அமரன்
02-03-2007, 09:50 AM
என் தாயகமாம் இலங்கையின் மணிமகுடம் யாழ்ப்பாணம். யாழ்ப்பணத்தின் ஒரு வைரக்கல்தான் எனது ஊர் (மானிப்பாய்). எனது சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம். 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை மைக்செட் திருடன் என்று எல்லோருமழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அதுக்கான காரணத்தைப் பலரிடம் கேட்டும் யாருக்குமே தெரியவில்லை. எனக்கோ ஆச்சரியம்! எப்படித் தெரியாமல் இருக்கும்? பலரிடம் கேட்டுப் பயனில்லை. இறுதியில் எம் ஊரின் 60 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் கேட்டேன். "தம்பி அப்போதெல்லாம் நம்ம ஊர் திருவிழாக் காலத்தில் கல கலன்னு இருக்கும். ஊரில் எல்லா இடமும் ஒலிபெருக்கி வைத்து மைக்செட்டில் பாட்டுப்போடுவார்கள். காலையில் நாலு மணிக்கு போட்டால் இரவு பத்து மணிக்குத்தான் நிறுத்துவார்கள். அப்படி ஒரு கும்மாளம்தான் தம்பி. ஊரில எல்லோருமே சந்தோசமாக இருப்போம். சின்னஞ்சிறுசில இருந்து பெரியவங்க வரை ஆனந்தமாக இருப்பார்கள். மார்கழி மாத்தில்தான் தம்பி திருவிழா நடக்கும். அதே மாதத்தில்தான் பள்ளி இறுதியாண்டுத் தேர்வும் நடக்கும் தம்பி. தேர்வில் தேறாவிட்டால் அவ்வளவுதான். அத்னால திருவிழாக்காலத்தில் மாணவர்கள் படிப்பதில்தான் கவனமாக இருப்பார்கள். அப்போ நான்தான் ஊர்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர்கள் படிக்க நினைத்தாலும் மைக்செட் சத்தம் அவர்களைப்படிக்கவிடாது. நான் எத்தனையோ தடவை சொல்லிப்பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. அப்பதான் ராமச்சந்திரன் என்னைச் சந்திதான். ஊரின்மேல் அக்கறையுள்ளவர்களில் ஒருத்தன்தான் அவன். அவனிடமும் இதுபற்றிப் பேசினேன். கேட்டுவிட்டு ஒரு புன்முறுவலுடன் போனான் தம்பி. அடுத்தநாள் காலையில் பாட்டிச்சத்தம் கேட்கவில்லை. என்னன்னு ஊரே அதிர்ச்சியாயிட்டுது. கோயிக் வாசலில் ஒரே கூட்டம். ஊரில் இருந்த ஒலிபெருக்கி, கோயிலிலிருந்த மைக்செட் ஒன்னையும் காணலை. யாரோ திருடிட்டாங்க.
அப்புறம் ஊரில ஒருத்தன் சொன்னதை வைத்து ராமச்சந்திரன்தான் திருடினத்துன்னு கண்டு பிடிச்சாங்க. அவனைப் பொலிசில் குடுத்தாங்க தம்பி. பொலிசும் கோட்டில் நிறுத்தினாங்க. ஊர்ப்பிள்ளைகளின் படிப்புக்காகத்தான் திருடினேன் என்ற அவன் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மைக்செட் வைக்கும் நேரத்தை காலை 9 இலிருந்து மாலை 5 வரைன்னு கட்டுப்படுத்தினார். ஆனால் திருடின குற்றத்துக்கு அவனுக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை கொடுத்தார். அதற்கு அப்புறம் எல்லோரும் அவனை மைக்செட் திருடன்னுதான் கூப்பிடுறாங்க."
வாத்தியார் சொல்லி முடிச்சதும் ராமச்சந்திரன் எனக்கு சாமியாத் தெரிஞ்சார். ஒவ்வொருத்தனுக்கும் இளவயதில் படிப்புத்தானே சாமி. அந்தப்படிப்பை கொடுக்கிறவனும் சாமிதானே. அப்படிப்பார்த்தால் ராமச்சந்திரனும் சாமிதானே. அன்றிலிருந்து இன்றுவரை அவர் எனக்கு சாமியாத்தான் தெரியுறார். அனால் ஊரிலிருந்து நான் கிளம்பும்வரை அவரை மைக்செட்திருடன்னுதான் கூப்பிடுறாங்க.
அப்புறம் ஊரில ஒருத்தன் சொன்னதை வைத்து ராமச்சந்திரன்தான் திருடினத்துன்னு கண்டு பிடிச்சாங்க. அவனைப் பொலிசில் குடுத்தாங்க தம்பி. பொலிசும் கோட்டில் நிறுத்தினாங்க. ஊர்ப்பிள்ளைகளின் படிப்புக்காகத்தான் திருடினேன் என்ற அவன் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மைக்செட் வைக்கும் நேரத்தை காலை 9 இலிருந்து மாலை 5 வரைன்னு கட்டுப்படுத்தினார். ஆனால் திருடின குற்றத்துக்கு அவனுக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை கொடுத்தார். அதற்கு அப்புறம் எல்லோரும் அவனை மைக்செட் திருடன்னுதான் கூப்பிடுறாங்க."
வாத்தியார் சொல்லி முடிச்சதும் ராமச்சந்திரன் எனக்கு சாமியாத் தெரிஞ்சார். ஒவ்வொருத்தனுக்கும் இளவயதில் படிப்புத்தானே சாமி. அந்தப்படிப்பை கொடுக்கிறவனும் சாமிதானே. அப்படிப்பார்த்தால் ராமச்சந்திரனும் சாமிதானே. அன்றிலிருந்து இன்றுவரை அவர் எனக்கு சாமியாத்தான் தெரியுறார். அனால் ஊரிலிருந்து நான் கிளம்பும்வரை அவரை மைக்செட்திருடன்னுதான் கூப்பிடுறாங்க.