рокрпЖройрпНро╕рпН
13-03-2007, 07:17 PM
கடவுசீட்டை காணாவில்லைЕ. (தமிழ் வார்த்தை உதவிக்கு நன்றி: இளசு)
சில வினாடிகள் இதயம் நின்று அப்புறம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது, தொலைந்ததின் விளைவுகள் மனதில் வர இன்னும் பயம் அதிகரிக்க, இதயம் அடிப்பது வேகமானதுЕ
சுற்றி இருப்பவர்களை அவர்களிடம் என் கடவு சீட்டு தவறி இருக்கிறதா என்று கேட்டு கொண்டேன்Е
சிலர் நக்கல் சிரிப்போடு நகர்ந்தனர்,
சிலர் பரிதாபமாக பார்த்து நகர்ந்தனர்.
ஆனால், அனைவரும் அவரவர் கடவு சீட்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டனர்.
பக்கத்தில் இருந்த இருக்கையில் என்னை அமர்த்தி கொண்டு மீண்டும் ஒருமுறை எல்லா ஆவணங்களையும் சோதனை செய்ய ஆரம்பித்தேன்Е
எல்லாம் இருந்தது, கடவுச்சீட்டை தவிரЕ.
பயப்படுவதால் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்து கொண்டதான் என்னை நானே அமைதிபடுத்திகொள்ள வழக்கம்போல் கண்களைமூடி ஒரு சின்ன ஜெபம் செய்து கொண்டேன்.
அடுத்து என்னЕ
மணியை பார்த்தேன்Е அதிகாலை 1:30
இப்போ இந்தியாவில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள முடியாது, சீனாவில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ளமுடியாதுЕ. ஒரே வழி விடியும் வரை காத்திருந்து சீன அலுவலகத்தில் உள்ளவர்கள் வழியாக எதாவது செய்யவேண்டும்Е இந்திய மேலாளர்களுக்கு தகவல் சொல்லனும்Е ஆனால் எதுவானாலும் விடியும் வரை காத்திருக்கனும்Е. அப்படியே அதுகுள்ள கடவு சீட்டு கிடைத்துவிட்டாலும் நல்லதேЕ.
காத்திருக்க பிரச்சினைவராமல் இருக்க முதலில் இங்க உள்ள போலிஸ் கிட்ட சொல்லிடலாம் என்று அங்கிருந்த ஒரு போலிஸ்கரரிடம் போயி எனது கடவுசீட்டு கானாமல் போயிருப்பதை சொன்னேன்Е.
Уஒரு கம்பிளையண்ட் கொடுங்களேன்..Ф
Уகொடுக்கிறென்Е அதுக்கு முன்னால் சிறிது தேட வேண்டும், சிறிது அவகாசம் தேவைФ
СசரிФ
நான் நகர்ந்து ஒரு காப்பிகடையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்Е கொஞ்சம் கொஞ்சமாக விமான நிலையம் காலியாக ஆரம்பித்திருந்தது. அடுத்த விமானம் காலை 6:00 மணிக்குதானாம்.
எவ்வளவுதான் மனசு பயப்படாதது போல் காண்பித்து கொண்டாலும், பேச்சில் காண்பித்து கொள்ளாமல் இருந்தாலும் ஒரு பயம்Е
சீன சிறைசாலைகள் எவ்வாறு இருக்கும்???
என்ன உணவாயிருக்கும்????
எத்தனை நாள் இங்க மாட்ட வேண்டியிருக்கும்..???
என் அலுவலக நிலை??
எத்தனை, எத்தனையோ கேள்விகள்Е
பயத்தை குறைத்துகொள்ள பல பல யுக்திகள் கையாண்டாலும், கடைசியாக என்னுடைய ஜெபமாலைதான் கைகொடுத்தது Е எடுத்து உருட்ட ஆரம்பித்தேன்Е
அதை எப்போதும் கையில் வைத்திருந்தாலும், வழக்கம்போல் பயம், தேவை வரும்போது மட்டும் பக்தியில் ஓங்கிபோயிருந்தேன்Е நானும் மனுசந்தானேЕ
கொஞ்சம் பயம்விட மறுபடியும் சுற்றுமுற்றதை ஆராய ஆரம்பித்தேன்Е. இரவு நேரம் ஆதலால் ஆட்களின் ஓட்டம் குறைவாக இருந்தது. சர்வதேச விமானநிலயங்களுடம் போட்டி போடவேண்டும் என்றே எல்லாவற்றையும் ஆடம்பரமாக வைத்திருந்தது தெரிந்தது. தூரத்தில் ஒரு பணமாற்றும் இயந்திரம் இருப்பதை பார்த்து அதில் ஒரு 100 அமெரிக்க டாலரை போட்டு அதற்கான சீன பணத்தை எடுத்து கொண்டேன். சுமார் 760 யுவான் கிடைத்ததுЕ அதில் 50 யுவான் தரவு காசாக எடுத்து கொண்டது அந்த இயந்திரம். கையில் கிடைத்த பணத்தில் 6 யுவான் கொடுத்து ஒரு காப்பி வாங்கி கொண்டேன். அந்த நிமிடத்திலும் காப்பி ருசிக்கதான் செய்ததுЕ
கையில் கடிகாரம் கட்டும் பழக்கம் எனக்கு இல்லை. அதனால் அலைபேசியில் நேரத்தை பார்த்து கரைந்து கொண்டிருந்தேன். சுமார் 2:15 மணிக்கு ஒரு இந்தியன் விமான நிலையத்தினுள் வந்து அங்கும் இங்குமாக யாரையோ தேடி கொண்டிருந்தான். நானும் எதுவும் விசாரிக்காமல் அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்Е. அவன் அவன் கையில் இருக்கும் கடவி சீட்டை விரித்து பார்த்து என்னிடம்..
Уநீங்க பெஞ்சமின்..Ф
УஆமாФ
Уசாரி, சார், உங்க கடவு சீட்டை என்னுடையது என்று எடுத்துட்டு போயிட்டேன்Ф
Уபரவாயில்லை, நன்றிФ
У கோபமில்லையே..Ф
Уதிரும்ப வந்து கொடுத்திங்களே Е அதுக்கு நன்றிФ
Уசரி.. பார்க்கலாம்Е
УЕЕ..Ф நான் பதில் எதுவும் சொல்லவில்லைЕ
அவனும் கண்டு கொள்ளவில்லை, அவன் பெயரை கூட நானும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் கொஞ்சம் நாகரிகமாக அவனிட நடந்து கொண்டதே அவன் திரும்ப வந்து அந்த கடவுச்சீட்டை தந்தமைக்கு, ஆனாலும் என்னை அத்தனை நேரம் கஷ்டபடுத்தியத்ற்கு கோபம் இருந்தது.
நான் முதலில் பேசிய போலிஸ்காரரிடம் என்னுடைய கடவு சீட்டு கிடைத்ததை கூறி விட்டை, கஸ்டம்ஸ் பகுதியும் ஆவணக்களை கொடுத்துவிட்டு மீண்டும் பணமாற்றி இயந்திரத்தை அணுகி மேலும் 100 டாலர்களை யுவான்களாக மாற்றி கொண்டு விமான நிலையத்தின் வேளியே வந்தேன்Е அலைபேசியில் மணி 2:30 என்று காட்டியது, சுற்றி பார்த்தேன் ஒரு போலிஸ்காரரை தவிர வேறு எதுவும் இல்லைЕ.
அவரிடம் போயி
Уடாக்ஸிФ என்று வாயால் சொல்லி, கையால் Уஎங்கே?Ф என்று கேக்கЕ அவ்ர் வலதும் இடதுமாக தலையாட்டினார்Е
அடுத்தவிமானம் காலை 6:00 மணிக்குதான் என்று அவர்கள் சொன்னது நியாபகம் வரЕ.
அட அப்ப அதுவரைக்கும் பிளாட்பார தூக்கம்தானாЕ!!!!!
ஒரு நப்பாசையில் மீண்டும் ஒருமுறை சுற்றிபார்த்தேன்Е தெருவிளக்குகளையும் விமான நிலைய காவலர்களையும்தவிர எதுவும் என் கண்ணுக்கு தென்படவில்லைЕ..
சில வினாடிகள் இதயம் நின்று அப்புறம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது, தொலைந்ததின் விளைவுகள் மனதில் வர இன்னும் பயம் அதிகரிக்க, இதயம் அடிப்பது வேகமானதுЕ
சுற்றி இருப்பவர்களை அவர்களிடம் என் கடவு சீட்டு தவறி இருக்கிறதா என்று கேட்டு கொண்டேன்Е
சிலர் நக்கல் சிரிப்போடு நகர்ந்தனர்,
சிலர் பரிதாபமாக பார்த்து நகர்ந்தனர்.
ஆனால், அனைவரும் அவரவர் கடவு சீட்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டனர்.
பக்கத்தில் இருந்த இருக்கையில் என்னை அமர்த்தி கொண்டு மீண்டும் ஒருமுறை எல்லா ஆவணங்களையும் சோதனை செய்ய ஆரம்பித்தேன்Е
எல்லாம் இருந்தது, கடவுச்சீட்டை தவிரЕ.
பயப்படுவதால் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்து கொண்டதான் என்னை நானே அமைதிபடுத்திகொள்ள வழக்கம்போல் கண்களைமூடி ஒரு சின்ன ஜெபம் செய்து கொண்டேன்.
அடுத்து என்னЕ
மணியை பார்த்தேன்Е அதிகாலை 1:30
இப்போ இந்தியாவில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ள முடியாது, சீனாவில் உள்ளவர்களையும் தொடர்பு கொள்ளமுடியாதுЕ. ஒரே வழி விடியும் வரை காத்திருந்து சீன அலுவலகத்தில் உள்ளவர்கள் வழியாக எதாவது செய்யவேண்டும்Е இந்திய மேலாளர்களுக்கு தகவல் சொல்லனும்Е ஆனால் எதுவானாலும் விடியும் வரை காத்திருக்கனும்Е. அப்படியே அதுகுள்ள கடவு சீட்டு கிடைத்துவிட்டாலும் நல்லதேЕ.
காத்திருக்க பிரச்சினைவராமல் இருக்க முதலில் இங்க உள்ள போலிஸ் கிட்ட சொல்லிடலாம் என்று அங்கிருந்த ஒரு போலிஸ்கரரிடம் போயி எனது கடவுசீட்டு கானாமல் போயிருப்பதை சொன்னேன்Е.
Уஒரு கம்பிளையண்ட் கொடுங்களேன்..Ф
Уகொடுக்கிறென்Е அதுக்கு முன்னால் சிறிது தேட வேண்டும், சிறிது அவகாசம் தேவைФ
СசரிФ
நான் நகர்ந்து ஒரு காப்பிகடையின் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்Е கொஞ்சம் கொஞ்சமாக விமான நிலையம் காலியாக ஆரம்பித்திருந்தது. அடுத்த விமானம் காலை 6:00 மணிக்குதானாம்.
எவ்வளவுதான் மனசு பயப்படாதது போல் காண்பித்து கொண்டாலும், பேச்சில் காண்பித்து கொள்ளாமல் இருந்தாலும் ஒரு பயம்Е
சீன சிறைசாலைகள் எவ்வாறு இருக்கும்???
என்ன உணவாயிருக்கும்????
எத்தனை நாள் இங்க மாட்ட வேண்டியிருக்கும்..???
என் அலுவலக நிலை??
எத்தனை, எத்தனையோ கேள்விகள்Е
பயத்தை குறைத்துகொள்ள பல பல யுக்திகள் கையாண்டாலும், கடைசியாக என்னுடைய ஜெபமாலைதான் கைகொடுத்தது Е எடுத்து உருட்ட ஆரம்பித்தேன்Е
அதை எப்போதும் கையில் வைத்திருந்தாலும், வழக்கம்போல் பயம், தேவை வரும்போது மட்டும் பக்தியில் ஓங்கிபோயிருந்தேன்Е நானும் மனுசந்தானேЕ
கொஞ்சம் பயம்விட மறுபடியும் சுற்றுமுற்றதை ஆராய ஆரம்பித்தேன்Е. இரவு நேரம் ஆதலால் ஆட்களின் ஓட்டம் குறைவாக இருந்தது. சர்வதேச விமானநிலயங்களுடம் போட்டி போடவேண்டும் என்றே எல்லாவற்றையும் ஆடம்பரமாக வைத்திருந்தது தெரிந்தது. தூரத்தில் ஒரு பணமாற்றும் இயந்திரம் இருப்பதை பார்த்து அதில் ஒரு 100 அமெரிக்க டாலரை போட்டு அதற்கான சீன பணத்தை எடுத்து கொண்டேன். சுமார் 760 யுவான் கிடைத்ததுЕ அதில் 50 யுவான் தரவு காசாக எடுத்து கொண்டது அந்த இயந்திரம். கையில் கிடைத்த பணத்தில் 6 யுவான் கொடுத்து ஒரு காப்பி வாங்கி கொண்டேன். அந்த நிமிடத்திலும் காப்பி ருசிக்கதான் செய்ததுЕ
கையில் கடிகாரம் கட்டும் பழக்கம் எனக்கு இல்லை. அதனால் அலைபேசியில் நேரத்தை பார்த்து கரைந்து கொண்டிருந்தேன். சுமார் 2:15 மணிக்கு ஒரு இந்தியன் விமான நிலையத்தினுள் வந்து அங்கும் இங்குமாக யாரையோ தேடி கொண்டிருந்தான். நானும் எதுவும் விசாரிக்காமல் அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்Е. அவன் அவன் கையில் இருக்கும் கடவி சீட்டை விரித்து பார்த்து என்னிடம்..
Уநீங்க பெஞ்சமின்..Ф
УஆமாФ
Уசாரி, சார், உங்க கடவு சீட்டை என்னுடையது என்று எடுத்துட்டு போயிட்டேன்Ф
Уபரவாயில்லை, நன்றிФ
У கோபமில்லையே..Ф
Уதிரும்ப வந்து கொடுத்திங்களே Е அதுக்கு நன்றிФ
Уசரி.. பார்க்கலாம்Е
УЕЕ..Ф நான் பதில் எதுவும் சொல்லவில்லைЕ
அவனும் கண்டு கொள்ளவில்லை, அவன் பெயரை கூட நானும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அந்த நேரத்தில் நான் கொஞ்சம் நாகரிகமாக அவனிட நடந்து கொண்டதே அவன் திரும்ப வந்து அந்த கடவுச்சீட்டை தந்தமைக்கு, ஆனாலும் என்னை அத்தனை நேரம் கஷ்டபடுத்தியத்ற்கு கோபம் இருந்தது.
நான் முதலில் பேசிய போலிஸ்காரரிடம் என்னுடைய கடவு சீட்டு கிடைத்ததை கூறி விட்டை, கஸ்டம்ஸ் பகுதியும் ஆவணக்களை கொடுத்துவிட்டு மீண்டும் பணமாற்றி இயந்திரத்தை அணுகி மேலும் 100 டாலர்களை யுவான்களாக மாற்றி கொண்டு விமான நிலையத்தின் வேளியே வந்தேன்Е அலைபேசியில் மணி 2:30 என்று காட்டியது, சுற்றி பார்த்தேன் ஒரு போலிஸ்காரரை தவிர வேறு எதுவும் இல்லைЕ.
அவரிடம் போயி
Уடாக்ஸிФ என்று வாயால் சொல்லி, கையால் Уஎங்கே?Ф என்று கேக்கЕ அவ்ர் வலதும் இடதுமாக தலையாட்டினார்Е
அடுத்தவிமானம் காலை 6:00 மணிக்குதான் என்று அவர்கள் சொன்னது நியாபகம் வரЕ.
அட அப்ப அதுவரைக்கும் பிளாட்பார தூக்கம்தானாЕ!!!!!
ஒரு நப்பாசையில் மீண்டும் ஒருமுறை சுற்றிபார்த்தேன்Е தெருவிளக்குகளையும் விமான நிலைய காவலர்களையும்தவிர எதுவும் என் கண்ணுக்கு தென்படவில்லைЕ..