PDA

View Full Version : தொடருமா?



அமரன்
02-03-2007, 06:34 PM
ஒன்பதாவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியாவில் நடக்கவுள்ளது. இதில் இலங்கை உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இங்குள்ள ஆன்டிகுவா மற்றும் ரினிடாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

சென். ஜோன்ஸ் நகரில் நேற்று முன்தினம் அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.1 என பதிவானது. இதே போல் போர்ட் ஒவ் ஸ்பெயினில் ஏற்பட்ட நில நடுக்கம் 4.3 ரிச்டர் எனப் பதிவானது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
`சுப்பர் 8' போட்டிகளில் ஆன்டிகுவாவிலும், பயிற்சி மற்றும் குரூப் போட்டிகள் ரினிடாட்டிலும் நடக்கவுள்ளன. இங்கு நடக்கும் `பி' பிரிவு போட்டிகளில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பெர்முடா அணிகள் மோதவுள்ளன. நேற்று முன்தினம் காலை இலங்கை, இந்திய அணி கிளம்பிய வேளையில், அங்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தங்கள் ஆட்டத்தின் மூலம் இலங்கை, இந்திய வீரர்கள் எதிரணிகளை நடுங்கச் செய்வார்களா...? என்று பார்ப்போம்.

அறிஞர்
02-03-2007, 06:47 PM
சும்மா ஆடிட்டு அடங்கிரும்...

6 ரிக்டர் அளவை பார்த்தவன்.....

விகடன்
07-06-2007, 08:52 PM
ஆட்டம் ஆட்டங்கொண்டால் அனைவருக்குந்தானே!
ஆகையால் பெறுபேற்றில் பெரிதாக மாற்றமிருக்காது.