PDA

View Full Version : கவித்தாய் குழந்தையாய்



maganesh
06-02-2007, 01:44 PM
முகக்கண்களை மூடு
அகக்கண்களைத் திற
உள்ளமெனும் வானத்தில்
சொல்மேகம் சூழும்
லப்டப் தாலாட்டும்
குருதி விளக்கேற்றும்
அவ்வொளியில்
தமிழ் மயில்
நாட்டியமாடும்
கவித்தாய் உன்மடியில்
குழந்தையாய் தவழ்வாள்.

ஷீ-நிசி
06-02-2007, 01:59 PM
நல்லாருக்கு நண்பரே உங்களின் கவிதை

குருதி விளக்கெற்றும்
என்ன அர்த்தம் இது?

மனோஜ்
06-02-2007, 02:55 PM
கவித்தாயை வறவேற்க அருமையான கவிதை நன்றி

அறிஞர்
06-02-2007, 04:30 PM
கவித்தாய் குழந்தையாய் தவழ நல்ல வழி முறைகள்....

அதுவும் கவிதை வடிவத்தில்..

அழகு...... இன்னும் கொடுங்கள்.. மயூரன்