PDA

View Full Version : 5ம் பகுதி கள்ளியிலும் பால்



gragavan
24-02-2007, 05:11 PM
"ஹலோ தேன் தூங்கீட்டியா?"

"ஹே சந்தீ....இல்லடீ. அதுக்குள்ளயா? புத்தக வெளியீடு இருக்குல்ல. அதுக்குத்தான் மகளத் தூங்க வெச்சுட்டு நானும் அவரும் வேலை பாக்குறோம்."

"மகளத் தூங்க வெச்சுட்டு...நீயும் அவரும் வேல பாக்குறீங்களா! பெரிய ஆளுதான் நீ. கேட்டா புத்தக வெளியீடுன்னு சொல்வ." (குறும்புடன் சொன்னாள் சந்தியா)

(பொய்க் கோபத்துடன்) "நீ அடி வாங்கப் போற. ஒன்ன மாதிரியா நான்? அஞ்சுமாடி மகன், புதுமுக நடிகன், ஹாஸ்பிடல் ஓனர், இண்டஸ்டிரியலிஸ்ட்.....அத்தோட புதுப்புது பசங்க. வெளுத்து வாங்குற. எனக்கிருக்கிறது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு." (பொய்யாக அலுத்துக் கொண்டாள்)

"ஏய்! சினிமாக் கவிஞர்னு நிரூபிக்கிற பாரு. வரிசையா அடுக்குறா. ஒங்க சினிமாவுல இல்லாததா. அந்தப் புதுமுக நடிகர் திரிந்தும் திரியாமலும் ஜெய்தீப். நீ கூட இண்ட்ரோ குடுத்தியே. நியாபகம் இருக்கா? அவன பைக்ஸ் அண்டு பேரல்ஸ்ல பாத்தேன். சரி. ஏற்கனவே சாப்ட பிரியாணிதானன்னு கிட்டப் போய்ப் பேசலாம்னு பாத்தேன். ஆனா அவன் அதே படத்துல நடிச்ச இன்னொரு ஹீரோ பின்னாடி ஓடுறான். என்னத்தச் சொல்றது! மொதவாட்டி அவனோட ஜி.ஆர்.டி கிராண்டு போறப்பவே எனக்கு ஒரு டவுட்தான். ம்ம்ம்...இப்பிடி இருக்கு சினிமா. இதுல நீ என்னயச் சொல்ல வந்துட்டியா? வரவர ஆம்பிளைங்களே சரியில்லை. சரி. சரி. நான் சொல்ல வந்ததையே விட்டுட்டு வேறெதையோ பேசிக்கிட்டிருக்கேன். ரொம்ப முக்கியமான விஷயம். சரவணன் மெயில் அனுப்பீருக்கான். இந்தியாவுக்கு வர்ரானாம்." (கொஞ்சம் இறுகியது சந்தியாவின் குரல்)

(திடீர்க் குரலில்) "யாரு? சரவணனா? ஏண்டி...புருஷன் வர்ரான்னு சந்தோஷமாச் சொல்லாம இப்பிடிச் சோகமாச் சொல்றியே! இது ஒனக்கே நல்லாயிருக்கா?"

"ஏய்! என்ன ஒளர்ர? சரவணன் எப்படி எனக்குப் புருஷனானான்? விட்டா எனக்குத் தாலியே கட்டி அவனோட நெதர்லாண்டுக்கு அனுப்பீருவ போல?" (சுருக்கென்று கேட்டாள் சந்தியா. சரவணன் அவளது கணவன் என்பதை அவளால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.)

"நானா ஒளர்ரேன்? ஒன்னோட மகனுக்கு அவந்தான் அப்பான்னா....அவனுக்கு நீ யாரு? ஒனக்கு அவன் யாரு? அதச் சொல்லும்மா."

"சரி. இந்த கே.பாலச்சந்தர் மாதிரி கேக்குறத நீ கொஞ்சம் நிறுத்து. ஊருக்கெல்லாம் artifical inseminationன்னு சொல்லீருக்கேன். ஒன்னோட டமாரத்த இந்த விஷயத்துல அடிச்சிறாத." (கொஞ்சம் அமைதியாகக் கெஞ்சும் குரலில் சொன்னாள்.)

(தேன்மொழியும் அமைதியானாள்.) "சீச்சீ. அப்படிச் செய்வேனாடி? ஏதோ கிண்டலுக்குச் சொன்னா...சீரியஸ் ஆயிட்டியே. ம்ம்ம்...அந்தக் கொழந்தைக்கு அவந்தான் அப்பான்னு யார் கிட்டயும்......ஏன்? சரவணன் கிட்டயும் சொல்ல மாட்டேன். சரியா?"

"ஏ தேன்! ஒன்னய எனக்குத் தெரியாதா? திடீர்னு அப்படிச் சொல்லீட்டேன். சரி. நம்ம கதைக்கு வருவோம். சரவணன் சென்னைக்கு வர்ரானேடி. என்ன பண்றது? பாக்குறதா வேண்டாமா? சுந்தர அவன் கண்ணுல காட்டாம எப்படி இருக்குறது? வீட்டுக்கெல்லாம் வருவானேடி!"

"சென்னைக்கு வந்தான்னா...போய்ப் பாரு. வழக்கம் போல ...அதது..இததுன்னு...பிரியாணி போடுங்க. ஆனா வீட்டுக்கெல்லாம் அவன் வருவானே. சுந்தரப் பாத்துட்டான்னா? கண்டிப்பா யாருன்னு கேப்பான். அவனுக்குச் சொல்லாம இருக்க முடியாது. அதே நேரத்துல நீ artificial insemination செஞ்சிருக்குறன்னு நெனைக்கிற அப்பாம்மாவுக்கு அது சரவணனுக்கேத் தெரியாதுங்குறதுங்குறது அதிர்ச்சியாக்கூட இருக்கலாம். நம்ம காலேஜ்ல சேந்ததுல இருந்து ஒங்க வீட்டுக்கு வர்ரவனாச்சே அவன். பேசாம சுந்தர் விஷயத்தை அவனுக்குச் சொல்லீட்டா? அவன் இதக் கூடப் புரிஞ்சிக்க மாட்டானா?"

(சந்தியாவுக்கு அதில்தான் தயக்கம்) "அவன் கிட்டச் சொல்றதா? அவனும் சுதந்திரப் பறவை. அவனுடைய சுதந்திரத்துல எதுவும் குறுக்க வர்ரத ஏத்துக்க அவனால முடியாது. என் மேல அவனுக்குப் பாசமெல்லாம் உண்டு. நல்ல நண்பனா எனக்கு நெறைய செஞ்சிருக்கான். என்ன இருந்தாலும் அவந்தான நம்பர் 1. அதுக்கப்புறந்தான அவன்களும் இவன்களும். இன்னைக்கும் எந்த அழகான பொண்ணுன்னாலும்......நான் இருந்தா அவங்களைக் கண்டுக்கவே மாட்டான். ஆனா....அந்த உரிமை நட்பைத் தாண்டிப் போகலையேடி. அவன எனக்கும் ரொம்பப் பிடிக்கும். மறுக்கலை. அதுனாலதான் எனக்குக் கொழந்தை வேணும்னு ஆச வந்ததும் அவனோட கொழந்தையைச் சுமந்தேன். அதுவும் போன வாட்டி அவன் இந்தியா வந்திருந்தப்போ நான் protection பயன்படுத்துறேன்னு பொய் சொல்லி. ஆனா அத வெளியில சொல்ல முடியுமா? அதுக்குத்தான் artificial inseminationன்னு சொன்னேன்."

"ஏய்...கொஞ்சம் நிறுத்து. எனக்கு இப்பத்தான் இரு டவுட். இத்தன நாள் இது எனக்குத் தோணவேயில்லை. protection நீ பயன்படுத்துறேன்னு சொன்னியே. அப்போ அவன் condom போட்டுக்க மாட்டானா? இது ரிஸ்க்காத் தெரியலையா ஒனக்கு?"

(பெருமூச்சு விட்டாள் சந்தியா) "ம்ம்ம்....அவன் எவ கூடப் போனாலும் condom இல்லாமப் போகவே மாட்டான். ஆனா என் கிட்ட மட்டும் இல்லை. நாங்க பழகத் தொடங்குனப்போ இருந்தே அப்படித்தான். அதே மாதிரி.....I ensure everybody uses condom but not him. ஆனாலும் இப்ப பெண்களுக்கு மட்டுமான கருத்தடைச் சாதனங்கள் எக்கச்சக்கமா இருக்கேடி. அதுனால எங்களுக்குக் குழந்தை இல்லாமப் பாத்துக்கிட்டோம். ஆனா உடலுறவுன்னு வர்ரப்போ...அது அப்படித்தான்." ( சந்தியா சொன்னதைக் கேட்ட தேன் பேச்சில்லாமல் இருந்தாள்)

"என்னடி அமைதியாயிட்ட? நாங்க நண்பர்களா? காதலர்களா? கணவன் மனைவியான்னு யோசிக்கிறையா? ரொம்ப யோசிக்காத. ஏன்னா...எங்களுக்கே தெரியாது. திரும்பவும் சொல்றேன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். அவன் நெதர்லாந்து போனது கூட எனக்குப் பிடிக்கலை. அவனப் போகாதேன்னு சொல்லீருந்தா அவனுக்கும் அது பிடிச்சிருந்திருக்காது. அவனைப் பிரிய விரும்பாம அவன் இங்கயே இருந்தான்ன விரும்புனதும் உண்டு. ஆனா அதுக்காக என்னோட காதனாவோ கணவனாவோ என்னை அவன் dominate பண்ண விட முடியுமா? அவன் மேல இருக்குற உரிமை என்னை அவன் அடிமைப் படுத்தக் கூடாது. I miss him. But he cant mentally dominate me. I hate him because I am posessive. But I cant let him be my husband to loose even my surname."

(தேன்மொழிக்குச் சிரிப்பு வந்தது.) "நல்லா ஒளர்ர நீ. எனக்கென்னவோ நீ அவனக் காதலிக்கிறன்னுதான் நெனைக்கிறேன். ஒருவேளை அவன் தாலியோடயோ மோதிரத்தோடயோ வந்து கல்யாணம் செஞ்சுக்கோன்னு கேட்டா ஒத்துக்கிருவன்னுதான் நெனைக்கிறேன்."

(சந்தியாவிற்குக் கோவம் வந்தது.) "ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! காதலா? எனக்கா? I am not so weak. ஒங்கிட்ட பேசுனா கொஞ்சம் நிம்மதியா இருக்குமேன்னு கூப்டா...இப்பிடிக் கொழப்புறயேடி. சரி. வேறெதாவது பேசலாம். என்னவோ புத்தக வெளியீட்டு விழான்னு சொன்னியே...அதப் பத்திச் சொல்லு."

(சிரித்து விட்டாள் தேன்.) "ஹாஹாஹா..நல்லா பேச்ச மாத்துற நீ. சரி. அப்படியே செய்வோம். ஏற்கனவே புதுப் புத்தகத்தைப் பத்திச் சொல்லீருக்கேன். ஒனக்கு அதுவா நெனைவுல இருக்கும்! கள்ளியிலும் பால்னு கவிதைத் தொகுப்புக்குப் பேரு. நீதான் இதுக்கு inspiration. ஒன்னய வெச்சுத்தான் இத்தன கவிதை எழுதீருக்கேன். இதுவரைக்கும் படிச்சவங்களும் நல்லாயிருக்குன்னு சொல்லீருக்காங்க. டைரக்டர் சேரன் கூட அதுல ரெண்டு கவிதைய அவரோட அடுத்த படத்துக்குன்னு சொல்லி வெச்சிருக்காரு. இன்னும் ரெண்டு வாரந்தான் இருக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு. ஒன்னையும் கூப்பிடுறேன். நீயும் வரனும்."

"என்னது? என்னைய வெச்சு..ஒரு கவிதைத் தொகுப்பே போட்டுட்டியா? நீ ஏதோ வெளையாட்டுக்குச் சொல்றன்னு நெனச்சேன். எங்கிட்ட என்னடி நல்ல விஷயம் இருக்குன்னு கவிதையெல்லாம் எழுதீருக்க?" (தன்னை வைத்துக் கவிதை எழுதியிருப்பது சந்தியாவின் ஆர்வத்தைக் கிளறி விட்டது."

"உன் கிட்ட இருக்குறது அடுத்தவங்களுக்கு நல்லதோ இல்லையோ..ஒனக்கு நல்லதுங்குறதுதாண்டி கவிதைத் தொகுப்போட கரு. இரு ஒரு கவிதை சொல்றேன் கேளு.

கள்ளிப்பால்
கள்ளிக்கு நஞ்சோ?
கிள்ளிப் பார்க்கும்
மனிதனுக்கே நஞ்சு
உதவாது என்றால்
எதையும் தீதென்பான்
கைக்குத் தோதாதானால்
அதையும் சாதென்பான்...."

"நிறுத்துடி (சொல்லிக் கொண்டிருந்த கவிதையை நிறுத்தச் சொன்னாள் சந்தியா)...எனக்கு ஒன்னும் புரியல. ஏதோ தமிழ் வாத்தியார் செய்யுள் நடத்துற மாதிரி இருக்கு. ஆள விடும்மா. இதுக்கு என்னதான் பொருள்?"

(டெலிபோனில் தேனின் புன்னகை சந்தியாவைச் சேரவில்லை.) "அதாவது கள்ளிக்குள்ள இருக்குற கள்ளிப்பால் நஞ்சுன்னா...அது ஏன் கள்ளியைக் கொல்லலை? அதக் கீறிப் பாக்குறவனுக்குத்தான நஞ்சாகுது. அப்ப கள்ளிகிட்ட தப்பா? கீறுனவன் கிட்ட தப்பா? இதுதாண்டி நான் கேக்குறது. புரிஞ்சதா?"

(உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை சந்தியாவிற்கு) "புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. என்னைய ஆள விடும்மா. சரி. ரொம்ப நேரமாச்சு. நீ போய் வேலையப் பாரு. நாளைக்குப் பேசுறேன்."

இருவரும் பேச்சை முடித்துக் கொண்டனர். சுந்தர் விஷயத்தைச் சரவணனிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்றே யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சந்தியா. கனவில் சரவணனோடு......சரி. சரி. புரியுது. இங்க நிறுத்திக்கிறேன்.

தொடரும்....

மனோஜ்
25-02-2007, 01:31 PM
கள்ளிப்பால்
கள்ளிக்கு நஞ்சோ?
கிள்ளிப் பார்க்கும்
மனிதனுக்கே நஞ்சு
உதவாது என்றால்
எதையும் தீதென்பான்
கைக்குத் தோதாதானால்
அதையும் சாதென்பான்...."
புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு
கதை மெதுவா நகருது தொடருங்கள்

pradeepkt
26-02-2007, 05:49 AM
எனக்குக் கவிதையின் அர்த்தம் புரியுது. கதைதான் எங்க போகுதுன்னு தெரிய மாட்டேங்குது.

சாதென்பான் அப்படின்னா என்னங்க அர்த்தம்?

gragavan
26-02-2007, 08:19 AM
எனக்குக் கவிதையின் அர்த்தம் புரியுது. கதைதான் எங்க போகுதுன்னு தெரிய மாட்டேங்குது.

சாதென்பான் அப்படின்னா என்னங்க அர்த்தம்?
சூதென்பான் அப்படீன்னா என்ன பொருள்? அதுக்குத் தெரிஞ்சதுன்னா சாதென்பானுக்கும் தெரியனுமே.

pradeepkt
26-02-2007, 02:00 PM
சாது என்பது பொருட்பெயரா என்ன?
அதுலயும் ஒரு அஃறிணையைக் குறித்த மாதிரி இருந்ததேன்னு யோசிச்சேன்.