v.pitchumani
10-02-2007, 09:44 PM
சிதம்பரம் கண்டுபிடித்த பெரிய வரிப்பூதம் சேவை வரியாகும். அரசு நிர்ணயித்த ரூ.36500 கோடி இலக்கை தாண்டி அதிகமாக ரூ 5600 கோடி வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் சேவை வரி வசூலிப்பதன் மூலம் ரூ.40000 கோடி கிடைக்கும். இந்திய மொத்த வரிவருவாயில், சேவை வரியின் பங்கு 54 விழுக்காடாக உள்ளது. இன்னும் பல துறைகளை சேவை வரியின் பிடியில் சிதம்பரம் கொண்டு வர உத்தேசித்துள்ளார். 12% சேவை வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இது ரொம்ப அதிகமானது. சேவை வரியின் சுமை மத்தியதர மக்களின் தலையில் தான் இறங்கிறது என சிதம்பரத்துக்கு தெரியும். யார் எப்படி போனால் என்ன, என் கணக்கில் பணம் சரியாக இருக்க வேண்டும் என சிதம்பரம் நினைக்க கூடியவர்.
அதெல்லாம் சரி, தொலைபேசி துறையின் சேவை திருப்திகரமாக இல்லை,ஆனால் அரசு, தொலைபேசி சந்தாதாரர்கள் மீது சேவை வரி விதிக்கிறது. இது அரசாங்கத்துக்கே நியாமாக தெரிகிறதா?
-வே.பிச்சுமணி
அதெல்லாம் சரி, தொலைபேசி துறையின் சேவை திருப்திகரமாக இல்லை,ஆனால் அரசு, தொலைபேசி சந்தாதாரர்கள் மீது சேவை வரி விதிக்கிறது. இது அரசாங்கத்துக்கே நியாமாக தெரிகிறதா?
-வே.பிச்சுமணி