அமரன்
20-02-2007, 03:15 PM
நற்பண்புக்கதைகள் (கதை-1) (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=175870#post175870)
கடவுள் எனும் மந்திரசொல்லால் அழைக்கப்படுபவர்கள் தம்மை நினைந்துருகி வழிபடும் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவும் குணமுள்ளவர்கள். பழைய காலபடைப்புக்களில் அவை வரங்கள் எனப்படுகின்றன. அதுமாதிரியான ஒரு பழைய ஆனால் இக்காலத்துக்கும் பொருந்தும் கதை இது. ஒருபக்கதனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த இறைவன் அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவன் அழிந்து விடுவான் என்ற ஒரு சக்தியைக் கொடுத்தான். சக்திபெற்ற பக்தன் அச்சக்தியை பரீட்சிப்பதுக்காக இறைவன் தலையிலேயே கைவைக்க முனைந்து இறைவனின் தந்திரத்தால் தானே அழிந்தான். இறைவன் அவன் குணம் அறிந்து சக்தி கொடுக்காததால் வந்த வினை இது. அது பொல வெடிமருந்தைக் கண்டு பிடித்த நோர்வே நாட்டு நோபல் என்பவர் தன் கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுவதைக்கண்டு தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை சமாதானத்துக்கு பாடுபடுவோருக்கு வழங்கும்படி கூறினார். அது போல ஆக்கத்துக்குப் பயன்படும் என்று கருதிய அணு சக்தி அழிவுக்குப் பயன்படுகின்றது. அதை தடுக்க ஒப்பந்தம் ஒப்பந்தமாகப் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதெல்லாம் எதனால். யாருக்கு என்ன குணமறிந்து செயல்படாததாலா அல்லது குணம் மாறும் மனித உருவக் குரங்கினத்தாலா?
கடவுள் எனும் மந்திரசொல்லால் அழைக்கப்படுபவர்கள் தம்மை நினைந்துருகி வழிபடும் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவும் குணமுள்ளவர்கள். பழைய காலபடைப்புக்களில் அவை வரங்கள் எனப்படுகின்றன. அதுமாதிரியான ஒரு பழைய ஆனால் இக்காலத்துக்கும் பொருந்தும் கதை இது. ஒருபக்கதனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த இறைவன் அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவன் அழிந்து விடுவான் என்ற ஒரு சக்தியைக் கொடுத்தான். சக்திபெற்ற பக்தன் அச்சக்தியை பரீட்சிப்பதுக்காக இறைவன் தலையிலேயே கைவைக்க முனைந்து இறைவனின் தந்திரத்தால் தானே அழிந்தான். இறைவன் அவன் குணம் அறிந்து சக்தி கொடுக்காததால் வந்த வினை இது. அது பொல வெடிமருந்தைக் கண்டு பிடித்த நோர்வே நாட்டு நோபல் என்பவர் தன் கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுவதைக்கண்டு தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை சமாதானத்துக்கு பாடுபடுவோருக்கு வழங்கும்படி கூறினார். அது போல ஆக்கத்துக்குப் பயன்படும் என்று கருதிய அணு சக்தி அழிவுக்குப் பயன்படுகின்றது. அதை தடுக்க ஒப்பந்தம் ஒப்பந்தமாகப் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதெல்லாம் எதனால். யாருக்கு என்ன குணமறிந்து செயல்படாததாலா அல்லது குணம் மாறும் மனித உருவக் குரங்கினத்தாலா?