PDA

View Full Version : இதுதான்டா சுகம்...!!!!!



டாக்டர் அண்ணாதுரை
16-03-2007, 06:36 AM
இன்னுமொறு விடியல்......
வழக்கமாக வரும் பழைய விடியல்தான்;
நேற்று வந்த அதே சூரியன்தான்!
மனசெல்லாம் மதில் சுவராய்
அணை கட்டியிருக்கும் 'சோம்பலை'
சாம்பலாக்கி, இடித்துதள்ள வக்கில்லாத அதே சூரியன்தான்!!

பசி இருந்தும் புசிக்க எண்ணம் வராமல்
போர்வைக்குள் புகுந்துகொண்டு....
'இன்னுமொறு குட்டித்தூக்கம்' போடும்
இனிமை இருக்கிறதே.........
'அடச் சீ..... சோம்பேறி' என்கிறாயா?
ம்ம்ம்ம்.......அதைத்தான் நான் சுகம் என்கிறேன்!!

உச்சி தாண்டிய வெயிலில்.....
வயிற்றுக்கும் வாய்க்கும் நடக்கும் சண்டையில்,
தரகராய் கை வந்து நிற்க....
இதையெல்லாம் பார்த்து
களைப்பால் கலங்கிய கண்களுக்குள்;
வேளை நேரம் என்றும் பாராமல்,
மரண அமைதியில்...
குப்புறப் படுத்துக்கொண்டு
குட்டித்தூக்கம் போட்டு கும்மாளமிடும்......
'சோம்பல்' இருக்கிறதே........
'அடச் சீ.....சோம்பேறி' என்கிறாயா?
ஆஹா.....அதைத்தான் நான் சுகம் என்கிறேன்!!!.

(சராசரி மனிதனின் சுகங்களில் இதுவும் ஒன்றுதானே!வாழ்கை பயணத்தில் நடப்பவை......சரியென்று சொல்லவில்லை, சோம்பேறித்தனம்.....யாருக்குத்தான் இல்லை!?)

ஷீ-நிசி
16-03-2007, 06:45 AM
உண்மையில் இது சுகமான ஒன்றுதான் நண்பரே!

அதுவும் காலை 5 மணிக்கு வரும் விடியற்காலை தூக்கம் இருக்கிறதே! அருமையோ அருமை.. உங்கள் கவிதை அழகாக உள்ளது நண்பரே! வாழ்த்துக்கள்..

டாக்டர் அண்ணாதுரை
16-03-2007, 07:14 AM
உண்மைதான் நண்பரே......
விடியற்காலை தூக்கதில் எழவேண்டிய துக்கமான நிர்பந்தம் இருகிறதே....

Mano.G.
16-03-2007, 08:03 AM
தோழரே அருமையான
சுகத்தை பற்றிய மற்றொரு கவிதை.
கோர்வையான வார்த்தைகள்
வரிகள் தொடருங்கள்.

நான் எழுதிய சுகத்தை பற்றிய
கவிதையின் சுட்டி இதோ
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8079



மனோ.ஜி

இளசு
16-03-2007, 11:29 PM
இன்னுமொரு விடியல்......
வழக்கமாக வரும் பழைய விடியல்தான்;
நேற்று வந்த அதே சூரியன்தான்!

மனசெல்லாம் மதில் சுவராய்
அணை கட்டியிருக்கும் 'சோம்பலை'
சாம்பலாக்கி, இடித்துதள்ள வக்கில்லாத அதே சூரியன்தான்!!



எதையும் எரித்து சுத்தமாக்க வல்ல
ஆதி ஜோதியும் வக்கில்லாமல் விக்கித்துத் தோற்கும்
சோம்பல் அரக்கனிடம்..

அழகான வரிகள்...
தரகுக் கைகள் - அருமையான உருவகம்..

உங்கள் கையெழுத்து சொல்லும் கருத்தை
மாற்றி தலைஎழுத்தை மாற்றும் சோம்பல் பற்றிய
கவிதைக்கு - சுறுசுறுப்பாய் விமர்சனம் எழுதிவிட்டேன்..
அப்ப்பாடா...

பாராட்டுகள் ஆனந்த்..

டாக்டர் அண்ணாதுரை
19-03-2007, 01:19 AM
மனோஜி,
உங்களின் கவிதையையும் படித்தேன், அழகான வரிகள்.
இளசு, உங்களின் ஆழமான வியாக்கியானம் சிறப்பு.
நன்றி.