அறிஞர்
10-02-2007, 04:54 AM
தொலைந்து விட்ட இன்பங்கள்...
நான் வெகு நாட்களாக "அக்கரைக்கு இக்கரை பச்சை.." என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். குறிப்பாக இந்தியாவில், அமெரிக்காவில் சிறு வயது குழந்தைகளின் பொழுது போக்கை வேறுபடுத்தி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு அமையவில்லை.
இங்கு அது போன்ற பதிவே.. இப்பொழுது வேறு வடிவத்தில்...
----------------
தினமும் 4 வயது பையனை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இக்கால குழந்தைகளா... வில்லங்கமா கேள்வி கேட்பாங்க.. (நம்ம அனிரூத்தும் (செல்வனின் பையன்) இதில் அடக்கம்). அவனோடு உரையாடுவதில் சிந்திக்க வைத்த சில சம்பவங்களை.. இங்கு தருகிறேன்.
சென்ற வாரத்தில்..
பையன் "அப்பா, போன வாரம் பெரியப்பாவுக்கு வீடு வாங்க போனிங்களே என்னாச்சு.... பார்த்து முடிச்சிட்டிங்களா"
நான் "இல்லைப்பா, எங்களுக்கு பிடித்த மாதிரி எந்த வீடும் அமையலை... அடுத்த வாரத்தில் பார்க்கனும்".
"அப்பா! நீங்கள் நெட்டுல வீடு தேடிட்டு, நல்ல வீடா செலக்ட் பண்ணிட்டு போங்க.. என்ன சரியா..".
"சரிப்பா..."
"அப்பா, நமக்கு வீடு வாங்கும் போது 5 பெட் ரூம், 3 பாத் ரூம், பெரிய ஹால், கிச்சன், விளையாட இடம் எல்லாம் பார்த்து வாங்கனும் சரியா....."
"சரிடா.... எதுக்கு அவ்வளவு பெரிய வீடு"
"எனக்கு தனி ரூம், தம்பிக்கு ஒரு ரூம், அப்பா, அம்மாவுக்கு ஒரு ரூம், ஊர்ல இருந்து தாத்தா, பாட்டி வரும்போது அவுங்க தங்க ஒரு ரூம், விளையாட ஒரு ரூம்...."
"சரிடா செல்லம்"
"அப்பா, எனக்கு ஒரு டவுட்"
"என்னப்பா"
"வீடு வாங்கிட்டு.. எப்படி தூக்கிட்டு வருவீங்க.... ரொம்ப பெரிசால்ல இருக்கும்"
"என்னடா சொல்ற... எங்க வாங்கி எங்க தூக்கிட்டு வரது..."
"கடையில் வாங்கி தானே தூக்கிட்டு வருவீங்க"
ஆஹா வில்லங்கம் ஆரம்பிக்குதுன்னு.. நினைச்சேன்...... என் சிறு வயது பருவங்களை.....
என் அம்மா "டேய் என்னடா.. வீதியில வேடிக்கை பார்க்கிற"
நான் "இல்லைம்மா! பக்கத்துல்ல இருக்க இடத்தை யாரோ பார்க்க வராங்க..."
அம்மா.."ஓ... அதுவா.. வீடு கட்ட போறாங்களாம்...."..
நான் "அப்படியா..."
சிறிது நாளில் பூஜை போடுவார்கள்... பிறகு அஸ்திபாரம் போட... குழி வெட்டுவார்கள்... நன்றாக, ஆழமாக குழி வெட்டுவார்கள்.... வெட்டும்போது சில இடங்களில் தண்ணீர் வரும், மண்புழுக்கள், பூச்சிக்கள் பலியாகும்.... இன்னும் எத்தனை...
அஸ்திபார குழி வெட்டியவுடன்... வீதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஒளிஞ்சு-பிடிச்சு விளையாட... நல்ல இடம் அதுதான்....
பிறகு மணல், செங்கல் வந்து இறங்கும்..... மணல் குவித்து கோவில் கட்டி... விளையாட்டு..... அதை அடுத்தவன் இடிக்க.. சண்டை. பிறகு மணலில் குழி தோண்டி.. உள்ளே முள்ளு போட்டு.. மேலே பேப்பரால் மூடி... சண்டை போட்டவனை நடக்க வைத்து பழிக்கு பழி வாங்குதல்....
குழி தோண்டி முழங்கால் வரை, தொடை வரை மண் குவித்து மெதுவா, மெதுவா ஆட்டி.. ஆட்டி காலை எடுப்பது.....
பிறகு மணலுக்கு சொந்தக்காரர் வந்து திட்டுவார்... அவரை வில்லனாக பார்க்கும் பருவம்....
பிறகு வீடு அஸ்திபாரம் போட்டு.. தண்ணீர் ஊத்தி.... இரும்பு கம்பி கட்டி... போட்டு... சிறிது சிறிதாக கட்டிடம் வளரும்... தவறாமல் தண்ணீர் ஊற்றும் வேலை... வேலைக்கு வரும் கொத்தனார், சித்தாள்கள் என எத்தனை பேர்......
மேலே ரூப் போடும்போது.... ஒரே நாளில் போடனும்.. அதிகாலை முதல் மாலை வரை விடாமல் வேலை நடக்கும்... வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பு சாப்பாடு...
பிறகு... மரவேலை செய்ய.... தச்சர் வருவார்.. அளப்பார்.... அவருக்கும் கொத்தனாருக்கும் வாக்குவாதம் வரும்..... பிறகு வெள்ளையடித்தல்...
கிரஹபிரவேசம்... உழைத்தவர்களுக்கு மரியாதை.....
பிறகு.. கலர் கலர் பெயிண்டிங்க் வேலை...
எல்லாவற்றையும் சமாளித்து.. ஒரு மாளிகை வீதியில் உருவாகிவிடும்...
இது மாதிரி வீதியில் எத்தனை வெறுமையான நிலங்கள்.. வீடுகளா மாறியிருக்கு...
இப்படி விளையாட்டோடு விளையாட்டாக கலந்து.. ஒவ்வொரு வீடு உருவாவதை பார்த்தேன்...
ஆனால் என் பையன்......
யோசிக்கிறேன்.......
நான் வெகு நாட்களாக "அக்கரைக்கு இக்கரை பச்சை.." என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். குறிப்பாக இந்தியாவில், அமெரிக்காவில் சிறு வயது குழந்தைகளின் பொழுது போக்கை வேறுபடுத்தி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு அமையவில்லை.
இங்கு அது போன்ற பதிவே.. இப்பொழுது வேறு வடிவத்தில்...
----------------
தினமும் 4 வயது பையனை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இக்கால குழந்தைகளா... வில்லங்கமா கேள்வி கேட்பாங்க.. (நம்ம அனிரூத்தும் (செல்வனின் பையன்) இதில் அடக்கம்). அவனோடு உரையாடுவதில் சிந்திக்க வைத்த சில சம்பவங்களை.. இங்கு தருகிறேன்.
சென்ற வாரத்தில்..
பையன் "அப்பா, போன வாரம் பெரியப்பாவுக்கு வீடு வாங்க போனிங்களே என்னாச்சு.... பார்த்து முடிச்சிட்டிங்களா"
நான் "இல்லைப்பா, எங்களுக்கு பிடித்த மாதிரி எந்த வீடும் அமையலை... அடுத்த வாரத்தில் பார்க்கனும்".
"அப்பா! நீங்கள் நெட்டுல வீடு தேடிட்டு, நல்ல வீடா செலக்ட் பண்ணிட்டு போங்க.. என்ன சரியா..".
"சரிப்பா..."
"அப்பா, நமக்கு வீடு வாங்கும் போது 5 பெட் ரூம், 3 பாத் ரூம், பெரிய ஹால், கிச்சன், விளையாட இடம் எல்லாம் பார்த்து வாங்கனும் சரியா....."
"சரிடா.... எதுக்கு அவ்வளவு பெரிய வீடு"
"எனக்கு தனி ரூம், தம்பிக்கு ஒரு ரூம், அப்பா, அம்மாவுக்கு ஒரு ரூம், ஊர்ல இருந்து தாத்தா, பாட்டி வரும்போது அவுங்க தங்க ஒரு ரூம், விளையாட ஒரு ரூம்...."
"சரிடா செல்லம்"
"அப்பா, எனக்கு ஒரு டவுட்"
"என்னப்பா"
"வீடு வாங்கிட்டு.. எப்படி தூக்கிட்டு வருவீங்க.... ரொம்ப பெரிசால்ல இருக்கும்"
"என்னடா சொல்ற... எங்க வாங்கி எங்க தூக்கிட்டு வரது..."
"கடையில் வாங்கி தானே தூக்கிட்டு வருவீங்க"
ஆஹா வில்லங்கம் ஆரம்பிக்குதுன்னு.. நினைச்சேன்...... என் சிறு வயது பருவங்களை.....
என் அம்மா "டேய் என்னடா.. வீதியில வேடிக்கை பார்க்கிற"
நான் "இல்லைம்மா! பக்கத்துல்ல இருக்க இடத்தை யாரோ பார்க்க வராங்க..."
அம்மா.."ஓ... அதுவா.. வீடு கட்ட போறாங்களாம்...."..
நான் "அப்படியா..."
சிறிது நாளில் பூஜை போடுவார்கள்... பிறகு அஸ்திபாரம் போட... குழி வெட்டுவார்கள்... நன்றாக, ஆழமாக குழி வெட்டுவார்கள்.... வெட்டும்போது சில இடங்களில் தண்ணீர் வரும், மண்புழுக்கள், பூச்சிக்கள் பலியாகும்.... இன்னும் எத்தனை...
அஸ்திபார குழி வெட்டியவுடன்... வீதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஒளிஞ்சு-பிடிச்சு விளையாட... நல்ல இடம் அதுதான்....
பிறகு மணல், செங்கல் வந்து இறங்கும்..... மணல் குவித்து கோவில் கட்டி... விளையாட்டு..... அதை அடுத்தவன் இடிக்க.. சண்டை. பிறகு மணலில் குழி தோண்டி.. உள்ளே முள்ளு போட்டு.. மேலே பேப்பரால் மூடி... சண்டை போட்டவனை நடக்க வைத்து பழிக்கு பழி வாங்குதல்....
குழி தோண்டி முழங்கால் வரை, தொடை வரை மண் குவித்து மெதுவா, மெதுவா ஆட்டி.. ஆட்டி காலை எடுப்பது.....
பிறகு மணலுக்கு சொந்தக்காரர் வந்து திட்டுவார்... அவரை வில்லனாக பார்க்கும் பருவம்....
பிறகு வீடு அஸ்திபாரம் போட்டு.. தண்ணீர் ஊத்தி.... இரும்பு கம்பி கட்டி... போட்டு... சிறிது சிறிதாக கட்டிடம் வளரும்... தவறாமல் தண்ணீர் ஊற்றும் வேலை... வேலைக்கு வரும் கொத்தனார், சித்தாள்கள் என எத்தனை பேர்......
மேலே ரூப் போடும்போது.... ஒரே நாளில் போடனும்.. அதிகாலை முதல் மாலை வரை விடாமல் வேலை நடக்கும்... வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பு சாப்பாடு...
பிறகு... மரவேலை செய்ய.... தச்சர் வருவார்.. அளப்பார்.... அவருக்கும் கொத்தனாருக்கும் வாக்குவாதம் வரும்..... பிறகு வெள்ளையடித்தல்...
கிரஹபிரவேசம்... உழைத்தவர்களுக்கு மரியாதை.....
பிறகு.. கலர் கலர் பெயிண்டிங்க் வேலை...
எல்லாவற்றையும் சமாளித்து.. ஒரு மாளிகை வீதியில் உருவாகிவிடும்...
இது மாதிரி வீதியில் எத்தனை வெறுமையான நிலங்கள்.. வீடுகளா மாறியிருக்கு...
இப்படி விளையாட்டோடு விளையாட்டாக கலந்து.. ஒவ்வொரு வீடு உருவாவதை பார்த்தேன்...
ஆனால் என் பையன்......
யோசிக்கிறேன்.......