poo
27-02-2007, 09:58 AM
அந்திசாயும் நேரமது..
கடலலை காற்றுடன்
கைகோர்த்திருக்கையில் சந்தித்தேன்..
அந்த அதிர்ஷ்ட தேவதையை..
எண்ண வலைகளை
தன்னைச்சுற்றி பின்னலானாள்...
தூரமாகிப்போன வானம்..
நிமிர்ந்துப் பார்ப்பதில்லை யாதலால்..
விளிம்பைத் தொடும்முன்
விலாசமிழந்துவிடும் சிறகுகள்...
வளர வளர வெட்டப்படும்
உள்மன ஆசைகளும்கூட...
கனநேரம் விடுதலை
கனமான மனதோடு அவள்
கரைசேரும் கவலைகள்....
நிகழ்காலம் தொலைகையில்
எதிர்கால தேடல்கள் கேலிப்பொருள்
அவள் அகராதியில்..
விரக்தியோடு வருபவரும்..
விதியை நிந்தித்து வருபவரும்
வரிசைக்கிரமப்படி
இவள்பின்னேதான்..
அறிந்தவள் அவள் மட்டுமே...
இல்லையேல் பறந்துபோய்விடும்
அதிர்ஷ்ட தேவதை பட்டம்..
என் கரம்சேர்ந்த அழகுதேவதை..
உண்மையில் அதிர்ஷ்ட தேவதை..
முடிவெடுத்தேன்..முற்றுப்புள்ளி
வைத்தேன்..
நிர்ணயித்த விலை
உனக்கானதல்ல...
உன்னை முடமாக்கி
நிர்மூலமாகி போனவனுக்கான
நிவாரணம்..
விரிய விரும்பிய
சிறகுகளை வாஞ்சையாய் தடவினேன்....
வழக்கமாய் ஒலித்த
வரிகளை மறக்கச் செய்தேன்...
வாசங்களாய் பதியவைத்தேன்..
வாசகங்களை பிரதிபலித்தேன்..
கால மாற்றங்களில்
மாற்றங்கள் காலத்தோடு..
களங்கள் விரிய விரிய
சரியென சொன்னது
மனம்!..
அவளை விடுவிக்க நினைத்தேன்!!..
அழைத்துச் சென்றேன்..
அங்கே பார்..
நீல வானம் எத்தனை நீளம்..
இயற்கையாவும் உனக்கே சொந்தம்..
உன் சொந்தமெல்லாம் இயற்கையொன்றே..
உன்னைச்சுற்றி கம்பிகளில்லை..
உன் சிறகுகள் கத்தரிக்கப்படவில்லை...
உன் இமைகளுக்கிடையில்
விருப்பமானதை படமெடு..
பிரசவம் முடித்தையில்
முடியாதுபோனதே..மறந்திடு..
பரவசமாய் பறந்திடு...
உயரே போ.. உயர..உயரே.. போ...
கரங்களிலிருந்து விடுவிடுத்தேன்..
மறுநொடியே
என் மடிதனில் சரணடைந்தாள்.....மீண்டும்..
மீண்டும்...மீண்டும்..!!
கடலலை காற்றுடன்
கைகோர்த்திருக்கையில் சந்தித்தேன்..
அந்த அதிர்ஷ்ட தேவதையை..
எண்ண வலைகளை
தன்னைச்சுற்றி பின்னலானாள்...
தூரமாகிப்போன வானம்..
நிமிர்ந்துப் பார்ப்பதில்லை யாதலால்..
விளிம்பைத் தொடும்முன்
விலாசமிழந்துவிடும் சிறகுகள்...
வளர வளர வெட்டப்படும்
உள்மன ஆசைகளும்கூட...
கனநேரம் விடுதலை
கனமான மனதோடு அவள்
கரைசேரும் கவலைகள்....
நிகழ்காலம் தொலைகையில்
எதிர்கால தேடல்கள் கேலிப்பொருள்
அவள் அகராதியில்..
விரக்தியோடு வருபவரும்..
விதியை நிந்தித்து வருபவரும்
வரிசைக்கிரமப்படி
இவள்பின்னேதான்..
அறிந்தவள் அவள் மட்டுமே...
இல்லையேல் பறந்துபோய்விடும்
அதிர்ஷ்ட தேவதை பட்டம்..
என் கரம்சேர்ந்த அழகுதேவதை..
உண்மையில் அதிர்ஷ்ட தேவதை..
முடிவெடுத்தேன்..முற்றுப்புள்ளி
வைத்தேன்..
நிர்ணயித்த விலை
உனக்கானதல்ல...
உன்னை முடமாக்கி
நிர்மூலமாகி போனவனுக்கான
நிவாரணம்..
விரிய விரும்பிய
சிறகுகளை வாஞ்சையாய் தடவினேன்....
வழக்கமாய் ஒலித்த
வரிகளை மறக்கச் செய்தேன்...
வாசங்களாய் பதியவைத்தேன்..
வாசகங்களை பிரதிபலித்தேன்..
கால மாற்றங்களில்
மாற்றங்கள் காலத்தோடு..
களங்கள் விரிய விரிய
சரியென சொன்னது
மனம்!..
அவளை விடுவிக்க நினைத்தேன்!!..
அழைத்துச் சென்றேன்..
அங்கே பார்..
நீல வானம் எத்தனை நீளம்..
இயற்கையாவும் உனக்கே சொந்தம்..
உன் சொந்தமெல்லாம் இயற்கையொன்றே..
உன்னைச்சுற்றி கம்பிகளில்லை..
உன் சிறகுகள் கத்தரிக்கப்படவில்லை...
உன் இமைகளுக்கிடையில்
விருப்பமானதை படமெடு..
பிரசவம் முடித்தையில்
முடியாதுபோனதே..மறந்திடு..
பரவசமாய் பறந்திடு...
உயரே போ.. உயர..உயரே.. போ...
கரங்களிலிருந்து விடுவிடுத்தேன்..
மறுநொடியே
என் மடிதனில் சரணடைந்தாள்.....மீண்டும்..
மீண்டும்...மீண்டும்..!!