View Full Version : அனுபவங்கள்
சே-தாசன்
24-03-2007, 06:00 AM
இரவு மொட்டை மாடியில் நீ
அதிசயம், தெரிவது இரு நிலாக்கள்
படிக்கறத உட்டுட்டு ஏம்பா மொட்டை மாடியில நிக்கிற?
-*---------------
கவிதை அழகாக இருக்கிறது.. மேலும் சில வரிகள் சேர்த்து எழுதவும்..
------------------
pradeepkt
24-03-2007, 12:33 PM
ஹே...
ரெண்டு வரியில் இருப்பதனாலேயே இக்கவிதைக்குத் தனி அழகு...
நீ சொல்லி அவன் பாட்டுக்கு ரெண்டு ரெண்டு நிலவாப் பாத்து பரீட்சையில் அவன் தலையைச் சுத்தி நட்சத்திரமாச் சுத்த போவுது :nature-smiley-007:
பரீட்சைக் காலம் நெரம் இல்லை அதுதான் இரரண்டு வரி என்ன சரியா?
மனோஜ்
24-03-2007, 07:35 PM
பாத்துபா இரண்டு இரண்டாய்டபோகுது
பாத்துபா இரண்டு இரண்டாய்டபோகுது
:1: தூக்க கலக்கம்!!! இப்போ இரவு ஒரு மணி!!!
மனோஜ்
24-03-2007, 07:47 PM
முதல்ல தூக்கம் முக்கியம் இல்லாட்டா துக்கம் ஆயிடும்
காதலின் நாற்றங்கால்கள்..
கான்கிரீட் மொட்டைமாடிகள்..
ம்ம்ம்ம்ம்ம்... நடக்கட்டும் நண்பரே..
சே-தாசன்
26-03-2007, 12:24 PM
அனைத்திற்குமான பதில் தலைப்பில் உள்ளது.
சே-தாசன்
31-03-2007, 05:47 AM
என் நினைவுகளை கழற்றி எறிந்துவிட்டு
நீ உன் வாழ்க்கையில் நடக்க முடியாது-ஏனெனில்
அவை உன் காற்செருப்புக்கள் அல்ல-அவை
கால்கள்.
அமரன்
31-03-2007, 07:03 AM
என் நினைவுகளை கழற்றி எறிந்துவிட்டு
நீ உன் வாழ்க்கையில் நடக்க முடியாது-ஏனெனில்
அவை உன் காற்செருப்புக்கள் அல்ல-அவை
கால்கள்.
சின்னக் கவியின்பால் ஈர்ப்பு அதிகமோ நன்பரே. இரண்டு கவிதையும் அருமை. இலகுவான உவமானக்களை வைத்து நீங்கள் அமைத்த கவி எனக்கு சொல்வது பல. வாழ்த்துகள் கூற நான் ஆசான் அல்ல. அதனால் வரவெற்கின்றேன் உன்கவிதனை.
ஷீ-நிசி
31-03-2007, 07:12 AM
என் நினைவுகளை கழற்றி எறிந்துவிட்டு
நீ உன் வாழ்க்கையில் நடக்க முடியாது-ஏனெனில்
அவை உன் காற்செருப்புக்கள் அல்ல-அவை
கால்கள்.
பிரமாதம்....
மனோஜ்
31-03-2007, 07:20 AM
தற்பொழது இது காற்செருப்புக்கள் தான்
எளிதாக கழற்றி எறிந்து விடுகிறர்கள்
சொற்ப வரிகளில் நெஞ்சில் அறைகிறீர்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே.
ஓவியன்
02-04-2007, 10:00 AM
இரவு மொட்டை மாடியில் நீ
அதிசயம், தெரிவது இரு நிலாக்கள்
அமாவாசை இரவிலும் கூடவா?
ஆமென்றால் எங்கேயோ உதைக்குதே!!!
சும்மா பகிடிக்குச் சொன்னேன்!
அசத்துறீங்க நண்பா! - வாழ்த்துக்கள்.
:angel-smiley-010: :angel-smiley-010:
அன்புரசிகன்
02-04-2007, 10:11 AM
என் நினைவுகளை கழற்றி எறிந்துவிட்டு
நீ உன் வாழ்க்கையில் நடக்க முடியாது-ஏனெனில்
அவை உன் காற்செருப்புக்கள் அல்ல-அவை
கால்கள்.
அர்த்தமுள்ள வரிகள். பாராட்டுக்கள் நண்பரே. தொடருங்கள்.
சே-தாசன்
04-04-2007, 04:46 AM
காலையிலும் முழு நிலவை காண்பான்
ஒவ்வொரு காதலனும்-தன்
காதலி முகத்தில்.
சே-தாசன்
04-04-2007, 04:58 AM
எனக்கு உற்சாகமளித்த அனைத்து மன்றத்து உறவுகளுக்கும் என் நன்றிகள்
raj6272
04-04-2007, 05:17 AM
என் நினைவுகளை கழற்றி எறிந்துவிட்டு
நீ உன் வாழ்க்கையில் நடக்க முடியாது-ஏனெனில்
அவை உன் காற்செருப்புக்கள் அல்ல-அவை
கால்கள். ஆஹா பின்றீங்க........