PDA

View Full Version : முதுமையின் உறவு



மயூ
04-03-2007, 01:41 PM
http://img1.artprice.com/img/classifieds/xl/106/106058_1.jpgமாலை ஐந்து மணி இருக்கும். சூரியன் தன் வேலையை முடிப்பதற்காக முஸ்தீபு போட ஆரம்பித்த நேரம். மணியம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வீட்டின் பின் பக்கம் சென்றுகொண்டு இருந்தார். யாரும் கண்டு விடுவார்களோ என்று அவர் மனம் படபடத்துக் கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பிஸ்கட் துண்டுகள். எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் கையெங்கும் முதுமை தந்த பரிசுகளான சுருக்கங்கள். அதனிடையே அழகாக அந்த சிறிய பிஸ்கட் துண்டு மினு மினுத்துக்கொண்டு இருந்தது.

வீட்டின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கொட்டிலினுள் சென்றார். ஐந்து நிமிடம் ஏதோ உருட்டும் சத்தம் உள்ளே கேட்டது. பின்பு பொக்கை வாய் நிறைய சிரிப்புடன் வெளியே வந்தார் மணியம்மா. எதையோ சாதித்த வெறி அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஏனண! உள்ளுக்க என்ன செய்தனியள்? நெற்றியில் சுருக்கம் விழக் கோபமாகக் கேள்விக்கணை தொடுத்தாள் வாசலில் காத்திருந்த புத்திரி மங்களம்.

நான் சும்மா போய் உள்ளுக்க என்ன இருக்குதெண்டு பார்த்தனான் சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். அதற்கு மேல் மங்களத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லவோ அவள் முகத்தைப் பார்க்கவோ மணியம்மாவிற்கு விருப்பம் இல்லை.

பெத்தாலும் பெத்தன் ஒரு பிசாசத்தான் பெத்து வைச்சிருக்கிறன் மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.

கீழ விழுந்து கிழுந்து போகப் போறாயண!. வயசு போன காலத்தில நாங்கள் சொல்லுறதக் கேட்டு நட எண்டா நீ உன்ட பாடு

நான் ஒண்டும் கீழ விழ சின்னப் பிள்ளை இல்லை. சரியே?. சும்மா அரியண்டம் பிடியாத

அது சரி. அதுதான் போன மாசம் விழுந்து பரியாரியாரிட்ட கொண்டுபோய் பத்து கட்டினியளாக்கும் கூறியவாறே அதற்கு மேல் பேச விரும்பாதவளாக மங்களமும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

மணியம்மாவும் மெல்ல மெல்ல தத்தித் தத்தி நடந்து அவருக்காக மருமகனார் வாங்கிக்கொடுத்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டார். நினைவுகள் பலவாறு வட்டம் போடத்தொடங்கியது. தன் கணவரை பருத்துறை கறிக்கடையில் முதல் முதலில் தான் சந்தித்தது, சாரம் கட்டிக்கொண்டு அவர் நின்ற தோற்றம் முதல் மகள் மங்களம் பிறந்தது வரை அவர் மனக் கண்ணில் நிகழ்வுகள் ஓடத்தொடங்கியது.

அப்பனே முருகா! வாய் நிறையச் சொல்லிவிட்டு கதிரையில் கண்ணயரத் தொடங்கினாள் மணியம்மா. வயதானாலும் பார்ப்பதற்கு சாந்தியான முகம் யாருடனும் அவ்வளவாகக் கோவிக்காத தன்மை என்பன மணியம்மாவின் இயல்புகள்.

முதுமையில் ஆகக் கொடுமையான விடையம் தனிமை. மணியம்மாவையும் அந்த துன்பக் கடலில் கலக்க வைத்த காலம் கொடுமையானதுதான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரின் கணவரும் இறைவனடி சேர்ந்துவிட இவருக்குப் பேசுவதற்குக் கூட யாரும் கிடைப்பதில்லை.

மகளும் மருமகனும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நான்கு வயதாகும் பேரப் பொடியனைப் பார்ப்பதற்காக ஒரு வேலைக்காரி என குடும்பம் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருந்தது. இதனிடையே மணியம்மாவுடன் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச யாருக்கும் முடியவில்லை என்பதைவிட நேரம் இல்லை என்றே சொல்லலாம்.

மறுநாளும் அதே நேரம் மணியம்மா தத்தி தத்தி நடந்து சமையலறைக்குள் சென்றார். அவருக்குத் தெரியாது அவரை இரண்டு கண்கள் நோட்டம் விடுவது. சமையல் அறையில் வழமை போல இறாக்கையில் இருந்த போத்தலைத் திறந்து அதில் இருந்து இரண்டு பிஸ்கட் துண்டுகளை எடுத்துக் கொண்டார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கட கட என வீட்டுக் கொல்லையில் உள்ள கொட்டிலை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

அன்றிரவு மங்களம் தன் கணவருடன் உரையாடிக்கொண்டு இருந்தாள்.
இஞ்சருங்கோ! அம்மாவிண்ட விளையாட்டுத் தெரியுமே?

என்னப்பா! சொன்னியள் என்டாத்தானே எனக்குத் தெரியும்.. சும்மா புதிர் போட்டுக்கொண்டு இருக்கிறியளே!

அம்மா இவன்... எங்கட குமரனுக்கு வேண்டி வைச்சிருக்கிற சின்னப் பிள்ளைகளின்ட பிஸ்கடை எடுத்துக் கொண்டு போய் பின்னால இருக்கிற கொட்டிலுக்குள்ள வைச்சு சாப்பிடுறா. நான் கண்டும் காணாத மாதிரி விட்டிட்டன். வயது போன காலத்தில அதுகளுக்கு இப்படி சின்னச் சின்ன ஆசைகள் பாருங்கோ வாய் முழுக்க புன்னகையுடன் கூறினாள் மங்களம்.

ம்... கொஞ்சக் காலத்தில எங்கட பொடியன் குமரனும் அவனின்ட மனுசியோட எங்களப் பற்றி இப்பிடித்தான் கதைப்பான் பதில் கூறிய மங்களத்தின் கணவர் சுந்தரேசனும் தன்பாட்டுக்கு தானும் தன் மாமியாரின் விளையாட்டை நினைத்துச் சிரித்தார்.

நாட்கள் நகர்ந்துகொண்டு இருந்தது. ஒரு நாள் சுந்தரேசன் கையில் ஒரு பையுடன் ஆர்வமாக வீட்டினுள்ளே நுழைந்தார். வந்தார். பின்னர் தன் மகனை நோக்கி.

டேய் கள்ளப் பொடியா இங்க வாடா உனக்கு ஒரு சாமான் கொண்டு வந்திருக்கிறன் கீழே குந்தியிருந்து பையைத் திறப்பதற்கு ஆயத்தமாககிக்கொண்டே தன் செல்வப் புதல்வனைக் கூப்பிட்டார். வாய் நிறைய மட்டுமல்ல மனம் நிறையவும் புன்னகையோடு.

அந்தப் கடதாசிப் பையினுள் கையைவிட்டு அதனுள் இருந்து ஒரு பொருளை எடுத்து வெளியே விட்டார். சின்னஞ்சிறிய வெள்ளைப் பூனைக் குட்டி. கண்கள் துறு துறுவென்று இருந்தது. குமரன் அந்தக் குட்டியை அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டான்.

அப்பா என்ன பெயர் வைப்பம்? குளந்தைக்குரியே அதே பிரைச்சனை.

ம்.. உனக்கு விருப்பமான பெயரையே வையப்பு

அப்ப நான் டைகர் எண்டு பெயர் வைக்கட்டே? டேய் குட்டி டைகர் நீ நல்லா எலி பிடிப்பியாடா?

மியாவ்.. ஆமாம் என்பது போல சத்தம் இட்டது பூனைக்குட்டி.

பூனையின் சத்தம் கேட்டதும் கதிரையில் வழமைபோல உறங்கிக்கொண்டு இருந்த கண்ணம்மா படபடப்புடன் விழித்து எழுந்துகொண்டார்.

உதென்ன கோதாரி விழுந்த சாமான். உதை என்னத்துக்கு வீட்டுக்கு கொண்டு வந்தனியள், பேசாம கொண்டு போய் சந்தையில விட்டிட்டு வாங்கோ முகம் முழுக்க வெறுப்புடன் கூறினாள் மணியம்மா.

மணியம்மாவின் என்றுமில்லாத கடுகடுப்பினால் முகம் கறுத்துப்போன சுந்தரேசன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டார்.

ஏன் அம்மம்மா டைகரை பேசிறியள். அவன் நல்ல பொடியன். நீங்க ஒருக்காத் தூக்கிப் பாருங்கோ பாட்டியை நோக்கிச் சென்றான் குட்டிப்பயல் குமரன்.

சீ... சீ.. அங்கால கொண்டு போ எரிந்து விழுந்தாள் மணியம்மா. ஏமாற்றத்துடன் சிறுவனும் அவ்விடத்தில் இருந்த தன் புதிய நண்பனோடு நகர்ந்து விட்டான்.

அன்று இரவு வழமைபோல சுந்தரேசனும் மங்களமும் உரையாடிக்கொண்டு இருந்தனர்.
ஏன் இந்த மனுசி வர வர இப்பிடி மாறுதோ தெரியேல!!! சலித்துக்கொண்டாள் மங்களம். என்னதான் தாயானாலும் தன் கணவரை அவர் அவ்வாறு பேசியது அவளுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்வில்லை.

சரி.. பரவாயில்லை விடுங்கோ. வயது போன காலத்தில அவையள் அப்பிடித்தானே சுந்தரேசன் நிலமையை மேலும் மோசமாக்க முயலாமல் சமாளித்தாள்.

மறுநாள் காலை அவசரம் அவசரமாக கணவரும் மனைவியும் அலுவலகம் வெளிக்கிடும் போது பின் புறம் கொட்டிலினுள் குமரனின் சத்தம் கேட்கவே இருவரும் அங்கே ஓடிச் சென்றனர். அங்கே குமரன் கண்ணில் வெற்றியின் வெளிச்சம்.

அம்மா டைகர் இண்டைக்கு ஒரு எலியைப் பிடிச்சிட்டுது... கூய்ய்ய்ய்ய்ய்ய்..... டைகர் கொட்டிலுக்க எலியப் பிடச்சிட்டான் கீச்சிடும் குரலில் சத்தம் இட்டுக்கொண்டு கொட்டிலைச் சுத்தி சுத்தி ஓடத் தொடங்கினான்.

இதனிடையே சத்தம் கேட்டு அவசரமாக ஓடிவந்த மணியம்மா காதிலும் குமரனின் வெற்றிக் களியாட்டத்தின் சத்தம் கேட்கவே மேலும் வேகமாக ஓடி வந்தார். வந்தவர் வாசல படிக்கட்டில் தடக்குப் பட்டு தலையடிபட கீழே விழுந்தார்.

ஐயோ!!!!! ஒரு பெரிய சத்தம் .

இப்போ குமரனை சுற்றி நின்ற சுந்தரேசனும், மங்களமும் வாசல் படியை நோக்கி ஓடினர். அவர்கள் போய் சேர்வதற்குள் காரியம் யாவும் நிறைவு பெற்று இருந்தது.

வான வெளியிலே இப்போது மணியம்மா பறந்துகொண்டு இருந்தார். அவர் கணவரைக் காணப் போகும் மகிழ்ச்சி அவர் முகம் எங்கும் தெரிந்தது. கொஞ்சம் கீழே குனிந்து அவர் கையைப் பார்த்தால் அவர் பிஸ்கட் இட்டு வளர்த்த அந்த குட்டிச் சுண்டெலி கீச் ... கீச் என்று சத்தம் இட்டுக்கொண்டே அவரிடம் பிஸ்கட் வேண்டி அடம் பிடித்துக்கொண்டு இருந்தது.



தனிமையின் கொடுமையால் வாடும் முதியவர்களுக்கு இந்தக்கதை சமர்ப்பணம்.

மன்மதன்
04-03-2007, 01:57 PM
ரொம்ப டச்சிங்காவே இருந்தது.

எளிய சொற்களை கையாண்டு அனைவரும் படிக்ககூடிய ஒரு கதையை கொடுத்ததற்கு முதலில் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

எழுதிய கதைக்கு பின்னூட்டம் அதிகம் இல்லேன்னாலும் இது மாதிரி நிறைய கதைகள் நீங்க எழுதணும்..

'இஞ்சாருங்கோ' என்ற வார்த்தைய படிச்சதும் 'தெனாலி' நியாபகம் வந்தது. கடைசியில் தெனாலி மாதிரியே ஒரு சோகத்தை புகுத்திட்டீங்க.

சபாஷ் மயூரேசன்..............!

மயூ
04-03-2007, 02:16 PM
நன்றி மன்மதன்..
இப்படியான கதைகளைத் தொடர்ந்து எழுதுவேன்.
பின்னூட்டம் எதிர்ப்பார்த்து கதை எழுதினால் தமிழ் மணத்தில் வலைப்பதிவர்கள் போல பயனற்ற கதைகளையே எழுத வேண்டி வரும் என்பது என் எண்ணம். ஆகவே என் கதைகள் இப்படியேஎன் பாணியில் தொடரும். மிக நீண்ட நாட்களிற்குப் பிறகு எழுதிய கதை அதனால் முந்தைய கதைகளைவிட சில பின்னடைவுகள் எழுத்தில் தெரியலாம்.

ஆதவா
04-03-2007, 03:45 PM
கொஞ்சம் இலங்கைத் தமிழை சேர்த்ததனால் தான் என்னவோ கதை இருமுறை படிக்கவேண்டியிருக்கிறது... அருமையான கோணம்.. நன்றாக உள்ளது மயூ!!! தொடர்ந்து எழுதுங்க..

மயூ
05-03-2007, 12:11 AM
நன்றி ஆதவா!
இலங்கைத் தமிழ் புரிய அவ்வளவு கஷ்டமாக உள்ளதா?

மன்மதன்
05-03-2007, 05:38 AM
முதலில் எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.. இலங்கை நண்பர்கள் அதிகம் மன்றம் வந்து பதிக்கும் போது எனக்கு இப்பொழுது பழகிவிட்டது.

மதி
05-03-2007, 06:55 AM
மயூரா...
துணை எத்துனை தேவை என்பதை தெளிவாகவே உணர்த்தியது இக்கதை.. பாராட்டுக்கள்..!

மனோஜ்
05-03-2007, 07:11 AM
வயதான வர்களிடம் மனம் விட்டு பேசினால் அவர்கள் மகிழ்சியில் இருப்பார்கள் என்பதை தெளிவா விளக்கும் அருமையான கதை நன்றி நண்பரே

ஷீ-நிசி
05-03-2007, 08:03 AM
முதலில் மயூ கதை எழுதுவார் என்பது எனக்கு தெரியாது.. வாழ்த்துக்கள் மயூ.. நண்பர்கள் சொல்வதுபோல் கொஞ்சம் படிக்க கடினமாகத்தான இருந்தது... கதையில் ஒரு மெல்லிய சோகம் இழையோடிக்கொண்டிருந்தது... இதுப்போல் குட்டிக் கதைகள் எனக்கு பிடிக்கும்.. தொடர்ந்து எழுதிடுங்கள்! வாழ்த்துக்கள்!

இளசு
05-03-2007, 09:41 PM
ஒரு அழகான மனத்தத்துவ பிரசினையை
அருமையான நடையில் சொன்ன
அன்பு மயூரனுக்குப் பாராட்டுகள்..

முதியோர் இல்லத்தில் விடுவது வெளிக்கொடுமை
சொந்த இல்லத்திலேயே தனிமையில் வேகவிடுவது உள்கொடுமை..

முதுமைக்கென்று பிரத்தியேகமான
உடல் நோய்கள் மட்டுமல்ல
உள்ள நோய்களும் உண்டு..

முழுமையாய்ப் பேண வேண்டியவர்கள் என்ற வகையில்
இவர்களும் ஒருவகையில் குழந்தைகளே...


பாராட்டுகள் மயூரேசன்..

mukilan
06-03-2007, 04:11 AM
மயூரேசா! கலக்கிட்டே! தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல விதமாகத் தமிழ் பேசப்படுவது போலத்தான். வட்டார மொழிவழக்குச் சிறுகதைகள் எப்பொழுதுமே தனிச்சுவைதான். ஈழத்துத் தமிழுக்கோ இரட்டிப்புச் சுவை!!. மனவியல் கதை, அஃதோடு ஈழத்தமிழர்தம் வாழ்வியலை கொஞ்சமேனும் படம்பிடித்துக் காட்டும் கதை. சில புதிய வார்த்தைகளையும் கற்றுக் கொண்டேன்.

சாய்மனைக் கதிரை- ஈசிசேர்
பரியாரியார்- மருத்துவர்

எங்கட பெடியன் - எங்கட என்னும் சொல் நமது என்ற பொருளில் வழங்கப்படுவது சிறிது வியப்பாக இருக்கிறது. தமிழகத்தில் மனைவியை கணவர் எவ்வளவு மரியாதையாக (!!!!!!!!!!!!!!!!) வா, போ, வாடி போடி என்று அழைப்பார். வாம்மா, போம்மா என அழைப்பவரும் உண்டு (வாடா, போடா செல்லம், குட்டிமா, குட்டி இப்படிக்கூட கல்யாணம் ஆன புதுசில கூப்பிடலாமாமே? புச்சாக் கல்யாணமாறவங்களுக்கு டிப்பும்மா டிப்பு). ஆனா இந்தக் கதையில் கண்வர் மனைவியை வாங்கோ போங்கோ என்று அவ்வளவு மரியாதையாகக் கூப்பிடுகிறார். அடிக்கடிப் பதிக்கணும் மயூரேசா! அப்பத்தான் நான் ஈழத்தமிழ் கதைக்க முடியும்! பாராட்டுக்கள்.

மயூ
06-03-2007, 12:57 PM
மயூரா...
துணை எத்துனை தேவை என்பதை தெளிவாகவே உணர்த்தியது இக்கதை.. பாராட்டுக்கள்..!


வயதான வர்களிடம் மனம் விட்டு பேசினால் அவர்கள் மகிழ்சியில் இருப்பார்கள் என்பதை தெளிவா விளக்கும் அருமையான கதை நன்றி நண்பரே
ஆமாம் உண்மையே
புரிந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள்.

மயூ
06-03-2007, 12:58 PM
ஒரு அழகான மனத்தத்துவ பிரசினையை
அருமையான நடையில் சொன்ன
அன்பு மயூரனுக்குப் பாராட்டுகள்..

முதியோர் இல்லத்தில் விடுவது வெளிக்கொடுமை
சொந்த இல்லத்திலேயே தனிமையில் வேகவிடுவது உள்கொடுமை..

முதுமைக்கென்று பிரத்தியேகமான
உடல் நோய்கள் மட்டுமல்ல
உள்ள நோய்களும் உண்டு..

முழுமையாய்ப் பேண வேண்டியவர்கள் என்ற வகையில்
இவர்களும் ஒருவகையில் குழந்தைகளே...


பாராட்டுகள் மயூரேசன்..
நன்றி இளசு அண்ணா
உங்களுக்கு உரிய பார்வையில் விமர்சனம் இட்டு ஊக்கப் படுத்தியமைக்கு நன்றிகள்.

மயூ
06-03-2007, 01:00 PM
மயூரேசா! கலக்கிட்டே! தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல விதமாகத் தமிழ் பேசப்படுவது போலத்தான். வட்டார மொழிவழக்குச் சிறுகதைகள் எப்பொழுதுமே தனிச்சுவைதான். ஈழத்துத் தமிழுக்கோ இரட்டிப்புச் சுவை!!. மனவியல் கதை, அஃதோடு ஈழத்தமிழர்தம் வாழ்வியலை கொஞ்சமேனும் படம்பிடித்துக் காட்டும் கதை. சில புதிய வார்த்தைகளையும் கற்றுக் கொண்டேன்.

சாய்மனைக் கதிரை- ஈசிசேர்
பரியாரியார்- மருத்துவர்

எங்கட பெடியன் - எங்கட என்னும் சொல் நமது என்ற பொருளில் வழங்கப்படுவது சிறிது வியப்பாக இருக்கிறது. தமிழகத்தில் மனைவியை கணவர் எவ்வளவு மரியாதையாக (!!!!!!!!!!!!!!!!) வா, போ, வாடி போடி என்று அழைப்பார். வாம்மா, போம்மா என அழைப்பவரும் உண்டு (வாடா, போடா செல்லம், குட்டிமா, குட்டி இப்படிக்கூட கல்யாணம் ஆன புதுசில கூப்பிடலாமாமே? புச்சாக் கல்யாணமாறவங்களுக்கு டிப்பும்மா டிப்பு). ஆனா இந்தக் கதையில் கண்வர் மனைவியை வாங்கோ போங்கோ என்று அவ்வளவு மரியாதையாகக் கூப்பிடுகிறார். அடிக்கடிப் பதிக்கணும் மயூரேசா! அப்பத்தான் நான் ஈழத்தமிழ் கதைக்க முடியும்! பாராட்டுக்கள்.
பாராட்டுக்கு நன்றி முகிலன் அவர்களே
பிறகு ஈழத்தமிழில் புதிய வார்த்தைகளை கற்றுத் தந்ததில் மகிழ்ச்சி :)

ஈழத்தில் அறுதிப் பெரும்பாண்மையான கணவர்கள் மனைவியை வா போ என்று கூப்பிடுவதில்லை. ஏன் தான் நம் சகோதரர்கள் அப்படிக் கூப்பிடுகின்றார்களோ தெரியவில்லை. சில வேளைகளில் அதிகம் உரிமை எடுப்பதனால் கூட இருக்கலாம். :confused:

kavitha
20-04-2007, 11:30 AM
முதுமையும் ஒரு அழகான பருவம்தான்.
ஏதோ நமக்குத்தான் எல்லாம் தெரியும்;
அந்தக்காலம்... இவர்களுக்கு என்ன தெரியப்போகிறது என்பது
அபாண்டமான அசத்தியம்.
நவீனக்கருவிகளை வேண்டுமானால் அவர்கள் நுகராமல் இருக்கக்கூடும்.
நவீனம் என்பது நமக்குத்தான் புதுமை! அது அவர்களுக்குப் பழமைதான்.
உதாரணம் நிறையச்சொல்லலாம்.... நவீனமாகச்சொல்லவேண்டுமென்றால்...டைட்டானிக்...முதல் மரியாதை...ஜெயகாந்தனின் 'யுகசந்தி'
என்னைக்கேட்டால் இளமையில் இருப்பதைவிட முதுமையில் தான் துணை அவசியம் என்பேன்.
எங்கள் வீட்டுப்பெரிசுகளைக்கண்டால் பழையக்கதைகளைக்கேட்டு நச்சரிப்பது என் வாடிக்கை.
அவர்களும் தங்கள் மலரும் நினைவுகளைப்பகிர்ந்துகொள்ளும்பொழுது அந்தப்பருவத்திற்கே சென்றுவிடுவார்கள்.
அதை ரசிப்பது எனக்கு மிகப்பிடிக்கும்.
கதை நன்றாக இருக்கிறது மயூர்...
துணை எக்காலத்திற்கும் அவசியம். இதை பலரும் பலவகைகளில் சொல்லி இருக்கிறார்கள்.
உண்மையான தனிமை என்பது தனிமையை உணர்வது. அது பலர் உடன் இருக்கும்போதும் நிகழலாம்.
தனிமையில் இருக்கும்போது நமக்குத்துணையாக இயற்கையோ, புத்தகங்களோ, நினைவுகளோ இருந்தால் கூட
நம்மால் தனிமையை உணரமுடியாது.

அரியாண்டம்
இறாக்கை
போத்தல்
கதிரை
- இவற்றிற்கெல்லாம் அர்த்தம் விளங்கினால் நன்றாக இருக்கும்.

mukilan
20-04-2007, 11:13 PM
கதிரை- நாற்காலி, முக்காலி
போத்தல்- பாட்டில், கண்ணாடிக் குடுவை
அரியண்டம்- எரிச்சல்
இறாக்கை- ??????( மயூரேசா வாப்பா வந்து சொல்லு, அதோட நான் சொன்னது சரிதானா என்றும் பார்)

poo
21-04-2007, 06:35 AM
பாராட்டுக்கள் மயூரேசன்..

மனதை வருடுகிறது... மணியம்மாளின் மரணத்தை சொன்னவிதம் மேலும் நெகிழச் செய்கிறது..

தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்..

ஓவியன்
21-04-2007, 10:20 AM
கதிரை- நாற்காலி, முக்காலி
போத்தல்- பாட்டில், கண்ணாடிக் குடுவை
அரியண்டம்- எரிச்சல்
இறாக்கை- ??????( மயூரேசா வாப்பா வந்து சொல்லு, அதோட நான் சொன்னது சரிதானா என்றும் பார்)

நீங்கள் கூறியது சரியே இறாக்கை என்பது ஒரு வகை Cupboard ஐக் குறிக்கும். புத்தகம் அடுக்கி வைக்க பயன் படுவதை புத்தக இறாக்கை என்போம். போர்த்துக்கீச சொல் என்று நினைக்கின்றேன்.

ஓவியன்
21-04-2007, 10:24 AM
முதியவர்கள் குழந்தைகள் மாதிரி என்பார்கள். அதனை சொன்ன விதம் அருமை மயூரேசா!.

தொடரட்டும் உங்கள் எழுதும் பணி - ஆவலுடன் காத்திருக்கின்றேன் என் பிறந்த வீட்டுத் தமிழைச் சுவைக்க.

ஓவியா
22-04-2007, 07:07 PM
மயூ, கதை அருமை.
சுவார்ஸ்யமாக கொண்டு சென்றுல்லாய். பாராட்டுகிறேன்.

முதுமையில் உள்ள பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாத மக்களின் மத்தியில் இளமையிலே முதுமையின் ஆசைகளை அழகாக வடித்து எழுதியுல்லாய்.

அனைத்து விமர்சனக்களும் அருமை மக்களே!!

பூமகள்
19-07-2008, 05:51 AM
இளசண்ணாவின் சுட்டியைத் தொடர்ந்து வந்து படித்த எனக்கு இப்படி ஓர் பொக்கிசம் புதைந்து கிடப்பது கண்டு பேரதிர்ச்சி.. பாராட்டுகள் மயூ. :)

அந்த எலிக்குட்டியின் "கீச்... கீச்" ஒலி அடங்காமல் இன்னும்.. :frown:

வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் இதே போல.. ஒரு எலிக்குட்டி என்னை அழ வைத்தது.. இப்போது மீண்டும் உங்கள் கதையில்...:traurig001::frown:

பெரியண்ணா சொன்னது போல..

முதுமை மீண்டும் ஓர் குழந்தைப் பருவம்..

சொல்ல வேண்டியதை எல்லாம் பெரியண்ணாவும் முகிலன் அண்ணாவும் சொல்லிவிட்டதால் நான் அவர்களை வழி மொழிகிறேன்..

அற்புதமான படைப்புக்கு வாழ்த்துகள் மயூ. :)

மயூ
19-07-2008, 05:56 AM
அனைவருக்கும் நன்றி..
உண்மையாகச் சொல்கின்றேன்.... இப்போது இப்படியான கதைகளை என்னால் எழுத முடியுமா என்று சந்தேகமாகவே இருக்கின்ற்து.... அனைவருக்கும் நன்றி.!

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி

mukilan
19-07-2008, 12:41 PM
இப்போது இப்படியான கதைகளை என்னால் எழுத முடியுமா என்று சந்தேகமாகவே இருக்கின்ற்து...

ஏன் ஏன் ஏன் ஏன் மயூ?:smilie_abcfra:

ஓவியா
19-07-2008, 12:45 PM
ஏன் ஏன் ஏன் ஏன் மயூ?:smilie_abcfra:

ஏன் என்றால் என்ன அர்த்தம், :D:D

மயூ சிங்கள பெட்டைகளை சயிட் அடிக்க சிங்களம் கற்றுக்கொள்கிறார் அதனால்தான். :D:D

மயூ
19-07-2008, 03:36 PM
ஏன் என்றால் என்ன அர்த்தம், :D:D

மயூ சிங்கள பெட்டைகளை சயிட் அடிக்க சிங்களம் கற்றுக்கொள்கிறார் அதனால்தான். :D:D
ஹி.. ஹி.. அப்படி எல்லாம் இல்லை.. நீண்டநாள் எழுதவில்லை... டச் விட்டிடிச்சோ என்று பயமா இருக்கு...:confused:

மற்றும்படி சைட் அடிப்பது அன்றாடக் கடமை என்றதால அது கதை எழுதுவதில் தாக்கம் செலுத்தாது. :rolleyes: