Mano.G.
26-02-2007, 05:02 AM
பெற்றெடுத்தவளின் காலடியே சொர்க்கம்.
--------------------------------------------------------------------------------
அம்மா,
அப்பா செலவு செய்ய
நீ வரவு வைக்க
வந்தேனே இவ்வுலகுக்கு
நான் வந்ததை பெருமையாக
உனக்கு கிடைத்த பாக்கியமாக
எண்ணி என்னை பாராட்டி சீராட்டி
செல்லமாய் வளர்த்தாயே.
ஈ கடிக்காமல் எறும்பு கடிக்காமல்
பாதுகாத்து வளர்த்த உன்னை
எப்படி மறப்பேன்
உனது வயது முதிர்ந்த காலத்தில்
எனது பிள்ளையாய்
உன்னை பாதுகாப்பதும்
உன் தேவைகளை பூர்த்தி செய்வதுமே
என் கடமை
என்னை இவ்வுலகுக்கு
கொண்டுவந்த உன் காலடியிலே
என் சொர்க்கம்
மனோ.ஜி
--------------------------------------------------------------------------------
அம்மா,
அப்பா செலவு செய்ய
நீ வரவு வைக்க
வந்தேனே இவ்வுலகுக்கு
நான் வந்ததை பெருமையாக
உனக்கு கிடைத்த பாக்கியமாக
எண்ணி என்னை பாராட்டி சீராட்டி
செல்லமாய் வளர்த்தாயே.
ஈ கடிக்காமல் எறும்பு கடிக்காமல்
பாதுகாத்து வளர்த்த உன்னை
எப்படி மறப்பேன்
உனது வயது முதிர்ந்த காலத்தில்
எனது பிள்ளையாய்
உன்னை பாதுகாப்பதும்
உன் தேவைகளை பூர்த்தி செய்வதுமே
என் கடமை
என்னை இவ்வுலகுக்கு
கொண்டுவந்த உன் காலடியிலே
என் சொர்க்கம்
மனோ.ஜி