PDA

View Full Version : அறிவியல் விளக்கங்கள்



ஷீ-நிசி
05-02-2007, 03:16 AM
நண்பர்களே, நாம் அறிவியல் விளக்கங்களை தொடர்ந்து இந்த திரியில் பார்க்கலாம்..

நன்றி: தினமலர்

சி.டி.,யில் எப்படி ஒலி, ஒளி ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன?

உங்கள் பதில்களை இங்கே பதியுங்கள்... சரியான பதில் நாளை இங்கே பதிக்கப்படும்.

மன்மதன்
05-02-2007, 07:16 AM
மேக்னடிக் புள்ளிகளாக...:D

அறிஞர்
06-02-2007, 09:39 PM
லேசர் ஒளியின் துணை கொண்டு டிஜிட்டல் வடிவத்தில் எழுதப்படுகிறது...

இது தொடர்பாக.. http://electronics.howstuffworks.com/ தளத்தில் பார்க்கவும்.. அருமையான தகவல்கள் உள்ளன..

அறிஞர்
07-02-2007, 01:17 PM
ஷீ-நிசி பதில் எங்கப்பா....

அடுத்த விளக்கத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

ஷீ-நிசி
07-02-2007, 03:33 PM
தாமதத்திற்கு மன்னிக்கனும் நண்பர்களே!

சி.டி.,யில் எப்படி ஒலி, ஒளி ஆகியவை பதிவு செய்யப்படுகின்றன?


இசை, பேச்சு, எழுத்து, படம், சினிமா எதுவாக இருந்தாலும் சி.டி.,யில் ஒரே மாதிரி தான் பதிவாகின்றன. "ஆம்இல்லை' என்று குறிப்பிடும்படியாக (01) எனும் டிஜிட்டல் குறி உள்ளது. தட்டின் மையத்திலிருந்து துவங்கி விளிம்புவரை சுருள் சுருளாக வரிவரியாக நுட்பமான பொத்தல்கள் இடப்படுகின்றன எல்லாமும் ஒரே மாதிரியான "டிஜிட்டல்' குறியாக இருக்கும் பட்சத்தில் எப்படி படம், எழுத்து, இசை ஆகியவை வேறுபடுத்தப்படுகின்றன என்பது வியப்புக்குரியது தான்.

அதற்கென உருவாக்கப்பட்ட "சாப்ட் வேர்கள்' (மென் கலங்கள்) அவற்றை வேறுபடுத்தி வெளிப்படுத்தும் வேலையைச் செய்து தருகின்றன.

ஷீ-நிசி
07-02-2007, 03:37 PM
செல்கள் என்றால் என்ன? அதன் நன்மை தீமை என்ன?

maganesh
07-02-2007, 03:41 PM
செல்கள் என்று பலவற்றைக் கூறுவார்கள். உதாரணமாக மனித அவயங்கள் செல்களினால் ஆக்கப்பட்டன. சில புத்தகங்கள் செல்லரித்துப் போய் விட்டன. நீங்கள் எதை கருத்தில் கொண்டு கேட்கின்றீர்கள்.

ஷீ-நிசி
07-02-2007, 03:51 PM
செல்கள் என்று பலவற்றைக் கூறுவார்கள். உதாரணமாக மனித அவயங்கள் செல்களினால் ஆக்கப்பட்டன. சில புத்தகங்கள் செல்லரித்துப் போய் விட்டன. நீங்கள் எதை கருத்தில் கொண்டு கேட்கின்றீர்கள்.

நீங்கள் சொல்லும் செல் பற்றித்தான்..

அறிஞர்
07-02-2007, 04:10 PM
நீங்கள் சொல்லும் செல் பற்றித்தான்.. அவர் இரண்டு சொல்லியிருக்கிறாரே.. அன்பரே...

ஷீ-நிசி
07-02-2007, 04:13 PM
அவர் இரண்டு சொல்லியிருக்கிறாரே.. அன்பரே...

அவர் சரியாகவே யூகித்துள்ளார் அறிஞரே, நன்மை, தீமைகளும் வரட்டும் என்று காத்திருக்கிறேன்..

maganesh
07-02-2007, 05:57 PM
அவர் சரியாகவே யூகித்துள்ளார் அறிஞரே, நன்மை, தீமைகளும் வரட்டும் என்று காத்திருக்கிறேன்.
மன்னிக்கவும். நான் தமிழ்மன்றத்துக்கு மட்டுமல்ல அறிவிலும் இளையவன்தான். தயவுசெய்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

ஷீ-நிசி
08-02-2007, 02:59 AM
செல்கள் என்றால் என்ன? அதன் நன்மை தீமை என்ன?

அரிசி, பருப்பு போன்ற தானியங்களை சேமித்துவைக்கும் போது அதில் வளரும் பூச்சிகளை செல் என்பார்கள். இதனால் நன்மை ஏதுமில்லை விரையம்தான் அதிகம். பல்லாயிரம் செங்கற்கள்கூடி வீடுகளும், கட்டிடங்களும் ஆவதுபோல, பல டிரில்லியன் செல்கள் கூட நமது உடல் உருவாகிறது. தாய்வயிற்றில் உதிக்கும்போது நாமெல்லோருக்கும் உடம்பு ஒரே ஒரு செல்தான் கருவளர்ந்து குழந்தையாகும்போது டிரில்லியன் (ஒன்றை அடுத்து பன்னிரண்டு பூச்சியங்கள்) செல்கள் கொண்ட உடம்பாகிறது. செல்களின் தொகுப்புதான் மனிதன், மிருகம், பட்சி தாவரம் பூச்சி பொருட்கள் யாவும்.

ஷீ-நிசி
08-02-2007, 03:07 AM
தண்ணீரைக் காய்ச்சும்போது பொங்குவதில்லை. பாலைக் காய்ச்சும் போது மட்டும் பொங்குகிறதே ஏன்?

ஆதவா
08-02-2007, 03:08 AM
நமக்கு இந்த அறிவெல்லாம் இல்லாட்டியும் பார்த்துக்கொண்டாவது இருக்கறம்..... பதில் மட்டும் கேட்டுப்புடாதீங்கோ :)

மயூ
08-02-2007, 03:13 AM
தண்ணீரைக் காய்ச்சும்போது பொங்குவதில்லை. பாலைக் காய்ச்சும் போது மட்டும் பொங்குகிறதே ஏன்?
சத்தியமாகத் தெரியவில்லை...
அணுக்களுக்கிடையில் இருக்கும் வித்தியாசமான பிணைப்பு காரணமாக இருக்குமோ? :confused:

pradeepkt
08-02-2007, 07:03 AM
பால் சுட வைக்கும் போது மேலே பாலாடை உற்பத்தியாகிறது. அது ஒரு தடுப்பு போல் செயல்படுவதால் கீழிருந்து பொங்கி வரும் பால் குமிழிகள் வெளியேற இயலாமல் தடைபடுகின்றன. எனவே இக்குமிழிகள் அந்தப் பாலாடையையும் மேலேற்றுவதால் பால் பொங்குகிறது.

தண்ணீரில் இப்படி எதுவும் உருவாவதில்லை. எனவே நீர்க்குமிழிகள் நேரே கொதிக்கும் நீரின் முனைக்கு வந்து வெடித்து விடுகின்றன.

இதுதான் பால் பொங்குவதற்கும் நீர் பொங்காததற்கும் விளக்கம்!

ஷீ-நிசி
08-02-2007, 08:25 AM
பால் சுட வைக்கும் போது மேலே பாலாடை உற்பத்தியாகிறது. அது ஒரு தடுப்பு போல் செயல்படுவதால் கீழிருந்து பொங்கி வரும் பால் குமிழிகள் வெளியேற இயலாமல் தடைபடுகின்றன. எனவே இக்குமிழிகள் அந்தப் பாலாடையையும் மேலேற்றுவதால் பால் பொங்குகிறது.

தண்ணீரில் இப்படி எதுவும் உருவாவதில்லை. எனவே நீர்க்குமிழிகள் நேரே கொதிக்கும் நீரின் முனைக்கு வந்து வெடித்து விடுகின்றன.

இதுதான் பால் பொங்குவதற்கும் நீர் பொங்காததற்கும் விளக்கம்!

பிரதீப் அவர்களின் விளக்கம் ஒத்துப்போகிறது. இதற்குண்டான விடையினை நாளை பதிக்கிறேன்.. மற்ற நண்பர்களும் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்

அறிஞர்
08-02-2007, 12:55 PM
பால் என்பது புரதம் கலந்த தண்ணீர் (watery emulsion). இதில் கேசின் (casein- லத்தீன் வார்த்தை cheese) என்ற சிறிய பொருளின் (molecule) பங்கு அதிகமாக உள்ளது.

சூடாக்கும்போது இந்த புரதத்தின் அமைப்பு மாறி (protein denatured) ஆடையாக மாறி மேலே படிகிறது. நுரை வருவதற்கு இது காரணமாக அமைகிறது.... பிரதீப் சொல்வது போல்... கொதிப்பது தடைப்பட்டு... பொங்குகிறது.

karikaalan
08-02-2007, 01:10 PM
பருப்பு வேகவைத்தாலும் அது வெந்துகொண்டிருக்கும் தண்ணீர் பொங்கி வழிகிறதே... அங்கும் புரோட்டீன் காரணமா?

அரிசியை வெண்கலப்பானையில் ஆக்கும்போதும் பொங்கி வழியுமே.. அங்கே புரோட்டீன் சமாசாரம் ஏது? ஆடையும் படிவதாகக் கண்டதில்லை..

===கரிகாலன்

அறிஞர்
08-02-2007, 01:12 PM
வெவ்வேறு புரோட்டின்கள் இருக்கின்றன... ஒவ்வொன்றின் அமைப்பும் வேறுபடும், வேதி மாற்றங்களும் வேறுபடும்.

என்னுடைய கூற்று இது... மேலும் தகவல்கள் கிடைத்தால் தருகிறேன்.

ஷீ-நிசி
08-02-2007, 01:57 PM
தண்ணீரைக் காய்ச்சும்போது பொங்குவதில்லை. பாலைக் காய்ச்சும் போது மட்டும் பொங்குகிறதே ஏன்?

எல்லா திரவங்களும் சூடாக்கும் போது கொதிக்கின்றன. சூடாகும் திரவம் ஆவியாக மாறி திரவத்தின் வழியாக கொப்புளங்களாக எழுந்து மேலே வெடித்து காற்றில் கலக்கின்றன.

தண்ணீர் ஒரே பொருளால் ஆனது அது கொதித்து நீராவியாக வெளியேற எந்தத் தடையும் இல்லாததால் பொங்குவதில்லை. பாலானது புரதம், கொழுப்பு சர்க்கரை முதலான பலவித பொருட்கள் நிரம்பியது. சூடாகும் போது அதிலுள்ள நீரானது நீராவிக் கொப்புளமாக மேலெழ ஒட்டாமல் பாலில் உள்ள புரதங்கள் தடை செய்கின்றன. இயல்பு மாறிய புரதங்கள் கெட்டிப்பட்டு ஒரு சவ்வுபோல கொப்புளங்களை சூழ்ந்து கொள்வதால் அவை சுதந்திரமாக வெளிப்பட முடியாமல் உள்ளேயே அடங்கி, பின் போதிய பலம் பெற்றவுடன் பொறுக்க முடியாத அழுத்தத்தால் குபீரென்று பொங்கி எழுகிறது. பொங்காமலிருக்க வேண்டுமானால் பாலை கரண்டியால் கலக்கி விடுங்கள். கொப்புளம் உடைந்து பொங்குதல் தவிர்க்கப்படும்.

அறிஞர்
08-02-2007, 01:58 PM
அருமை ஷீ-நிசி....

இன்னும் தொடருங்கள்...

aren
08-02-2007, 02:12 PM
புது விஷயம் ஷீ-நிசி. தொடருங்கள். இப்படி தெரியாத பல விஷயங்களை எங்களுக்கு சொல்லிக்கொடுங்கள்.

பிச்சி
08-02-2007, 02:12 PM
நிறைய தகவல் கண்டுகொண்டேன்...
அப்படியே. இணையத்தில் நம் தகவல்கள், இணையதளங்கள் போன்றவை சாட்டிலைட்டில் சேமிக்கப்படுகிறதா? எங்கே இஒருந்து பெறப்படுகிறது என்று யாராவது சொல்லுங்கள்

ஷீ-நிசி
08-02-2007, 03:25 PM
உங்களின் ஆதரவிற்கு நன்றி நண்பர்களே! இதை எல்லாம் கண்டுபிடித்த அந்த அறிவியல் மேதைகளுக்கும் நன்றி...

ஷீ-நிசி
08-02-2007, 03:26 PM
பூமியினுள் இருக்கும் உலோகக் குழம்பு ஏதாவது ஒரு கால கட்டத்தில் முற்றிலும் குளிர்ந்து திடமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

maganesh
08-02-2007, 03:58 PM
பூமியினுள் இருக்கும் உலோகக் குழம்பு ஏதாவது ஒரு கால கட்டத்தில் முற்றிலும் குளிர்ந்து திடமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?
சிந்திக்கத் தூண்டும் வகையில் பல ஆக்கங்களைத் தருகின்றீர்கள். வாழ்த்துக்கள்.
இன்று காலநிலை மாற்றத்துக்கு மிகவும் முக்கிய காரணம் வெப்பநிலை உயர்வுதான். இதே போன்று தொடர்ந்தும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே சாத்தியமில்லை என நினைக்கின்றேன்.

maganesh
09-02-2007, 09:14 AM
இங்கு லண்டனில் நேற்றுப் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. நேற்றுவரை காலநிலை பொய்த்து விட்டது. மனிதன் காலநிலையைக் கலைத்துவிட்டான் எனக் குரல் கொடுத்தவர்களெல்லாம் வாயடைத்துப் போய்விட்டனர். வழமையாக மார்கழியில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு தாமதமாக ஆரம்பித்துள்ளது. பனிப் பொழிவு ஒருக்காது எனக் கூறிய விஞ்ஞானிகளின் கூற்றுப் பொய்த்து விட்டது. அதுபோல இடுவும் நடக்கலாம். மேலும் பல தவல் களஞ்சியங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகின்றேன்.

ஓவியா
10-02-2007, 12:43 AM
இங்கு லண்டனில் நேற்றுப் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. நேற்றுவரை காலநிலை பொய்த்து விட்டது. மனிதன் காலநிலையைக் கலைத்துவிட்டான் எனக் குரல் கொடுத்தவர்களெல்லாம் வாயடைத்துப் போய்விட்டனர். வழமையாக மார்கழியில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு தாமதமாக ஆரம்பித்துள்ளது. பனிப் பொழிவு ஒருக்காது எனக் கூறிய விஞ்ஞானிகளின் கூற்றுப் பொய்த்து விட்டது. அதுபோல இடுவும் நடக்கலாம். மேலும் பல தவல் களஞ்சியங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகின்றேன்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி எங்களுக்கு (லண்டனில்) இரண்டு தினதிற்க்கு முன்பே (என்று) பனி பொழியும் என்று தகவல் கிடைத்துவிட்டதே நண்பா..;) ;)

ஓவியா
10-02-2007, 12:45 AM
ஷீ-நிசி
பதிவுகள் சிறப்பாக செல்கின்றன.
வாழ்த்துக்கள் தொடரவும்

maganesh
12-02-2007, 08:38 AM
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி எங்களுக்கு (லண்டனில்) இரண்டு தினதிற்க்கு முன்பே (என்று) பனி பொழியும் என்று தகவல் கிடைத்துவிட்டதே நண்பா
நான் கூறுவது விஞ்ஞானிகளின் வருட ஆரம்பக் கூற்றை. "உலக வரலாற்றில் இந்த ஆண்டு வெப்பநிலை கூடிய ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு பனிப்பொழிவு காணப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை."

ஷீ-நிசி
12-02-2007, 08:54 AM
இங்கு லண்டனில் நேற்றுப் பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. நேற்றுவரை காலநிலை பொய்த்து விட்டது. மனிதன் காலநிலையைக் கலைத்துவிட்டான் எனக் குரல் கொடுத்தவர்களெல்லாம் வாயடைத்துப் போய்விட்டனர். வழமையாக மார்கழியில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு தாமதமாக ஆரம்பித்துள்ளது. பனிப் பொழிவு ஒருக்காது எனக் கூறிய விஞ்ஞானிகளின் கூற்றுப் பொய்த்து விட்டது. அதுபோல இடுவும் நடக்கலாம். மேலும் பல தவல் களஞ்சியங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகின்றேன்.


ஷீ-நிசி
பதிவுகள் சிறப்பாக செல்கின்றன.
வாழ்த்துக்கள் தொடரவும்

நன்றி மயூரன், நன்றி ஓவியா அவர்களே!

ஷீ-நிசி
12-02-2007, 08:55 AM
பூமியினுள் இருக்கும் உலோகக் குழம்பு ஏதாவது ஒரு கால கட்டத்தில் முற்றிலும் குளிர்ந்து திடமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?


வாய்ப்பு உண்டு. பூமி போதுமான அளவு குளிர்ந்துபோனால் ஆனால் பூமியின் நிறையீர்ப்பு ஆற்றலின் நசுக்கத்தால் அதன் நடுப்பகுதி குளிர்ந்து கெட்டியாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகலாம். ஆனால் தொலைவில் உள்ள சிறிய கோள்களாகிய புளுட்டோ, யுரேனஸ் போன்றவற்றில் நீங்கள் குறிப்பிடும் குளிர்வும் திடமாதலும் நிகழலாம். பூமியில் இந்த நிலை நிகழ வாய்ப்பே இல்லை!

ஷீ-நிசி
12-02-2007, 09:04 AM
பூமி சரியான பாதையில் சரியாக சுற்றுகிறது இதற்கான சக்தி எதிலிருந்த கிடைக்கிறது?

ஷீ-நிசி
13-02-2007, 03:26 PM
பூமியினுள் இருக்கும் உலோகக் குழம்பு ஏதாவது ஒரு கால கட்டத்தில் முற்றிலும் குளிர்ந்து திடமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

வாய்ப்பு உண்டு. பூமி போதுமான அளவு குளிர்ந்துபோனால் ஆனால் பூமியின் நிறையீர்ப்பு ஆற்றலின் நசுக்கத்தால் அதன் நடுப்பகுதி குளிர்ந்து கெட்டியாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகலாம். ஆனால் தொலைவில் உள்ள சிறிய கோள்களாகிய புளுட்டோ, யுரேனஸ் போன்றவற்றில் நீங்கள் குறிப்பிடும் குளிர்வும் திடமாதலும் நிகழலாம். பூமியில் இந்த நிலை நிகழ வாய்ப்பே இல்லை!

அறிஞர்
13-02-2007, 03:27 PM
இது என்ன திரும்ப அதே பதில்... தொடரட்டும் ஷீ-நிசி..

ஷீ-நிசி
13-02-2007, 03:27 PM
அரவாணிகளால் இனப்பெருக்கம உண்டா? பிற உயிரினங்களிலும் அரவாணிப்பிறவிகள் உள்ளனவா?

பதில் நாளை..

அறிஞர்
13-02-2007, 03:29 PM
34 க்கு விடை சொல்லவில்லை...
-------
அரவாணிகள் எல்லா பிறவிகளிலும் உண்டு எனக்கேள்வி பட்டுள்ளேன்.

ஷீ-நிசி
13-02-2007, 03:38 PM
மன்னிக்கனும் அறிஞரே...தவறு நிகழ்ந்தது

பூமி சரியான பாதையில் சரியாக சுற்றுகிறது இதற்கான சக்தி எதிலிருந்த கிடைக்கிறது?

மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் பாயும் தண்ணீருக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? ஈர்ப்பு சக்திதான்! பூமியின் நிறையீர்ப்பு விசை காரணமாக மேட்டிலிருந்து பொருட்கள் பள்ளத்தில் விழுகின்றன.

நாம் வெற்றிடம் என்று சொல்லும் ஆகாயம் கூட புவி ஈர்ப்பு விசையால் வளைந்துவிடுமாம் சூரியனைச்சுற்றிலுமுள்ள ஆகாயம் சூரியனால் வளைத்து விடப்படுகிறது. அவ்வாறே பூமி, நிலா போன்றவை தத்தம் சக்திக்கு ஏற்ப ஆகாயத்தை வளைக்கின்றன.

தண்ணீரில் வட்ட வட்டமாக அலைகள் பரவுவதுபோல, ஆகாயத்தில் விண்பொருட்களால் கோளவடிவமாக ஈர்ப்பு அலை பரவுகிறது. முப்பரிமான இந்த ஈர்ப்புப் பாதையில் சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள்யாவும் வழுக்கிச் செல்கின்றன. மேலும் அண்டவெளியில் உராய்வு என்பதே இல்லாததால் ஓடும் பொருட்கள் நிரந்தரமாக ஓடியபடியே இருக்கின்றன குறுக்கே வேறு பொருள் வந்து மோதாதவரை இந்த நகர்வு பல கோடி வருடங்களானாலும் நிற்காது.

அரவாணிகளால் இனப்பெருக்கம உண்டா? பிற உயிரினங்களிலும் அரவாணிப்பிறவிகள் உள்ளனவா?

பதில் நாளை..

அறிஞர்
13-02-2007, 03:40 PM
பதிலுக்கு நன்றி நண்பா...

முன்பு படித்த விசயங்களையும், புதியவைகளையும் அறிய முடிகிறது.

மிகவும் உபயோகமான பதிவுகள் தொடரட்டும்.

ஷீ-நிசி
14-02-2007, 02:51 PM
அரவாணிகளால் இனப்பெருக்கம உண்டா? பிற உயிரினங்களிலும் அரவாணிப்பிறவிகள் உள்ளனவா?

அரவாணிகளால் இனப்பெருக்கம் செய்யமுடியாது. பெண்களாக மனதளவில் இருந்தாலும், உடலளவில் அவர்கள் தாய்மை அடைய முடியாதபடி உள்ளனர். இவர்களுக்கு கருப்பை கிடையாது.

பிற உயிரினங்களிலும் இதுபோன்ற நியதிக்குப் புறம்பான மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சில மீன் இனங்கள் முதல் பாதி வாழ்க்கையை ஆணாகவும், பின்பாதி வாழ்க்கையை பெண்ணாகவும் கழிக்கின்றன. இரண்டு நிலைகளிலும் அவை சுத்தமான ஆண் பெண்ணாகவே இருக்கின்றன. அதாவது ஆணாக இருக்கும் போது கருவுறச்செய்வதும், பெண்ணாக இருக்கும் போது முட்டையிடவும் செய்கின்றன.

மண்புழு நத்தைபோன்ற உயிரினங்களில் ஓரே உடம்பில் ஆண்உறுப்பும் பெண்உறுப்பும் நல்லபடி வேலை செய்யும் நிலையிலேயே உள்ளன. செடிகளில் ஆண்,பெண் வேற்றுமையும் உண்டு. ஆண்பெண் இரண்டும் சேர்ந்ததும் உண்டு. ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாத மலடுகள் மிகவும் குறைவு.


என்னப்பா, யாரும் விடைக்காக முயற்சி பண்றதே இல்லையா?

ஷீ-நிசி
14-02-2007, 02:55 PM
வெண்மேகங்கள் எவ்வாறு எப்படி உருவாகின்றன அதன் பயன் என்ன?

ஆதவா
14-02-2007, 02:58 PM
அரவாணிகளால் இனப்பெருக்கம உண்டா? பிற உயிரினங்களிலும் அரவாணிப்பிறவிகள் உள்ளனவா?

அரவாணிகளால் இனப்பெருக்கம் செய்யமுடியாது. பெண்களாக மனதளவில் இருந்தாலும், உடலளவில் அவர்கள் தாய்மை அடைய முடியாதபடி உள்ளனர். இவர்களுக்கு கருப்பை கிடையாது.

பிற உயிரினங்களிலும் இதுபோன்ற நியதிக்குப் புறம்பான மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சில மீன் இனங்கள் முதல் பாதி வாழ்க்கையை ஆணாகவும், பின்பாதி வாழ்க்கையை பெண்ணாகவும் கழிக்கின்றன. இரண்டு நிலைகளிலும் அவை சுத்தமான ஆண் பெண்ணாகவே இருக்கின்றன. அதாவது ஆணாக இருக்கும் போது கருவுறச்செய்வதும், பெண்ணாக இருக்கும் போது முட்டையிடவும் செய்கின்றன.

மண்புழு நத்தைபோன்ற உயிரினங்களில் ஓரே உடம்பில் ஆண்உறுப்பும் பெண்உறுப்பும் நல்லபடி வேலை செய்யும் நிலையிலேயே உள்ளன. செடிகளில் ஆண்,பெண் வேற்றுமையும் உண்டு. ஆண்பெண் இரண்டும் சேர்ந்ததும் உண்டு. ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாத மலடுகள் மிகவும் குறைவு.


என்னப்பா, யாரும் விடைக்காக முயற்சி பண்றதே இல்லையா?

உங்களவுக்கு நமக்கேதுங்க மூளை.????:)

ஷீ-நிசி
14-02-2007, 03:02 PM
உங்களவுக்கு நமக்கேதுங்க மூளை.????:)

எனக்கும் இந்த அளவுக்கு மூளை எல்லாம் கிடையாது ஆதவா.. பல மேதைகளின் விளக்கங்கள்தான் இவை. ஏதோ நாமும் முயற்சி பன்னுவோமே....

அறிஞர்
14-02-2007, 03:14 PM
வெண்மேகங்கள் எவ்வாறு எப்படி உருவாகின்றன அதன் பயன் என்ன?
தண்ணீர் நீராவியாக மாறி.. மேகம் உருவாவது எனச் சொல்வாங்களே.. அதுவா நண்பா....

இவைகள்.. தேவையற்ற கதிர்களை தடுக்கும் தன்மை இருக்கும் என எண்ணுகிறேன்.

வெண்மேகங்கள் என்றால் எது?

வானில் பறக்கும் போது.. இரசிக்கவேண்டிய.. இயற்கை அழகு.. வெண்மேகங்கள்...

ஷீ-நிசி
15-02-2007, 04:41 PM
வெண்மேகங்கள் எவ்வாறு எப்படி உருவாகின்றன அதன் பயன் என்ன?

மேகங்கள் என்பவை நீராவிதான். நீராவி நிறமற்றதாக இருந்தாலும், குளிர்காற்றில் இருக்கும் போது அது குவிந்து பனி மூட்டமாக மாறிவிடுகிறது. மார்கழியில் காலைப்பணி நிலத்தை மூடுவதைப் பார்த்திருப்பீர்கள் அதே மூட்டம்தான் ஆகாயத்தில் வெண்மேகமாகத் தெரிகிறது. கடல், ஆறு குளம் ஆகியவற்றிலிருந்து ஆவியாகிக் கிளம்பும் நீராவி மேலே எழும்பி குளிர்வான ஆகாய மேல்புறத்தை அடைந்ததும் வெண்மூட்டமாக படர்ந்துவிடுகிறது. மலை முகடுகளில் குளிர்ச்சியும், காடுகளிலிருந்து புறப்படும் ஈரமும் மேகமாகி கவிந்து மஞ்சு போர்த்திய மலை முகடாகக்காட்சி அளிக்கிறது. வெண்மேகம் மேலும் மேலும் குளிர்ந்துவிட்டால் அதிக அடர்வாகி கருமேகமாக மாறிவிடுகிறது. மேலும் குளிர்ந்தால் ஆவி நிலையை இழந்து திரவ நிலையை அடைந்து மழையாகப் பொழிகிறது.

ஷீ-நிசி
15-02-2007, 04:42 PM
பிறவியில் காதுகேளாதோர் ஏன் பேச முடிவதில்லை?

ஆதவா
15-02-2007, 04:46 PM
பிறவியில் காதுகேளாதோர் ஏன் பேச முடிவதில்லை?

பிறவியிலேயே ஒலி அவர்கள் காதில் படுவதில்லை.... அதனால்தான்... இதை விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால்...



எஸ்கேப்

ஷீ-நிசி
15-02-2007, 04:49 PM
பிறவியிலேயே ஒலி அவர்கள் காதில் படுவதில்லை.... அதனால்தான்... இதை விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால்...



எஸ்கேப்

உண்மைதான் ஆதவா.. சரியான விடை.. விரிவான விளக்கம் நாளை.

அறிஞர்
15-02-2007, 05:09 PM
விளக்கத்தை ஆவலுடன் எதிர் நோக்கி...

மயூ
16-02-2007, 03:30 AM
அவர்களுக்கு மற்றவர்கள் பேசுவதைக் கேட்க முடியாது என்பதனால் அவர்கள் பேசுவதை கற்றுக் கொள்ள முடிவதில்லை... சரியா ஷீ???

ஷீ-நிசி
16-02-2007, 04:03 AM
ஆதவா, அறிஞர், மயூ எல்லாரும் சரியாக சொன்னீர்கள்.. இந்தக் கேள்வி பதித்தவுடன் பதிலை பார்க்காமல் என்ன பதில் இருக்கும் என்று யோசித்தேன். உங்கள் அளவிற்கு என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

பிறவியில் காதுகேளாதோர் ஏன் பேச முடிவதில்லை?

பிறவியிலிருந்து நிசப்தத்தில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு மொழி, பேச்சு என்ன என்பதே தெரியாது. அவர்களுக்கு வாய் உதடு, நாக்கு, தொண்டை ஆகியவை நல்லபடி இருந்தாலும், தான் எழுப்பும் ஒலியை தாமே கேட்க முடியாததால் என்ன ஒலி செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பே... பே... என்று கத்துகிறார்கள். இதை நாம் ஊமை என்கிறோம். காது கேளாததால்தான் அவர்கள் ஊமைகளாக உள்ளனர். இப்போது கைவிரல் சைகை முறையில் அவர்கள் வாய்மொழியில் பேசக்கூடிய எல்லா சங்கதிகளையும் வெளிப்படுத்திவிடுகிறார்கள்.

ஷீ-நிசி
16-02-2007, 04:07 AM
ஆழ்ந்த உறக்கத்தில் காது ஏன் கேட்பதில்லை அல்லது செவிப்பறை மூடிக் கொள்ளுமா?


பதில் நாளை... நண்பர்களே முயற்சி செய்யுங்கள். சரியான விடையோடு நம்முடைய முயற்சி எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்று பார்க்கலாம்

ஆதவா
16-02-2007, 05:42 AM
ஆழ்ந்த உறக்கத்தில் காது ஏன் கேட்பதில்லை அல்லது செவிப்பறை மூடிக் கொள்ளுமா?


பதில் நாளை... நண்பர்களே முயற்சி செய்யுங்கள். சரியான விடையோடு நம்முடைய முயற்சி எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்று பார்க்கலாம்

ஆழ் மனது உறக்கமே இதன் காரணம்... நம் மூளையும் ஓய்வெடுக்கிறதல்லவா!!! கண்கள் மூடினால் கூட மனம் ஏதாவது நினைத்துக் கொண்டுதான் இருக்கும்.. மனம் உறங்கும்போது இயற்கையின் எந்த அழைப்பும் கண்களுக்கோ காதுக்கோ கேட்பதில்லல...

ஏதோ புத்திசாலின்னு நினச்சுகிட்டு எழுதினேன்பா!!! சரியா தவறா?

ஷீ-நிசி
16-02-2007, 05:51 AM
ஆழ் மனது உறக்கமே இதன் காரணம்... நம் மூளையும் ஓய்வெடுக்கிறதல்லவா!!! கண்கள் மூடினால் கூட மனம் ஏதாவது நினைத்துக் கொண்டுதான் இருக்கும்.. மனம் உறங்கும்போது இயற்கையின் எந்த அழைப்பும் கண்களுக்கோ காதுக்கோ கேட்பதில்லல...

ஏதோ புத்திசாலின்னு நினச்சுகிட்டு எழுதினேன்பா!!! சரியா தவறா?

விடை சரிதான் ஆதவா... விளக்கம் நாளை

மயூ
16-02-2007, 08:41 AM
ஆழ் மனது உறக்கமே இதன் காரணம்... நம் மூளையும் ஓய்வெடுக்கிறதல்லவா!!! கண்கள் மூடினால் கூட மனம் ஏதாவது நினைத்துக் கொண்டுதான் இருக்கும்.. மனம் உறங்கும்போது இயற்கையின் எந்த அழைப்பும் கண்களுக்கோ காதுக்கோ கேட்பதில்லல...

ஏதோ புத்திசாலின்னு நினச்சுகிட்டு எழுதினேன்பா!!! சரியா தவறா?
நம்ம ஆதவனும் இப்ப கலக்குறாறேப்பா!!!! :D :D

ஆதவா
16-02-2007, 11:44 AM
நம்ம ஆதவனும் இப்ப கலக்குறாறேப்பா!!!! :D :D

அது உலகறிந்த விஷயம்....ம்ம்ம்ம்ம்.... உங்களுக்கு கொஞ்சம் லேட்டாத்தான் தெரிஞ்சுருக்கு

மயூ
16-02-2007, 12:39 PM
அது உலகறிந்த விஷயம்....ம்ம்ம்ம்ம்.... உங்களுக்கு கொஞ்சம் லேட்டாத்தான் தெரிஞ்சுருக்கு
சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுறதெல்லாம் இப்படி பெருசா எடுத்துக்கறதா???? :eek: :eek: :confused: :D :D

மனோஜ்
16-02-2007, 03:30 PM
ஆதவன் கூறிய கருத்து சரி என்று நினைக்கிறோன் ஷீ நிசி

ஷீ-நிசி
19-02-2007, 03:03 AM
ஆழ்ந்த உறக்கத்தில் காது ஏன் கேட்பதில்லை அல்லது செவிப்பறை மூடிக் கொள்ளுமா?

தூக்கத்தின் போது செவிப்பறை நன்றாகத் திறந்துதான் இருக்கின்றன. மூடிக் கொள்வதில்லை காதில் சப்தம் நுழைந்து, செவிப்பறை அதிர்ந்து, காது உள் எலும்புகள் குதித்து, உட்செவியில் நரம்புகள் துடித்து, மூளையில் கேள்விப் பகுதியில் அதற்கான பதிவுகள் ஏற்பட்டு எல்லாம் நல்லபடியாக நடந்தேறினாலும் அதைக் கேட்பதற்கு மட்டும் ஆளில்லாமல் போய்விடுகிறது. தூக்கத்தில் நாமில்லை அல்லவா நாம், நான் எனது என்கிற தன்னறிவு முற்றிலும் மறைந்து போய்விடுகிறது. அதனால் மூளையானது ஆளே இல்லாத காலி சினிமா தியேட்டரில் சினிமா மட்டும் ஓடுவதுபோல செயல்படுகிறது.

ஷீ-நிசி
19-02-2007, 03:05 AM
கோணல்... மாணல்... மின்னல்

மின்னல் வெட்டுவது ஏன் ஒழுங்கற்று உள்ளது?

ஷீ-நிசி
19-02-2007, 03:25 PM
மின்னல் வெட்டுவது ஏன் ஒழுங்கற்று உள்ளது?

காகம் வானத்தில் நேர்க்கோட்டில் தான் பறக்கிறது, ஆனால் தரையில் பயணம் செய்யும் விலங்கு மற்றும் மனிதர்கள் சந்து, தெரு, சாலை ஆகியவற்றை அனுசரித்து கோணல் மாணலாக, ஒரு திசையை குறியாக வைத்துத்தானே செல்ல முடியும்.

மின்னல் கூட அப்படித்தான் அது பாய்ந்து வரவேண்டுமாயின் வானத்தில் அதற்கான அயனப்பாதை இருக்க வேண்டும். கிடைக்கின்ற அருகாமை அயனப்பாதையினை அனுசரித்து மின்னல் இறங்கி வருவதால் அது நேர்க்கோடாக இல்லாமல் மரக்கிளைபோல வெட்டி வெட்டி கிளைத்து பயணிக்கிறது.

அறிஞர்
19-02-2007, 03:32 PM
மின்னல் வெட்டுவது ஏன் ஒழுங்கற்று உள்ளது?

காகம் வானத்தில் நேர்க்கோட்டில் தான் பறக்கிறது, ஆனால் தரையில் பயணம் செய்யும் விலங்கு மற்றும் மனிதர்கள் சந்து, தெரு, சாலை ஆகியவற்றை அனுசரித்து கோணல் மாணலாக, ஒரு திசையை குறியாக வைத்துத்தானே செல்ல முடியும்.
என்னது இது சரியான பதிலா.....

கேள்வி ஒன்று.. பதில் வேறொன்று போல இருக்கு.

ஷீ-நிசி
19-02-2007, 03:33 PM
மலரின் நிறமும் வண்ணமும்

மலருக்கு நிறங்கள் எவ்வாறு கிடைக்கின்றன? ஒரே செடியில் பல வண்ண மலர்கள் தோன்றுவது எப்படி?

அமரன்
19-02-2007, 03:34 PM
என்னது இது சரியான பதிலா.....
கேள்வி ஒன்று.. பதில் வேறொன்று போல இருக்கு
ஆமாம். ஷீநிஷி. சற்றுக்குழப்பமாகத்தான் இருக்கின்றது. சரியான பதில்தான் என்ன?

ஷீ-நிசி
19-02-2007, 03:43 PM
நண்பர்களே கவனக்குறைவின் காரணமாய் தவறு நடந்தது. சரியான பதிலை அளித்துள்ளேன்...

நன்றி நண்பர்களே!

அமரன்
19-02-2007, 03:45 PM
மலருக்கு நிறங்கள் எவ்வாறு கிடைக்கின்றன? ஒரே செடியில் பல வண்ண மலர்கள் தோன்றுவது எப்படி?
மகரந்தச் சேர்க்கையின்போது நிகழும் வேறுபட்ட மகரந்த மணிகள் காரணமாக இருக்கலாம் என எண்ணுகின்றேன்.

அறிஞர்
19-02-2007, 03:52 PM
நண்பர்களே கவனக்குறைவின் காரணமாய் தவறு நடந்தது. சரியான பதிலை அளித்துள்ளேன்...

நன்றி நண்பர்களே!
நன்றி நண்பரே... மின்னல்.. மேகங்கள் மோதுவதால் ஏற்படுகிறது.. மேகங்களுக்கு.... எந்த சரியான வடிவமும் இல்லை.... என்பதால் மின்னலும்.. கோணலாக வரும் என எண்ணுகிறேன்.

ஷீ-நிசி
20-02-2007, 02:00 PM
மலருக்கு நிறங்கள் எவ்வாறு கிடைக்கின்றன? ஒரே செடியில் பல வண்ண மலர்கள் தோன்றுவது எப்படி?

மலர்களின் இதழ்களின் சாயப்பொருட்களைத் தாங்கி இருக்கும் செல்களும், வாசனை திரவங்களை சுரக்கும் செல்களும் நிறைய உள்ளன இதழ் முழுவதுமே நிறம் தரும் செல்களால் ஆக்கப்பட்டிருப்பதும் உண்டு

டான்னின், ஆந்தோசயனின், கெரோட்டின் மீட்டாசயனின் எனப்படும் சாயப் பொருட்கள்தான் சிவப்பு முதல் நீலம் வரையிலான நிறங்களைத் தருகின்றன இரண்டு சாயங்கள் சேர்ந்து பற்பல இடைப்பட்ட நிறங்களையும் வழங்குகின்றன

தோட்டக்கலை கலைஞர்கள் இரண்டு செடிகளின் கொப்புகளை கிராப்ட் செய்து ஒரே செடியில் பலவித நிறமுடைய பூக்களை பூக்கும் படி செய்கிறார்கள் சில சமயம் "கைமீரா' என்ற ஜெனடிக் முறை அல்லது மாறுபட்டாலும் ஒரு செடியில் இருவித மலர்கள் மலர்வதுண்டு

ஷீ-நிசி
20-02-2007, 02:01 PM
பற்பசையை பல்துலக்கியால் (பிரஷ்) பல்துலக்கும் போது அதிக நுரையும், கைவிரலினால் துலக்கும் போது நுரை வருவதில்லையே ஏன்?

அறிஞர்
20-02-2007, 02:53 PM
பற்பசையை பல்துலக்கியால் (பிரஷ்) பல்துலக்கும் போது அதிக நுரையும், கைவிரலினால் துலக்கும் போது நுரை வருவதில்லையே ஏன்?
நுரை வருவதற்கு காரணம் மைசல் (micelle) உருவாவதுதான். பிரஷில் பல நார்கள்.. பற்பசையை சிறிது சிறிது துகள்களாக மாற்றி உராய வைக்கிறது.... அதனால் அதிக மைசல் உருவாகிறது.. நுரையும் அதிகம் வருகிறது.

ஷீ-நிசி
20-02-2007, 03:20 PM
அருமையான விளக்கம் அறிஞரே! என் வசமுள்ள விளக்கம் நாளை...

ஓவியா
20-02-2007, 06:40 PM
நண்பரே ஷீ-நிசி

நிரைய அரிய விசயங்களின் விளகங்கள்.


பதிவு மிகவும் சிறப்பாக செல்கின்றது,
அருமை

கைவிடாமல் நீங்களே தொரர்ந்து சிறந்த முறையில் வழினடத்தி செல்ல நன்றிகள் பல.

ஓவியா
20-02-2007, 06:43 PM
மன்னிக்கனும் அறிஞரே...தவறு நிகழ்ந்தது

பூமி சரியான பாதையில் சரியாக சுற்றுகிறது இதற்கான சக்தி எதிலிருந்த கிடைக்கிறது?

மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் பாயும் தண்ணீருக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? ஈர்ப்பு சக்திதான்! பூமியின் நிறையீர்ப்பு விசை காரணமாக மேட்டிலிருந்து பொருட்கள் பள்ளத்தில் விழுகின்றன.

நாம் வெற்றிடம் என்று சொல்லும் ஆகாயம் கூட புவி ஈர்ப்பு விசையால் வளைந்துவிடுமாம் சூரியனைச்சுற்றிலுமுள்ள ஆகாயம் சூரியனால் வளைத்து விடப்படுகிறது. அவ்வாறே பூமி, நிலா போன்றவை தத்தம் சக்திக்கு ஏற்ப ஆகாயத்தை வளைக்கின்றன.

தண்ணீரில் வட்ட வட்டமாக அலைகள் பரவுவதுபோல, ஆகாயத்தில் விண்பொருட்களால் கோளவடிவமாக ஈர்ப்பு அலை பரவுகிறது. முப்பரிமான இந்த ஈர்ப்புப் பாதையில் சூரியன், சந்திரன் மற்றும் கோள்கள்யாவும் வழுக்கிச் செல்கின்றன. மேலும் அண்டவெளியில் உராய்வு என்பதே இல்லாததால் ஓடும் பொருட்கள் நிரந்தரமாக ஓடியபடியே இருக்கின்றன குறுக்கே வேறு பொருள் வந்து மோதாதவரை இந்த நகர்வு பல கோடி வருடங்களானாலும் நிற்காது.

அரவாணிகளால் இனப்பெருக்கம உண்டா? பிற உயிரினங்களிலும் அரவாணிப்பிறவிகள் உள்ளனவா?

பதில் நாளை..


இது எனக்கு முற்றிலும் அறியா விசமே, அருமையான விளக்கம்.

நன்றி ஷீ-நிசி

ஷீ-நிசி
21-02-2007, 03:34 PM
நன்றி ஓவியா அவர்களே!.... என்னால் முடிந்தவரை தொடர்கிறேன்...

பற்பசையை பல்துலக்கியால் (பிரஷ்) பல்துலக்கும் போது அதிக நுரையும், கைவிரலினால் துலக்கும் போது நுரை வருவதில்லையே ஏன்?

நுரை ஏற்படத் தேவையானது காற்றுக் குமிழிகள். காற்றை அதிகம் புகுத்த உதவும் கருவி பிரஷ்! கைவிரலால் தேய்த்தால் இது கிடைப்பதில்லை. பிரஷ்ஷின் குஞ்சங்களின் இடையில் காற்று புகுந்து பற்பசையில் நுழைந்து நுரை ஏற்படுத்துகிறது. அதிக நுரை ஏற்பட்டால் அதிக பரப்பு ஏற்படும். அதிக பரப்பு அதிக அழுக்கை கரைக்க உதவும். இதனால்தான் பற்பசைகளில் அதிக நுரையை ஏற்படுத்தும் கெமிக்கல்களை கலக்கிறார்கள்.

ஷீ-நிசி
21-02-2007, 03:37 PM
உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு பிரான்ஸ், அங்கு மட்டும் இல்லாத காரணம் என்ன? அங்கு கொசுக்களால் பரவும் நோய்கள் வராதா?

தெரிந்தவர்கள் பதிக்கவும்! என் வசமுள்ள பதில் நாளை!

மயூ
22-02-2007, 02:54 AM
நன்றி ஓவியா அவர்களே!.... என்னால் முடிந்தவரை தொடர்கிறேன்...

பற்பசையை பல்துலக்கியால் (பிரஷ்) பல்துலக்கும் போது அதிக நுரையும், கைவிரலினால் துலக்கும் போது நுரை வருவதில்லையே ஏன்?

நுரை ஏற்படத் தேவையானது காற்றுக் குமிழிகள். காற்றை அதிகம் புகுத்த உதவும் கருவி பிரஷ்! கைவிரலால் தேய்த்தால் இது கிடைப்பதில்லை. பிரஷ்ஷின் குஞ்சங்களின் இடையில் காற்று புகுந்து பற்பசையில் நுழைந்து நுரை ஏற்படுத்துகிறது. அதிக நுரை ஏற்பட்டால் அதிக பரப்பு ஏற்படும். அதிக பரப்பு அதிக அழுக்கை கரைக்க உதவும். இதனால்தான் பற்பசைகளில் அதிக நுரையை ஏற்படுத்தும் கெமிக்கல்களை கலக்கிறார்கள்.
பிரசில் பற்பசையைப் போட்ட பின்பு நீரில் நனைத்து விட்டு பல் துலக்கினால் விரைவாக நுரைப்பதுடன் அவ்வளுவு உறைக்காது..

praveen
22-02-2007, 03:34 AM
உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு பிரான்ஸ், அங்கு மட்டும் இல்லாத காரணம் என்ன? அங்கு கொசுக்களால் பரவும் நோய்கள் வராதா?


உங்கள் கேள்வி ஆச்சரியமாக இருக்கிறது, நான் தேடிப்பார்த்த வரை கிழே கண்ட சுட்டியிலும் உருப்படியாக ஒன்றும் இல்லை. உங்கள் பதில் அறிய ஆவல்.
http://www.answerbag.com/q_view/4515

அமரன்
22-02-2007, 03:40 PM
என்னிடமுள்ள சில அறிவியல் விடயங்கள் இருக்கின்றன. ஷீ.நிஷியின் அனுமதிகிடைத்தால் பதிக்கின்றேன்.

அறிஞர்
22-02-2007, 03:44 PM
உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு பிரான்ஸ், அங்கு மட்டும் இல்லாத காரணம் என்ன? அங்கு கொசுக்களால் பரவும் நோய்கள் வராதா?

தெரிந்தவர்கள் பதிக்கவும்! என் வசமுள்ள பதில் நாளை!

ஏன் ஊரை சுற்றிலும் டாட்டாய்ஸ் கொழுத்தி வைச்சுட்டாங்களா.. உண்மையான பதிலை அறிய ஆவல்.


உங்கள் கேள்வி ஆச்சரியமாக இருக்கிறது, நான் தேடிப்பார்த்த வரை கிழே கண்ட சுட்டியிலும் உருப்படியாக ஒன்றும் இல்லை. உங்கள் பதில் அறிய ஆவல்.
http://www.answerbag.com/q_view/4515
அசோக் கொடுத்த லிங்கில் உள்ள பதில் யோசிக்கவைக்கிறது.

ஷீ-நிசி
22-02-2007, 04:06 PM
உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு பிரான்ஸ், அங்கு மட்டும் இல்லாத காரணம் என்ன? அங்கு கொசுக்களால் பரவும் நோய்கள் வராதா?

கொசு பொதுவாக பூமத்தியரேகைப் பகுதிகளில் தான் வசிக்கும். குளிர்ச்சி மிகுந்த ஐரோப்பியா, வட அமெரிக்கா (கனடா) ஆகிய கண்டங்களில் கொசு வாழ்வதில்லை.

ஆனால் மனித ரத்தத்தை ருசி பார்க்கும் வேறு பூச்சிகள் அங்கே வாழும். உலகத்தில் எல்லா இடங்களிலும், எல்லா உயிரினங்களுக்கும் நோய், கிருமிப்பிரச்னை, பூச்சிக்கடி போன்றவை நிச்சயம் உண்டு.

இந்தியாவில்கூட, ஏதாவது ஒரு சக்தி மூலம் கொசுக்களை நீக்கிவிட்டால் அந்த இடத்தை ஈடுகட்ட வேறு ரத்தம் குடிக்கும் பூச்சி வந்துவிடும். எனவே நமது எதிரிகளை நாம் முற்றிலும் அழிக்க முற்படக்கூடாது மாறாக அவற்றை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயலவேண்டும் இல்லையேல் அதைவிட ஆபத்தான வேறு பிரச்னையில் சிக்கிவிடுவோம்.

ஷீ-நிசி
22-02-2007, 04:07 PM
சூரியனுக்கு ஈர்ப்பு விசை எவ்வாறு ஏற்படுகிறது?

அறிஞர்
22-02-2007, 04:21 PM
உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு பிரான்ஸ், அங்கு மட்டும் இல்லாத காரணம் என்ன? அங்கு கொசுக்களால் பரவும் நோய்கள் வராதா?

கொசு பொதுவாக பூமத்தியரேகைப் பகுதிகளில் தான் வசிக்கும். குளிர்ச்சி மிகுந்த ஐரோப்பியா, வட அமெரிக்கா (கனடா) ஆகிய கண்டங்களில் கொசு வாழ்வதில்லை.

ஆனால் மனித ரத்தத்தை ருசி பார்க்கும் வேறு பூச்சிகள் அங்கே வாழும். உலகத்தில் எல்லா இடங்களிலும், எல்லா உயிரினங்களுக்கும் நோய், கிருமிப்பிரச்னை, பூச்சிக்கடி போன்றவை நிச்சயம் உண்டு.

இந்தியாவில்கூட, ஏதாவது ஒரு சக்தி மூலம் கொசுக்களை நீக்கிவிட்டால் அந்த இடத்தை ஈடுகட்ட வேறு ரத்தம் குடிக்கும் பூச்சி வந்துவிடும். எனவே நமது எதிரிகளை நாம் முற்றிலும் அழிக்க முற்படக்கூடாது மாறாக அவற்றை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயலவேண்டும் இல்லையேல் அதைவிட ஆபத்தான வேறு பிரச்னையில் சிக்கிவிடுவோம்.
இது ஓரளவுக்கு உண்மைதான். குறிப்பாக பிரான்ஸ் என்று சொன்னதின் காரணம் என்ன...

நான் இருக்கும் இடத்தில்... கொசு தொல்லை இல்லை...
ஆனால் வெளியில் புல்வெளியில் விளையாட சென்றால் வேறுவிதமான பூச்சிகள் இருக்கும்.

குளிர்காலத்தில் பொதுவாக ஒன்றும் இருக்காது.

பாம்பும் இங்கு இல்லை...

அமரன்
22-02-2007, 04:23 PM
இந்தியாவில்கூட, ஏதாவது ஒரு சக்தி மூலம் கொசுக்களை நீக்கிவிட்டால் அந்த இடத்தை ஈடுகட்ட வேறு ரத்தம் குடிக்கும் பூச்சி வந்துவிடும். எனவே நமது எதிரிகளை நாம் முற்றிலும் அழிக்க முற்படக்கூடாது மாறாக அவற்றை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயலவேண்டும் இல்லையேல் அதைவிட ஆபத்தான வேறு பிரச்னையில் சிக்கிவிடுவோம்.


விளக்கம் நன்று. இது மிகவும் நன்று.

ஆதவா
22-02-2007, 06:04 PM
சூரியனுக்கு ஈர்ப்பு விசை எவ்வாறு ஏற்படுகிறது?
காந்த விசையால் என்று நினைக்கிறேன்.. எங்கோ படித்த ஞாபகம். மறந்து போட்டுது.

mukilan
23-02-2007, 04:35 AM
நண்பரே! கனடாவில் நான் வாழ்கின்ற மாகாணத்தில் (சஸ்காட்சவன்) மிக அதிகமான குளிர். அப்படியிருந்தும் கோடை காலங்களில் கொசுக்களிடம் நான் கடி வாங்கியிருக்கிறேன். அது சாட்சாத் கொசுவேதான். எனக்கு தெரிந்த வரையில் நான் இதற்கான காரணமாகக் கருதக்கூடியது ஒன்றுதான். கொசுக்கள் பூச்சி வகையைச் சார்ந்தவைதான். கொசுக்கள் பல்கிப் பெருக முட்டையிடும் பொழுது நீரில்தான் முட்டையிடும். குளிர் பிரதேசங்களில் நீர்த்தேக்கங்கள் உறைநிலை அடையும் பொழுது அந்த முட்டைகள் பொரிந்து புழுக்கள் வளர முடியாது. ஆனால் கோடை காலங்களில் புழுக்கள் வளர்ந்து கொசுக்களாகி மனிதர்களைக் கடிக்கத்தான் செய்கின்றன.

ஷீ-நிசி
23-02-2007, 08:50 AM
சூரியனுக்கு ஈர்ப்பு விசை எவ்வாறு ஏற்படுகிறது?

சூரியனுக்கு மட்டுமல்ல, பூமி, நிலா, செவ்வாய், நட்சத்திரம் முதலான எல்லா ஆகாயப் பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை ஏற்படுவதன் காரணம் ஒன்றே. பொருளுக்கு நிறை இருப்பது எத்தனை சாத்தியமோ, அத்தனை நிச்சயமாக ஈர்ப்பு விசையும் இருக்கும். இதோ உங்கள் கையிலிருக்கும் பேனா, உங்கள் உடம்பு, உங்கள் வீடு... ஆகிய அனைத்திற்கும் ஈர்ப்பு விசை உண்டு. அவை உணர முடியாத அளவுக்கு பலவீனமாக இருக்கின்றன. இவை எல்லாம் கூடி பூமியாக இருக்கும்போது தொலைவிலுள்ள நிலாவைக் கட்டிப்பிடித்து இழுத்து சுற்றவைக்கும் பலம் கிடைத்து விடுகிறது.

நிலாவும் தன் பங்கிற்கு பூமியை இழுக்கத்தான் செய்கிறது. அதன் இழுப்புக்கு கடல் நீர் இடம் கொடுப்பதால் அது விம்மித்தணிந்து கடல் அலைகளாக மாறி கரையில் மோதுகின்றன. பொருளுக்கு... நிறையுண்டு, நிறையிருந்தால் அதற்கு ஈர்ப்பும் உண்டு.

ஷீ-நிசி
23-02-2007, 08:52 AM
மகா பிரளயத்தினால் பூமியில் நிலப்பகுதி, நீர்ப்பகுதி இடம்மாறி இருக்கிறதா?

அறிஞர்
23-02-2007, 01:39 PM
நண்பரே! கனடாவில் நான் வாழ்கின்ற மாகாணத்தில் (சஸ்காட்சவன்) மிக அதிகமான குளிர். அப்படியிருந்தும் கோடை காலங்களில் கொசுக்களிடம் நான் கடி வாங்கியிருக்கிறேன். அது சாட்சாத் கொசுவேதான். எனக்கு தெரிந்த வரையில் நான் இதற்கான காரணமாகக் கருதக்கூடியது ஒன்றுதான். கொசுக்கள் பூச்சி வகையைச் சார்ந்தவைதான். கொசுக்கள் பல்கிப் பெருக முட்டையிடும் பொழுது நீரில்தான் முட்டையிடும். குளிர் பிரதேசங்களில் நீர்த்தேக்கங்கள் உறைநிலை அடையும் பொழுது அந்த முட்டைகள் பொரிந்து புழுக்கள் வளர முடியாது. ஆனால் கோடை காலங்களில் புழுக்கள் வளர்ந்து கொசுக்களாகி மனிதர்களைக் கடிக்கத்தான் செய்கின்றன.
கூடுதலான தகவலுக்கு நன்றி முகிலன்.
முட்டைகள் பிரீஸாகி செயல் இழந்து.. வெயில் காலத்தில் செயல் பெறுவது அதிசயமே..

அறிஞர்
23-02-2007, 01:40 PM
மகா பிரளயத்தினால் பூமியில் நிலப்பகுதி, நீர்ப்பகுதி இடம்மாறி இருக்கிறதா?
ஒரு சில வாதத்தில் இடம் மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையில்.. நீர்பகுதி நிலப்பகுதியை ஆக்கிரமித்தது என்பதே உண்மை.

ஷீ-நிசி
23-02-2007, 03:09 PM
ஒரு சில வாதத்தில் இடம் மாறியிருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் உண்மையில்.. நீர்பகுதி நிலப்பகுதியை ஆக்கிரமித்தது என்பதே உண்மை.


இந்த பதில் உண்மைதான் அறிஞரே!

முகிலனின் தகவலுக்கு நன்றி...

ஷீ-நிசி
24-02-2007, 02:38 PM
மகா பிரளயத்தினால் பூமியில் நிலப்பகுதி, நீர்ப்பகுதி இடம்மாறி இருக்கிறதா?

ஆமாம். பிரளயத்தின் போது நிலம், நீர் ஆகியவற்றின் இடம் மாறுவதுண்டு. உலகப்படத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் வடதென் அமெரிக்காவின் கிழக்கு எல்லைகளை உன்னிப்பாகப்பாருங்கள். அடுத்து ஐரோப்பா, ஆப்ரிக்கா ஆகியவற்றின் மேற்கு எல்லை விளிம்புகளைப் பாருங்கள். நடுவில் உள்ள அட்லாண்டிக் கடலை நீக்கிவிட்டு இரண்டு விளிம்புகளையும் நெருக்கிப்பாருங்கள். அவை கிழித்துப்போட்ட காகித விளிம்புகள் அழகாக ஓட்டுவதுபோல ஓட்டும். ஆமாம். 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் நிலப்பகுதி இப்படித்தான் ஒரு திட்டாக இருந்து, பின் பிளந்து விலகி இன்றைய நிலையை அடைந்துள்ளது. நிலம் நகர்வதும், நீர் நிரம்புவதும் இந்த பூமியில் எப்போதும் நடந்தபடிதான் உள்ளது. ஒரு வேளை இதுதான் பிரளயமோ?

ஷீ-நிசி
24-02-2007, 02:41 PM
உப்பை அதிகமாக உட்கொண்டால் தண்ணீர் குடிக்க தவிப்பதற்கான காரணம் என்ன?

mukilan
24-02-2007, 03:03 PM
கூடுதலான தகவலுக்கு நன்றி முகிலன்.
முட்டைகள் பிரீஸாகி செயல் இழந்து.. வெயில் காலத்தில் செயல் பெறுவது அதிசயமே..

சிறு தவறு. என் தகவல் குழப்பி விட்டதென நினைக்கிறேன். உறைந்த முட்டைகள் பொரியுமா எனச் சந்தேகமே. நான் சொல்ல வந்தது கோடை வந்ததும் கொசுக்கள் நீரில் முட்டையிட்டு பொரிக்கும் என்று.

இளசு
25-02-2007, 11:53 AM
பயனுள்ள திரி தரும் ஷீ-நிசிக்கும்
அவரின் செயலூக்கி மோகனுக்கும்
உற்சாகப் பங்காற்றும் நண்பர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுகள்



உப்பை அதிகமாக உட்கொண்டால் தண்ணீர் குடிக்க தவிப்பதற்கான காரணம் என்ன?


குருதியில் உள்ள ப்ளாஸ்மா பொதுவாய் 285 மில்லிமோல் என்னும் ஆஸ்மோலாலிட்டி ( அடர்த்தி) -யில் துல்லியமாய் பராமரிக்கப்படுகிறது. இதில் முக்கிய அடர்த்தி சோடியம் தருவது.மீதியில் முக்கால் பங்கு க்ளோரைடு. உப்பை ( சோடியம் குளோரைடு) உண்டால், இந்த அடர்த்தி அதிகமாகும்.
( சர்க்கரை மிக அதிகமானாலும், சிறுநீரகக்கோளாறால் யூரியா அதிகமானாலும் இது கூடும்).

உப்புண்டவரின் அடர்த்தியான ப்ளாஸ்மா மூளையின் ஹைப்போதாலமஸில் உணரப்படும்போது, உடல் நீரைச் சேமிக்கவும்,
நீர் குடிக்க தாகமும் உருவாக செய்திகள் பிறப்பிக்கப்படும்..

கண்ணதாசன் - ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில்
மெல்லிசை மன்னர் குரலில் இப்படி ஒரு பாடல் தந்தார்:

உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்
தப்பைச் செய்தவன் தண்டனை கொள்வான்..

..

ஷீ-நிசி
25-02-2007, 12:16 PM
பயனுள்ள திரி தரும் ஷீ-நிசிக்கும்
அவரின் செயலூக்கி மோகனுக்கும்
உற்சாகப் பங்காற்றும் நண்பர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுகள்





குருதியில் உள்ள ப்ளாஸ்மா பொதுவாய் 285 மில்லிமோல் என்னும் ஆஸ்மோலாலிட்டி ( அடர்த்தி) -யில் துல்லியமாய் பராமரிக்கப்படுகிறது. இதில் முக்கிய அடர்த்தி சோடியம் தருவது.மீதியில் முக்கால் பங்கு க்ளோரைடு. உப்பை ( சோடியம் குளோரைடு) உண்டால், இந்த அடர்த்தி அதிகமாகும்.
( சர்க்கரை மிக அதிகமானாலும், சிறுநீரகக்கோளாறால் யூரியா அதிகமானாலும் இது கூடும்).

உப்புண்டவரின் அடர்த்தியான ப்ளாஸ்மா மூளையின் ஹைப்போதாலமஸில் உணரப்படும்போது, உடல் நீரைச் சேமிக்கவும்,
நீர் குடிக்க தாகமும் உருவாக செய்திகள் பிறப்பிக்கப்படும்..

கண்ணதாசன் - ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில்
மெல்லிசை மன்னர் குரலில் இப்படி ஒரு பாடல் தந்தார்:

உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்
தப்பைச் செய்தவன் தண்டனை கொள்வான்..

..

மிகச் சரியான பதில் இளசு அவர்களே!

என் வசமிருந்த பதில் இது...உப்பானது தண்ணீரை இழுக்கும் சக்தி கொண்டது. உப்பு மிகுந்த உணவையோ அல்லது தோசை போன்ற வறட்சியான மாவுப்பொருள் நிறைந்த உணவையோ சாப்பிட்டுவிட்டால் அதன் காரணமாக திசுக்களில் "ஆஸ்மாட்டிக்' அழுத்தம் உயர்கிறது. இதைப் பழையபடி குறைத்து சமன்படுத்த வேண்டுமானால் தண்ணீர் பருகியே ஆகவேண்டும். மூளையில் இதற்காக ஒரு தனி இடமே உள்ளது. இது எந்நேரமும் ரத்தம், உடல் திசு ஆகியவற்றில் ஏற்படும் ஆஸ்மாட்டிக் (சவ்வூடு பரவல்) அழுத்தத்தை கண்காணித்தபடியே இருக்கும். கூடினால் தாகத்தையும், குறைத்தால் சிறுநீர் அல்லது வியர்வை வெளிப்பாட்டையும் செய்து சமன்படுத்தி வைக்கும் நம் உடம்பு இத்தனை அறிவாக செய்கிறதே, நாம் அத்தனை அறிவாக இருக்கிறோமா?

இளசு
25-02-2007, 12:20 PM
நன்றி ஷீ-நிசி.

வெயிலாலும், கடின உழைப்பாலும் அதிக வியர்வை வெளியாகும்.
இந்த வியர்வையில் அதிகம் நீர். கொஞ்சம் சோடியம் க்ளோரைடு.
அதனால் ப்ளாஸ்மா அதிக நீர் இழப்பால் அடர்த்தி கூடும்.
அதனால் நீர் அதிகமான பானங்கள் அருந்த வேட்கை வரும்.

ஷீ-நிசி
25-02-2007, 12:25 PM
நன்றி ஷீ-நிசி.

வெயிலாலும், கடின உழைப்பாலும் அதிக வியர்வை வெளியாகும்.
இந்த வியர்வையில் அதிகம் நீர். கொஞ்சம் சோடியம் க்ளோரைடு.
அதனால் ப்ளாஸ்மா அதிக நீர் இழப்பால் அடர்த்தி கூடும்.
அதனால் நீர் அதிகமான பானங்கள் அருந்த வேட்கை வரும்.

நல்லதொரு கூடுதல் விளக்கம் நண்பரே!

ஷீ-நிசி
25-02-2007, 12:26 PM
அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா?

ஷீ-நிசி
26-02-2007, 01:59 PM
அழுவதால் மனச்சுமை குறையும் என்பது உண்மையா?

ஆமாம். மூளையில் பற்பல மன உணர்வுகளுக்கென்று கெமிக்கல்கள் உள்ளன. அழுது முடியும்போது இந்த கெமிக்கல்கள் மறைவதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது. வேறு ஒரு நிகழ்ச்சியால், வேறு ஏதாவது மன உணர்வு தோன்றும் வரை அந்த நிம்மதி நீடிக்கும். நம் மனதில் பொங்கித் ததும்பி அலை மோதும் உணர்வுகள் யாவும் எண்ணங்களால் தூண்டப்படும் கெமிக்கல்களின் தாக்கங்களால் ஏற்படுபவையே கோபம் என்ற உணர்வு வசத்திலிருக்கும் போது உண்மையில் மூளையில் அதற்கான கெமிக்கலின் ஆதிக்கம் நிலவுகிறது. அதன் ஆதிக்கம் நீடிக்கும் வரை மனதில் கோபம் தணியாது மனம் சமாதானமடையாது. கெமிக்கல்களின் அளவு, நீடித்திருக்கும் நேரம் பொறுத்து ஒருவரது சோகம், கோபம் முதலான உணர்வுகள் நிலைக்கும்.

ஷீ-நிசி
26-02-2007, 02:03 PM
உடலின் உள்ளே செல்லும் காற்றிலிருந்து ஆக்சிஜனை மாத்திரம் சுவாச உறுப்பு எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது?

அறிஞர்
26-02-2007, 02:08 PM
சிறு தவறு. என் தகவல் குழப்பி விட்டதென நினைக்கிறேன். உறைந்த முட்டைகள் பொரியுமா எனச் சந்தேகமே. நான் சொல்ல வந்தது கோடை வந்ததும் கொசுக்கள் நீரில் முட்டையிட்டு பொரிக்கும் என்று.
மூட்டை பொரிக்க வெப்ப நிலை முக்கியமானது.

பல உயிரியல் ஆய்வகங்களில், சோதனைப்பொருட்கள் அதிக குளிர் சாதனங்களில் பாதுகாக்கப்படுகிறது. ஒன்று அழிந்து போகாமல் இருக்க, மற்றொன்று அதனுடைய தன்மை அழிந்து போகாமல் இருக்க.

வெயில் காலத்தில் கொசுக்கள் புதிதாக பறந்து வந்து முட்டையிடுகின்றனவா... என கேள்வி எழும்பும். உறைந்த முட்டைக்கு, பொரிக்கும் தன்மை உண்டா என்பது கேள்விக்குறி.. தெரிந்தவர்கள் பதில் சொல்லட்டும்.

ஷீ-நிசி
27-02-2007, 03:43 PM
உடலின் உள்ளே செல்லும் காற்றிலிருந்து ஆக்சிஜனை மாத்திரம் சுவாச உறுப்பு எவ்வாறு தேர்ந்தெடுக்கிறது?

உடலின் உள்ளே செல்லும் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து எடுப்பது சுவாச உறுப்பாகிய நுரையீரல் அல்ல. ரத்தம்தான் ரத்தத்திலுள்ள சிவப்பு செல்களிலுள்ள ஹீமோகுளோபினில் உள்ள ஹீம் என்ற பொருளில் புதைந்துள்ள இரும்பு அணுதான் சுவாசக்காற்றிலுள்ள ஆக்சிஜனை காந்தம் போல் கவர்ந்து இழுத்துக்கொள்கிறது. பூச்சிகளில் இந்த வேலையைச் செய்யும் அணு இரும்பு அல்ல செம்பு! அதனால் அவற்றின் ரத்தம் வெளிர் பச்சை அல்லது மெல்லிய நீலம் பாதித்த வெண்திரவமாக இருக்கும்.

ஷீ-நிசி
27-02-2007, 03:44 PM
விலங்குகளுக்கு எய்ட்ஸ் வருமா?

ஆதவா
27-02-2007, 03:51 PM
பகலில் செல்லும் விமானங்கள் எழுப்பு ஒலி இரவில் கேட்பதில்லை ஏன்?/// தெரிந்தவர்கள் விடை சொல்லவும்.

ஷீ-நிசி
27-02-2007, 03:57 PM
பகலில் செல்லும் விமானங்கள் எழுப்பு ஒலி இரவில் கேட்பதில்லை ஏன்?/// தெரிந்தவர்கள் விடை சொல்லவும்.

நல்ல கேள்வி.... அதானே ஏன்??

ஆதவா
27-02-2007, 04:07 PM
நல்ல கேள்வி.... அதானே ஏன்??

தெரியவில்லை.... யாராவது சொல்லுங்கள்

அறிஞர்
27-02-2007, 04:48 PM
விலங்குகளுக்கு எய்ட்ஸ் வருமா?
வராது... நோய் கிருமியின் மூலக்கூறுகள் மனிதருக்குதான் நோயை உண்டு பண்ணும். விலங்குக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தாது.

அவைகளுக்கு வேறு வித்தியாசமான நோய்கள் இருக்கும்.

அறிஞர்
27-02-2007, 04:49 PM
பகலில் செல்லும் விமானங்கள் எழுப்பு ஒலி இரவில் கேட்பதில்லை ஏன்?/// தெரிந்தவர்கள் விடை சொல்லவும். இது அறிவியல் பூர்வமாக கேட்கிறீர்கள்..

இல்லாவிட்டால் என் பதில்
1. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால்.
2. பகலில் செல்லும் விமானத்தின் சத்தம் பகலில் தான் கேட்கும். இரவில் எப்படி கேட்கும்.:rolleyes: :rolleyes: :rolleyes:

ஷீ-நிசி
28-02-2007, 02:43 PM
விலங்குகளுக்கு எய்ட்ஸ் வருமா?

ஆப்ரிக்காவில் வாழும் ஒரு குரங்குகளில் இருந்து வந்த வைரஸ் திடீரென்று ஒரு மாறுதல் அடைந்து, மனித உடலில் நுழையும் ஆற்றலைப் பெற்றுவிட்டது. மனிதரிடம் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்த எச்.ஐ.வி. 1980ல் மனிதரின் உறவுமுறை மூலம் வேகமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது. மறுபடியும், எச்.ஐ.வியின் ஒரு வகை வேறு ஒரு விலங்கினுள் நுழையும் வாய்ப்பு இருக்கிறது.

வேற்று இனத்தில் நுழைவது அபூர்வம் ஆனால் ஒரே இனத்தில் பரவுவது வாடிக்கை.

ஷீ-நிசி
28-02-2007, 02:45 PM
21. திரவ நைட்ரஜனில் குளிர்வித்தல் என்றால் என்ன?

ஷீ-நிசி
01-03-2007, 03:06 PM
21. திரவ நைட்ரஜனில் குளிர்வித்தல் என்றால் என்ன?

நைட்ரஜனை ஒரு மந்தமான வாயு போட்டு குளிர்வித்தால் மைனஸ் 196 டிகிரி வெப்பம் கிடைத்தாலும் இது கொதித்துவிடும். திரவ நைட்ரஜனை தெர்மாஸ் குடுவை யில்தான் மூடி வைத்திருக்கவேண்டும். திறந்துவிட்டால் நொடிப் பொழுதில் கொதித்து ஆவியாகிவிடும். சட்டென்று ஒரு பொருளை குளிர்விக்க வேண்டுமானால் அதை திரவ நைட்ரஜனில் முக்கி எடுத்தால் பேதும். அது உறைந்து உலர்ந்துவிடும். அதிலுள்ள ஈரம் கூட குளிரில் பதங்கமாகிவிடும். விந்து செல்கள், பாக்டீரியா, வைரஷ் போன்ற உயிருள்ள பொருட்களை நீண்ட நாட்கள் வளராமல், உறைந்த நிலையிலேயே காப்பாற்றி வைக்க திரவ நைட்ரஜன் உதவுகிறது.

ஷீ-நிசி
01-03-2007, 03:07 PM
22. நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை முகர்ந்தால் அழுமூஞ்சிகள் கூட வாய்விட்டுச் சிரிப்பார்களா?! அப்படியென்றால் அது எப்படி?

இளசு
01-03-2007, 09:07 PM
22. நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை முகர்ந்தால் அழுமூஞ்சிகள் கூட வாய்விட்டுச் சிரிப்பார்களா?! அப்படியென்றால் அது எப்படி?

இன்னொரு நைட்ரஜன் கேள்வியா ஷீ-நிசி..

முந்தைய வினா படித்தவுடன் என் பெரியப்பா (கால்நடை மருத்துவத்துறை)வுடன் என் பத்தாவது வயதில் பெங்களூர் சென்று திரவ நைட்ரஜன் வாங்கி வந்த பயணத்தின் நினைவு..

(அப்போ எனக்கு விவரம் பத்தாது - காளைகளின் ஆண்சக்தி சேமிப்புக்கு என்று பின்னாளில் தெ(ளி)ரிந்தேன்)


-------------------------------------
Laughing Gas -நைட்ரஸ் ஆக்சைடு ஒரு சிறுவர் பள்ளியறை விளம்பரக்காட்சியில் வரும்..

இதை பிரசவம், எண்டோஸ்கோப்பி, பல் சிகிச்சையில் வலிமரப்பியாக
பயன்படுத்துகிறார்கள்.

கொஞ்சம் ஃபுளூரேன் கலந்து பொது மயக்கம் ( அறுவை சிகிச்சைக்காக) கொடுக்கலாம்.

'பொழுதுபோக்கிகள்' உற்சாக மனநிலை அடைய, ? வம்பாய் சிரித்து மகிழ.. (சட்டப்புறம்பான)
பயன்படுத்தலும் உண்டு..

இவை எல்லாமே இது நியூரான்களை மழுங்கச் செய்வதால் விளையும் வினைகள்...

நான் பார்த்த நோயாளிகள் - ஏனோ இதுவரை இதைச் சுவாசித்து
சிரித்ததில்லை..:)

(இந்த வாயுவும் குளிர்ந்து இருக்கும்.. ஒரு 'வழங்கி' மூலம் வெதுவெதுப்பாக்கிதான் சுவாசிக்க தரணும்.. நேராய் சேமிப்பு கேனில் இருந்து அல்ல..)

ஷீ-நிசி
02-03-2007, 02:58 AM
இன்னொரு நைட்ரஜன் கேள்வியா ஷீ-நிசி..

முந்தைய வினா படித்தவுடன் என் பெரியப்பா (கால்நடை மருத்துவத்துறை)வுடன் என் பத்தாவது வயதில் பெங்களூர் சென்று திரவ நைட்ரஜன் வாங்கி வந்த பயணத்தின் நினைவு..

(அப்போ எனக்கு விவரம் பத்தாது - காளைகளின் ஆண்சக்தி சேமிப்புக்கு என்று பின்னாளில் தெ(ளி)ரிந்தேன்)


நானும் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்போதுதான் தெரிந்துக்கொண்டேன் இளசு அவர்களே!... (இது சிலவற்றை பாதுகாத்திட உதவும் என்று)

ஷீ-நிசி
02-03-2007, 03:06 PM
22. நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை முகர்ந்தால் அழுமூஞ்சிகள் கூட வாய்விட்டுச் சிரிப்பார்களா?! அப்படியென்றால் அது எப்படி?

நைட்ரஸ் ஆக்சைடு சிரிப்பு மூட்டும் வாயு என்பது பொய். ஏற்கனவே சிரிக்கும் "மூட்' இருந்தால் இந்த வாயு அதை மிகைப்படுத்தி செய்விக்கும். நம் ரத்தத்தில் சதா நேரமும் இந்த வாயு கலந்து ஓடியபடி தான் உள்ளது. உடலில் ரத்த நாளங்களை அகற்றி விரித்து வைக்க இந்த வாயு அவசியம் நம் உடலே இதை உற்பத்தி செய்தவண்ணமிருக்கிறது.

விளம்பரம், சினிமா ஆகியவற்றில் இதுபற்றி சொல்லப்படும் விஷயங்களெல்லாம், யாரோ என்றைக்கோ தப்பாகச் சொல்லி வைத்ததின் அடிப்படையில் உருவானவை. நகரத்தில் தினமும் ஏகப்பட்ட நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை வாகனப் புகை மூலம் சுவாசித்துக் கொண்டுதான் உள்ளனர். யாரும் "டிராஃபிக்' ஜங்ஷனில் விழுந்து விழுந்து சிரிப்பதாகத் தெரியவில்லையே.

ஷீ-நிசி
02-03-2007, 03:07 PM
23. கருவுற்ற பெண்கள் மாங்காய் விரும்பிச் சாப்பிடுவது ஏன்?

இளசு
03-03-2007, 10:26 AM
ஷீ-நிசி..

வம்பான ஆளப்பா நீங்கள்..
எதையாவது எழுத வைத்துவிடுகிறீர்கள்..


------------------------------

கர்ப்பம் ( ஹார்மோன்கள்), இரும்பில்லா சோகை, சில மனப்பிறழ்வுகள்

இவற்றில் சுவை வக்கரிக்கும்...

சாம்பல் , பலப்பம், மண், புளித்த மாங்காய் - இவைக்காக வெறியான ஏக்கம் வரும்..

ஆதார நோய் அல்லது பருவம் மாற - இவை மறையும்..

--------------------------------------

இதைப்போல் பெட்ரோல் வாசம் , தீக்குச்சி உரசும் வாசத்துக்கும் ஏங்கும் நிலையும் சிலருக்கு வரும் -போகும்..!

பென்ஸ்
03-03-2007, 10:54 AM
பகலில் செல்லும் விமானங்கள் எழுப்பு ஒலி இரவில் கேட்பதில்லை ஏன்?/// தெரிந்தவர்கள் விடை சொல்லவும்.

ஆதவா...
படுத்தவுடன் உறங்கிவிடும் ஒரு சிறப்பான வரம் எனக்கு...
அதுவும் ஆழ்ந்த தூக்கம் இருக்கும்....

அலுவலகத்திலும், வேளியிலும் உளயியல் ஆலோசனை சொல்லும் போது நண்பர்கள் பலர் உறக்கமின்மைதான் காரணமாக வருவர்... பணி அழுத்தம், stress போன்றவற்றால் இவர்கள் உறக்கமின்மை கொண்டவர்கள்...

இவர்கள்... இரவில் நாய் குலைப்பது, ரயில் ஓட்டம், விமான ஓட்டம், எல்லாம் கவணிப்பார்கள். நான் உறங்கவில்லை என்பதை நான் ஊர்ஜித படுத்தி கொள்ள இதை உதாரணமாக சொல்லுவர்.

எ.கா. "நைட்டு ஒரே நாய் சத்தம், கள்ளன் வந்துட்டானோ என்று எட்டி பாத்தேன்.. எதுவும் இல்லை, வேளியே போயி பாத்தேன்... எதுவும் இல்லை, வந்து பாத்தேன் மனி 3:00, என்னவோ தெரியலை உறக்கமே வரலை"
இந்த வாக்கியம், நான் உறங்கவில்லை, நான் தைரியமானவன், நான் பிரச்சினையில் இருக்கிறேன், என்று பல செய்திகளை கொடுத்தாலும்... அவர்களது முதல் நோக்கம், நான் உறங்கவில்லை என்பதை ஊர்ஜிதபடுத்துவதில் தான் இருக்கும்.

சரி.. விஷயத்துக்கு வருவோம்....
விமான சத்தம் நீங்க கேட்டதில்லையா... அப்ப நீங்களும் லக்கிதான்...

மயூ
03-03-2007, 11:00 AM
இதைப்போல் பெட்ரோல் வாசம் , தீக்குச்சி உரசும் வாசத்துக்கும் ஏங்கும் நிலையும் சிலருக்கு வரும் -போகும்..!
என் பல்கலைக்கழகத் தோழி ஒருத்தி மாக்கர் பென்னில் வரும் ஒரு வித மணத்தை விரும்பி நுகர்ந்து கொண்டு இருப்பார். எவ்வளவுதான் பேசினாலும் கேட்க மாட்டார்.
எல்லாம் ஹார்மோன் மற்றும் மனத்தின் விளையாட்டுக்களோ?:confused:

ஷீ-நிசி
04-03-2007, 02:46 AM
இளசு அவர்களின் பதில் ஒரு வகை....

23. கருவுற்ற பெண்கள் மாங்காய் விரும்பிச் சாப்பிடுவது ஏன்?

கருவுற்ற பெண்களுக்கு சுவை, வாசனை ஆகிய இரண்டு உணர்வுகளும் மிகவும் கூர்மையாகிவிடுவதுடன் கொஞ்சம் மாறுபட்டும் இருக்கும். இதன் காரணமாக சில வாசனைகள் குமட்டலையும், சில சுவைகள் நாக்குக்கு இன்பமாகவும் இருக்கும்.

வளரும் சிசுவிற்கு அப்போது மூளை உருவாகிக் கொண்டிருக்கும் நேரமாதலால் அதற்கு அவசியமான உணவை ஏற்கவும், பாதகம் தரக்கூடிய காரம், கசப்பு வகை உணவு வகைகளை தவிர்க்கவும் இந்த ஏற்பாடு.

குமட்டல், வாந்தி ஆகியவற்றை தணிக்கவோ, நிறுத்தவோ செய்தால் உடலில் விஷம் ஏறிவளரும் குழந்தைக்கு கைகால் சூம்பியும், மூளை பாதிக்கப்பட்டும் இருக்கும் இயற்கையை இயற்கையாக விட்டுவிடுவதே நல்லது.

ஷீ-நிசி
04-03-2007, 02:48 AM
24. விண்வெளி வீரர்கள் சாதாரண உடை அணிந்து சென்றால் ரத்தநாளம் வெடித்துவிடும் என்பது உண்மையா?

ஷீ-நிசி
06-03-2007, 02:50 PM
24. விண்வெளி வீரர்கள் சாதாரண உடை அணிந்து சென்றால் ரத்தநாளம் வெடித்துவிடும் என்பது உண்மையா?

ஆமாம் பூமியில் அல்ல... விண் வெளியில்! விண் வெளியானது வெற்றிடமல்லவா? வெற்றிடத்தில் ஒருவரைத் துக்கிப் போட்டால் அவர் "பாம்' போல வெடித்துவிடுவார் செல்களுக்குள் இருக்கும் அழுத்தம் விடுபட்டு செல்கள் வெடித்துவிடும். இதன் ஆரம்பக்கட்டமாக ரத்தநாளங்கள் விரிந்து வெடிக்கும். ஆகவே "பாஸிடிவ்' அழுத்தம் தரும் காற்று நிரப்பிய உடையை அணிகிறார்கள்.

நிலாவில் எடை தெரியாது என்பதால் 180 கிலோ எடையுடைய உடையை சுலபமாக துக்கிக் கொண்டார்கள். செவ்வாயில் அது முடியாது என்பதால் உடம்பை இறுக்கிப்பிடிக்கும் "டைட்' உடையை தயாரித்துள்ளனர். இது பூமியில் உள்ள காற்றழுத்தத்திற்குச் சமமான அழுத்தத்தை உடல்முழுவதும் தரும்.

ஷீ-நிசி
06-03-2007, 02:52 PM
25. வற்றிய குளம் குட்டைகளில் நீர் நிரம்பிய உடன் உயிரினங்கள் தோன்றுவது எவ்வாறு?

இளசு
07-03-2007, 05:09 PM
கொடிமலரின் விதைகள், மீன் வகையின் முட்டைகள்
'ஸ்போர்' எனப்படும் வடிவம் கொண்டு வன்கொடுமைகளாம்
கோடை, பசி, நீர் வறட்சியைத் தாங்கி நீடித்து
உயிர்க்கருவை மட்டும் தேக்கி வாழ்கின்றன..

பருவம் சாதகமானதும் அவற்றின் ஜாதகம் மாறி
வழக்கமான வடிவம் கொண்டு வளர்ந்து பல்குகின்றன..



காய்ந்த சினையும் மீன்களாகும்..
கருணை வெள்ளம் பாய்ந்ததும்..

அமரன்
07-03-2007, 05:43 PM
25. வற்றிய குளம் குட்டைகளில் நீர் நிரம்பிய உடன் உயிரினங்கள் தோன்றுவது எவ்வாறு?
கொடிமலரின் விதைகள், மீன் வகையின் முட்டைகள்
'ஸ்போர்' எனப்படும் வடிவம் கொண்டு வன்கொடுமைகளாம்
கோடை, பசி, நீர் வறட்சியைத் தாங்கி நீடித்து
உயிர்க்கருவை மட்டும் தேக்கி வாழ்கின்றன..

பருவம் சாதகமானதும் அவற்றின் ஜாதகம் மாறி
வழக்கமான வடிவம் கொண்டு வளர்ந்து பல்குகின்றன..



ஆஹா. அபாரம். அற்புதம். வாழ்த்துக்கள்

இளசு
07-03-2007, 05:46 PM
நன்றி நக்கீரன்

(உற்சாகமூட்டுவதில் உங்களிடம் பாடம் கற்கணும் நான்..
வஞ்சனை வைக்காமல் வாழ்த்தும் உங்களுக்கு
நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி..)

ஷீ-நிசி
09-03-2007, 01:03 PM
பதில் மிகச்சரியானது இளசு அவர்களே!

25. வற்றிய குளம் குட்டைகளில் நீர் நிரம்பிய உடன் உயிரினங்கள் தோன்றுவது எவ்வாறு?


குளத்தில் நீர் வற்ற ஆரம்பிக்கும் முன்னரே பூச்சிகள் இனப்பெருக்கம் செய்து கொண்டு அதிக முட்டைகளை கெட்டி பூட்டுடன் உருவாக்கி பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றன. பாசிகள் யாவும் ஸ்பேர்களாக மாறிவிடுகின்றன. தவளை, நத்தை முதலியவை சளி போன்ற தடிமனான சவ்வு மூலம் தம்மை மூடிக் கொண்டு குளத்தின் தரையில் பள்ளம் தோண்டி புதைந்து கொள்கின்றன.

ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டு கழித்து மழை பொழிந்து குளம் நிரம்பியதும், எல்லா ஜீவராசிகளும் உறக்கம் களைந்து முளைத்தெழுந்து கொள்கின்றன.

ஷீ-நிசி
09-03-2007, 01:04 PM
26. சந்திர கிரகணத்திற்கும் அமாவாசைக்கும் என்ன வேறுபாடு?

மயூ
09-03-2007, 01:08 PM
சந்திர கிரகணத்தில் சந்திரன் மொத்தமாக மறைந்து சிறிது நேரத்தில் தோன்றும். அமாவாசையில் சந்திரன் முற்றாக அன்றய தினம் முழுவதும் மறைந்திருக்கும்.

அறிஞர்
09-03-2007, 01:22 PM
சந்திர கிரகணத்தில் சந்திரன் மொத்தமாக மறைந்து சிறிது நேரத்தில் தோன்றும். அமாவாசையில் சந்திரன் முற்றாக அன்றய தினம் முழுவதும் மறைந்திருக்கும்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லலாமே..
சூரியன், சந்திரன், பூமி.. ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்... சந்திரகிரகணம் அன்று... அப்படிதானே.

ஷீ-நிசி
10-03-2007, 12:48 PM
26. சந்திர கிரகணத்திற்கும் அமாவாசைக்கும் என்ன வேறுபாடு?

சந்திரகிரகணம் முழு பவுர்ணமி அன்று ஏற்படும் நிகழ்ச்சி. பூமியின் நிழல் ஆகாயத்தில் விழுந்து இருக்கும்போது முழுமதியானது குறுக்கே புகுந்து இருண்டு போகிறது. இதுதான் சந்திரகிரகணம்! அமாவாசை என்பது கிரகணமல்ல நிலாவின் ஒளிபடாத நிலையை மாதமொரு நாம் முறை காணும் நிகழ்ச்சி.

ஷீ-நிசி
10-03-2007, 12:50 PM
27. தூங்கிக் கொண்டிருக்கும் போது நம்மையும் அறியாமல் உடல் உலுக்குகிறதே, காரணம் என்ன?

மயூ
10-03-2007, 04:39 PM
வீதியில் ஓடிக்கொண்டு இருப்பது போல கனவு காண்போம் திடீரென வாகனம் முன்னால் வந்து மோத நிசத்திலே விழுவது போல உடம்பு ஒரு தடவை குலுங்கி ஓயும் ஏன் என்றுதான் தெரியவில்லை...
பதிலுக்காகக் காத்திருக்கின்றேன்...

ஓவியா
10-03-2007, 05:28 PM
27. தூங்கிக் கொண்டிருக்கும் போது நம்மையும் அறியாமல் உடல் உலுக்குகிறதே, காரணம் என்ன?

அட தக்க சமயத்தில் இந்த கேள்வி வந்தது, எனக்கும் அதே கேள்விதான் ஏன் துங்கும் பொழுது இப்படி என்று ..........

(கனவுலே யாரவது ரோசாபூவோட வந்த இதெல்லாம் நடக்குமா :D,
இல்ல பயத்திலே தூக்கி வாரி போடும்னு ஒரு வரி எங்கோ கேட்ட ஞாபகம், அதேன் :D, கொஞ்ச நாளவே......ம்ம்ம் வாணம் :D ?)

மன்மதன்
10-03-2007, 06:25 PM
கனவில் வரும் செய்கையால்தான் உடம்பு தூக்கிப்போடுகிறது என்று நான் நினைத்திருக்க.. ஏதோ ஒரு புத்தகத்தில் நான் படித்தது.


நம் முன்னோர்கள் ஆதிகாலத்தில் மரங்களில் வசிக்கும் போது, தன் பிள்ளைகளை சுமந்துகொண்டு தாவுவார்களாம். அப்போது கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம் இரவில் தூங்கும் போதுகூட வருமாம். அதனால்தான் இப்படி தூக்கிபோடுமாம்.. அது இப்பொழுதும் தொடர்கிறதாம்.. உண்மையா இருக்குமோ??

இளசு
11-03-2007, 08:08 AM
மன்மதனின் விளக்கம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்..

உறக்கத்தில் ஆழும்போதும், மீளும்போதும் நெஞ்சை அமுக்குவது , யாரோ மார்பு மேலே உட்கார்வது மூச்சடைப்பது முதல் ( ரத்தக்காட்டேரி, மோகினி)
தத்ரூப பயமூட்டும் கனவுகள், விழுவது போன்ற உடல் தூக்கிப்போடுதல், கைகால் சில நொடிகள் செயலிழந்து போதல்

இவை எல்லாமே 'நார்மல்' உடலியல் வினைகள்..

http://en.wikipedia.org/wiki/Hypnagogia


உறக்கத்தும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில்
மூளை செய்துகொள்ளும் சில சுய 'எகசர்சைஸ்' விளைவுகள் இவை.

.

மன்மதன்
11-03-2007, 08:41 AM
எனக்கு ஒரு தடவை இப்படித்தான் நிகழ்ந்தது. ஒரு உருவம் கதவை திறந்து வந்து என் மீது அமர்ந்து தலையணையை என் முகத்தின் மீது வைத்து அழுத்தியது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நான் விழித்துக்கொண்டேன். அந்த அறை அது வரை கவனிப்பாரற்று குடவுனாக இருந்தது. அன்றுதான் அந்த அறையை ஆபிஸாக என் நண்பன் மாற்றியிருந்தான்...

இளசு
11-03-2007, 08:48 AM
மன்மதன்

அப்புறம் எத்தனை பேர் ஆவி, பூதம் எனப் பீதியைக்கிளப்பி
பரிகாரம் பூசை செய்யச் சொன்னார்கள்? அதைச் சொல்லுங்கள்..

ஷீ-நிசி
11-03-2007, 08:56 AM
எனக்கு ஒரு தடவை இப்படித்தான் நிகழ்ந்தது. ஒரு உருவம் கதவை திறந்து வந்து என் மீது அமர்ந்து தலையணையை என் முகத்தின் மீது வைத்து அழுத்தியது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நான் விழித்துக்கொண்டேன். அந்த அறை அது வரை கவனிப்பாரற்று குடவுனாக இருந்தது. அன்றுதான் அந்த அறையை ஆபிஸாக என் நண்பன் மாற்றியிருந்தான்...

ஏதோ ஒருவித பயத்துடன் தூங்கியிருப்பீர்கள் போலும்....

இளசு
11-03-2007, 08:59 AM
ஏதோ ஒருவித பயத்துடன் தூங்கியிருப்பீர்கள் போலும்....

இல்லை புது ஆபீஸ் திறப்பு விழா பார்ட்டிக்குப் பின்னான தூக்கமா????!!!!;)

ஷீ-நிசி
11-03-2007, 09:17 AM
27. தூங்கிக் கொண்டிருக்கும் போது நம்மையும் அறியாமல் உடல் உலுக்குகிறதே, காரணம் என்ன?

நாம் துங்கிக்கொண்டிருக்கும்போது மூளை துங்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறது. கழுத்துப் பகுதியில் மூளையிலிருந்து இறங்கும் தண்டுவடத்தில் "ரெட்டிகுலேட்' என்ற இடத்தில் ஒரு பூட்டு இருக்கிறது. இது பூட்டப்பட்டதும் உடல் மரக்கட்டைபோல் கிடக்கிறது.

இருப்பினும் கனவுலகில் நாம் ஆடி, ஓடி, சண்டைபிடித்து, விழுந்து, எழுந்து கொண்டிருப்போம். அந்த ஆட்டமெல்லாம் படுத்துக்கிடக்கும் நம் உடலில் ஏற்பட்டால் ராத்திரியில் எல்லோர் வீடுகளிலும் அவரவர் கனவு இஷ்டப்படி நடமாடிக்கொண்டிருப்போம்! அதனால்தான் இந்த உடல்பூட்டு.

சில சமயம் சாவித்துவாரம் வழியாக காற்று கசிவதுபோல கனவின் ஆட்டம் உடம்பிலும் நிகழ்ந்துவிடும். அப்போது உடலில் ஒரு உலுக்கல் ஏற்படும். நல்ல வேளை உடல்பூட்டு இருப்பதால் நாமெல்லோரும் தப்பித்தோம். இல்லாவிடில் கனவில் என்ன செய்கிறோமோ, அதை எல்லாம் கண்மூடியபடியே செய்து கொண்டிருப்போம்.

ஷீ-நிசி
11-03-2007, 09:35 AM
28. பயறு வகைகள் மற்றம் மாங்கனி போன்றவற்றில் வண்டுகள் தோன்றுவது எவ்வாறு?

மன்மதன்
11-03-2007, 10:47 AM
மன்மதன்

அப்புறம் எத்தனை பேர் ஆவி, பூதம் எனப் பீதியைக்கிளப்பி
பரிகாரம் பூசை செய்யச் சொன்னார்கள்? அதைச் சொல்லுங்கள்..

செலவில்லாமல் முடிந்தது..;)

மன்மதன்
11-03-2007, 10:48 AM
28. பயறு வகைகள் மற்றம் மாங்கனி போன்றவற்றில் வண்டுகள் தோன்றுவது எவ்வாறு?


துளையிட்டு உள்ளே செல்லும்தானே!

பென்ஸ்
11-03-2007, 12:05 PM
28. பயறு வகைகள் மற்றம் மாங்கனி போன்றவற்றில் வண்டுகள் தோன்றுவது எவ்வாறு?

மகரந்தசேர்க்கையிம் போதே முட்டியிடும் பூச்சிகள் அது பழமானாலும் அதன் உள்ளே இருந்து வளரும்...

ஷீ-நிசி
14-03-2007, 02:33 PM
மன்மதன், பெஞ்சமின் உங்கள் விடைகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்... பென்ஸின் பதில் கொஞ்சம் ஒத்துப்போகிறது என்று நினைக்கிறேன்

28. பயறு வகைகள் மற்றம் மாங்கனி போன்றவற்றில் வண்டுகள் தோன்றுவது எவ்வாறு?

பயறுகள் வயல்களிலிருந்து அறுவடை செய்யப்படும் போதே வண்டுகளின் முட்டைகளும் சேர்ந்து வந்துவிடுகின்றன. காயவைத்து, புடைத்து, மூட்டைகளில் அடைத்து கடைக்கு வரும் வரை அவை முட்டைகளாக பருப்புடன் கலந்து வந்துவிடுகின்றன. வீட்டில் டின் அல்லது பாட்டில்களில் மூடி வைக்கும்போது அவை பொரித்து வெளிவந்து மறுபடியும் இனப்பெருக்கம் செய்கின்றன. இதெல்லாம் இல்லாவிட்டால் குருவி, கோழி போன்ற பட்சிகளுக்கு யார் சாப்பாடு போடுவார்கள். மாம்பழக் கொட்டையில் வாசம் செய்யும் வண்டுகள், மாம்பூ கருவுறும்போதே அவற்றின் தாய் வண்டுகளால் இடப்படும் முட்டையாக வந்து புகுந்து கொள்கின்றன. பூ, காயாகி, கனியாகி சமையலறையில் பத்தைகளாக வெட்டப்படும் போது கொட்டைக்குள் பொரித்து பருப்பை தின்று வளர்ந்த வண்டு வெளிப்படுகிறது.

ஷீ-நிசி
14-03-2007, 02:36 PM
29. மனிதனால் ஏன் ஆமையைப் போல அதிகநாள் வாழ முடிவதில்லை?

அறிஞர்
14-03-2007, 06:45 PM
29. மனிதனால் ஏன் ஆமையைப் போல அதிகநாள் வாழ முடிவதில்லை?
உடலில் உள்ள உறுப்புகள், உண்ணும் உணவு முறையா... ஆமைக்கு உள்ள ஓடு போல் இல்லை என்பதுவா...

(நல்ல வேளை ஈசல் மாதிரி வாழ்க்கை இல்லையே)

ஷீ-நிசி
15-03-2007, 03:25 PM
29. மனிதனால் ஏன் ஆமையைப் போல அதிகநாள் வாழ முடிவதில்லை?

ஆமைபோல அதிராமல், ஆமை வேகத்தில் நிதானமாக செயல்பட்டால் அதைப் போல் அதிகநாள் வாழலாம். ஆசாபாசம், கோபம், சந்தேகம், குரோதம் முதலான மனப் போராட்டங்களில் வாழும் மனிதனுக்கு ஆயுள் குறைவாகவே இருக்கிறது. எண்பது ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, ஐம்பது ஆண்டுகளில் அனுபவிக்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப ஆயுளும் குறைந்து தான் இருக்கும்.

பாலுட்டிகளிலேயே அதிக ஆயுளுடன் வாழும் மிருகங்களில் மனிதன் முதலாவதாக இருக்கிறான். இப்போதிருக்கும் சராசரி வயதாகிய 75 ஆண்டுகளே மிகவும் அதிகம்.

ஷீ-நிசி
15-03-2007, 03:29 PM
30. நாம் கண்ணுக்குப் போடும் கண்ணாடி எந்தப் பொருளால் ஆனது. அது எப்படி போட்டவுடன் நம்மால் பார்க்க முடிகிறது?

மயூ
16-03-2007, 02:22 AM
அதுதானே கண்ணாடி என்று கேள்வியிலையே விடை இருக்கின்றது....
அதாவது கண்ணாடி வில்லைகளைப் பயன்படுத்தி அவரவர் தேவைக்கேற்ப குவிவுகளை மாற்றுவதன் மூலம் கண்களுக்கு கண்ணாடி பார்க்க உதவுகின்றது..
இப்போது கண்ணாடி பிளாத்திக்கிலும் வருகின்றது!!!

ஷீ-நிசி
16-03-2007, 03:47 AM
மிகச்சரியான பதில் மயூ....

ஷீ-நிசி
20-03-2007, 02:52 PM
30. நாம் கண்ணுக்குப் போடும் கண்ணாடி எந்தப் பொருளால் ஆனது. அது எப்படி போட்டவுடன் நம்மால் பார்க்க முடிகிறது?

கண்ணுக்கு அணியும் கண்ணாடியும் ஜன்னலுக்கப் போடும் கண்ணாடி போன்றதுதான். மிகவும் துய்மையாக, துசு தும்பு, மாசு மரு, காற்றுக் குமிழிகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உசத்தியான கண்ணாடி. இப்போது ரெசின் எனப்படும் எடையற்ற பிளாஸ்டிக் பொருளாலும் செய்யப்படுகிறது.

கச்சா கண்ணாடி வட்டமாக தடிமனாக வரும் அதை கண்களின் பவருக்கு ஏற்ப தேய்த்து குழி அல்லது குவி லென்சாக மாற்றுவார்கள். பின்னர் கண்ணாடி பிரேமுக்கு அளவாக விளிம்புகளை உடைத்து நீக்கிவிட்டு, முனைகளை மழு மழுப்பாக்கி பொருத்தித் தருவார்கள்.

ஷீ-நிசி
20-03-2007, 02:54 PM
31. குணத்தை மாற்றுமா ஜீன்? ஜீனை மாற்றினால் குணாதிசயம் மாறும் என்று சொல்கிறார்கள். முதலில் ஜீன் என்பதென்ன? அது எப்படி இருக்கும்?

மயூ
20-03-2007, 04:53 PM
31. குணத்தை மாற்றுமா ஜீன்? ஜீனை மாற்றினால் குணாதிசயம் மாறும் என்று சொல்கிறார்கள். முதலில் ஜீன் என்பதென்ன? அது எப்படி இருக்கும்?
ஜீன் என்றால் மரபணுவில் (DNA) உள்ள ஒரு பகுதி என்று நினைக்கின்றேன்.

ஜீன் மூலம் தோற்றம் ஒன்று பட்டாலும் நினைவுகள் வெவ்வேறாகவே இருக்கும். அதேவேளை குணாதிசயங்கள் அதாவது அவர்களது பழக்க வழக்கங்கள்.. (உ+ம் கண்களை அடிக்கடி வெட்டிக்கொள்வது) போன்றவை இருக்கும் என்று எங்கோ வாசித்த ஞாபகம்! :angel-smiley-033:

ஷீ-நிசி
22-03-2007, 01:46 AM
31. குணத்தை மாற்றுமா ஜீன்? ஜீனை மாற்றினால் குணாதிசயம் மாறும் என்று சொல்கிறார்கள். முதலில் ஜீன் என்பதென்ன? அது எப்படி இருக்கும்?

ஜீனை மாற்றினால் குணாதிசயம் மாறும் என்பது மிக நீண்ட எதிர்பார்ப்பு. அப்படி எல்லாம் ஒரு ஜீனை மாற்றுவதன் மூலம் மனிதனை மாற்றி விட முடியாது. அதே சமயம் ஜீன்களுக்கும் குணாதிசயத்திற்கும் சம்மந்தமே இல்லை, என்று சொல்லிவிடவும் முடியாது. தந்தையின் விந்து செல்கள் ஒன்றுகூடி மனிதக் குழந்தையின் முதல் செல் உண்டாகிறது. அந்த செல்லில் 30 ஆயிரம் ஜீன்கள் உள்ளன. அதன் அடிப்படையில், ஒரு செல் பல கோடி செல்லாகி குழந்தையாக வளருகிறது. 30 ஆயிரம் ஜீன்கள் யாவும் 23 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல்லாயிரம் பத்திகள் உள்ளன. ஒவ்வொரு பத்தியிலும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் எழுத்துக்கள் இருக்கும். இவையாவும் டி.என்.ஏ. என்ற மூலக்கூறினால் செய்யப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 2 மீட்டர் நீளமுள்ள டி.என்.ஏ.மூலக்கூறில் மேற்கூறிய 23 அத்தியாயமும் எழுதப்பட்டுள்ளன. இதுதான் தலை எழுத்தென்பதோ?

ஷீ-நிசி
22-03-2007, 01:50 AM
32. கணக்கியலில் (பை) என்ற குறியின் மதிப்பாகிய 3.14 (22/7) என்பது எவ்வாறு உருவானது?

karikaalan
22-03-2007, 01:25 PM
28. பயறு வகைகள் மற்றம் மாங்கனி போன்றவற்றில் வண்டுகள் தோன்றுவது எவ்வாறு?

பயறுகள் வயல்களிலிருந்து அறுவடை செய்யப்படும் போதே வண்டுகளின் முட்டைகளும் சேர்ந்து வந்துவிடுகின்றன. காயவைத்து, புடைத்து, மூட்டைகளில் அடைத்து கடைக்கு வரும் வரை அவை முட்டைகளாக பருப்புடன் கலந்து வந்துவிடுகின்றன. வீட்டில் டின் அல்லது பாட்டில்களில் மூடி வைக்கும்போது அவை பொரித்து வெளிவந்து மறுபடியும் இனப்பெருக்கம் செய்கின்றன. இதெல்லாம் இல்லாவிட்டால் குருவி, கோழி போன்ற பட்சிகளுக்கு யார் சாப்பாடு போடுவார்கள். மாம்பழக் கொட்டையில் வாசம் செய்யும் வண்டுகள், மாம்பூ கருவுறும்போதே அவற்றின் தாய் வண்டுகளால் இடப்படும் முட்டையாக வந்து புகுந்து கொள்கின்றன. பூ, காயாகி, கனியாகி சமையலறையில் பத்தைகளாக வெட்டப்படும் போது கொட்டைக்குள் பொரித்து பருப்பை தின்று வளர்ந்த வண்டு வெளிப்படுகிறது.

அதெல்லாம் சரி ஷீ-நிசிஜி

அதெப்படி ஒரு மாம்பழத்தில் ஒரு வண்டு மட்டுமே (பெரும்பாலும்) உருவாகிறது?

மேலும் இவ்வண்டுகள் கல்லாமணிப் பழத்தில் நிச்சயமாக உண்டு. மற்ற பழங்களில், முக்கியமாக அல்போன்ஸோவில் இல்லையே?

===கரிகாலன்

அறிஞர்
22-03-2007, 01:37 PM
கரிகாலன்ஜி கேள்வி அருமை...

அல்போன்ஸா மாம்பூ வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காதோ என்னவோ...

ஷீ-நிசி
22-03-2007, 03:48 PM
கரிகாலன்ஜி எனக்கும் தெரியலயே, நண்பர்களுக்கு யாருக்காகிலும் தெரியுமா என்று பார்க்கலாம்.

32. கணக்கியலில் (பை) என்ற குறியின் மதிப்பாகிய 3.14 (22/7) என்பது எவ்வாறு உருவானது.

வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதமே "பை' ஆகும். ஒரு வட்டம் உலகளவு பெரிதாக இருந்தாலும் நெற்றியில் வைக்கும் பொட்டு அளவுக்குச் சிறியதாக இருந்தாலும் அவற்றின் சுற்றளவு விட்டம் ஆகியவைகளுக்கிடையிலான விகிதம் எப்போதும் 22/7 என்ற அளவில் இருக்கும்.

"பை' யில் உள்ள இன்னொரு வினோதமான சிறப்பம்சம் என்ன வென்றால் 3.14... என்ற எண் முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்லும். வரிசை என்றுமே மறுபடியும் திரும்பவராமலேயே இருக்கும். "பை'யின் தசம ஸ்தான எண்களை எத்தனை நீளத்திற்கு நினைவிலிருத்த முடியும் என்பதில் கின்னஸ் சாதனைகள் கூட உண்டு!.

ஷீ-நிசி
22-03-2007, 03:53 PM
33. மனித உடலில் மச்சம் தோன்றுவது எவ்வாறு?

அறிஞர்
23-03-2007, 03:50 PM
பிறக்கும்பொழுது மச்சம் இருக்குமே...

நிறத்தை கொடுக்கும் மெலனின் மூலக்கூறுகள் ஒரே இடத்தில் அதிகமாக இருப்பதுவா..

மயூ
23-03-2007, 06:15 PM
அறிஞர் பதில் சரியாக இருக்கலாம் என்று தோன்றுகின்றது!!!

ஷீ-நிசி
26-03-2007, 03:12 PM
அறிஞரின் பதில் சரிதான் என்று நினைக்கிறேன்.

33. மனித உடலில் மச்சம் தோன்றுவது எவ்வாறு?

நமது உடலில் கிட்டத்தட்ட 200 வகை திசுக்கள் உள்ளன. அதில் தோலும் ஒன்று. இந்த இருநுறு திசுக்களும் கருவுற்ற நாளிலிருந்து கொத்தான சில செல்களிலிருந்து உற்பத்தியாகின்றன. தோல் திசுக்களை உருவாக்கும் முதல் தொகுப்பு செல்களிலிருந்து பலகோடி செல்கள் தோன்றி, வளரும் குழந்தையின் உடல் முழுதும் போர்த்துகின்றன. அந்த பலகோடி செல்களில் ஒன்றிரண்டு கொஞ்சம் இசகு பிசகாக அதிக நிறமிகளை உற்பத்தி செய்யும் குறும்புத்தனத்தை கைவரப்பெற்று விடுகின்றன. அதிலிருந்து தோன்றும் செல்கள் தொடர்ந்து கருப்பாகவே இருப்பதால் அவை சிறு புள்ளியாக தோலில் நின்றுவிடுகின்றன. இவைதான் மச்சம் என்பது.

ஷீ-நிசி
26-03-2007, 03:15 PM
34. கண்ணாடியை சூடுபடுத்தினால் உடைவது ஏன்?

march
26-03-2007, 03:30 PM
கண்ணாடியை சூடுபடுத்தினால் உடையத்தானே செய்யும் அல்லது வெடிக்க செய்யும் நீங்களே சொல்லுங்கள்

வித் லவ்
மார்ஷ்

அறிஞர்
26-03-2007, 06:44 PM
34. கண்ணாடியை சூடுபடுத்தினால் உடைவது ஏன்?
மீளும் தன்மை கண்ணாடிக்கு குறைவு. அதனால் உடைகிறது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மீளும் தன்மை அதிகம்... அதனால் விரிவடைகிறது, எளிதில் உடைவதில்லை.

ஷீ-நிசி
28-03-2007, 03:16 PM
மார்ஸ் மற்றும் அறிஞருக்கு நன்றி முயற்சித்தமைக்கு...
விடை பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்...

34. கண்ணாடியை சூடுபடுத்தினால் உடைவது ஏன்?

கண்ணாடி, வெப்ப ஊடு கடத்தாப் பொருள்களுள் ஒன்று. இதனை சூடுபடுத்தும் போது, கண்ணாடியின் மேற்பகுதி மட்டும் விரிகிறது. கீழ்ப்பகுதி விரிவடைவதில்லை. கண்ணாடியின் ஒரு பகுதி மட்டும் விரிந்து, மற்ற பகுதியை விட சற்று அதிகப் பரப்படைவதால் அது உடைகிறது. நேர்மாறாக உலோகத்தை சூடுபடுத்தும் போது அது உடைவதில்லை. அதற்கு காரணம் உலோகம் வெப்பத்தை சீராக ஊடுகடத்துதலாகும்.

ஷீ-நிசி
28-03-2007, 03:19 PM
35. சில பூச்சிகள் கடித்தால் வீங்கி விடுவது ஏன்?

இளசு
28-03-2007, 08:05 PM
அருமையான பணி ஷீ-நிசி..

பூச்சிக்கடி பற்றி மற்றவர்கள் சொல்ல, வழிவிடுகிறேன்..

ஷீ-நிசி
31-03-2007, 06:07 AM
நன்றி இளசு அவர்களே....

36. சில பூச்சிகள் கடித்தால் வீங்கி விடுவது ஏன்?

சில பூச்சிகள் நம்மைக் கடிக்கும் போது எரிச்சல் கொடுக்கும் ஒரு வகை நச்சுத் திரவத்தை செலுத்தி விடுகின்றன. இப் பூச்சிகள் சிறு விலங்குகளைக் கடித்தால் அவற்றின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றன. ஆனால் நமக்கும் சில மேல் நிலை விலங்குகளுக்கும் அவ்வளவாகப் பாதிப்பு ஏற்படுவதில்லை. பூச்சிகள் கடித்தாலோ, கொட்டினாலோ, சில விநாடிகளுக்குள் கடி வாயைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டு விடுகிறது. பூச்சிகளின் நச்சுத் திரவத்தின் வீரியத்தை குறைக்க அந்த இடத்தில் ஏராளமான ரத்த வெள்ளை அணுக்கள் சேர்ந்து விடுகின்றன. நஞ்சை எதிர்க்கும் போது இறந்து விடும் வெள்ளையணுக்களின் திரட்சியே இந்த வீக்கமாகும்.

ஷீ-நிசி
31-03-2007, 08:01 AM
37. வாயில் துர்நாற்றம் எழுவது ஏன்?

மனோஜ்
31-03-2007, 08:12 AM
உனவில் உள்ள அமிலங்கள் பற்களின் இடுக்குகலில் இருப்பதால் எற்படுகிறது
சரியா ஷீ

இளசு
31-03-2007, 08:27 AM
நன்றி ஷீ..


உணவில் உள்ள அமிலங்கள் பற்களின் இடுக்குகளில் இருப்பதால் எற்படுகிறது
சரியா ஷீ

மனோஜ்

பல் இடுக்குகளில் தேங்கும் உணவுத்துகள், அதை உண்டு பெருக்கும் சிலவகை பாக்டீரியாக்கள் இவை ஒரு காரணம்..

ஷீயின் முழுவிளக்கம் கேட்கலாம்..

ஷீ-நிசி
03-04-2007, 04:02 PM
மனோஜ் நீங்கள் கூறியதும் ஒரு காரணம்....

37.வாயில் துர்நாற்றம் எழுவது ஏன்?

பற்களில் ஏற்படும் பற்சிதைவு, ஈறு அழற்சி முதலியவற்றால் சீழ்பிடித்து துர்நாற்றம் எழலாம். உணவு உண்டவுடன் வாயை சரியாக கழுவாவிட்டால், சிறு உணவுத்துணுக்குகள் பல்லிடுக்குகளில் தேங்கி அழுகி விட்டாலும் வாயில் துர்நாற்றம் எழும். நாள் தோறும் காலையிலும் இரவிலும் பற்களை நன்றாக துலக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டாலும் வாய் நாற்றம் ஏற்படலாம். வாயினால் மேற்கொள்ளும் சுவாசத்தால் உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்ந்தாலும் துர்நாற்றம் எழக்கூடும். நீரிழிவு நோய் இருந்தாலும், தொண்டையில் அழற்சி ஏற்பட்டாலும், நுரையீரலில் தொற்று ஏற்பட்டாலும், நாம் உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாவிட்டாலும் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். இதனை தடுக்க கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை உபயோகிக்கலாம்.

ஷீ-நிசி
03-04-2007, 04:04 PM
38. விக்கலை நிறுத்துவது எப்படி?

மனோஜ்
03-04-2007, 04:05 PM
நல்ல விளக்கம் நன்றி ஷீ

தண்ணீர் குடிப்பதால்

poo
04-04-2007, 06:00 AM
மூச்சை சீராக்கினால் விக்கல் நின்றுவிடும்..

(திடீர்னு பயம் காட்டினால்கூட நிக்குமாமே??!)

மயூ
04-04-2007, 01:07 PM
38. விக்கலை நிறுத்துவது எப்படி?
விக்கலை நிறுத்த முடியாது.... நிற்கும் வரை பொறுக்க வேண்டும்.. தண்ணீர் குடிக்கிறதெல்லாம் முட்டாள் தனமான வேலை!!!:food-smiley-008:

விகடன்
04-04-2007, 07:13 PM
மூச்சை சற்று நேரம் பிடித்துவைத்திருதால் சரியாகிவிடும்.

இளசு
04-04-2007, 10:46 PM
38. விக்கலை நிறுத்துவது எப்படி?


உதரவிதானத்தின் விட்டுவிட்டு உதறும் செயலே விக்கல்!
சில சமயம் பலமணி நேரம் நீடித்தால், தூக்கமின்றி, அயற்சி வந்து..பெரிய சிக்கல்!

பொதுவாய் இது தானாய் நிற்பதால் - ஆறுதல்!!

வேகஸ் எனப்படும் பத்தாவது கபால நரம்பைத் தூண்டினால்
விக்கல் நிற்கும் வாய்ப்புண்டு..


வேகஸைத் தூண்ட:

மிகக்குளிர்ந்த நீரை மடக்கென விழுங்குதல்
(சிலர் மரத்தூளை விழுங்கச்சொல்கிறார்கள்..)
மார்பில் குளிர்நீரை வீசுதல்

வயிற்றை வெளித்தள்ளியபடி மூச்சை அடக்குவது..
(முக்குவது-- வால்சால்வா ( Valsalva) என்பவர் சொன்ன உபாயம் இது...
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினம் காலையில் செய்வதுதான் இது...)

பூ சொன்னபடி திடீரென பயமுறுத்தலாலும் நிற்கும் எனக் கேள்வி..

நிற்கா விக்கலுக்கு மருந்துகள் சிலவும் உண்டு..

ஓவியன்
05-04-2007, 09:37 PM
நம் உடலின் பிரிமென்றகட்டின் (வயிற்றையும் நெஞ்சையும் பிரிக்கும் மெல்லிய சவ்வு போன்ற பகுதி) முறையற்ற ஏற்ற இறக்கமே விக்கல் என்று படித்ததாக ஞாபகம்.

தண்ணீர் குடித்தால் அட்ங்கிவிடுமென்பது நான் அனுபவத்திலே (பாட்டி சொல்லித் தந்தவா) கண்டது.

ஷீ-நிசி
08-04-2007, 03:46 PM
எல்லோரும் ஒவ்வொரு வகையில் சரியான பதிலை அளித்துள்ளீர்கள். ஆனாலும் இளசு அவர்களின் பதில் சரியாக பொருந்துகிறது நண்பர்களே!

38. விக்கலை நிறுத்துவது எப்படி?

நாம் சுவாசிக்கும் போது, காற்றை உள்ளே நுரையீரல்களுக்கு இழுத்து வெளியே தள்ளுவதற்கு உதவும் உதரவிதானத்தில் ஏற்படும் திடீர் சுருக்கங்களுக்கு விக்கல் என்று பெயர். உதர விதானத்தில் ஏதாவது உறுத்தல் ஏற்படினும் விக்கல் உண்டாகும். சுவாச உறுப்புகளில், செரிமான உறுப்புகளில் உறுத்தல் உண்டானாலும் விக்கல் வரும். அவசர அவசரமாக நீர் அருந்தினாலும் விக்கல் ஏற்படுகிறது.

இதற்கு நீரை உடனடியாக சிறிது, சிறிதாக அருந்துவதும், அடிக்கடி மூச்சை நிறுத்தி மெதுவாக விடுவதும் நல்ல பலனளிக்கும். தொடர்ந்து விக்கல் வந்து கொண்டேயிருந்தால் கழுத்தின் பின்பக்கத்தில் பனிக்கட்டியை சிறிது நேரம் வைத்தால் விக்கல் நிற்பதற்கு வாய்ப்புள்ளது.

ஷீ-நிசி
08-04-2007, 03:47 PM
39. நினைப்பதால் தும்மல் வருமா? தும்மல் என்பது என்ன?

poo
09-04-2007, 05:11 AM
விக்கல் விளக்கத்திற்கு நன்றி ஷீ.

தும்மல் நினைப்பதால் வருவதைவிட (தலையை) நனைப்பதால் அதிகம் வரும் எனக்கு!

காரணம் தெரியல.. ஒவ்வாமை?!.. தும்மலின் வேகம் ரொம்ப அதிகமாமே.. அப்படியா?.

praveen
09-04-2007, 05:20 AM
ஜலதோசம் பிடித்தால் தும்மல் வரும் என்று மட்டும் தெரியும். வேறு விசயங்கள் தும்மலை பற்றி உள்ளதா, கூறுங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறேன்.

பரஞ்சோதி
09-04-2007, 07:24 AM
மூக்கில கோழி இறகு விட்டால் தும்மல் வரும்.

மூக்குப்பொடி போட்டால் தும்மல் வரும்.

மூக்குப்பொடி, தும்மல் என்றதும் எங்க கிராம கோவில் கொடை நினைவுக்கு வருதுங்கோ.

ஷீ-நிசி
10-04-2007, 04:06 PM
விடையை சரிபார்த்துக்கொள்ளுங்கள் நண்பர்களே!

39. நினைப்பதால் தும்மல் வருமா? தும்மல் என்பது என்ன?

தொண்டைக்கு மேல் நாசிப் பகுதியில் நுழையும், உறுத்தும் பொருட்களை வெளியேற்ற உடல் மேற்கொள்ளும் முயற்சி தும்மலாக வெளிப்படுகிறது. தும்மலின் போது நாவை உயர்த்தி அண்ணத்தை தாழ்த்துகிறோம். நாசித் துளைகளை விரித்து, இழுத்து அடக்கிய மூச்சுக்காற்றை மிகுந்த வேகத்துடன் விசையாக நாசி வழிச் செலுத்துகிறோம். இது நாசியில் அடைந்த உறுத்தும் பொருளை வெளியேற்றும் வழியாகும். இதன் விளைவால் தும்மல் வருகிறது.

நாசியில் திரியிடுதல், மூக்குப் பொடி போன்ற பொருட்களைத் திணித்தல், துசி, மகரந்தப் பொடி போன்ற பொருட்கள் மூக்கில் நுழைதல், போன்றவற்றின் போது உறுத்தல் ஏற்படுகிறது. உறுத்தல் ஏற்படுகையில் தானியக்கச் செயலாக தும்மல் வெளிப்படுகிறது. இத்தும்மலுக்கும், பிறர் நம்மை நினைப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ஷீ-நிசி
10-04-2007, 04:08 PM
40. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

ஷீ-நிசி
12-04-2007, 03:47 PM
40. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

காலங்காலமாகவே மனிதர்கள் வானத்தில் சூரியனையும் சந்திரனையும் பார்த்துக் கொண்டு வருவதாலும், வேறு கோள்களும் நட்சத்திரங்களும் வெறும் வைரப்புள்ளிகளாக மட்டுமே வானில் தெரிவதாலும் ஒரு பெருங்குழப்பம் ஏற்பட்டுவிட்டது. கண்களை பெருமைப்படுத்த சூரிய, சந்திரனோ! என்று கவிதை பேச ஆரம்பித்துவிட்டார்கள். பார்க்கப்போனால் சூரியன் பெரிய யானை என்றால் நிலவானது பூமி என்னும் கட்டெறும்பைச் சுற்றிக் கொண்டுவரும் ஈறுதான்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமிருக்கிறது. அளவு ஒரு பக்கம் இருக்க, சூரியனானது தன்னையே எரித்துக் கொண்டிருக்கும் மாபெரும் அனல்கோளம். சந்திரன் குளிர்ந்து கெட்டியாகிப் போன சிறு கூழாங்கல்.

ஷீ-நிசி
12-04-2007, 03:51 PM
41. காந்தப்புயல் என்றால் என்ன?

ஷீ-நிசி
15-04-2007, 11:22 AM
41. காந்தப்புயல் என்றால் என்ன?

இருப்பதிலேயே மிக,மிகப் பெரிய காந்தம் எதுவென்றால் அது நமது சூரியன்தான். ஒன்பது கோள்களையும் ஈர்த்துப் பிடித்து சுற்றவைப்பது சூரியனின் நிறையீர்ப்பு விசைதான் என்றாலும், மின்காந்த விசை ஒன்று சூரியனிலிருந்து நாலாபக்கமும் பீறிட்டு வெளிப்படுகிறது. அது பூமியையும் ஊதித் தள்ளிக் கொண்டு அண்டவெளியில் பரவுகிறது. போதாக்குறைக்கு சூரியப்புள்ளி எனும் சிறு சிறு சூரிய மச்சங்களிலிருந்து பயர் இன்ஜின் தீயணைப்புக் குழாயிலிருந்து நீர் வெளிப்படுவதுபோல் புறப்பட்டு ஆகாயத்தில் பரவுகிறது. சில சமயம் பூமியின் மீதும் அது படுவதுண்டு. அப்போது "டிவி'சேனல், மொபைல் போன், ரேடியோ போன்ற தொடர்புகள் பாதிக்கப்படும்.

ஷீ-நிசி
15-04-2007, 11:23 AM
42. ஹைட்ரஜன் ஆக்ஸிஜனுடன் இணையும் போது அதிக அளவு வெப்பமும், ஒளியும் ஏற்படுவது ஏன்?

இளசு
15-04-2007, 12:58 PM
நல்ல தொடர் இது..நன்றி ஷீ-நிசி

மரபு சாரா எரிசக்தியின் முக்கிய பங்காற்றப்போகும் ஹைட்ரஜன் எரிதல் பயன்பாடு பற்றி உங்கள் விளக்கம் காண ஆவல்.

கார் முதல் விமானம் வரை இதை வைத்து இயக்க பெரும் முயற்சிகள்
நடக்கின்றனதானே?

ஓவியன்
16-04-2007, 11:33 AM
42. ஹைட்ரஜன் ஆக்ஸிஜனுடன் இணையும் போது அதிக அளவு வெப்பமும், ஒளியும் ஏற்படுவது ஏன்?

அணுவைப் பிளப்பது பற்றி கேட்கின்றீர்கள் என நினைக்கின்றேன், முன்பு எப்போ இரசாயனவியலில் படித்த ஞாபகம்.........

ஹைட்ரஜன்(H2)+ஆக்ஸிஜன்(O2) ---> நீர்(H2O) + ஒட்சிசன் உடைக்கப் பட்ட மூலக் கூறு(O.)+சக்தி (வெப்பம்+ஒளி)

ஆக்ஸிசனை உடைக்கப்படும் போது மிகப் பெரிய அளவில் வெப்பமும் வெளிச்சமும் வெளியிடப்படும். இதனையே நாம் அணு சக்தி எங்கிறோம் இல்லையா ஷீ-நிசி?

ஷீ-நிசி
16-04-2007, 12:14 PM
அணுவைப் பிளப்பது பற்றி கேட்கின்றீர்கள் என நினைக்கின்றேன், முன்பு எப்போ இரசாயனவியலில் படித்த ஞாபகம்.........

ஹைட்ரஜன்(H2)+ஆக்ஸிஜன்(O2) ---> நீர்(H2O) + ஒட்சிசன் உடைக்கப் பட்ட மூலக் கூறு(O.)+சக்தி (வெப்பம்+ஒளி)

ஆக்ஸிசனை உடைக்கப்படும் போது மிகப் பெரிய அளவில் வெப்பமும் வெளிச்சமும் வெளியிடப்படும். இதனையே நாம் அணு சக்தி எங்கிறோம் இல்லையா ஷீ-நிசி?

நன்றி இளசு...

சரியான பதிலென்று நினைக்கிறேன்.. ஓவியன்

இரவு விடையுடன்..

ஓவியன்
16-04-2007, 01:22 PM
விடையுடன் வாருங்கள், நாளை நானும் வருகிறேன்.

மயூ
16-04-2007, 01:27 PM
வாருங்கள் வாருங்கள் காத்துஇருக்கின்றோம்!

ஷீ-நிசி
17-04-2007, 04:13 PM
42. ஹைட்ரஜன் ஆக்ஸிஜனுடன் இணையும் போது அதிக அளவு வெப்பமும், ஒளியும் ஏற்படுவது ஏன்?

ஆமாம். ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் மிகவும் கோபாவேசமாக மோதி இணைகின்றன. சாதுவாக இருக்கும் தீக்குச்சியானது கொஞ்சம் உரசினாலும் தீவிர வெப்பத்துடன் எரிவதும் இப்படிப்பட்ட இணைவுதான்.

ஆக்ஸிஜன் தனியாக அணுவாக இருக்கும் போது வெறிபிடித்து அலைகிறது. எதிரில் அகப்படும் அணுவுடன் கூடி எலெக்ட்ரான்களை உறிஞ்ச விழைகிறது. இருப்பதிலேயே மிகவும் ஏமாளியானது அணு ஹைட்ரஜன். இதனிடம் ஒரே ஒரு எலக்ட்ரான் மிகவும் லூசாக ஒட்டிக்கொண்டிருப்பதால், வெறிபிடித்து அலையும் ஆக்ஸிஜனுடன் மூழ்கி நீர்மூலக்கூறாக உருவெடுக்கிறது. இந்த வினை, மலை உச்சியிலிருந்து விழும் அருவி போல பெரும் சக்தி வெளிப்பாட்டுடன் நிகழ்கிறது.

ஷீ-நிசி
17-04-2007, 04:15 PM
43. நாம் நட்சத்திரத்தில் குடியேற வாய்ப்பு உள்ளதா?

ஓவியன்
18-04-2007, 03:57 AM
தகவலுக்கு நன்றி ஷீ-நிசி.

ஷீ-நிசி
25-04-2007, 04:05 PM
43. நாம் நட்சத்திரத்தில் குடியேற வாய்ப்பு உள்ளதா?

வாய்ப்பே இல்லை. நட்சத்திரம் என்பது சூரியன் மாதிரி, யாரும் அதை நெருங்கவே முடியாது. ஒரு லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்குள் நெருங்கும்போதே பொசுங்கி பஸ்பமாகிவிடுவோம்.

ஆனால், வேறு நட்சத்திரங்களை சுற்றியபடி வரும் கோள்களில் ஏதாவது ஒன்றில் குடிக்க நீரும், சுவாசிக்க ஆக்ஸிஜனும் இருந்தால் நாம் குடியேறலாம். குறைந்தது 200 நட்சத்திரங்களிலாவது கோள்கள் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அனைத்திலும் பூமிக்கு நிகரான நிலவுலகம் எதுவும் காணப்படவில்லை. ஒருவேளை நம் கண்களில் படாமல் உள்ளனவோ தெரியவில்லை. நமது சூரிய மண்டலத்தை விட்டு வெளியே அடியெடுத்து வைப்பதற்கே நமக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கிறது. அடுத்த விண்மீனை அடைய பல்லாயிரம் ஆண்டுகளாவது பிடிக்கும் அது வரை யாரால் ராக்கெட்டில் உயிருடன் இருக்க முடியும்?

ஷீ-நிசி
25-04-2007, 04:07 PM
44. விண்வெளிவீரர்கள் விண்வெளியில் இருக்கும்போது 12 மணி நேரத்திற்குள் 8 முறை சூரிய உதயத்தைப் பார்க்க முடியும் என்பது எப்படி இயலும்?

மனோஜ்
25-04-2007, 05:17 PM
அத்தனை முறை பூமியை விண்வெளிகலம் சுற்றுவதால் தான் என்று நினைக்கிறோன்:nature-smiley-007:

ஷீ-நிசி
30-04-2007, 10:15 PM
44. விண்வெளிவீரர்கள் விண்வெளியில் இருக்கும்போது 12 மணி நேரத்திற்குள் 8 முறை சூரிய உதயத்தைப் பார்க்க முடியும் என்பது எப்படி இயலும்?

முடியும் அவர்களது விண்வெளிக்கப்பல் 24 மணிநேரத் திற்குள் 8 முறை சுற்றி வருமேயானால் அத்தனை முறை சூரியோதயத்தைக் காணமுடியும்.

விண்வெளி ஓடமானது பூமிக்கு மிக அருகிலேயே சுற்றிக்கொண்டு வருவதால், ஒரு நாளைக்கு பல முறை உலகை சுற்றி வர வேண்டியுள்ளது. அப்படி சுற்றாவிட்டால் ஆகாயத்தில் நிலைத்திருக்க முடியாது. புவியின் ஈர்ப்பு விசையால் கீழே இறங்கி வந்து விடும். பூமியில் உள்ளது. போலவே இரவுபகல் காலநிலை தேவையானால் 36,000 கி.மீ தொலைவுக்கு அப்பால் போய் இருக்கவேண்டும்!.

ஷீ-நிசி
30-04-2007, 10:16 PM
45. நம் உடலின் எடையை நம்மால் உணர முடிவதில்லை. அதுபோல நமது உடலின் எடை கூடினாலும் தெரிவதில்லை ஏன்?

சக்தி
04-05-2007, 07:13 AM
பகலில் செல்லும் விமானங்கள் எழுப்பு ஒலி இரவில் கேட்பதில்லை ஏன்?/// தெரிந்தவர்கள் விடை சொல்லவும்.

பகலிலே செல்லும் விமானங்கள் எழுப்பும் ஒலி பகலில்தான் கேட்கும். இரவில் எப்படி கேட்கும்?.

ராஜா
05-05-2007, 03:25 PM
ஹி..ஹி..

நியாயமான வாதம்.

ஷீ-நிசி
08-05-2007, 04:11 PM
45. நம் உடலின் எடையை நம்மால் உணர முடிவதில்லை. அதுபோல நமது உடலின் எடை கூடினாலும் தெரிவதில்லை ஏன்?

உணர முடியாத அளவுக்கு மிக மிக அற்ப அளவில் உடல் எடை கூடுவதால் நம் உணர்வுகளுக்கு அது எட்டுவதில்லை. திடுமென்று ஒரு சில நொடியில் எடை கூடினால் உடனே நமக்கு அது தெரியும் ராக்கெட் புறப்படும்போது வேகம் புவி ஈர்ப்புக்கு எதிர் திசையில் பல மடங்கு அதிகரிக்கும் போது விண்வெளி வீரர்கள் உடல் பல மடங்கு களைத்துப் போவதை உணருகிறார்கள். கை கால்களையோ, தலையையோ கூட அசைக்க முடியாதபடி எடை கூடும்போது அது உணரப் படுகிறது. குளத்தில் மூழ்கி குளிக்கும் போது உடல் எடை குறைவதையும், நீரை விட்டு கரைக்கு கடந்து வரும்போது உடல் கனப்பதையும் நீங்கள் உணர்ந்ததில்லையா?

ஷீ-நிசி
08-05-2007, 04:12 PM
46. இந்தியாவில் பௌர்ணமி என்றால் மற்ற நாடுகளில் அதே தேதியில் ஏற்படுமா? இல்லை சூரிய நேரம் போன்று வித்தியாசம் ஏற்படுமா?

அறிஞர்
08-05-2007, 06:23 PM
46. இந்தியாவில் பௌர்ணமி என்றால் மற்ற நாடுகளில் அதே தேதியில் ஏற்படுமா? இல்லை சூரிய நேரம் போன்று வித்தியாசம் ஏற்படுமா?
அதே தேதியில் தான் ஏற்படும்...

இருக்கும் ஊரில் இரவு நேரத்தில் தான் தெளிவாக தெரியும்...

poo
09-05-2007, 06:24 AM
அதானே.. நல்ல கேள்வி..
அறிஞர் உடனடியாக பதில் சொல்லிவிட்டார்...

நிலாவுல ஏறிக்கினா உலகத்தை சீக்கிரமே சுத்திடலாங்கிறது சரியா?!

ஷீ-நிசி
12-05-2007, 12:31 PM
என் வசமுள்ள பதிலுடன் உங்கள் பதில் ஒத்துப்போகவில்லை அறிஞரே.....

46. இந்தியாவில் பௌர்ணமி என்றால் மற்ற நாடுகளில் அதே தேதியில் ஏற்படுமா? இல்லை சூரிய நேரம் போன்று வித்தியாசம் ஏற்படுமா?

ஆமாம். சூரிய உதய நேரம் மாறுவதுபோல அமாவாசை, பவுர்ணமி நேரமும் மாறுபடும். நமது ஊரில் கூட பகலிலேயே அமாவாசை அல்லது பவுர்ணமி ஆரம்பித்து விடுவதுண்டு.

அமாவாசை அல்லது பவுர்ணமி என்பது 24 மணிநேர நிகழ்ச்சி. நமக்கு அமாவாசை தொடங்கி 12 மணி நேரம் கழித்திருந்தால் ஜப்பானில் முடிந்திருக்கும். அமெரிக்காவில் தொடங்கி இருக்கும். தீர்க்க ரேகைக்கு ஏற்ப திதி, முகூர்த்தம் என்பன எல்லாம் வேறுபடும்.

ஷீ-நிசி
12-05-2007, 04:04 PM
47. எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவரை கொசுகடித்து அதன் ரத்தம் மனித உடலில் உள்ள காயங்களில் பட்டால் நோய் ஏற்படுமா?

சுட்டிபையன்
12-05-2007, 04:13 PM
இல்லை ஏற்படாது

ஷீ-நிசி
14-05-2007, 03:09 PM
47. எய்ட்ஸ் நோய் உள்ள ஒருவரை கொசுகடித்து அதன் ரத்தம் மனித உடலில் உள்ள காயங்களில் பட்டால் நோய் ஏற்படுமா?

நோய் ஏற்படாது. எய்ட்ஸ் கிருமி மட்டுமல்ல, பல வைரஸ் கிருமிகள் கொஞ்சம் காற்றில் உலர்ந்தாலும் வதங்கி செயலற்றுப் போய்விடுபவை. மனித எச்சில் பட்டால் போதும் உடனே அவை அழிந்து போய்விடும். எனவே வைரஸ்களைப் பற்றி நாம் அஞ்ச வேண்டியதில்லை அவற்றிற்குத் தேவையான தெல்லாம், ஈரம், நெருக்கம். இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தால் கிருமிகளிலிருந்து நாம் பிழைத்துக் கொள்ளலாம். கொசுவின் வயிற்றில் வைரஸ்கள் நுழைந்ததுமே அவை செயலிழந்து போய்விடுகின்றன. செத்துப்போன ரத்த செல்களுக்குள் வைரஸ்களால் பல்கிப் பெருகமுடியாது. எனவே கொசுவின் வயிற்றில் ஜீரணமாகிக் கொண்டிருக்கும் ரத்தத்தில் வைரஸ் ஜீரணமாகிவிடும்.

ஷீ-நிசி
14-05-2007, 03:10 PM
48. மனிதர்களால் சாப்பிட முடிந்தும், ஆனால் இதுவரை சாப்பிடாத உணவுப் பொருள் ஏதேனும் உண்டா?

ஷீ-நிசி
26-05-2007, 11:24 AM
48. மனிதர்களால் சாப்பிட முடிந்தும், ஆனால் இதுவரை சாப்பிடாத உணவுப் பொருள் ஏதேனும் உண்டா?

இருக்கின்றன... ஏராளமாக இந்த உலகில் பல லட்சம் தாவரங்கள் இருந்தும் நாம் நெல், கோதுமை என்று நான்கு, ஐந்து பயிர்களை மட்டுமே நம்பி இருக்கிறோம். இவற்றிற்கு மருந்து தெளிக்கவும், உரமிடவும் பாடாய்ப் படுகிறோம். பல்கலைக்கழகங்கள் அமைத்து அவற்றை மேம்படுத்து வதிலும் மெனக்கெடுகிறோம்.

சானம், வரகு, கம்பு, கேழ்விறகு போன்ற தானியங்களை நாம் மறந்தே போய்விட்டோம். மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் வித விதமான தானியம், பருப்பு முதலானவற்றை பயன்படுத்தி பிழைத்துக் கொண்டு வருகிறார்கள். தக்க முறையில் சமைத்தால், உடலுக்குக் கேடு தராமல், நல்ல ஆரோக்யம் தரக்கூடிய தானியங்கள், பருப்பு, பழம் காய்கறி வகைகள் காட்டில் உள்ளன. அவற்றைத் தேடிப்பிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தும் கல்வி உடனடியாக வேண்டும்.

ஷீ-நிசி
26-05-2007, 11:26 AM
49. வைரம் எப்படி உருவாகின்றது?

சுட்டிபையன்
26-05-2007, 12:10 PM
காபன் அணுக்கள் மண்ணிற்க்குள் இருந்து c-60 என்னும் நெருக்கமான வடிவத்தை பெறும் போது

ஷீ-நிசி
10-06-2007, 01:15 PM
49. வைரம் எப்படி உருவாகின்றது?

வைரம் என்பது வெறும் கரிதான். அடுப்புக்கரிக்கு யாரும் மரியாதை தருவதில்லை அதுவே வைரமானதும் அதன் மதிப்பு பல்லாயிரம் மடங்கு அதிகமாகி விடுகிறது.

வைரத்தினுடைய, அணுக்களின் கட்டுமானம்தான் இதற்கு காரணம். செங்கற்களை ஒரு கல் இடைவெளிவிட்டு சுவர் எழுப்பினால் துளை துளையாக சுவர் அமைப்பு கிடைக்கும் இதுதான் அடுப்புக் கரியினுள் இருக்கும் கட்டமைப்பு. சிமெண்ட் பூசாமல் வெறும் செங்கற்களை தரையில் மேலே மேலே பரப்பிக் கொண்டே வந்தால் கிராபைட் எனப்படும் பென்சில் ஊக்கு ஏற்படும்.

நெருக்கமாக இடைவெளிவிடாமல் அடுக்கி வைத்தால் அது வைரமாகும். இயற்கையில் கரி அணுக்கள் கரியாகவும், கிராபைட்டாகவும் தான் அதிகம் கிடைக்கின்றன. பூமிக்கடியில் அழுத்தம் காரணமாக வைரமாக உருமாறி கொஞ்சம் அங்கும் இங்குமாகக் கிடைக்கிறது.

ஷீ-நிசி
10-06-2007, 01:16 PM
50. ஐந்து தலை நாகம் எந்த உயிரியல் பூங்காவிலாவது இருக்கிறதா?

இதயம்
10-06-2007, 01:22 PM
47.மனித எச்சில் பட்டால் போதும் உடனே அவை அழிந்து போய்விடும். எனவே வைரஸ்களைப் பற்றி நாம் அஞ்ச வேண்டியதில்லை அவற்றிற்குத் தேவையான தெல்லாம், ஈரம், நெருக்கம்.

பெரும்பாலும் சில தொற்று நோய்கள் ஒருவொருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்ளும் போது உமிழ்நீரின் வழியாக பரவ வாய்ப்புண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், உங்கள் பதில் அதற்கு முரண்படுகிறதே..!!

ஷீ-நிசி
10-06-2007, 01:33 PM
பெரும்பாலும் சில தொற்று நோய்கள் ஒருவொருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்ளும் போது உமிழ்நீரின் வழியாக பரவ வாய்ப்புண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், உங்கள் பதில் அதற்கு முரண்படுகிறதே..!!


நன்றி இதயம்.. இது என்னுடைய பதில்கள் அல்ல.. மிக பெரிய அறிவுஜீவிகள் பல வாசகர்களின் கேள்விக்கு கொடுத்திருக்கும் பதில்கள் இவைகள். இது சரிதானா என்று நான் ஆராய்வதில்லை.. நம் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று பதிகிறேன்.

ஷீ-நிசி
23-06-2007, 04:09 PM
50. ஐந்து தலை நாகம் எந்த உயிரியல் பூங்காவிலாவது இருக்கிறதா?

ஐந்து தலை பாம்பு உலகிலேயே கிடையாது. அதனால் பூங்காவிலும் இருக்க முடியாது. எப்படி இத்தனை உறுதியாக சொல்கிறேன் என்று நீங்கள் எண்ணலாம். காரணமிருக்கிறது.

பாம்புக்கு ஒரு தலையே போதும். இந்த விதி சகல உயிரினங்களுக்கும் பொருந்தும். ஒன்றுக்கு மேல் தலையோடு பிறப்பது எப்போதாவது விபரீதமாக பிறவிக் கோளாறினால் ஏற்படுவதுண்டு. அந்த உயிரினங்கள் நீண்ட நாள் வாழ்வதில்லை. ஒன்றுக்கு மேல் தலையிருந்தால் காடு, மலை, போன்ற சூழ்நிலையில் தப்பி வாழ முடியாது. சாப்பிடவும் முடியாது.

புராணங்களில் நிறைய கதாபாத்திரங்களுக்கு அவர்களது குணாதிசயங்களுக்கு ஏற்ப வாகனங்கள் கொடுப்பார்கள். அவை வெறும் உருவகங்களே தவிர நிஜமல்ல. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று,நெருப்பு, ஆகாயம் ஆகியவை தான் ஐந்து தலையுடைய ஆதிசேஷனாகக் கூறப்படுகிறது.

ஷீ-நிசி
23-06-2007, 04:11 PM
51. ஜீனோமிக்ஸ் என்பது என்ன?

ஷீ-நிசி
26-06-2007, 03:00 PM
51. ஜீனோமிக்ஸ் என்பது என்ன?

கேமரா, மைக்ரோவேவ் ஓவன், வி.சி.டி.,பிளேயர் போன்ற சாதனங்களை வாங்கினால் கூடவே ஒரு செய்முறை அல்லது பயன்முறை கையேடு கூடவே தருவார்கள். அதுபோல ஒரு உயிர், அது யானையோ, கொசுவோ, மனிதனோ எதுவாக இருந்தாலும் ஒரு செயல்முறை கையேட்டின் அடிப்படையில் தான் அந்த உயிர் முட்டையிலிருந்து வளர்ந்து வருகிறது.

அந்த செய்முறை கையேடுதான் ஜீனோம். ஒரு குழந்தை குட்டையாக வளருமா? நெட்டையாக இருக்குமா? சிவப்பா கருப்பா, போன்ற சகல குணங்களுக்கும் ஜீனோம்தான் அடிப்படை. தாயும் தந்தையும் அவரவர் பங்கிற்கு சம அளவில் ஜீனோம் தகவலை குழந்தைக்கு தமது அண்டம், விந்து செல் மூலம் வழங்குகிறார்கள். அதன் அடிப்படையில் குழந்தை தாய் தந்தையரின் குணங்களைப் பயன்படுத்தி வளருகிறது. ஜீனோமில் உள்ள தகவல்களின் வரிசை, அவற்றின் கட்டுப்பாடு, செயல்முறை, ஆகியவற்றை கம்ப்யூட்டர் மூலம் அலசி ஆராய்வதையே ஜீனோமிக்ஸ் என்கிறார்கள்.

ஷீ-நிசி
26-06-2007, 03:03 PM
52. மண்ணெண்ணையை விட பெட்ரோல் எளிதில் ஆவியாவது ஏன்?

ஷீ-நிசி
28-06-2007, 02:40 PM
52. மண்ணெண்ணையை விட பெட்ரோல் எளிதில் ஆவியாவது ஏன்?

பொதுவாக மூலக்கூறின் எடைக்கும் அதன் ஆவியாகும் வெப்ப அளவுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். குறைந்த மூலக்கூறு எடையுடயவை எளிதில் சாதாரண சூட்டிலேயே ஆவியாகி விடுகின்றன. மூலக்கூறு எடை குறையக்குறைய ஆவியாதல் அதிகரித்து ஒரு நிலையில், ஆவியாகவே இருப்பதும் உண்டு.

இந்த வரிசையில் ஆவியாகவே இருப்பது மீத்தேன், ஈத்தேன் என்பவை. மூன்றாம், நான்காம், ஐந்தாம் நிலைகள் வரை இப்படி வாயுதிரவ நிலையில் இருக்கின்றன.மேலும் இந்த நிலை அதிகரிக்கும் போது நிரந்தரமாக திரவமாக இருந்தாலும் எளிதில் ஆவியாக எண்ணெய்களாகின்றன. இந்த மூலக்கூறு எடை வரிசையில் பெட்ரோல், மண்ணெண்ணையை விட லேசானது. மேலும் மண்ணெண்ணைய் சுத்தம் செய்யப்படாத கலப்பு பொருள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஷீ-நிசி
28-06-2007, 02:42 PM
53 நிலம், நீர், காற்று ஆகியவற்றின் அளவு பூமி உருவானது முதல் அப்படியே இருக்கிறதா? இல்லை அதன் அளவு மாறியுள்ளதா?

ஷீ-நிசி
08-07-2007, 09:54 AM
53. நிலம், நீர், காற்று ஆகியவற்றின் அளவு பூமி உருவானது முதல் அப்படியே இருக்கிறதா? இல்லை அதன் அளவு மாறியுள்ளதா?


நிலம், நீர், காற்று ஆகியவை இந்த பூமியில் இம்மி கூட குறையாமல் இருந்த வண்ணமே இருக்கின்றன. அவை தம் நிலை திரிந்து போகலாம். ஆனால் முற்றிலும் மறைவதில்லை. அணுக்கள் புதிதாகத் தோன்றுவதுமில்லை, இருப்பவை மறைவதுமில்லை. அவை இடம் மாறி, புதுக்கட்டமாக இணைந்து புதுப் பொருளாகலாம். ஆனால் என்றென்றும் இருக்கின்றன.

நம் உடல் சவமாக மாறி நாம் இல்லாமல் போகலாம். ஆனால் உடலில் உள்ள அணுக்கள் இந்த பூமியில்தான் இருக்கப் போகிறது. மண்ணிலோ, வேறு உடம்பிலோ! ஆனால், இருக்கும். என்றென்றைக்கும்! நம் உடம்புக்கு வருவதற்கு முன்பு பல கோடி ஆண்டுகளும், நம் மறைவுக்குப் பிறகு வரப்போகும் கோடி கோடி ஆண்டுகளிலும் அவை இருக்கும் நாமும் அழிவதில்லை, நம் உடம்பின் அனுக்களும் அழிவதில்லை. தற்காலிகமான கூட்டம் தான், பிரிந்து பிரிந்து கூடுகின்றன.

ஷீ-நிசி
08-07-2007, 09:56 AM
இந்த திரி இத்தனை தூரம் வளர உதவின அனைவருக்கும் என் நன்றிகள்...

இதுவரை இந்த திரியில் கேட்கபட்ட கேள்விகள்... பதில்கள் அனைவருக்கும், இனி வரப்போகின்ற புதியவர்களுக்கும் பயனளிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை...


அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.......

இளசு
08-07-2007, 05:13 PM
[B]
நம் உடல் சவமாக மாறி நாம் இல்லாமல் போகலாம். ஆனால் உடலில் உள்ள அணுக்கள் இந்த பூமியில்தான் இருக்கப் போகிறது. மண்ணிலோ, வேறு உடம்பிலோ! ஆனால், இருக்கும். என்றென்றைக்கும்! நம் உடம்புக்கு வருவதற்கு முன்பு பல கோடி ஆண்டுகளும், நம் மறைவுக்குப் பிறகு வரப்போகும் கோடி கோடி ஆண்டுகளிலும் அவை இருக்கும் நாமும் அழிவதில்லை, நம் உடம்பின் அனுக்களும் அழிவதில்லை. தற்காலிகமான கூட்டம் தான், பிரிந்து பிரிந்து கூடுகின்றன.

உண்மைதான் ஷீ..

நம் ஒவ்வொருவர் உடம்பிலும் ஓரிரு தனிமங்கள் − முன்னர் ஹிட்லர், காந்தி, இப்படி பலரிடம் இருந்தவை என படித்திருக்கிறேன்.

அரிய இத்தொடருக்கு என் வாழ்த்துகள்.

முன்னர்போல் தொடர்ந்து இத்திரியில் பங்காற்றாமைக்கு வருந்துகிறேன்.
நிவர்த்திக்க முயல்வேன்.

அன்புரசிகன்
08-07-2007, 05:19 PM
உலகில் வெப்பநிலை அதிகமாவதால் துருவ பனிக்கட்டிகள் உருகி உலகுக்கு தீங்கு வரலாம் என கூறுகிறார்களே.. உண்மையா?

ஷீ-நிசி
29-10-2007, 04:09 PM
உலகில் வெப்பநிலை அதிகமாவதால் துருவ பனிக்கட்டிகள் உருகி உலகுக்கு தீங்கு வரலாம் என கூறுகிறார்களே.. உண்மையா?

எனக்கு தெரியலீங்னா...... தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!:)

சூரியன்
29-10-2007, 04:13 PM
பனி உருகி நீர் ஆகும் போது நிலப்பகுதி குறையும் அல்லவா?

அமரன்
29-10-2007, 07:58 PM
உலகில் வெப்பநிலை அதிகமாவதால் துருவ பனிக்கட்டிகள் உருகி உலகுக்கு தீங்கு வரலாம் என கூறுகிறார்களே.. உண்மையா?

கடல் மட்டம் அதிகரிக்கலாம். தரைப் பரப்புக் குறையலாம். கரையோரவாழிகள் பாதிக்கப்படலாம். இப்படிப் பலவாறு சொல்கின்றார்கள். இப்படித்தான் "இவ்வாண்டு ஐரோப்பாவில் உச்சபட்ச வெப்பநிலை நிலவும்" என்று சொன்னார்கள். நிலைமை தலைகீழாகிவிட்டது. கோடைகாலம் மழையில் அமிழ்ந்துவிட்டது. எனது விடை---நடக்கலாம்--நடக்காமலும் போகலாம்.

சில நாட்களின் பின் ஷீயின் பதிவுகள் பலவற்றை இன்று காணக்கூடியதாக உள்ளது. மகிழ்ச்சி.
மன்றம் வரும்போது இத்திரியைக் கவனிக்க எனது அன்பான வேண்டுகோள்.