View Full Version : மெளனம்
செல்விபிரகாஷ்
21-03-2007, 07:38 AM
http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Re_UdAqQcrI/AAAAAAAAABs/WB4F8Wnii_4/s400/mounam.jpg
உதடுகள் புன்னகைக்க
உணர்வுகள் துடிதுடிக்க
வார்த்தைகள் தத்தளிக்க
இதயம் மட்டும்
மெளனிக்கிறது...
என்னவன் நீதான்
என்றுரைக்க...
மனோஜ்
21-03-2007, 08:19 AM
மெளனம் அது நீடித்தால்
உணர்வுகள் அது நிருத்திட்டால்
வார்த்தை அது வறாவிட்டால்
நிலைப்பது என்றும் மெளனமே...
உணர்வுகளை வெளியிடு
இதயத்தில் கலந்திடு....
pradeepkt
21-03-2007, 08:58 AM
சொல்லாத காதல் என்றும் சொர்க்கத்தில் சேர்வதில்லை என்பதெல்லாம் பழமொழி என்கிறீர்களா செல்வி?
மௌனத்தைக் கடாசிவிட்டு உள்ளக் கிடக்கையைச் சொல்வதே நலம்...
ஓவியா
21-03-2007, 10:44 AM
http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Re_UdAqQcrI/AAAAAAAAABs/WB4F8Wnii_4/s400/mounam.jpg
உதடுகள் புன்னகைக்க
உணர்வுகள் துடிதுடிக்க
வார்த்தைகள் தத்தளிக்க
இதயம் மட்டும்
மெளனிக்கிறது...
என்னவன் நீதான்
என்றுரைக்க...
அழகான குட்டி கவிதைக்கு பாரட்டுக்கள். அருமை ரசித்தேன் தோழி.
நேரம் இருப்பின் தாங்களும் இங்கு குழுமியுள்ள மற்ற கவிஞ்சர்களின் கவிதையை விமர்சியுங்களே.
சில கவிஞசர்களின் பெயர்களைக் கொடுக்றேன். அவர்களின் பதிவிற்க்கு சென்று கவிதைகளை படித்து விமர்சனம் கொடுங்களேன். ஒரு சிறந்த கவிதாயினியின் விமர்சனம் கண்டு மகிழ்வார்கள்.
மெளனம் அது நீடித்தால்
உணர்வுகள் அது நிருத்திட்டால்
வார்த்தை அது வறாவிட்டால்
நிலைப்பது என்றும் மெளனமே...
உணர்வுகளை வெளியிடு
இதயத்தில் கலந்திடு....
மனோஜ் அண்ணா கவிதை அருமை
தங்களிடமும் கவித்திரன் அதிகம் உள்ளது.
அடுத்த கவிதை போட்டியில் உங்கள் கவிதையை காணா மொத்த மன்றமும் ஆவல் கொள்கிறது :aktion033:
ஷீ-நிசி
21-03-2007, 11:47 AM
இதயம் மெளனித்தபின் வார்த்தைகள் வெளிவராதுதானே...
உணர்வுகளை மீண்டும் எண்ணவைத்த அழகான கவிதை.. சகோதரி..
அறிஞர்
21-03-2007, 03:01 PM
மௌனம் கலையட்டும்.
காதல் களை கட்டட்டும்...
மனோஜ்
21-03-2007, 03:05 PM
மனோஜ் அண்ணா கவிதை அருமை
தங்களிடமும் கவித்திரன் அதிகம் உள்ளது.
அடுத்த கவிதை போட்டியில் உங்கள் கவிதையை காணா மொத்த மன்றமும் ஆவல் கொள்கிறது :aktion033:
நன்றி ஓவி முயற்சிக்கிறோன்...:angel-smiley-010:
பென்ஸ்
21-03-2007, 03:32 PM
உதடுகள் புன்னகைக்க
உணர்வுகள் துடிதுடிக்க
வார்த்தைகள் தத்தளிக்க
இதயம் மட்டும்
மெளனிக்கிறது...
என்னவன் நீதான்
என்றுரைக்க...
காதலை சொல்ல தயக்கம் ஏன் என்று நான் பலமுறை காதலிப்பவர்களிடம் கேட்டிருகிறேன்... காதலை சொல்ல எதற்கு பயம்...????
உதாசினபடுத்த படும் பயமா...???
இப்போ கிடைக்கும் பார்வை கூட போய்விடும் பயமா???
இன்னைக்கோ நாலைக்கோ அதுதானே நடக்க போவுது ... போயி சொல்லி தொலைக்க வேண்டியதுதானே...!!!!