ஷீ-நிசி
15-02-2007, 04:47 PM
நிலவே,
அவளின் அழகினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
என்னிடம் கறை உள்ளதே!
மலரே!
அவளின் வாசத்தினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
நான் மாலையில் வாடிடுவேனே!
தென்றலே,
அவளின் வருகையை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
நீ சொல்லும் நேரத்திற்கு
நான் வருவதில்லையே!
தொலைபேசியே!
அவளின் சிரிப்பினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
என் சினுங்கலை பிடிக்காதவர்களும்
இருக்கிறார்களே!
தேனே!
அவளின் இதழ் சுவையினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
அளவுக்கு மிஞ்சினால் நான்
திகட்டிடுவேனே!
வளைந்துபோகும் பாதையே!
அவளின் வளைவுகளை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
எங்கள் வளைவுகளில் தவறியவர்கள்
காயமடைகிறார்களே!
குயிலே!
அவளின் குரல் இனிமையை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
அவள் வீட்டு தோட்டத்திற்கு
நான் தினமும் செல்கிறேனே
எதற்காக?!
அன்னமே!
அவளின் நடை அழகினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்!
ஹைஹீல்ஸ் அணிந்து நடந்தால்
நான் தோற்றுவிடுவேனே!
யாருடன்தான் அவளை ஒப்பிடுவேன்?
எல்லா
இயற்கையும், செயற்கையும்
என் காதருகில் வந்து
மெல்லமாய் கூறின!!
எதற்கும் வின்னுலகம்
சென்று தேவதையையும்
கேட்டுவிடு!
மேலே சென்றேன்!
சுற்றிலும் கூட்டம்
தேவதைகளின்
தலைவியைச் சுற்றி
தேவதைகளின் தலைகள்!
மெல்ல விளக்கினேன்!
ஒவ்வொரு தலையையும்!
கறுப்பு நிறத்தில்,
விழுந்துக்கொண்டிருந்தது
அருவியொன்று;
தலைவியின் கூந்தல்...
வலிந்து விழுந்த கூந்தலில்
விழுந்து சிக்கியது என் மனமது.
தேவதையே என்றேன்.
'களுக்'கென்று ஒரு சிரிப்பு சத்தம்....
என்ன வேண்டும்?
திரும்பாமலே கேட்டது தேவதை!
தேவதையே!
அவளின்... இல்லை, இல்லை
அவளையே உன்னுடன்
ஒப்பிடவா?
மின்னலாய் வந்தது கேள்வி!
என்னை விடவா அழகு?!
வினாடியில் திரும்பி நின்றது
தேவதையின் உருவம்!
வியப்பில் மேலே சென்றது
என் விழியின் புருவம்..
தேவதையாய்
நின்று கொண்டிருந்தது!
என் அவள் என்னவள்!
அவளின் அழகினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
என்னிடம் கறை உள்ளதே!
மலரே!
அவளின் வாசத்தினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
நான் மாலையில் வாடிடுவேனே!
தென்றலே,
அவளின் வருகையை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
நீ சொல்லும் நேரத்திற்கு
நான் வருவதில்லையே!
தொலைபேசியே!
அவளின் சிரிப்பினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
என் சினுங்கலை பிடிக்காதவர்களும்
இருக்கிறார்களே!
தேனே!
அவளின் இதழ் சுவையினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
அளவுக்கு மிஞ்சினால் நான்
திகட்டிடுவேனே!
வளைந்துபோகும் பாதையே!
அவளின் வளைவுகளை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
எங்கள் வளைவுகளில் தவறியவர்கள்
காயமடைகிறார்களே!
குயிலே!
அவளின் குரல் இனிமையை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்,
அவள் வீட்டு தோட்டத்திற்கு
நான் தினமும் செல்கிறேனே
எதற்காக?!
அன்னமே!
அவளின் நடை அழகினை
உன்னுடன் ஒப்பிடவா?!
வேண்டாம்!
ஹைஹீல்ஸ் அணிந்து நடந்தால்
நான் தோற்றுவிடுவேனே!
யாருடன்தான் அவளை ஒப்பிடுவேன்?
எல்லா
இயற்கையும், செயற்கையும்
என் காதருகில் வந்து
மெல்லமாய் கூறின!!
எதற்கும் வின்னுலகம்
சென்று தேவதையையும்
கேட்டுவிடு!
மேலே சென்றேன்!
சுற்றிலும் கூட்டம்
தேவதைகளின்
தலைவியைச் சுற்றி
தேவதைகளின் தலைகள்!
மெல்ல விளக்கினேன்!
ஒவ்வொரு தலையையும்!
கறுப்பு நிறத்தில்,
விழுந்துக்கொண்டிருந்தது
அருவியொன்று;
தலைவியின் கூந்தல்...
வலிந்து விழுந்த கூந்தலில்
விழுந்து சிக்கியது என் மனமது.
தேவதையே என்றேன்.
'களுக்'கென்று ஒரு சிரிப்பு சத்தம்....
என்ன வேண்டும்?
திரும்பாமலே கேட்டது தேவதை!
தேவதையே!
அவளின்... இல்லை, இல்லை
அவளையே உன்னுடன்
ஒப்பிடவா?
மின்னலாய் வந்தது கேள்வி!
என்னை விடவா அழகு?!
வினாடியில் திரும்பி நின்றது
தேவதையின் உருவம்!
வியப்பில் மேலே சென்றது
என் விழியின் புருவம்..
தேவதையாய்
நின்று கொண்டிருந்தது!
என் அவள் என்னவள்!