இளசு
11-03-2007, 03:38 PM
அறிவியல் இமயம் - நியூட்டன்
அறிவியல் மைல்கற்கள் - 25
வெள்ளிவிழா நாயகர் - சர் ஐசக் நியூட்டன்..
-----------------------------------------
மாறாது எனக்கு என்றும் மன ஊக்கம் தரும்
தம்பி பாரதிக்கு இத்தொடர் அர்ப்பணிப்பு..
------------------------------------------------
தொடரின் இந்த பாகத்துக்கு கைகொடுத்த
டாக்டர் மாசிலாமணி அவர்கள் எழுதிய
'பௌதிகம் என்பது புதுக்கவிதை' நூலுக்கு
என் அன்பான நன்றிகள்.
--------------------------------------------------
அ.மை. 24 - வேதியியல் வேதங்கள் இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6920
----------------------------------------------------
காலத்தை கி.மு;கி.பி என பிரிப்பதைப்போல்
அறிவியலை நி.மு; நி.பி என பிரிக்கலாம்.
அந்த பெருமை நியூட்டனுக்குத் தகும்.
இயக்கவியலில் ( mechanism, kinetics) முதன்முதலில்
மூன்று அடிப்படை உண்மைகளை எடுத்துச் சொன்னவர் நியூட்டன்.
ஒன்று :
உலகம், ஏன் முழுப் பிரபஞ்சமே ஒரு 'சும்மா' இருக்கும் சோம்பல் நிலையம்.
அவற்றில் உயிரற்ற ஜடங்களும் உயிருள்ள ஜந்துக்களும் விட்டால்
போட்டது போட்டபடி அப்படியே வாளாவிருக்கும். (State of Inertia)
'இந்த சங்கிலி அநாவசியமாய் போர்வையக் கழட்ட மாட்டான்
அப்படிக் கழட்டினா...?!!!' என்பதுபோல
இப்படி தேமேன்னு கிடக்கும் எதுவும் அசைந்து சலனிக்க ஆரம்பித்துவிட்டால்
ஒரே நேர்க்கோட்டில் அதுபாட்டுக்குத் தொட.....ர்ந்து நிற்காமல் போய்க்கிட்டே இருக்கும்.
(வச்சா குடுமி, அடிச்சா மொட்டை..)
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஜட நிலையும் சலன நிலையும் சமம்.
வேலையில் இருப்பதும் ஓய்வில் இருப்பதும் ஒரே எடை..ஒரே நிறை..
(அரியும் சிவனும் ஒண்ணு). ஒரு சமன்பாட்டில் இரண்டையும் நிறுவலாம்.
இரண்டு:
மோன நிலை (இனெர்ஷியா)-யில் இருந்து அசைவு நிலைக்கு மாற
ஒரு பொருளுக்கு விசை (Force) தேவை. விசையால் தாக்கப்பட்ட பொருளுக்கு
வேகம் கிடைக்கும். அந்த வேகம் - மாறும் வேகம் (Acceleration).
அந்த வேகமாற்றத்தை பொருளின் எடையும் நிர்ணயிக்கும்.
விசை = எடை x வேகமாற்றம்
F = ma
மூன்று:
ஒரு பொருள் (அ) மற்றொரு பொருளின் (ஆ) மேல் விசை செலுத்தினால்
அதே அளவு விசையை எதிர்கொள்ள நேரும்.
(காதலன் -காதலிகளுக்குப் புரியும் விதி இது)
F (ஆxஆ) = F(ஆxஅ)
Every action has an equal and opposite reaction.
தினசரி வாழ்வில் நியூட்டனின் தத்துவங்களைப் பார்ப்போம்.
(1) வெளியூருக்குப்போய், சில நாள் கழித்து வந்த நீங்கள்
உங்கள் அறை மேசை இடம் மாறி இருப்பதைப் பார்க்கிறீர்கள்.
'தேமே'ன்னு இருக்கவேண்டிய மேசை நகர்ந்திருக்கிறதென்றால்
அதை யாரோ 'விசை' கொடுத்துத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
ஒரு கோலியை வழவழப்பான பளிங்குத்தரையில் உருட்டுங்கள்.
அது பாட்டுக்கு போயி..ட்ட்ட்ட்டே இருக்கும் -
தரை உராய்வால் அதன் வேகம் குறைந்து நிற்கும்வரை.
(2) ஒரு கல்லை முழுசக்தியுடன் ( யாருமில்லாத இடத்தில்) வீ..சுங்கள்.
பின், அதை விடச் சின்ன கல்லாய் எடுத்து அதே சக்தியுடன் வீ..சுங்கள்.
சின்னக்கல்லின் வேகமாற்றம் அதிகம். அதனால் இன்னும் தூரம் போய் விழும்.
(3) ஒரு பிஸ்கட் டின்னை ஓங்கி முஷ்டியால் குத்தினால்
டின் நெளியும்.. கை வலிக்கும்.
அதிகமாய் குத்தினால் டின் நசுங்கும். கை டாக்டரிடம் போகும்!
அட.. இத்தனை சுளுவான தத்துவம் சொல்ல நியூட்டன் வரணுமா?
எனக்கே இதெல்லாம் தெரியுமே என்கிறீர்களா?
நோவாமல் நோன்பிருக்கும் நமக்கு இப்படித் தோணுவதில் ஆச்சரியமில்லை!
கலிலியோ போன்றவர்களும் அரைகுறையாய் மட்டும் புரிந்தவற்றை
ஐயந்திரிபற ஆராய்ந்து ' முதலில்' நிறுவிய நியூட்டனுக்கு நிகர் நியூட்டன் மட்டுமே..
(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உண்டே என ஆரென் குரல் இந்த இடத்தில் கேட்கிறது..)
17ம் நூற்றாண்டிலேயே புதிய அறிவியலில் எவரெஸ்ட்டுகளை எட்டிப்பிடித்த
நியூட்டன் நடிகர் திலகம் என்றால் ஐன்ஸ்டீன் கமல்ஹாசன்..
(என் பார்வையில் ஓர் எடுத்துக்காட்டு இது - அவ்வளவே).
நியூட்டனின் வாழ்க்கையைப் பற்றி இந்த மைல்கல்லின் தொடர்ச்சியில் விரிவாய் பார்ப்போம்.
படித்து பின்னூட்டம் அளித்து ஊக்கம் தரப்போகும்
அனைவர்க்கும் முன்நன்றிகள்.
அறிவியல் மைல்கற்கள் - 25
வெள்ளிவிழா நாயகர் - சர் ஐசக் நியூட்டன்..
-----------------------------------------
மாறாது எனக்கு என்றும் மன ஊக்கம் தரும்
தம்பி பாரதிக்கு இத்தொடர் அர்ப்பணிப்பு..
------------------------------------------------
தொடரின் இந்த பாகத்துக்கு கைகொடுத்த
டாக்டர் மாசிலாமணி அவர்கள் எழுதிய
'பௌதிகம் என்பது புதுக்கவிதை' நூலுக்கு
என் அன்பான நன்றிகள்.
--------------------------------------------------
அ.மை. 24 - வேதியியல் வேதங்கள் இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6920
----------------------------------------------------
காலத்தை கி.மு;கி.பி என பிரிப்பதைப்போல்
அறிவியலை நி.மு; நி.பி என பிரிக்கலாம்.
அந்த பெருமை நியூட்டனுக்குத் தகும்.
இயக்கவியலில் ( mechanism, kinetics) முதன்முதலில்
மூன்று அடிப்படை உண்மைகளை எடுத்துச் சொன்னவர் நியூட்டன்.
ஒன்று :
உலகம், ஏன் முழுப் பிரபஞ்சமே ஒரு 'சும்மா' இருக்கும் சோம்பல் நிலையம்.
அவற்றில் உயிரற்ற ஜடங்களும் உயிருள்ள ஜந்துக்களும் விட்டால்
போட்டது போட்டபடி அப்படியே வாளாவிருக்கும். (State of Inertia)
'இந்த சங்கிலி அநாவசியமாய் போர்வையக் கழட்ட மாட்டான்
அப்படிக் கழட்டினா...?!!!' என்பதுபோல
இப்படி தேமேன்னு கிடக்கும் எதுவும் அசைந்து சலனிக்க ஆரம்பித்துவிட்டால்
ஒரே நேர்க்கோட்டில் அதுபாட்டுக்குத் தொட.....ர்ந்து நிற்காமல் போய்க்கிட்டே இருக்கும்.
(வச்சா குடுமி, அடிச்சா மொட்டை..)
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஜட நிலையும் சலன நிலையும் சமம்.
வேலையில் இருப்பதும் ஓய்வில் இருப்பதும் ஒரே எடை..ஒரே நிறை..
(அரியும் சிவனும் ஒண்ணு). ஒரு சமன்பாட்டில் இரண்டையும் நிறுவலாம்.
இரண்டு:
மோன நிலை (இனெர்ஷியா)-யில் இருந்து அசைவு நிலைக்கு மாற
ஒரு பொருளுக்கு விசை (Force) தேவை. விசையால் தாக்கப்பட்ட பொருளுக்கு
வேகம் கிடைக்கும். அந்த வேகம் - மாறும் வேகம் (Acceleration).
அந்த வேகமாற்றத்தை பொருளின் எடையும் நிர்ணயிக்கும்.
விசை = எடை x வேகமாற்றம்
F = ma
மூன்று:
ஒரு பொருள் (அ) மற்றொரு பொருளின் (ஆ) மேல் விசை செலுத்தினால்
அதே அளவு விசையை எதிர்கொள்ள நேரும்.
(காதலன் -காதலிகளுக்குப் புரியும் விதி இது)
F (ஆxஆ) = F(ஆxஅ)
Every action has an equal and opposite reaction.
தினசரி வாழ்வில் நியூட்டனின் தத்துவங்களைப் பார்ப்போம்.
(1) வெளியூருக்குப்போய், சில நாள் கழித்து வந்த நீங்கள்
உங்கள் அறை மேசை இடம் மாறி இருப்பதைப் பார்க்கிறீர்கள்.
'தேமே'ன்னு இருக்கவேண்டிய மேசை நகர்ந்திருக்கிறதென்றால்
அதை யாரோ 'விசை' கொடுத்துத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
ஒரு கோலியை வழவழப்பான பளிங்குத்தரையில் உருட்டுங்கள்.
அது பாட்டுக்கு போயி..ட்ட்ட்ட்டே இருக்கும் -
தரை உராய்வால் அதன் வேகம் குறைந்து நிற்கும்வரை.
(2) ஒரு கல்லை முழுசக்தியுடன் ( யாருமில்லாத இடத்தில்) வீ..சுங்கள்.
பின், அதை விடச் சின்ன கல்லாய் எடுத்து அதே சக்தியுடன் வீ..சுங்கள்.
சின்னக்கல்லின் வேகமாற்றம் அதிகம். அதனால் இன்னும் தூரம் போய் விழும்.
(3) ஒரு பிஸ்கட் டின்னை ஓங்கி முஷ்டியால் குத்தினால்
டின் நெளியும்.. கை வலிக்கும்.
அதிகமாய் குத்தினால் டின் நசுங்கும். கை டாக்டரிடம் போகும்!
அட.. இத்தனை சுளுவான தத்துவம் சொல்ல நியூட்டன் வரணுமா?
எனக்கே இதெல்லாம் தெரியுமே என்கிறீர்களா?
நோவாமல் நோன்பிருக்கும் நமக்கு இப்படித் தோணுவதில் ஆச்சரியமில்லை!
கலிலியோ போன்றவர்களும் அரைகுறையாய் மட்டும் புரிந்தவற்றை
ஐயந்திரிபற ஆராய்ந்து ' முதலில்' நிறுவிய நியூட்டனுக்கு நிகர் நியூட்டன் மட்டுமே..
(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உண்டே என ஆரென் குரல் இந்த இடத்தில் கேட்கிறது..)
17ம் நூற்றாண்டிலேயே புதிய அறிவியலில் எவரெஸ்ட்டுகளை எட்டிப்பிடித்த
நியூட்டன் நடிகர் திலகம் என்றால் ஐன்ஸ்டீன் கமல்ஹாசன்..
(என் பார்வையில் ஓர் எடுத்துக்காட்டு இது - அவ்வளவே).
நியூட்டனின் வாழ்க்கையைப் பற்றி இந்த மைல்கல்லின் தொடர்ச்சியில் விரிவாய் பார்ப்போம்.
படித்து பின்னூட்டம் அளித்து ஊக்கம் தரப்போகும்
அனைவர்க்கும் முன்நன்றிகள்.