PDA

View Full Version : இன்றைய(காதல், சமூகம்,வாழ்க்கை)



sham
07-02-2007, 03:04 AM
எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் "பர்ஸை" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்" என்று அமைதியாகியது.


என்னால் முடிந்ததை தந்துள்ளேன்.
அன்புடன் சாம்.

சே-தாசன்
07-02-2007, 04:04 AM
[QUOTE=sham;172764]எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் "பர்ஸை" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்" என்று அமைதியாகியது.


காதலே அது பொய்யடா அது வெறும் காற்றடைத்த பையடா, இதை மனதில் நீ வையடா

pradeepkt
07-02-2007, 05:18 AM
கிருஷாந்த்... இதை மயூரேசன் அறிவானா?? :D :D

சே-தாசன்
07-02-2007, 05:26 AM
கிருஷாந்த்... இதை மயூரேசன் அறிவானா?? :D :D

நாங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ப்ரதீப் அண்ணா.

pradeepkt
07-02-2007, 06:09 AM
நாங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ப்ரதீப் அண்ணா.
எந்தக் குட்டைன்னு சொல்லவே இல்லையே...

சே-தாசன்
07-02-2007, 06:17 AM
எந்தக் குட்டைன்னு சொல்லவே இல்லையே...

இதற்கு மயூரேசன் அண்ணாவின் பதிலை எதிர்பார்க்கின்றேன்

அறிஞர்
07-02-2007, 01:10 PM
இது போன்ற காதலிகள்.... இவ்வுலகில் இருப்பதே.. காதலர்களுக்கு அவமானம்.

ஷீ-நிசி
07-02-2007, 05:13 PM
இப்படி ஒரு காதலி நிஜ உலகில் இருந்திட மாட்டாள் என்று திட்டவட்டமாக நம்புகிறேன்...

maganesh
07-02-2007, 05:20 PM
காதல் கதையா இல்லை காதல் வலியா என்ற சிந்தனையைக் கிளப்பி விட்டது கதை. சிறிய தட்டு சத்தான உணவு. கலக்கிட்டீங்க சாம்.

மனோஜ்
07-02-2007, 07:29 PM
[B][I][COLOR="Green"] உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும்

பெண்களின் பலவினம் இது என்றாலும்
இது கொஞ்சம் மிகைபடுத்தபட்டுள்ளது என்பது உன்மை அல்லவா:confused:

maganesh
08-02-2007, 07:40 AM
பெண்களின் பலவினம் இது என்றாலும்
"பெண்கள் இரக்கத்தின் இருப்பிடம். அன்பிஅன் கருவறை. இளகிய மனம் படைத்த மங்கையர் பிறர் துன்பம் தன் துன்பமாகக் கருதும் சுமைதாங்கிகள்" இப்படி எல்லாம் சொல்றாங்களே.

sham
10-02-2007, 08:25 AM
"பெண்ணென்றால் பேயும் இரங்கும் பெண்களுக்கு ஏது இரக்கம்"இவ்வாறும் சொல்கிறார்களே!

ஓவியா
10-02-2007, 02:22 PM
ஒரு பெண்ணை வைத்து மற்றவரின் குணங்களை ஒப்பிட முடியாது

பல பெண்கள் அன்பின் இருப்பிடம்.
அதில் முதலாவது பெண் நம் அன்னை, :D

அடுத்தது (நீங்களே முடிவேடுக்கவும்.)

maganesh
10-02-2007, 03:20 PM
பல பெண்கள் அன்பின் இருப்பிடம்.
அதில் முதலாவது பெண் நம் அன்னை
பெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். ஆனா நமது காப்பியங்களில் அழிவுக்குக் காரணம் பெண்கள் என்றவாறு அல்லவா அமையப்பட்டுள்ளது.

ஓவியா
10-02-2007, 03:32 PM
பெண்கள் மதிக்கப்படவேண்டியவர்கள். ஆனா நமது காப்பியங்களில் அழிவுக்குக் காரணம் பெண்கள் என்றவாறு அல்லவா அமையப்பட்டுள்ளது.

காப்பியங்களில் அப்படி சொன்னாலும், அனுபவம் அப்படி இல்லையே!!!

தங்களின் அனுபவத்தில் இப்படி ஒரு பெண் வந்துல்லாறா?? இல்லையேன் நல்லது.

பெண்கள் யாரின் அழிவுக்கும் காரணமில்லை, அப்படி நடந்தால் அது அந்த ஆணின் அறியாமை தான் காரணம்.

maganesh
10-02-2007, 03:35 PM
காப்பியங்களில் அப்படி சொன்னாலும், அனுபவம் அப்படி இல்லையே!!!
நான் மட்டுமல்ல. இன்றைய இளைஞர்கள் பலரின் வெற்றிகரமான வாழ்வுக்குக் காரணம் பெண்கள்தான். ஆதி காலம் முதல் ஆணாதிக்கச் சுழலில் பெண்கள் சிக்கிச் சீரழிகின்றார்கள் என்பதுதான் வருத்தம் தரத்தக்க நிஜம்.

விகடன்
10-02-2007, 03:36 PM
யதார்த்தத்தில் இப்படியொன்று நடக்காது என்பதே எனது வாதம். வேணுமானால் வந்தவளும் பயத்தில் தொடாது சற்றே விலத்தியிருந்து வேடிக்கை பார்க்கக்கூடும். இதுதான் ஒரு காதலியால் செய்யக்கூடிய ஒரு கொடுஞ்செயல்.

இருந்தாலும் உங்களுடைய கற்பனைக்கும் ஆக்கத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.

maganesh
10-02-2007, 03:39 PM
வேணுமானால் வந்தவளும் பயத்தில் தொடாது சற்றே விலத்தியிருந்து வேடிக்கை பார்க்கக்கூடும். இதுதான் ஒரு காதலியால் செய்யக்கூடிய ஒரு கொடுஞ்செயல்.
அவ்வளவு கொடுமையான ஒருத்தி எப்படி மென்மையான காதலை உணரக்கூடிய காதலியாக இருக்கலாம். அவள் காதலி என்ற பதத்துக்கே பொருத்தமற்றவள்.

ஓவியா
10-02-2007, 03:43 PM
நான் மட்டுமல்ல. இன்றைய இளைஞர்கள் பலரின் வெற்றிகரமான வாழ்வுக்குக் காரணம் பெண்கள்தான். ஆதி காலம் முதல் ஆணாதிக்கச் சுழலில் பெண்கள் சிக்கிச் சீரழிகின்றார்கள் என்பதுதான் வருத்தம் தரத்தக்க நிஜம்.

ஆமாம் நண்பா சரியான கருத்து,

அப்ப எந்த ஆணுக்கும் ஒரு பெண் துணை அவசியம் வேண்டுமா?

maganesh
10-02-2007, 03:51 PM
அப்ப எந்த ஆணுக்கும் ஒரு பெண் துணை அவசியம் வேண்டுமா?
நாம் பிறந்தது முதல் அப்பா, அம்மா இருவரின் துணியோடு இருக்கின்றோம். அப்புறம் உடன்பிறப்புகள் துணை. பலசந்தர்ப்பங்களில் நண்பர்கள் துணை. இப்படி மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க்கின்றது. அப்படி இருக்கும்போது என் பதில் எப்படி இல்லை என்று இருக்கும்.

ஓவியா
10-02-2007, 03:59 PM
நாம் பிறந்தது முதல் அப்பா, அம்மா இருவரின் துணியோடு இருக்கின்றோம். அப்புறம் உடன்பிறப்புகள் துணை. பலசந்தர்ப்பங்களில் நண்பர்கள் துணை. இப்படி மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்க்கின்றது. அப்படி இருக்கும்போது என் பதில் எப்படி இல்லை என்று இருக்கும்.


அப்படியா ரொம்ப சந்தோஷம் :D


சில ஆண்களோ,
சொன்ன கேட்கவா போறாங்க,
ஒன்டியா சந்தோஷ கடலில் மூழ்கி முத்தெடுத்துக்கொள்கிறேன்
என்று சவால் வேற விடறாங்க....

மனோஜ்
10-02-2007, 04:10 PM
ஓவியா யாரு அந்த ஆசாமி ஒன்டியா முத்தெடுக்கறது அப்படிபட்ட அசாமிகளை காட்ல கொன்டுபொயிவிடுங்க

ஓவியா
10-02-2007, 04:14 PM
ஓவியா யாரு அந்த ஆசாமி ஒன்டியா முத்தெடுக்கறது அப்படிபட்ட அசாமிகளை காட்ல கொன்டுபொயிவிடுங்க

:D :D :D
காட்டிலா :D :D

பாவம் பொழச்சி போகட்டும்.
வாழ்கையில் வருத்தபட ஒரு வாய்ப்பு கொடுப்போம் :D

ஆதவா
10-02-2007, 06:53 PM
எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் "பர்ஸை" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்" என்று அமைதியாகியது.


என்னால் முடிந்ததை தந்துள்ளேன்.
அன்புடன் சாம்.

சாம்,

கதையாக்கத்திற்கு விமர்சனம் செய்யுமளவு நான் பெரியவனில்லை... இருந்தாலும் சில கருத்துக்களை விட்டுச் செல்லுகிறேன்.
நீங்கள் குறிப்பிட்ட அந்த காதலி ஒரு பணப்பேய் என்றறிகிறேன்... அப்படியே இருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் ஒருவனின் உயிர் போய்க்கொண்டிருக்கும் சமயத்தில் கண்டிப்பாக இம்மாதிரி கேட்கமாட்டாள்... அப்படி எந்த ஒரு விடயமும் நிகழ்ந்திருக்காது இவ்வுலகில்.... பெண்கள் அப்படி ஒன்றும் கேவலமானவர்கள் இல்லை........ காதல் ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ சிறு அளவிலாவது அன்பை ஏற்படுத்தியிருக்கும்.. அந்த அன்பு கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக வெளியே வரும்......... காதலின் பிரிவு என்பது உயிர் சம்பந்தப்பட்டதல்ல.. மனம் சம்பந்தப்பட்டது. எப்போதுவேண்டுமானாலும் சந்தித்துக்கொள்ளலாம்... உயிர் பிரியும் தருவாயில் இப்படி கேட்கக்கூட தோன்றாது.. அதுவும் பெண்கள் தோணமாட்டார்கள்..........

கதையை கொஞ்சம் வளர்த்தி புது சிந்தனைகளைப் புகட்டி எழுதுங்கள்..... எங்கள் ஆதரவு என்றும் உண்டு..

இளசு
21-04-2007, 10:29 PM
கதை எழுதும் முயற்சிக்கு வாழ்த்துகள் ஷாம்..

அதிர்ச்சி தருவது இக்கதையின் நோக்கம் என எண்ணுகிறேன்..
ஆதவாவின் கருத்துகளை உள்வாங்கி, இன்னும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..