maganesh
07-02-2007, 03:25 PM
அப்பா பத்திரிக்கை படித்துக்கொண்டிருந்தார். அவரது பதினெட்டு வயது மகன் சவரம் செய்து கொண்டிருந்தான். அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணாடி விழுந்துவிடும் போல இருந்தது. அதைக் கவனித்த தந்தை கண்ணாடி விழப்பொகுது என்றார். அவரை ஒருமாதிரியாகப் பார்த்த மகன் மீண்டும் தன் வேலையில் மூழ்கினான்.
கண்ணாடி விழுந்தால் உடையும் தெரியுமில்ல--இது அப்பா
அதுதெரியாமலா காலேஜில சீட் குடுத்தாங்க--மகன்
உடைஞ்சுதுன்னா வெட்டும் தெரியுமில்ல----அப்பா
உனக்கே இவ்வளவு இருக்கும்போது எனக்கு இருக்காதா----மகன்
அப்பா ஒன்றுமே பேசாது இருந்தார். சில வினாடிகளில் கண்ணாடி விழுந்து உடைந்து விட்டது.
அப்பா மகனைப் பார்த்தார்.
என்ன பாக்குறே. விழுந்திருச்சு. உடைஞ்சிருச்சு----மகன் சொல்லி விட்டு திரும்பும்போது கண்ணாடி அவன் காலில் வெட்டிருச்சு. அப்பா சொன்னார் "இப்படியே போனின்னா இப்போ ஆஸ்பிட்டலிலே சீட் குடுப்பாங்க"
கண்ணாடி விழுந்தால் உடையும் தெரியுமில்ல--இது அப்பா
அதுதெரியாமலா காலேஜில சீட் குடுத்தாங்க--மகன்
உடைஞ்சுதுன்னா வெட்டும் தெரியுமில்ல----அப்பா
உனக்கே இவ்வளவு இருக்கும்போது எனக்கு இருக்காதா----மகன்
அப்பா ஒன்றுமே பேசாது இருந்தார். சில வினாடிகளில் கண்ணாடி விழுந்து உடைந்து விட்டது.
அப்பா மகனைப் பார்த்தார்.
என்ன பாக்குறே. விழுந்திருச்சு. உடைஞ்சிருச்சு----மகன் சொல்லி விட்டு திரும்பும்போது கண்ணாடி அவன் காலில் வெட்டிருச்சு. அப்பா சொன்னார் "இப்படியே போனின்னா இப்போ ஆஸ்பிட்டலிலே சீட் குடுப்பாங்க"