்!
அகரம் முதலாய் தொடங்கிய ஆசைகள்
சிகரம் தாண்டியும் வளரட்டும்... வாய்க்கட்டும்!
வாழ்த்துகள் தம்பிக்கு!
அறிஞர்
26-03-2007, 08:31 PM
மனோஜின் புது முயற்சி...
இன்னும் வளர்ச்சியடைந்து
முழுமையடைய வாழ்த்துக்கள்...
மனோஜ்
27-03-2007, 07:59 AM
சிகரம் தாண்டியும் வளரட்டும்... வாய்க்கட்டும்!
மிக்க நன்றி அண்ணா உங்கள் வாழத்துக்கு
ஓவியன்
27-03-2007, 08:08 AM
நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும் நண்பரே!
தொடர்ந்து அசத்துங்கள்!
மனோஜ்
27-03-2007, 08:24 AM
மனோஜின் புது முயற்சி...
இன்னும் வளர்ச்சியடைந்து
முழுமையடைய வாழ்த்துக்கள்...
நன்றி அறிஞரே :angel-smiley-004:
மனோஜ்
27-03-2007, 08:25 AM
நிச்சயம் உங்கள் ஆசை நிறைவேறும் நண்பரே!
தொடர்ந்து அசத்துங்கள்!
நன்றி ஓவியன் அசந்தவிட்டாலும் முயற்சிக்கிறோன்:icon_08:
ஓவியா
28-04-2007, 10:22 PM
அருமை அருமை அருமை.
நல்ல தொடக்கம். பாராட்டுக்கள் தம்பி.
வெகு விறைவில் ஒரு சிறுகதை எழுதுங்கள்.
உங்களிடம் நான் கண்ட சிறப்பு, எவ்வளவு எழுத்துபிழை வந்தாலும் தயங்காமல் மனதில் நினைத்ததை அப்படியே பதிப்பது. நானும் அதேதான்.
சாதகம் பன்னினால் தான் பாடல் பாட வரும். அதுபோல் எழுத எழுத தான் எழுத்துப்பிழை குறையும்.
கொசுரு:
பாரதியண்ணா: முதல்ல ரெண்டுபேரும் எழுத்துப்பிழைய திருத்தும் வகுபுக்கு போங்க, நீங்க எழுதுவத படிச்சு படிச்சு எனக்கு மயக்கமே வருதுடாசாமி.