рокро░роЮрпНроЪрпЛродро┐
14-03-2007, 09:01 AM
நானும் ஒரு கதைச்சொல்லி (2) -Ц நான் கண்ட கடவுள்கள்
நானும், தம்பியும் சென்னையில் பிறந்தோம், எனக்கு 2 வயது இருக்கும் போது அப்பா எங்களை ஹைதராபாத் அழைத்துச் சென்று அங்கே கடலை மிட்டாய் தயாரித்து, விற்பனை செய்யும் தொழில் தொடங்கினார்கள். 1978ல் ஹைதராபாத்தில் வைத்து ஒரு விபத்தில் அப்பா மரணம் அடைந்த போது எனக்கு வயது 5 இருக்கும், அப்பாவின் பிணத்தை வீட்டில் வைத்து எல்லோரும் அழ, நானும் தம்பியும் இனிவரும் விபரீதங்கள் தெரியாமல் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தோம்.
கடவுளே எங்களை கைவிட்ட பின்னர் அங்கே எங்களுக்கு கடவுளுக்கும் மேலாக உதவ ஒருவரைத் தவிர யாரும் இல்லை, அந்த ஒருவர் தான் மொகமது மைதீன், ஹைரதாபாத்தை சேர்ந்தவர், அவரும் சின்னப்பையன் மாதிரி தான், எங்க அப்பாவுக்கு வலதுக்கரம், நாங்க மைதீன் மாமா, மாமா என்று அன்போடு அழைப்போம். அவர் வீட்டில் தான் தங்கியிருந்தோம், சாப்பாடும் போட்டார்.
அவர் தான் எங்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தார், அப்பாவுக்கு பணம் தரவேண்டியவர்கள் எல்லாம் எங்களை கடனாளியாக்கி விட்டார்கள். அம்மாவுக்கோ எழுத படிக்கத் தெரியாது, வெளியுலகம் தெரியாது.
அந்த நிலையில் மலேசியாவில் இருக்கும் எங்க பெரியப்பா தான் கடவுள் மாதிரி எங்களுக்கு உதவ முன் வந்தார்கள், எங்களை எங்க கிராமத்திற்கே வரச் சொன்னார்கள். எப்படி ஊருக்கு செல்வது என்று புரியாமல் இருந்த போது, நாங்க தங்கியிருந்த இடத்தை மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, எங்களை ஊருக்கு அழைத்த வந்தவர் எங்க தூத்துக்குடி மாமா இராமசாமி. பெயரை போலவே அவர் இன்றும் எங்களுக்கு சாமி தான்.
மைதீன் மாமா அப்பாவின் தொழிலை தொடர்ந்து நடத்திய அவருக்கே எல்லா பொருட்களையும் அம்மா கொடுத்திட்டாங்க.
மலேசியா பெரியப்பா, நாங்க தங்குவதற்கு அவரது வீட்டையும், சாப்பாட்டுக்கு அவரது தோட்டத்திலிருந்து கிடைக்கும் நெல்லையும் கொடுத்தார்கள், மாதா மாதம் செலவுக்கு பணமும் அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு சுத்தமாக தமிழ் பேசவே தெரியாது, அப்பாவை நைனா என்றே அழைப்பேன், அம்மா என்ற ஒரு வார்த்தையை தான் தமிழிலில் பேசுவேன். என் தம்பிக்கு தமிழ் அத்துப்படி. இந்நிலையில் தூத்துக்குடி வந்த இறங்கினோம், அங்கே எங்க அத்தை (அப்பாவின் தங்கை) எங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுது, எங்களை கண்மணி போல் பார்த்துக் கொண்டார்.
இரண்டு வாரங்களுக்கு பின்னர் எங்க கிராமத்து வீட்டில் விட்டு விட்டு தூத்துக்குடி செல்ல இருந்த அத்தையை நான் போக விடாமல் காலை கட்டிபிடித்து அழ, அத்தை சொன்னார்கள் Уநான் மட்டும் அத்தை அல்ல, உனக்கு இங்கே நிறைய அத்தைகள் இருக்காங்க, எனவே அழாதேФ என்று சொல்லி, எங்க தெருவில் இருந்தவர்களை எனக்கு அத்தைகளாக்கி சென்றார்கள். இன்றும் கூட நானும் என் தம்பியும் எங்க தெருவில் வசிக்கும் அனைவரையும் அத்தை, மாமா என்ற உறவு சொல்லி தான் அழைத்து வருகிறோம். அவர்களும் எங்களை சொந்த மருமகன்கள் போல் பார்த்துக் கொள்வார்கள்.
எங்க வெள்ளத்தாய் ஆச்சிக்கு கண் தெரியாது, எங்க மீது ரொம்ப பாசம் உண்டு. அந்த பாசமே எங்களுக்கு அம்மாவிடம் பலமுறை அடி வாங்கி கொடுத்திருக்கிறது. அடிவாங்கி கொடுப்பவரும் அவரே! சில சமயம் அவர் பின்னால் ஒளிந்து கொண்டு, நான் அடிவாங்காமல் நைசாக தப்பிக்க அடி வாங்குபவரும் அவரே!, பின்னர் சப்தம் போட்டு ஊரையே கூப்பிட்டு எங்களை காப்பாற்றுபவரும் அவரே!.
ஊர் பெரிய மனிதர்களுக்கு (??) அடங்காத, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பிடிக்காத பிள்ளையாக இருந்த என் அப்பாவின் பிள்ளைகளான எங்களையும் அதே போல் நினைத்து நடத்தியவர்கள் பலர். எங்க அம்மாவிடம் பார்க்கிறவர்கள் எல்லாம் சொல்வது Уஉன் புருஷன் மாதிரி உன் பிள்ளைகள் கெட்டு போகாமல் பார்த்துக் கொள்Ф, இப்படி தினம் தினம் மனதைக் கொல்லும் படியான வார்த்தைகளை எங்க அம்மா கேட்பார்கள். அன்று எல்லாம் எங்களுக்கு ஒன்று அடி கிடைக்கும் அல்லது நல்ல நல்ல கதைகள் கிடைக்கும். அதிலும் என் தம்பி என் அப்பாவை போல் உரிச்சி வைத்திருப்பதால் அதிக விமர்சனம் அவன் மேல் தான் வரும், ஒவ்வொரு செய்கையும், பேச்சும் அப்பாவையே போல் இருக்கும். அப்படி ஒரு இமேஜ் அவன் மேல் விழ, இன்றும் அதனால் பாதிக்கப்டுகிறான், பாவம்.
வீட்டில் நான் அம்மாவுடன் தெலுங்கில் தான் பேசுவேன், அதை எல்லோரும் கிண்டல் செய்வாங்க, வெளியே யார் வீட்டுக்காவது போனால், உட்கார்ந்த இடத்தை விட்டு அசையக்கூடாது, சாப்பிட ஏதாவது கொடுத்தால் ஒரு முறை தான் எடுக்கணும், அடுத்தவர் வீட்டு பொருட்களை தொடக்கூடாது இப்படியான ரகசியக்கட்டளைகளை தெலுங்கில் அம்மா சொல்ல, நான் கடைப்பிடிப்பேன். என் தம்பிக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு ???
கருப்பட்டியின் சுவை பிடிக்காததால் காப்பியை குடிக்க மறுக்க, அதுவே எனக்கு ஒரு நல்ல இமேஜ் உருவாக்கி கொடுத்து விட்டது, அந்த இமேஜை காப்பாற்றவே காப்பி, டீ, பால் குடிப்பதை நிறுத்திட்டேன் :). தமிழிலில் பேசத் தெரியாமல் அமைதியாக மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்ததால் என்னை பெரிய அறிவாளி போல் நினைத்து ரொம்ப நல்லவன் என்ற இமேஜ் உருவாக்கிட்டாங்க, அதனால இப்போ கூட பல இடங்களில் அடக்கி வாசிக்க வேண்டியிருக்குது :) .
தமிழ் பாசை புரியாமல் தெலுங்கில் அம்மாவிடம் பேசுவதை எங்க உறவினர்கள் எல்லோரும் கிண்டல் செய்த காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர் ஒருவர் மட்டுமே, அவர் தான் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கி, நன்றிக்கடன் செலுத்த முடியாத உதவி செய்து, இன்றைய வாழ்க்கை பாதைக்கு திருப்பி விட்டவர், அவர் என் அப்பாவின் சித்தப்பா பையனான குவைத்தில் இருக்கும் என் சித்தப்பா.
நான் தெலுங்கு பேசுவதை தெருப்பசங்க யாராவது கிண்டல் செய்தால் அடித்தோ, அடிபட்டோ வந்துடுவேன். யாராவது என்னை அடித்தால் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் என் தம்பி போய் அடித்து நொறுக்கிட்டு வந்துடுவான்.
என் தம்பி ஆள் ரொம்பவும் மெலிந்து போய் இருப்பான், அவன் பட்டப்பெயரே நரம்பன், நரம்பு மாதிரி ஒல்லியாக இருப்பான். ஒருமுறை எங்க பக்கத்து தெரு அத்தை என்னை விட பெரியவானான அவங்க பையனை அழைத்து வந்து Уஅக்கா! பாருங்க உங்க பையன் என் மகனை அடிச்சி வந்துட்டான், என்னான்னு கேளுங்கФ என்றார்.
அம்மாவுக்கு கடும் கோபம், தயாராக வைத்திருந்த கொய்யா குச்சியை கையில் எடுத்து, Уடேய் சுரேஷ்! வா இங்கே, தெருவில் போய் விளையாடாதே, சண்டை போடாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது, உன் தோலை உரிக்கிறேன்Ф என்று கையில் கம்பை எடுத்து அழைத்தார்.
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
என் தோல் உரிந்ததா? தெரிஞ்சுக்கனுமுன்னு நிறைய பேர் ஆசைப்படுறீங்க போலிருக்குதே! :).
(தொடரும்)
நானும், தம்பியும் சென்னையில் பிறந்தோம், எனக்கு 2 வயது இருக்கும் போது அப்பா எங்களை ஹைதராபாத் அழைத்துச் சென்று அங்கே கடலை மிட்டாய் தயாரித்து, விற்பனை செய்யும் தொழில் தொடங்கினார்கள். 1978ல் ஹைதராபாத்தில் வைத்து ஒரு விபத்தில் அப்பா மரணம் அடைந்த போது எனக்கு வயது 5 இருக்கும், அப்பாவின் பிணத்தை வீட்டில் வைத்து எல்லோரும் அழ, நானும் தம்பியும் இனிவரும் விபரீதங்கள் தெரியாமல் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தோம்.
கடவுளே எங்களை கைவிட்ட பின்னர் அங்கே எங்களுக்கு கடவுளுக்கும் மேலாக உதவ ஒருவரைத் தவிர யாரும் இல்லை, அந்த ஒருவர் தான் மொகமது மைதீன், ஹைரதாபாத்தை சேர்ந்தவர், அவரும் சின்னப்பையன் மாதிரி தான், எங்க அப்பாவுக்கு வலதுக்கரம், நாங்க மைதீன் மாமா, மாமா என்று அன்போடு அழைப்போம். அவர் வீட்டில் தான் தங்கியிருந்தோம், சாப்பாடும் போட்டார்.
அவர் தான் எங்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தார், அப்பாவுக்கு பணம் தரவேண்டியவர்கள் எல்லாம் எங்களை கடனாளியாக்கி விட்டார்கள். அம்மாவுக்கோ எழுத படிக்கத் தெரியாது, வெளியுலகம் தெரியாது.
அந்த நிலையில் மலேசியாவில் இருக்கும் எங்க பெரியப்பா தான் கடவுள் மாதிரி எங்களுக்கு உதவ முன் வந்தார்கள், எங்களை எங்க கிராமத்திற்கே வரச் சொன்னார்கள். எப்படி ஊருக்கு செல்வது என்று புரியாமல் இருந்த போது, நாங்க தங்கியிருந்த இடத்தை மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, எங்களை ஊருக்கு அழைத்த வந்தவர் எங்க தூத்துக்குடி மாமா இராமசாமி. பெயரை போலவே அவர் இன்றும் எங்களுக்கு சாமி தான்.
மைதீன் மாமா அப்பாவின் தொழிலை தொடர்ந்து நடத்திய அவருக்கே எல்லா பொருட்களையும் அம்மா கொடுத்திட்டாங்க.
மலேசியா பெரியப்பா, நாங்க தங்குவதற்கு அவரது வீட்டையும், சாப்பாட்டுக்கு அவரது தோட்டத்திலிருந்து கிடைக்கும் நெல்லையும் கொடுத்தார்கள், மாதா மாதம் செலவுக்கு பணமும் அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு சுத்தமாக தமிழ் பேசவே தெரியாது, அப்பாவை நைனா என்றே அழைப்பேன், அம்மா என்ற ஒரு வார்த்தையை தான் தமிழிலில் பேசுவேன். என் தம்பிக்கு தமிழ் அத்துப்படி. இந்நிலையில் தூத்துக்குடி வந்த இறங்கினோம், அங்கே எங்க அத்தை (அப்பாவின் தங்கை) எங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுது, எங்களை கண்மணி போல் பார்த்துக் கொண்டார்.
இரண்டு வாரங்களுக்கு பின்னர் எங்க கிராமத்து வீட்டில் விட்டு விட்டு தூத்துக்குடி செல்ல இருந்த அத்தையை நான் போக விடாமல் காலை கட்டிபிடித்து அழ, அத்தை சொன்னார்கள் Уநான் மட்டும் அத்தை அல்ல, உனக்கு இங்கே நிறைய அத்தைகள் இருக்காங்க, எனவே அழாதேФ என்று சொல்லி, எங்க தெருவில் இருந்தவர்களை எனக்கு அத்தைகளாக்கி சென்றார்கள். இன்றும் கூட நானும் என் தம்பியும் எங்க தெருவில் வசிக்கும் அனைவரையும் அத்தை, மாமா என்ற உறவு சொல்லி தான் அழைத்து வருகிறோம். அவர்களும் எங்களை சொந்த மருமகன்கள் போல் பார்த்துக் கொள்வார்கள்.
எங்க வெள்ளத்தாய் ஆச்சிக்கு கண் தெரியாது, எங்க மீது ரொம்ப பாசம் உண்டு. அந்த பாசமே எங்களுக்கு அம்மாவிடம் பலமுறை அடி வாங்கி கொடுத்திருக்கிறது. அடிவாங்கி கொடுப்பவரும் அவரே! சில சமயம் அவர் பின்னால் ஒளிந்து கொண்டு, நான் அடிவாங்காமல் நைசாக தப்பிக்க அடி வாங்குபவரும் அவரே!, பின்னர் சப்தம் போட்டு ஊரையே கூப்பிட்டு எங்களை காப்பாற்றுபவரும் அவரே!.
ஊர் பெரிய மனிதர்களுக்கு (??) அடங்காத, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பிடிக்காத பிள்ளையாக இருந்த என் அப்பாவின் பிள்ளைகளான எங்களையும் அதே போல் நினைத்து நடத்தியவர்கள் பலர். எங்க அம்மாவிடம் பார்க்கிறவர்கள் எல்லாம் சொல்வது Уஉன் புருஷன் மாதிரி உன் பிள்ளைகள் கெட்டு போகாமல் பார்த்துக் கொள்Ф, இப்படி தினம் தினம் மனதைக் கொல்லும் படியான வார்த்தைகளை எங்க அம்மா கேட்பார்கள். அன்று எல்லாம் எங்களுக்கு ஒன்று அடி கிடைக்கும் அல்லது நல்ல நல்ல கதைகள் கிடைக்கும். அதிலும் என் தம்பி என் அப்பாவை போல் உரிச்சி வைத்திருப்பதால் அதிக விமர்சனம் அவன் மேல் தான் வரும், ஒவ்வொரு செய்கையும், பேச்சும் அப்பாவையே போல் இருக்கும். அப்படி ஒரு இமேஜ் அவன் மேல் விழ, இன்றும் அதனால் பாதிக்கப்டுகிறான், பாவம்.
வீட்டில் நான் அம்மாவுடன் தெலுங்கில் தான் பேசுவேன், அதை எல்லோரும் கிண்டல் செய்வாங்க, வெளியே யார் வீட்டுக்காவது போனால், உட்கார்ந்த இடத்தை விட்டு அசையக்கூடாது, சாப்பிட ஏதாவது கொடுத்தால் ஒரு முறை தான் எடுக்கணும், அடுத்தவர் வீட்டு பொருட்களை தொடக்கூடாது இப்படியான ரகசியக்கட்டளைகளை தெலுங்கில் அம்மா சொல்ல, நான் கடைப்பிடிப்பேன். என் தம்பிக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு ???
கருப்பட்டியின் சுவை பிடிக்காததால் காப்பியை குடிக்க மறுக்க, அதுவே எனக்கு ஒரு நல்ல இமேஜ் உருவாக்கி கொடுத்து விட்டது, அந்த இமேஜை காப்பாற்றவே காப்பி, டீ, பால் குடிப்பதை நிறுத்திட்டேன் :). தமிழிலில் பேசத் தெரியாமல் அமைதியாக மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனித்ததால் என்னை பெரிய அறிவாளி போல் நினைத்து ரொம்ப நல்லவன் என்ற இமேஜ் உருவாக்கிட்டாங்க, அதனால இப்போ கூட பல இடங்களில் அடக்கி வாசிக்க வேண்டியிருக்குது :) .
தமிழ் பாசை புரியாமல் தெலுங்கில் அம்மாவிடம் பேசுவதை எங்க உறவினர்கள் எல்லோரும் கிண்டல் செய்த காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர் ஒருவர் மட்டுமே, அவர் தான் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கி, நன்றிக்கடன் செலுத்த முடியாத உதவி செய்து, இன்றைய வாழ்க்கை பாதைக்கு திருப்பி விட்டவர், அவர் என் அப்பாவின் சித்தப்பா பையனான குவைத்தில் இருக்கும் என் சித்தப்பா.
நான் தெலுங்கு பேசுவதை தெருப்பசங்க யாராவது கிண்டல் செய்தால் அடித்தோ, அடிபட்டோ வந்துடுவேன். யாராவது என்னை அடித்தால் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் என் தம்பி போய் அடித்து நொறுக்கிட்டு வந்துடுவான்.
என் தம்பி ஆள் ரொம்பவும் மெலிந்து போய் இருப்பான், அவன் பட்டப்பெயரே நரம்பன், நரம்பு மாதிரி ஒல்லியாக இருப்பான். ஒருமுறை எங்க பக்கத்து தெரு அத்தை என்னை விட பெரியவானான அவங்க பையனை அழைத்து வந்து Уஅக்கா! பாருங்க உங்க பையன் என் மகனை அடிச்சி வந்துட்டான், என்னான்னு கேளுங்கФ என்றார்.
அம்மாவுக்கு கடும் கோபம், தயாராக வைத்திருந்த கொய்யா குச்சியை கையில் எடுத்து, Уடேய் சுரேஷ்! வா இங்கே, தெருவில் போய் விளையாடாதே, சண்டை போடாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது, உன் தோலை உரிக்கிறேன்Ф என்று கையில் கம்பை எடுத்து அழைத்தார்.
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
--
என் தோல் உரிந்ததா? தெரிஞ்சுக்கனுமுன்னு நிறைய பேர் ஆசைப்படுறீங்க போலிருக்குதே! :).
(தொடரும்)