ராஜா
24-03-2007, 09:37 AM
அன்பு நண்பர்களே..!
முன்னெச்சரிக்கை ; இன்று என் ஆருயிர்த் துணைவியார் திருமதி.கண்ணம்மா அவர்களின் பிறந்தநாள்.. பொல்லாச் சிறகை விரிக்கும் வான்கோழியாய் இந்தக் கல்லாதானின் கவிதைக்கான கன்னி முயற்சி இது..
இனி கவிதை.....
இனிய இல்லறத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு..உன்
கனிவு முகம் கசங்கியதில்லை யாண்டும்..
மணமுடித்து புகுமனை ஏக மகிழ்வுந்தில் நாம்..
இணக்கமுடன் இரவுக் குளிரில் மாப்பிள்ளை மடியில்
துயில் கொண்டு வந்த முதல் மணமகள் நீயோ..
அயர்வும் மாமன் மகனென்ற உரிமையும் மட்டுமல்ல..
உயர்வாக நம் குடும்பம் தலையெடுக்க வாழ்க்கைத்
துயரெல்லாம் நீ தாங்கி எம்மைக் காக்க..
முன் தூங்கி பின் இப்போதும் விழித்திருக்கும்
கண்ணம்மா நீ கண்ணுறங்கியது அன்றுதானே..?
மழையில் நனைந்து குழந்தையாய் நான் திரும்புவேன்..
இழையோடும் கவலையொடு முந்தானை எடுத்து
தலை துவட்டி முகம் துடைத்து
செல்லக் கோபம் காட்டி, மெல்லத் தலையில் தட்டி
சொல்லுமொரு வெல்லம் நிகர் வார்த்தை.."குரங்கு"..!
அடுத்த மழை எப்போதென ஏங்கும் மனம் மயங்கி..
அன்றொரு நாள் உன் பிறந்தநாள்.. நாட்காட்டியில்
இன்றொரு தகவல் எனக் காட்டியதை நான் காட்டினேன்..
யாரோ ஒரு அறிஞர் சொன்னது.. உலகில் தீமை பிறப்பதை
யாராலும் தடுக்க இயலாதென்று.. உனைச் சீண்டினேன்..
கணக்கறிந்து சொன்னாய்..இனம் இனத்தைச் சேரும்..
மைனஸ் இண்டு மைனஸ் ஈஸ் ஈக்வல் டு ப்ளஸ்..
தொழில் துரத்தல்களில் காயம்பட்டு சிலநாள் திரும்புவேன்..
அழும் பிள்ளையாய் நான்.. ஆறுதல் தரும் அன்னையாய் நீ..
ஒத்தடமாய் உன் வார்த்தைகள் உற்சாகம் தரும்..
சத்தியமாய் அடுத்தநாள் நான் சாதித்து மீள்வேன்..
அடுத்த பிள்ளை உன் உயிருக்கு ஊறு.. மருத்துவர்
எடுத்துச் சொன்னார் இப்போது வேண்டாம் பேறு... செவி
மடுத்திடா மடையன் நான்.. கேட்கவே இல்லை.. வலி
எடுத்திட மருத்துவர் கை விரித்திட நீ கலங்கவே இல்லை.
சென்றோம் வேறொரு மருத்துவ மனை.
மன்றாடி கேட்டு சேர்த்திட்டேன் உனை.
கேட்டு வந்தது உன் உறவுக் கூட்டம்.. கை
காட்டி எனை ஏசியது அடை மழையாட்டம்..
அத்தனை வலியிலும் எழுந்து நீ நின்றாய்.. என்
அத்தானை திட்டுபவர் போ வெளியில் என்றாய்..
எத்துணை உயர்ந்தவள் நீ எனக் கண்டேன்.. அன்றே
வைத்துனைத் தொழுதேன்.. மனக்கோவில் கொண்டே..!
பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுயிரே..!
பின்னுரை ; கற்களைத் தேடும் கரங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்..
இனி கவிதை என்ற பெயரில் கிறுக்கி உங்களைச் சோதனைக்குள்ளாக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்..நன்றி.
முன்னெச்சரிக்கை ; இன்று என் ஆருயிர்த் துணைவியார் திருமதி.கண்ணம்மா அவர்களின் பிறந்தநாள்.. பொல்லாச் சிறகை விரிக்கும் வான்கோழியாய் இந்தக் கல்லாதானின் கவிதைக்கான கன்னி முயற்சி இது..
இனி கவிதை.....
இனிய இல்லறத்தின் இருபத்தைந்தாம் ஆண்டு..உன்
கனிவு முகம் கசங்கியதில்லை யாண்டும்..
மணமுடித்து புகுமனை ஏக மகிழ்வுந்தில் நாம்..
இணக்கமுடன் இரவுக் குளிரில் மாப்பிள்ளை மடியில்
துயில் கொண்டு வந்த முதல் மணமகள் நீயோ..
அயர்வும் மாமன் மகனென்ற உரிமையும் மட்டுமல்ல..
உயர்வாக நம் குடும்பம் தலையெடுக்க வாழ்க்கைத்
துயரெல்லாம் நீ தாங்கி எம்மைக் காக்க..
முன் தூங்கி பின் இப்போதும் விழித்திருக்கும்
கண்ணம்மா நீ கண்ணுறங்கியது அன்றுதானே..?
மழையில் நனைந்து குழந்தையாய் நான் திரும்புவேன்..
இழையோடும் கவலையொடு முந்தானை எடுத்து
தலை துவட்டி முகம் துடைத்து
செல்லக் கோபம் காட்டி, மெல்லத் தலையில் தட்டி
சொல்லுமொரு வெல்லம் நிகர் வார்த்தை.."குரங்கு"..!
அடுத்த மழை எப்போதென ஏங்கும் மனம் மயங்கி..
அன்றொரு நாள் உன் பிறந்தநாள்.. நாட்காட்டியில்
இன்றொரு தகவல் எனக் காட்டியதை நான் காட்டினேன்..
யாரோ ஒரு அறிஞர் சொன்னது.. உலகில் தீமை பிறப்பதை
யாராலும் தடுக்க இயலாதென்று.. உனைச் சீண்டினேன்..
கணக்கறிந்து சொன்னாய்..இனம் இனத்தைச் சேரும்..
மைனஸ் இண்டு மைனஸ் ஈஸ் ஈக்வல் டு ப்ளஸ்..
தொழில் துரத்தல்களில் காயம்பட்டு சிலநாள் திரும்புவேன்..
அழும் பிள்ளையாய் நான்.. ஆறுதல் தரும் அன்னையாய் நீ..
ஒத்தடமாய் உன் வார்த்தைகள் உற்சாகம் தரும்..
சத்தியமாய் அடுத்தநாள் நான் சாதித்து மீள்வேன்..
அடுத்த பிள்ளை உன் உயிருக்கு ஊறு.. மருத்துவர்
எடுத்துச் சொன்னார் இப்போது வேண்டாம் பேறு... செவி
மடுத்திடா மடையன் நான்.. கேட்கவே இல்லை.. வலி
எடுத்திட மருத்துவர் கை விரித்திட நீ கலங்கவே இல்லை.
சென்றோம் வேறொரு மருத்துவ மனை.
மன்றாடி கேட்டு சேர்த்திட்டேன் உனை.
கேட்டு வந்தது உன் உறவுக் கூட்டம்.. கை
காட்டி எனை ஏசியது அடை மழையாட்டம்..
அத்தனை வலியிலும் எழுந்து நீ நின்றாய்.. என்
அத்தானை திட்டுபவர் போ வெளியில் என்றாய்..
எத்துணை உயர்ந்தவள் நீ எனக் கண்டேன்.. அன்றே
வைத்துனைத் தொழுதேன்.. மனக்கோவில் கொண்டே..!
பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுயிரே..!
பின்னுரை ; கற்களைத் தேடும் கரங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்..
இனி கவிதை என்ற பெயரில் கிறுக்கி உங்களைச் சோதனைக்குள்ளாக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்..நன்றி.