PDA

View Full Version : பெற்ற தாய்.



Mano.G.
26-02-2007, 05:02 AM
பெற்றெடுத்தவளின் காலடியே சொர்க்கம்.
--------------------------------------------------------------------------------
அம்மா,
அப்பா செலவு செய்ய
நீ வரவு வைக்க
வந்தேனே இவ்வுலகுக்கு
நான் வந்ததை பெருமையாக
உனக்கு கிடைத்த பாக்கியமாக
எண்ணி என்னை பாராட்டி சீராட்டி
செல்லமாய் வளர்த்தாயே.
ஈ கடிக்காமல் எறும்பு கடிக்காமல்
பாதுகாத்து வளர்த்த உன்னை
எப்படி மறப்பேன்
உனது வயது முதிர்ந்த காலத்தில்
எனது பிள்ளையாய்
உன்னை பாதுகாப்பதும்
உன் தேவைகளை பூர்த்தி செய்வதுமே
என் கடமை

என்னை இவ்வுலகுக்கு
கொண்டுவந்த உன் காலடியிலே
என் சொர்க்கம்

மனோ.ஜி

இளசு
27-02-2007, 08:42 PM
அன்னையை
எப்படியும் வாழ்த்தலாம்
எவ்வளவும் வாழ்த்தலாம்
எப்பொழுதும் வாழ்த்தலாம்..

பாராட்டுகள் மனோஜி..

அறிஞர்
27-02-2007, 08:52 PM
அன்னைக்கு நிகர் யாருண்டு இந்த உலகில்....

அவருடைய தேவைகளை பூர்த்தி செய்வதே...
தமயனுக்கு பணி....

poo
28-02-2007, 08:28 AM
நம் குழந்தைப்பருவத்தில் அன்னைமடி சொர்க்கம்..
அவர்கள் குழந்தையாகையில் அவரது காலடி சொர்க்கம்..

இதை தண்டனையாய் நினைப்பவர் பெருகிவிட்டமையால், தண்டனை அளிப்போமென சட்டம்போட அவசியமாகிவிட்டது அரசுக்கு... என்ன கொடுமை இது!!

- சாட்டையடி கவிதைக்கு சொந்தக்கார அண்ணன் மனோஜி.. இதுவும் ஒரு விளாசல்தான்.. விளங்காத பிள்ளைகளுக்கு!!