ஆதவா
01-03-2007, 05:43 PM
பூ அவர்களின் மூன்று கவிதைக்கும் சேர்த்து ஒரு திரியே ஆரம்பித்துவிட்டேன்.... மன்னிக்க நிர்வாகிகளே!! ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டுமே!!
சற்று சுருக்கமாக எழுதிவிடுகிறேன்...
அந்திசாயும் நேரமது..
கடலலை காற்றுடன்
கைகோர்த்திருக்கையில் சந்தித்தேன்..
அந்த அதிர்ஷ்ட தேவதையை..
சில கவிதைகள் நெஞ்சை வருடும் படி அமைந்துவிடுகின்றன... க்ஷணநேரம் யோசித்தபிறகுதான் நமக்குள்ளும் இப்படி ஒரு யோஜனை இல்லை என்று தெளிவாகும். ஒரு கடற்கரையில் சாயுங்காலப் பொழுதில் வந்தமர்ந்த வேளையில் அதிர்ஷ்ட தேவதையைப் பார்க்கும் நாயகன், தானும் ஒரு அதிர்ஷ்டக்காரன் அந்த கிளிக்கு என்று அறியவில்லை... அகந்தைக் கண்களை மறைப்பது நல்ல குணங்கள்...
எண்ண வலைகளை
தன்னைச்சுற்றி பின்னலானாள்...
தூரமாகிப்போன வானம்..
நிமிர்ந்துப் பார்ப்பதில்லை யாதலால்..
விளிம்பைத் தொடும்முன்
விலாசமிழந்துவிடும் சிறகுகள்...
வளர வளர வெட்டப்படும்
உள்மன ஆசைகளும்கூட...
ஒரு கிளி,.. (பெண்கிளி.) அதிலும் சிறகுகள் வெட்டப்பட்ட கிளி, எண்ண வலைகளை பின்னுவது என்பது அந்த சதுரப்பெட்டிக்குள் எண்ணுவது... அழகாக வடிக்கப்பட்டு இருக்கிறது. அருமை பூ!! வானத்தை முழுவதுமாய் அனுபவிக்காத ஒரு கிளிக்கு அந்த பெட்டியின் விளிம்பே தொடுவானம்..
கணநேரம் விடுதலை
கனமான மனதோடு அவள்
கரைசேரும் கவலைகள்....
நிகழ்காலம் தொலைகையில்
எதிர்கால தேடல்கள் கேலிப்பொருள்
அவள் அகராதியில்..
சில நிமிடங்கள் மட்டுமே வானம் பார்க்கும் இவளின் கவலை கரை சேர நேரம் அதுவே! சோதிடக் கிளியைச் சொல்வதாக இருந்தாலும் சோதிடந்தனையிகழ் என்ற பாரதியின் வார்த்தை ரீங்காரமிடுகிறது... வார்த்தை அமைப்பு பிரம்மாண்டம்...
விரக்தியோடு வருபவரும்..
விதியை நிந்தித்து வருபவரும்
வரிசைக்கிரமப்படி
இவள்பின்னேதான்..
அறிந்தவள் அவள் மட்டுமே...
இல்லையேல் பறந்துபோய்விடும்
அதிர்ஷ்ட தேவதை பட்டம்..
சோதிடத்தை நம்பி பல காரியங்கள் கெட்டதுண்டு,,, அதிலும் கிளிக்கு எப்போதுமே அதிர்ஷ்டதேவதை பட்டம் கிடைத்துவிடும். எளிதில் ஏமாற்றாது.. ஏமாற்றுபவன் சோதிடன் மட்டுமே!! சிறு நிகழ்வு அடங்கிய துளியாக இந்த வரிகள் இருக்கிறது... மிக அருமை பூ!
என் கரம்சேர்ந்த அழகுதேவதை..
உண்மையில் அதிர்ஷ்ட தேவதை..
முடிவெடுத்தேன்..முற்றுப்புள்ளி
வைத்தேன்..
நிர்ணயித்த விலை
உனக்கானதல்ல...
உன்னை முடமாக்கி
நிர்மூலமாகி போனவனுக்கான
நிவாரணம்..
நாயகன் கையில் நாயகி.. சோதிடனிடமிருந்து வாங்கப்பட்ட கிளியை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்... கடைசி வரியில் சோதிடனின் நிலையும் தெளிவு செய்யப்பட்டது... சபாஷ்
விரிய விரும்பிய
சிறகுகளை வாஞ்சையாய் தடவினேன்....
வழக்கமாய் ஒலித்த
வரிகளை மறக்கச் செய்தேன்...
வாசங்களாய் பதியவைத்தேன்..
வாசகங்களை பிரதிபலித்தேன்..
கால மாற்றங்களில்
மாற்றங்கள் காலத்தோடு..
கிளியை இதுவரை நான் தொட்டுப் பார்த்ததில்லை.. ஒரு நிகழ்வை மனதில் எடுத்துக்கொண்டு எழுதியதுமில்லை... இப்போதூ தொடுகிறேன் காணுகிறேன்... ஒரு யதார்த்தம் இங்கே பதார்த்தமாய் தெளிக்கப்பட்டு இருக்கிறது. கடையிரண்டு வரிகள் மிக அருமை....
களங்கள் விரிய விரிய
சரியென சொன்னது
மனம்!..
அவளை விடுவிக்க நினைத்தேன்!!..
அழைத்துச் சென்றேன்..
அங்கே பார்..
நீல வானம் எத்தனை நீளம்..
இயற்கையாவும் உனக்கே சொந்தம்..
உன் சொந்தமெல்லாம் இயற்கையொன்றே..
உன்னைச்சுற்றி கம்பிகளில்லை..
உன் சிறகுகள் கத்தரிக்கப்படவில்லை...
உன் இமைகளுக்கிடையில்
விருப்பமானதை படமெடு..
பிரசவம் முடித்தையில்
முடியாதுபோனதே..மறந்திடு..
பரவசமாய் பறந்திடு...
ஒரு கிளியின் விடுதலை.... மிகத் தெளிவான எளிய நடை.. மேற்கண்ட வரிகளை அடுக்காமல் எடுத்து இங்கே பரப்பினாலே போதுமானது... விமர்சனம் தயார்... அந்த அளவுக்கு அருமையாக பின்னப்பட்டு விடுதலை அளிக்கப்படுகிறது ஒரு கிளிக்கு.... கடைசி மூன்று வரிகள் எனக்கு பல்வேறு அர்த்தம் அளிக்கிறது.. அங்கே கொஞ்சம் விளக்கவும்...
உயரே போ.. உயர..உயரே.. போ...
கரங்களிலிருந்து விடுவிடுத்தேன்..
மறுநொடியே
என் மடிதனில் சரணடைந்தாள்.....மீண்டும்..
மீண்டும்...மீண்டும்..!!
தடவிய வாஞ்சை.... தஞ்சமடைந்தது கிளீ..........
ஒரு கிளீயின் விடுதலை என்பது மிகச் சாதாரண நிகழ்வல்ல.. சமூகக் கவிதைகளில் இதுவும் ஒன்று.... எனக்கு ஆரம்பம் முதலே கவிதையை ஒருமாதிரியே பார்த்தேன்.... வீட்டில் அடைந்துகிடக்கும் ஒரு பெண்.. அவளை விடுவிக்க நினைக்கும் ஒரு ஆண்... ஆணின் வாஞ்சையில் பெண் கைகோர்கிறாள் அவனோடு.... என் கண்களுக்கு இப்படித்தான் தெரிகிறது.. தவறிருந்தால் மன்னிக்க... ஒரு ஆழமான ருசுவை அதிகப்படியான நீரூற்றி வளர்க்காமல் எளிமையாக கொண்டு சென்று இறுதியில் முடித்தவிதம் மிக அருமை... நான் முன்னமே சொன்னதுபோல விமர்சனம் இந்த கவிதைக்கு தேவையற்றது... கவிதையே ஒரு விமர்சனம் போல இருக்கும் போது வீணாக எதற்கு?,, நான் பல காலம் ஏங்கி இருக்கிறேன் இம்மாதிரி எளிமையாகவும் நேர்த்தியாகவும் கவிதை எழுத.... பூவுக்கே உரிய மென்மை தெறித்தோடுகிறது கவிதையில்ல்.... வாழ்த்துக்கள்...
சற்று சுருக்கமாக எழுதிவிடுகிறேன்...
அந்திசாயும் நேரமது..
கடலலை காற்றுடன்
கைகோர்த்திருக்கையில் சந்தித்தேன்..
அந்த அதிர்ஷ்ட தேவதையை..
சில கவிதைகள் நெஞ்சை வருடும் படி அமைந்துவிடுகின்றன... க்ஷணநேரம் யோசித்தபிறகுதான் நமக்குள்ளும் இப்படி ஒரு யோஜனை இல்லை என்று தெளிவாகும். ஒரு கடற்கரையில் சாயுங்காலப் பொழுதில் வந்தமர்ந்த வேளையில் அதிர்ஷ்ட தேவதையைப் பார்க்கும் நாயகன், தானும் ஒரு அதிர்ஷ்டக்காரன் அந்த கிளிக்கு என்று அறியவில்லை... அகந்தைக் கண்களை மறைப்பது நல்ல குணங்கள்...
எண்ண வலைகளை
தன்னைச்சுற்றி பின்னலானாள்...
தூரமாகிப்போன வானம்..
நிமிர்ந்துப் பார்ப்பதில்லை யாதலால்..
விளிம்பைத் தொடும்முன்
விலாசமிழந்துவிடும் சிறகுகள்...
வளர வளர வெட்டப்படும்
உள்மன ஆசைகளும்கூட...
ஒரு கிளி,.. (பெண்கிளி.) அதிலும் சிறகுகள் வெட்டப்பட்ட கிளி, எண்ண வலைகளை பின்னுவது என்பது அந்த சதுரப்பெட்டிக்குள் எண்ணுவது... அழகாக வடிக்கப்பட்டு இருக்கிறது. அருமை பூ!! வானத்தை முழுவதுமாய் அனுபவிக்காத ஒரு கிளிக்கு அந்த பெட்டியின் விளிம்பே தொடுவானம்..
கணநேரம் விடுதலை
கனமான மனதோடு அவள்
கரைசேரும் கவலைகள்....
நிகழ்காலம் தொலைகையில்
எதிர்கால தேடல்கள் கேலிப்பொருள்
அவள் அகராதியில்..
சில நிமிடங்கள் மட்டுமே வானம் பார்க்கும் இவளின் கவலை கரை சேர நேரம் அதுவே! சோதிடக் கிளியைச் சொல்வதாக இருந்தாலும் சோதிடந்தனையிகழ் என்ற பாரதியின் வார்த்தை ரீங்காரமிடுகிறது... வார்த்தை அமைப்பு பிரம்மாண்டம்...
விரக்தியோடு வருபவரும்..
விதியை நிந்தித்து வருபவரும்
வரிசைக்கிரமப்படி
இவள்பின்னேதான்..
அறிந்தவள் அவள் மட்டுமே...
இல்லையேல் பறந்துபோய்விடும்
அதிர்ஷ்ட தேவதை பட்டம்..
சோதிடத்தை நம்பி பல காரியங்கள் கெட்டதுண்டு,,, அதிலும் கிளிக்கு எப்போதுமே அதிர்ஷ்டதேவதை பட்டம் கிடைத்துவிடும். எளிதில் ஏமாற்றாது.. ஏமாற்றுபவன் சோதிடன் மட்டுமே!! சிறு நிகழ்வு அடங்கிய துளியாக இந்த வரிகள் இருக்கிறது... மிக அருமை பூ!
என் கரம்சேர்ந்த அழகுதேவதை..
உண்மையில் அதிர்ஷ்ட தேவதை..
முடிவெடுத்தேன்..முற்றுப்புள்ளி
வைத்தேன்..
நிர்ணயித்த விலை
உனக்கானதல்ல...
உன்னை முடமாக்கி
நிர்மூலமாகி போனவனுக்கான
நிவாரணம்..
நாயகன் கையில் நாயகி.. சோதிடனிடமிருந்து வாங்கப்பட்ட கிளியை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்... கடைசி வரியில் சோதிடனின் நிலையும் தெளிவு செய்யப்பட்டது... சபாஷ்
விரிய விரும்பிய
சிறகுகளை வாஞ்சையாய் தடவினேன்....
வழக்கமாய் ஒலித்த
வரிகளை மறக்கச் செய்தேன்...
வாசங்களாய் பதியவைத்தேன்..
வாசகங்களை பிரதிபலித்தேன்..
கால மாற்றங்களில்
மாற்றங்கள் காலத்தோடு..
கிளியை இதுவரை நான் தொட்டுப் பார்த்ததில்லை.. ஒரு நிகழ்வை மனதில் எடுத்துக்கொண்டு எழுதியதுமில்லை... இப்போதூ தொடுகிறேன் காணுகிறேன்... ஒரு யதார்த்தம் இங்கே பதார்த்தமாய் தெளிக்கப்பட்டு இருக்கிறது. கடையிரண்டு வரிகள் மிக அருமை....
களங்கள் விரிய விரிய
சரியென சொன்னது
மனம்!..
அவளை விடுவிக்க நினைத்தேன்!!..
அழைத்துச் சென்றேன்..
அங்கே பார்..
நீல வானம் எத்தனை நீளம்..
இயற்கையாவும் உனக்கே சொந்தம்..
உன் சொந்தமெல்லாம் இயற்கையொன்றே..
உன்னைச்சுற்றி கம்பிகளில்லை..
உன் சிறகுகள் கத்தரிக்கப்படவில்லை...
உன் இமைகளுக்கிடையில்
விருப்பமானதை படமெடு..
பிரசவம் முடித்தையில்
முடியாதுபோனதே..மறந்திடு..
பரவசமாய் பறந்திடு...
ஒரு கிளியின் விடுதலை.... மிகத் தெளிவான எளிய நடை.. மேற்கண்ட வரிகளை அடுக்காமல் எடுத்து இங்கே பரப்பினாலே போதுமானது... விமர்சனம் தயார்... அந்த அளவுக்கு அருமையாக பின்னப்பட்டு விடுதலை அளிக்கப்படுகிறது ஒரு கிளிக்கு.... கடைசி மூன்று வரிகள் எனக்கு பல்வேறு அர்த்தம் அளிக்கிறது.. அங்கே கொஞ்சம் விளக்கவும்...
உயரே போ.. உயர..உயரே.. போ...
கரங்களிலிருந்து விடுவிடுத்தேன்..
மறுநொடியே
என் மடிதனில் சரணடைந்தாள்.....மீண்டும்..
மீண்டும்...மீண்டும்..!!
தடவிய வாஞ்சை.... தஞ்சமடைந்தது கிளீ..........
ஒரு கிளீயின் விடுதலை என்பது மிகச் சாதாரண நிகழ்வல்ல.. சமூகக் கவிதைகளில் இதுவும் ஒன்று.... எனக்கு ஆரம்பம் முதலே கவிதையை ஒருமாதிரியே பார்த்தேன்.... வீட்டில் அடைந்துகிடக்கும் ஒரு பெண்.. அவளை விடுவிக்க நினைக்கும் ஒரு ஆண்... ஆணின் வாஞ்சையில் பெண் கைகோர்கிறாள் அவனோடு.... என் கண்களுக்கு இப்படித்தான் தெரிகிறது.. தவறிருந்தால் மன்னிக்க... ஒரு ஆழமான ருசுவை அதிகப்படியான நீரூற்றி வளர்க்காமல் எளிமையாக கொண்டு சென்று இறுதியில் முடித்தவிதம் மிக அருமை... நான் முன்னமே சொன்னதுபோல விமர்சனம் இந்த கவிதைக்கு தேவையற்றது... கவிதையே ஒரு விமர்சனம் போல இருக்கும் போது வீணாக எதற்கு?,, நான் பல காலம் ஏங்கி இருக்கிறேன் இம்மாதிரி எளிமையாகவும் நேர்த்தியாகவும் கவிதை எழுத.... பூவுக்கே உரிய மென்மை தெறித்தோடுகிறது கவிதையில்ல்.... வாழ்த்துக்கள்...