PDA

View Full Version : இலவசமாக mobile to mobile call



தமிழ்பித்தன்
05-02-2007, 03:03 AM
நீங்கள் 3G வசதியுள்ள போன் வைத்துள்ளீரா அப்படியானால் இவசமாக இதே வசதி உள்ளருடனும் skype talk போன்றவற்றுடனும் போன் கதைக்கலாமே

தேவையானவை
3Gதரத்திலான மொபைல் மற்றும் நெற்வேர்க்

எப்படி செய்வது
http://www.fring.com/ என்ற தளத்துக்குச் சென்று உங்கள் மொபைல் நம்பர் உட்பட உங்கள் விபரம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் அதனை தொடர்ந்து அவர்கள் உங்களுக்கு sms ஒன்றை அனுப்புவார்கள் அதனை பின்தொடர்ந்து செல்லுங்கள்
கொசுறு;-இத்தளத்தில் ஏதாவது மெலதிக வசதி இருப்பதாக கண்டால் இதில் பதியவும்

maganesh
06-02-2007, 03:29 PM
எம்மைப்போன்ற உற்வுகளை விட்டுப் பிரிந்தவர்களுக்கு தொலைபேசியின் மூலம் ஏக்கங்களைத் தணித்துக்கொள்ள பல பயனுள்ள தகவல்களை வழங்கி வருகின்றீர்கள். நன்றி.

அறிஞர்
06-02-2007, 03:31 PM
இது எப்படி அன்பரே.. பணம் இல்லாமல்.

வியாபர நோக்கில் செய்கிறார்களா... அதில் பதிந்தவுடன்.. தேவையில்லாத போன் கால்கள் வர வாய்ப்புண்டா..

தமிழ்பித்தன்
06-02-2007, 06:13 PM
yahoo msn போல இதுவும் ஒரு இலவச சேவையே தேவையற்ற call வராது என நினைக்கிறேன்

aren
06-02-2007, 06:16 PM
இதெல்லாம் ஒரு பித்தலாட்டமே. ஒரு இருமுறை செய்தவுடன் உங்களுக்கான இலவச கால் முடிந்துவிட்டது. இனிமேல் வேண்டுமானால் பணம் செலுத்தவேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால் நம்முடைய தொலைபேசி நம்பர்கள் அவர்களிடம் சென்றுவிட்டது. அதை அவர்கள் மற்றவர்களுக்கு விற்று காசாக்கிவிடுவார்கள். நமக்குத்தான் தொடர்ந்து தொலைபேசி வந்துகொண்டு இருக்கும் இங்கே முதலீடு செய்யுங்கள் அங்கே முதலீடு செய்யுங்கள் என்று. ஆகையால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

தமிழ்பித்தன்
06-02-2007, 06:25 PM
இதெல்லாம் ஒரு பித்தலாட்டமே. ஒரு இருமுறை செய்தவுடன் உங்களுக்கான இலவச கால் முடிந்துவிட்டது. இனிமேல் வேண்டுமானால் பணம் செலுத்தவேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால் நம்முடைய தொலைபேசி நம்பர்கள் அவர்களிடம் சென்றுவிட்டது. அதை அவர்கள் மற்றவர்களுக்கு விற்று காசாக்கிவிடுவார்கள். நமக்குத்தான் தொடர்ந்து தொலைபேசி வந்துகொண்டு இருக்கும் இங்கே முதலீடு செய்யுங்கள் அங்கே முதலீடு செய்யுங்கள் என்று. ஆகையால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

"தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்"
இப்படி பல தளங்கள் வந்த பொதும் இதையே எமது நண்பர்கள் பரிந்துரைத்தார்கள்

விகடன்
08-02-2007, 06:23 PM
யாராவது முயற்சித்து பயனடைந்தோர் தங்கள் அனுபவங்களையும் உதிர்த்துவிட்டால் மெத்தப் பெரிய உபகாரமாக அமையுமல்லவா!