ஆதவா
07-03-2007, 04:48 AM
பகுதி 10 முடிவு.....
வீட்டை காலி செய்து மனதை கொன்றான்..
அவளோடு அலைந்து திரிந்த கானகங்கள்
பூங்காக்கள், சாலைகள் ஆகிய
எல்லா இடங்களிலும் சோகமாய்
ஒரு பிரிவை உணர்ந்தான்..
அங்கே அவளோ
ஏதோ மறந்த உணர்வோடு
மகிழ்ச்சியாக இருந்தாள்..
அக்காள் குழந்தைகளோடு
விளையாடிக்கொண்டும்,
வீட்டில் அக்காளுடன் சண்டைபோட்டும்
மாமாவைக் கொஞ்சிக்கொண்டும்
மருத்துவத் தொழிலைத் தொடர்ந்தும்..
சாதாரணமாகத்தான் இருந்தாள்..
ஆனால் ஏதோ ஒன்று இழந்த நினைவு.
என்ன என்றுதான் தெரியவில்லை..
அன்றைய ஒரு நாள்..
அவள் வீட்டிற்குச் சென்றான்
அங்கே நினைவுகளைப் படரவிட்டான்..
அவளோடு சண்டையிட்ட இடங்கள்,
கொஞ்சிய இடங்கள்
ஒவ்வொன்றாக கணக்கிட்டான்...
சோகம் மட்டுமே மிஞ்சியது...
அவள் ஆவியாகவே இருந்திருக்கலாம்..
மென் குணம்படைத்தவள்
இன்று இதயத்தைத் தைக்கிறாளே!!
அக்காள் வீட்டிலிருந்து
தன் வீட்டிற்கு வந்தாள் பூங்குழலி.
தன் வீடு சற்றே மாறி இருப்பதை
சந்தேகத்தோடு உணர்ந்தாள்.
ஆவியாக இருந்த காலத்தில்
நடந்த அத்துணைகளும்
நொடியில் மறந்துவிட்டாள்...
ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று
நினைத்தாளே தவிர,
அது தானிருக்கும்போதுதான் என்று
நினைப்பு வரவில்லை,,,,
இல்ல மாற்றத்தை நோட்டமிட்டே
மெல்ல மாடி ஏறி வந்தாள்..
அங்கே........
கதிரவன் மாடியை
ஒரு பூங்காவாக மாற்றியிருந்தான்..
பூத்துக்குலுங்கும் செண்பகப்பூவும்
கனகம், ரோஜா, செவ்வந்தி ஆகியவையும்
அழகூட்டப்பட்ட தூண்களில்
படர்ந்திருக்கும் முல்லைகளும்
கொடிகளும்
மாடியை வர்ணமயமாக்கின...
அதைப் பார்த்த அவள்
சொக்கிப் போனாள்...
பூக்களுக்கு தண்ணீர் ஊற்றும்
கதிரவனைக் கண்டதும் வணங்கினாள்.
அவனால்தானே இன்று
பூக்களை ரசிக்க முடிகிறது!!
கதிரவன் சோகத்தை மறைத்தான்
ஆதவனை மறைத்து நிற்கும் மேகமாய்..
விளிம்பில் நீர் எட்டிப் பார்த்தாலும்
முகத்திலே சிரிப்பைக் கொண்டு
அவளை அணுகினான்..
பூங்குழலிக்கு ஏதோ
இழந்த மாற்றம்///
அது அவன் கண்களைப் பார்த்ததும் வந்தது..
கதிரவன் விடைபெற முயன்றான்..
காதலி முன்னே நின்றும்-அதிலும்
உடலோடு இணைந்த உயிராக நின்றும்
வேதனை மிஞ்சப் புறப்பட்டான்...
காதல் வெறும் பஞ்சல்ல.
அவள் இல்லத்து சாவியைக் கேட்டாள்.
அவன் மறந்தாற்போல எடுத்துச் சென்றுவிட்டால்??
சாவிக்கொத்தை குழலியின் கைகளில்
திணித்தான் மெல்ல....
அற்புதங்கள் வாழ்க்கையின்
சில நேரங்களில் நிகழும்...
அதோ!!
அவன் ஸ்பரிசம் பட்டதும்
உயிர் விளையாடிய சித்து விளையாட்டுக்கள்
நினைவுக்கு வந்தன.
அவள் இழந்த உணர்வு இவன்தான்.
ஆம்,,
காதல் என்றும் அழியாது.
உணர்ச்சிகள் மேலிட
கட்டி யணைத்தான் கதிரவன்..
பூமித்தாயை அணைக்கும் ஆதவன் போல..
காதலுக்கு முகமில்லை
மோட்சமில்லை
அகமில்லை.
அது ஒரு வெற்றிடம்
காற்று புக முடியாது//
குழந்தைகள் போல
இரண்டு மனங்களின் பிணைப்பே காதல்..
கதிரவனும் பூங்குழலியும் இனி
நிஜக் காதலர்கள்...
ஆவி உலகை வென்ற காதலர்கள்.
காதல் ஒரு மாயை..
உள் நுழைந்து ஆட்டி படைக்கும் தெய்வீகம்..
வாழ்க காதல்
வளர்க தமிழ்...
ஆதவன்..
வீட்டை காலி செய்து மனதை கொன்றான்..
அவளோடு அலைந்து திரிந்த கானகங்கள்
பூங்காக்கள், சாலைகள் ஆகிய
எல்லா இடங்களிலும் சோகமாய்
ஒரு பிரிவை உணர்ந்தான்..
அங்கே அவளோ
ஏதோ மறந்த உணர்வோடு
மகிழ்ச்சியாக இருந்தாள்..
அக்காள் குழந்தைகளோடு
விளையாடிக்கொண்டும்,
வீட்டில் அக்காளுடன் சண்டைபோட்டும்
மாமாவைக் கொஞ்சிக்கொண்டும்
மருத்துவத் தொழிலைத் தொடர்ந்தும்..
சாதாரணமாகத்தான் இருந்தாள்..
ஆனால் ஏதோ ஒன்று இழந்த நினைவு.
என்ன என்றுதான் தெரியவில்லை..
அன்றைய ஒரு நாள்..
அவள் வீட்டிற்குச் சென்றான்
அங்கே நினைவுகளைப் படரவிட்டான்..
அவளோடு சண்டையிட்ட இடங்கள்,
கொஞ்சிய இடங்கள்
ஒவ்வொன்றாக கணக்கிட்டான்...
சோகம் மட்டுமே மிஞ்சியது...
அவள் ஆவியாகவே இருந்திருக்கலாம்..
மென் குணம்படைத்தவள்
இன்று இதயத்தைத் தைக்கிறாளே!!
அக்காள் வீட்டிலிருந்து
தன் வீட்டிற்கு வந்தாள் பூங்குழலி.
தன் வீடு சற்றே மாறி இருப்பதை
சந்தேகத்தோடு உணர்ந்தாள்.
ஆவியாக இருந்த காலத்தில்
நடந்த அத்துணைகளும்
நொடியில் மறந்துவிட்டாள்...
ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று
நினைத்தாளே தவிர,
அது தானிருக்கும்போதுதான் என்று
நினைப்பு வரவில்லை,,,,
இல்ல மாற்றத்தை நோட்டமிட்டே
மெல்ல மாடி ஏறி வந்தாள்..
அங்கே........
கதிரவன் மாடியை
ஒரு பூங்காவாக மாற்றியிருந்தான்..
பூத்துக்குலுங்கும் செண்பகப்பூவும்
கனகம், ரோஜா, செவ்வந்தி ஆகியவையும்
அழகூட்டப்பட்ட தூண்களில்
படர்ந்திருக்கும் முல்லைகளும்
கொடிகளும்
மாடியை வர்ணமயமாக்கின...
அதைப் பார்த்த அவள்
சொக்கிப் போனாள்...
பூக்களுக்கு தண்ணீர் ஊற்றும்
கதிரவனைக் கண்டதும் வணங்கினாள்.
அவனால்தானே இன்று
பூக்களை ரசிக்க முடிகிறது!!
கதிரவன் சோகத்தை மறைத்தான்
ஆதவனை மறைத்து நிற்கும் மேகமாய்..
விளிம்பில் நீர் எட்டிப் பார்த்தாலும்
முகத்திலே சிரிப்பைக் கொண்டு
அவளை அணுகினான்..
பூங்குழலிக்கு ஏதோ
இழந்த மாற்றம்///
அது அவன் கண்களைப் பார்த்ததும் வந்தது..
கதிரவன் விடைபெற முயன்றான்..
காதலி முன்னே நின்றும்-அதிலும்
உடலோடு இணைந்த உயிராக நின்றும்
வேதனை மிஞ்சப் புறப்பட்டான்...
காதல் வெறும் பஞ்சல்ல.
அவள் இல்லத்து சாவியைக் கேட்டாள்.
அவன் மறந்தாற்போல எடுத்துச் சென்றுவிட்டால்??
சாவிக்கொத்தை குழலியின் கைகளில்
திணித்தான் மெல்ல....
அற்புதங்கள் வாழ்க்கையின்
சில நேரங்களில் நிகழும்...
அதோ!!
அவன் ஸ்பரிசம் பட்டதும்
உயிர் விளையாடிய சித்து விளையாட்டுக்கள்
நினைவுக்கு வந்தன.
அவள் இழந்த உணர்வு இவன்தான்.
ஆம்,,
காதல் என்றும் அழியாது.
உணர்ச்சிகள் மேலிட
கட்டி யணைத்தான் கதிரவன்..
பூமித்தாயை அணைக்கும் ஆதவன் போல..
காதலுக்கு முகமில்லை
மோட்சமில்லை
அகமில்லை.
அது ஒரு வெற்றிடம்
காற்று புக முடியாது//
குழந்தைகள் போல
இரண்டு மனங்களின் பிணைப்பே காதல்..
கதிரவனும் பூங்குழலியும் இனி
நிஜக் காதலர்கள்...
ஆவி உலகை வென்ற காதலர்கள்.
காதல் ஒரு மாயை..
உள் நுழைந்து ஆட்டி படைக்கும் தெய்வீகம்..
வாழ்க காதல்
வளர்க தமிழ்...
ஆதவன்..