டாக்டர் அண்ணாதுரை
16-03-2007, 06:36 AM
இன்னுமொறு விடியல்......
வழக்கமாக வரும் பழைய விடியல்தான்;
நேற்று வந்த அதே சூரியன்தான்!
மனசெல்லாம் மதில் சுவராய்
அணை கட்டியிருக்கும் 'சோம்பலை'
சாம்பலாக்கி, இடித்துதள்ள வக்கில்லாத அதே சூரியன்தான்!!
பசி இருந்தும் புசிக்க எண்ணம் வராமல்
போர்வைக்குள் புகுந்துகொண்டு....
'இன்னுமொறு குட்டித்தூக்கம்' போடும்
இனிமை இருக்கிறதே.........
'அடச் சீ..... சோம்பேறி' என்கிறாயா?
ம்ம்ம்ம்.......அதைத்தான் நான் சுகம் என்கிறேன்!!
உச்சி தாண்டிய வெயிலில்.....
வயிற்றுக்கும் வாய்க்கும் நடக்கும் சண்டையில்,
தரகராய் கை வந்து நிற்க....
இதையெல்லாம் பார்த்து
களைப்பால் கலங்கிய கண்களுக்குள்;
வேளை நேரம் என்றும் பாராமல்,
மரண அமைதியில்...
குப்புறப் படுத்துக்கொண்டு
குட்டித்தூக்கம் போட்டு கும்மாளமிடும்......
'சோம்பல்' இருக்கிறதே........
'அடச் சீ.....சோம்பேறி' என்கிறாயா?
ஆஹா.....அதைத்தான் நான் சுகம் என்கிறேன்!!!.
(சராசரி மனிதனின் சுகங்களில் இதுவும் ஒன்றுதானே!வாழ்கை பயணத்தில் நடப்பவை......சரியென்று சொல்லவில்லை, சோம்பேறித்தனம்.....யாருக்குத்தான் இல்லை!?)
வழக்கமாக வரும் பழைய விடியல்தான்;
நேற்று வந்த அதே சூரியன்தான்!
மனசெல்லாம் மதில் சுவராய்
அணை கட்டியிருக்கும் 'சோம்பலை'
சாம்பலாக்கி, இடித்துதள்ள வக்கில்லாத அதே சூரியன்தான்!!
பசி இருந்தும் புசிக்க எண்ணம் வராமல்
போர்வைக்குள் புகுந்துகொண்டு....
'இன்னுமொறு குட்டித்தூக்கம்' போடும்
இனிமை இருக்கிறதே.........
'அடச் சீ..... சோம்பேறி' என்கிறாயா?
ம்ம்ம்ம்.......அதைத்தான் நான் சுகம் என்கிறேன்!!
உச்சி தாண்டிய வெயிலில்.....
வயிற்றுக்கும் வாய்க்கும் நடக்கும் சண்டையில்,
தரகராய் கை வந்து நிற்க....
இதையெல்லாம் பார்த்து
களைப்பால் கலங்கிய கண்களுக்குள்;
வேளை நேரம் என்றும் பாராமல்,
மரண அமைதியில்...
குப்புறப் படுத்துக்கொண்டு
குட்டித்தூக்கம் போட்டு கும்மாளமிடும்......
'சோம்பல்' இருக்கிறதே........
'அடச் சீ.....சோம்பேறி' என்கிறாயா?
ஆஹா.....அதைத்தான் நான் சுகம் என்கிறேன்!!!.
(சராசரி மனிதனின் சுகங்களில் இதுவும் ஒன்றுதானே!வாழ்கை பயணத்தில் நடப்பவை......சரியென்று சொல்லவில்லை, சோம்பேறித்தனம்.....யாருக்குத்தான் இல்லை!?)